Friday, May 29, 2009

ப்ளாஸ் நியூஸ் : தமிழக துணை முதல்வர் --ஆளுநர் அறிவிப்பு

தமிழகத்தின் துணை முதல்வராக திரு ஸ்டாலின் அவர்கள்நியமிக்கப்பட்டுள்ளார்.ஆளுநர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்... கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த விசயம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது....கலைஞருக்கு அடுத்தபடி ஸ்டாலின்தான் என்பது உறுதியாகியுள்ளது.

கலைஞர் - ஜெயா ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமை............

நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலில் தோற்ற கட்சிகள் தங்கள் தோல்விக்கு காரணத்தை தேடுகின்ற அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் ஒப்பாரி சத்தங்கள் கொஞ்சம் அதிகமாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது.



பிரதான எதிர்க்கட்சியான பிஜேபி தங்களின் பிரச்சாரம் கடைக்கோடி மக்களை சென்றடையவில்லை என்றும்,மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொளவதாகவும் தெளிவாக சொல்லிவிட்டார்கள்... பீகார்ல நம்ம லல்லு திருவிளையாடல் தருமி பாணியில் எனக்கு வேணும் ஆசை ரொம்ப ஆசை என்ற அளவில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.. ஆனால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்மாறாக மக்கள் தீர்ப்பை ஜீரணிக்க முடியாமல் ஒப்பாரி வைக்கும் அறிக்கைகள் தான் அம்மாவிடம் இருந்தும்,டாக்டர் ஐயாவிடம் இருந்தும் அறிக்கை காமெடிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செஞ்சிட்டாங்களாம்... தேர்தல் ஆணயம் நடுநிலையாக செயல்பட்டாலும் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவா செயல்பட்டதனால் தோல்வியாம்...அதனால் வரும் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வரணுமாம். தேமுதிக ஒரு படி மேலே போய் வருகின்ற சட்டமன்ற இடைத்தெர்தலில் வாக்கு சீட்டு முறையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என்று சொல்ல மட்டும் அவர்களால் முடியவில்லை...
 
அதிமுக தோற்க முக்கிய காரணங்கள்
 

1.எடுபடாத பிரச்சார யுக்தி... முக்கிய பிரச்சினைகளான மின்வெட்டு,விலைவாசி உயர்வு பற்றி மக்களிடம் கொண்டு செல்லாதது.
2. ஈழப்பிரச்சினையில் திடீர் பிதாமகனாக மாறியது
3.முக்கியமாக களப்பணிகள்...இதில்தான் அதிமுக முற்றிலும் தோற்றுவிட்டது....தெளிவில்லாத களப்பணிகள்....


திமுக கூட்டணி ஜெயிக்க காரணங்கள்


1.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தியது.
2.கிலோ அரிசி 1ரூபாய், இலவச டிவி,கேஸ் அடுப்பு
3.மிகத்திறமையான களப்பணிகள்........


தோல்விக்கான உன்மையான காரணங்களை ஆராயாமல் சும்மா ஒப்புக்கு புலம்புவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல


டிஸ்கி:செயலலிதா பழையமுறையான வாக்கு சீட்டை கொண்டுவரச்சொல்லுவதற்கு கலைஞரும் ஒரு காரணம்... ஏன்னு கேட்டிங்கன்னா என்னதான் தகவல் அனுப்புவதற்கு ஈமெயில்,எஸ் எம் எஸ் வசதிகள் இருந்தாலும் இன்னும் பழைய முறையைத்தானே அவர் பின் பற்றுகிறார்........அதான்....