மாட்டு பொங்கல் அன்று உங்கள் சன் டிவியில் கில்லி படம் போட்டிருந்தாங்க... ம்ம்ம் நம்ம டாக்டர் விசய் இயல்பான நடிப்பு,அளவான வசனம்,நல்ல காமெடின்னு சும்மா கில்லி மாதிரி விர்ருன்னு நடிச்சிருந்தார்.... இந்த மாதிரி படம் இனிமே அவருக்கு கிடைக்குமா?. ஷாஜகான் படம் கொடுத்த படிப்பினைக்கு அப்புறம் விசய் படத்த முதல் நாள் பார்க்கும் பழக்கத்தை மறந்தேன்.. வில்லு படத்துல பல இடத்துல போக்கிரி படத்துல வசனம் பேசுர மாதிரியே இதுலயும் தாங்க முடியல சாமீஈஈஈஇ.........
இலங்கை பிரச்சினை பற்றி பேச பிரணாப் முகர்ஜி இந்தியா சார்பில் இலங்கை செல்வதாக இருந்தது. இடையில என்ன உள்குத்து நடந்துதோ என்னவோ சிவசங்கர் மேனன் இலங்கை சென்றிருக்கிறார்.சிவசங்கர் மேனனின் திறமைய பற்றி நான் ஒன்றும் சொலவதற்கில்லை....அவர் இலங்கைக்கு சென்றிருப்பது போரில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்குவது, சார்க் மாநாடு குறித்து பேசுவதற்காகவேன்னு ஒரு பேச்சு அடிபடுகிறது.போர்நிறுத்தம் பற்றி பேசுவது என்பது சந்தேகமே.. ஒருவேளை நம்ம கலைஞரின் தொல்லை தாங்காமல் வேற வழியில்லாம இவர அனுப்பியிருப்பாங்களோ என்னவோ. அப்ப பிரணாப்புக்கு விசா கிடைக்கலையா இல்ல விமான டிக்கெட் கிடைக்கலையா? பாவம் அவர் என்ன செய்வார் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓப்ப்டைக்கவேண்டும் என்ற ஒரு விசயத்துல எப்படி பேசனுமுனு அவருக்கு தெரியல....
நேற்று நம்ம கலைஞர் 1956ல் இருந்தே உன்னிப்பா கவனிச்சு தீர்மானம் போட்டதாக கூறியுள்ளார். மேலும் இலங்கைப்பிரச்சினைக்காக இன்னும் சில நாட்களாவது ( இல்ல இன்னும் சில காலமா)பொறுத்திருக்கலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்..திருமா தன்னிச்சையாக உண்ணாவிரதத்தை கையில் எடுத்துள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.இதுல இருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது.ஈழப்பிரச்சினையில் யார் யாரையும் முந்திவிடக்கூடாது என்ற ராசதந்திரம் நல்லாவே தெரியுது. கலைஞருக்கு ஊதுகுழலாக ராமதாசு "கலைஞரின் சொல்படி திருமா உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்கிறார்....கலைஞர் சொல்லியிருக்கும் சில காலம் என்பது எதுவரை... லட்சக்கணக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குறையும் வரைக்குமா... அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ.................மீண்டும் மீண்டும் ஒரு விசயம் மிக மிகத் தெளிவா தெரியுது அடுத்த கண்துடைப்பு நாடகம் ஈழப்பிரச்சினையில் மிக தெளிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
யோகி இணைய ஒலி 24x7
15 years ago