Sunday, December 14, 2008

பதிவுலக மாவீரன் பட்டம்-- சென்னை பதிவர் சந்திப்பில்

பதிவுலகுக்கு வந்து ஒரு 6 மாசம் ஆகிப்போச்சு. இந்த 6 மாசத்துல தமிழ்மணத்துல வாரத்துல ஒரு தடவையாவது நம்ம பதிவருங்க முகம் தெரியாத யாரோடவாவது சண்ட போட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி எழுதுற பதிவும் சில நிமிடங்களில் சூடான பகுதிக்கு போயிடும். ஒரு வேளை தங்களை எல்லோரும் கவனிக்கனும்னு சண்ட போடுறாங்களோ என்னவோ?

இப்படி வாரா வாரம் முகம் தெரியாதவங்களோட சண்ட போடுறவங்களுக்கு நேரடியா சண்ட போடுவதற்கு ஒரு அரிய வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதிஙக. தமிழனுக்கு அடுத்தவனோட மறைமுகமா சண்ட போடுறாதுன்னா ரொம்ப பிடிக்கும்.அதுவும் பதிவுலகில கேக்கவே வேணாம். எப்படினாலும் திட்டிக்கலாம். கண்டிப்பா நேர்ல வரமுடியாதுன்ற தைரியம்தான். எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்குறது.

அதனால இந்த அரிய வாய்ப்பை பதிவர்கள் முக்கியமா மாவீரன்னு பேரெடுக்க வெறியா இருக்கும் பதிவர்கள் இதை பயன்படுத்திக்கலாம்.
அதாவது வருகிற சென்னை பதிவர் சந்திப்புல இந்த வீரவிளையாட்டு அறிமுகப்படுத்தப்போறோம்.என்கிட்ட ஒரு நாலஞ்சு அருவா சும்மாத்தான் இருக்கு. அதை எடுத்துக்கிட்டு வர்றேன். ஒரே நேரத்தில் இருவர்தான் சண்டையிட முடியும். ஜெயிக்கிறவங்களுக்கு 5 அடி திருப்பாச்சி அருவாவும், 5 கிலோ அல்வாவும் பரிசாக வழங்கப்படும்.

போட்டியில் கலந்துக்கனும்னா போட்டி அமைப்பாளர் அதிஷாவை தொடர்பு கொள்ளவும்.

நடுவர்களா மாறவர்மன் நர்சிம்மும்,அக்னிபார்வையும் இருப்பாங்கோ.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தங்கமணி தாமிரா, முரளி கண்ணன்


பரிசுகள் வழங்வோர் : வீரத்தளபதி ஜே.கே. ரித்தீஸ் ரசிகர் மன்ற பொருளாளர் திரு. புதுகை அப்துலா அண்ணாச்சி


போட்டி நடைபெறும் இடம்: மெரினா பீச் காந்தி சிலைக்கு பின்னால்.

போட்டி நடைபெறும் நாள் : அதிஷா,லக்கி, முரளி கிட்ட கேளுங்க.


பின்குறிப்பு : அருவாளை கையில வச்சி தான் சண்ட போடனும்.