Friday, August 28, 2009

வலைப்பதிவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் இணையதளம்

நம்ம ஆளுக எழுதும் சினிமா பதிவுகளுக்கு எப்பவும் கிராக்கி இருக்கும்.கதை,கவிதை,நேர்த்தியான அரசியல் அலசல்கள் என யோசிச்சு எழுதும் பதிவுகளை விட ரெண்டு வரி சினிமா பதிவுகளுக்கு ஹிஸும் அதிகம் பின்னூட்டமும் அதிகம்...

நான் சொல்ல வருவது சினிமா விமர்சனம் பற்றி... முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்றால் ஆ.வி.தான்.அவர்கள் போடும் மார்க்கை வைத்தே படத்தின் தலைவிதியை தெரிந்து கொள்ளலாம்...ஆனால் தற்போது எந்த பத்திரிக்கையும் நடுநிலையான விமர்சனம் செய்வதில்லை......ஆனால் நம்ம வலைப்பதிவுகளில் சினிமாவிமர்சனம்னாலே எந்த படம் என்றாலும் பிடி கொடுக்காமல் விளாசித்தள்ளுகிறார்கள்.......இந்த விசயத்தை பற்றி தமிழ்சினிமா.காம் வேண்டுகொளை விடுத்துள்ளது....... கீழே படிக்கவும்.....

//பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில். சமீபத்தில் வெளிவந்த ஒரு மாபெரும் பட்ஜெட் படத்தை கிழிகிழியென்று கிழித்துவிட்டார்கள் இந்த பிளாக் எழுத்தாளர்கள். இவர்களின் விமர்சனத்தை பார்த்தால், ஒரு சீனுக்கு கூட தகுதியில்லாத படம் போலிருக்கிறது என்ற எண்ணமே எழும். ஆனால், நீளம் என்ற ஒரு குறையை தவிர கவலைப்படுத்துகிற மாதிரியான படம் இல்லை இது. அப்படியானால் இவர்கள் ஏன் இப்படி எழுதி கிழிக்க வேண்டும்? அநேகமாக எல்லா படத்தையும் இப்படிதான் கிழித்து தொங்கப் போடுகிறார்கள் இந்த வலைப்பூக்காரர்கள். எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். ஒன்றுக்கும் உதவாத படங்களை கிழித்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். பிரமாண்டம், நேர்த்தி, இசை, ஒளிப்பதிவு என்று எதிலும் குறைவைக்காத படத்தையெல்லாம் கூட ஒரே தராசில் வைத்து பார்ப்பதுதான் பெரும் சோகம். இனியாவது யோசியுங்கள் நண்பர்களே...////

கொஞ்சம் பாத்து எழுதுங்க மக்களே

Monday, August 17, 2009

ஓட்டுப் போட காசு வாங்கலையோ..........

அம்மா வாங்க, அய்யா வாங்க,பிரபல பதிவர்களே வாங்க,பிரபலமில்லா பதிவர்களே வாங்க, சின்ன பதிவர்களே வாங்க,பெரிய பதிவர்களே வாங்க, எல்லோரும் வாங்க வந்து ஓட்டு போடுங்க.........அப்படி இப்படினு எப்படி கத்தினாலும் கதறினாலும் நம்ம மக்களுக்கு ஓட்டு போடுறதுனாலே சோம்பேறித்தனம் தான்.


இந்தப்பதிவில் ஓட்டு போடுங்கன்னு சொல்லியிருந்தேன்.பதிவுக்கு கூட ஓட்டு போடவேண்டாம்..அந்த மேட்டர்ல குத்துங்கன்னு சொல்லியிருந்தேன்...அந்தப்பதிவுக்கு ரெண்டு நாள் சேர்த்து 1200 ஹிட்ஸ் வந்திருந்தது..ஆனால் ஓட்டு போட்டவங்களின் எண்ணிக்கையை பார்த்தால் 100க்கும் குறைவே...... இப்பதான் தெரியுது அரசியல்வாதிங்க எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு.பின்ன மக்கள் தங்கள் கட்சிக்கு ஓட்டு போடனும்றதுக்காக என்னவெல்லாம் செய்றாங்க...நீங்க அப்படி ஏதாவது செஞ்சத்தான் ஓட்டு போடுவாங்க அப்படினு ஒரு சில பேர் சொன்னாங்க....அதுக்காக ஒரு வோட்டுக்கு 100,200 குடுக்கனும்னு எதிர்பாத்தா எப்படினு கேட்ட பதில் இல்லை..

அதனால் யூத்து சங்க தலைவரின் ஆலோசனைப்படி ஒரு ஓட்டுக்கு அஞ்சு பைசா கொடுப்பதாக முடிவு பண்ணியுள்ளேன்..என் பதிவுக்கு தமிழிஷ்ல ஓட்டு போட்டிங்கன்னா அஞ்சு பைசா, தமிழ்மணத்தில் ஓட்டு போட்டா அஞ்சு பைசா, மொத்தமா உங்க கணக்கில் 100 ஓட்டு வந்ததும் அதற்கான தொகை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை சந்தோசமாக சொல்லிகொள்கிறேன்........

அதனால பதிவுலக மக்களே மறக்காம என் பதிவுக்கு ஓட்டு போடுங்க சொல்லிட்டேன்......

ஸ்பெசல் ஆபர்
1000 ஓட்டு போட்டா 1கிலோ ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா சுடச்சுட பார்சல் அனுப்பி வைக்கப்படும்

Friday, August 14, 2009

ஒரே தண்ணி பிரச்சனை-ப்பா.......பதிவர் சந்திப்பை வைங்க

பன்றி காய்ச்சல பீதில எல்லோரும் இருக்கும் போது இவன் மட்டும் என்ன தண்ணி பிரச்சினைனு கிளம்புறான்னு தப்பு கணக்கு போடாதிங்க.......நான் சொன்னது வால் பையன் பிரச்சினையில்ல...............ராமாபுரத்தில் இருந்த வரைக்கும் இந்த பிரச்சினை வரவே இல்லை..ரெண்டு நாளைக்கு ஒரு முறை தவறாமல் குடி தண்ணீர் குழாயிலே வந்துவிடும்... வீட்டு ஓனர் பக்கத்துல கிடையாது....தண்ணீர் விசய்த்தில் பிரச்சினையே கிடையாது....

எப்ப பள்ளிக்கரணைக்கு வந்தேனோ.......அப்ப ஆரம்பிச்சிதுப்பா.....இங்க வந்ததுக்கப்புறம் குடிக்கிறதுக்கு கேன் தண்ணீர் தான்....பஞ்சாயத்து குழாயில் வரும் தண்ணிய வாயில கூட வைக்க முடியாது....பக்கத்துலயே வீட்டு ஓனர்......காலையில் 6 மணிக்கு எந்திச்சா டேப்புல தண்ணி வரது.......ஓனரை எழுப்பனும்.......இதே ஒரு வேலையாப்போச்சி அப்படினு பக்கத்து தெருவுக்கு வீடு மாறினேன்.

'தனியா உங்களுக்கு டேங்க் வச்சித்தாரேன்'..... ஆஹா பரவாயில்லையே. தண்ணி பிரச்சினையில்லப்பான்னு நினைச்சி டேங்கை பாத்தா.....அது டேங்க இல்ல டேங்க மாதிரி!!!.... சரி பரவாயில்ல... அப்படினு பாத்தா மோட்டார் சுவிட்ச் அவங்க வீட்டுக்குள்ள இருந்தது .மறுபடியும் அதே மாதிரி மறுபடியும் காலையில் எழுந்து தண்ணிக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.......

நீங்க தண்ணி அதிகமா யூஸ் பண்றீங்க ஆபடினு வேற அட்வைஸ்( அந்த டேங்க் தண்ணி ரெண்டு பேர் குளிப்பதற்கே பத்தாது)..இந்த கொடுமையில பஞ்சாயத்து தண்ணிய வேற வாரத்துக்கு ஒரு முறைதான் விடுறாங்க.. வேற வீடு பாக்கனும் ஓனர் பக்கத்துல இல்லாத வீடாத்தான் பாக்கனும்............
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பூறம் பதிவர் சந்திப்பு வச்சி ரொம்ப நாளவுது ராசாக்களா....... உங்களை பாத்து ரொம்ப மாசமாச்சு கண்ணுகளா???..........அதனால பிரபல பதிவர்களே நீங்க அத்திரிய பாக்கனும்னா உடனே பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க...எத்தன நாளைக்குத்தான் முகம் பாக்காம சண்டை போடுறது........தேதி விவரங்களை ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லுங்கப்பா.....அப்பதான் எங்க மேனேஜர்ட்ட டேமேஜ் இல்லாம டுட்டி மாத்திட்டு வர முடியும்..புரிஞ்சிதா..........

Monday, August 10, 2009

தமிழின் நம்பர் ஒன் மியூசிக் சேனல் எது? + 150

தமிழில் முதல் மியூசிக் சேனல் என்றால் அது சன் மியூசிக் சேனல் தான்........ முதலில் சென்னையில் மட்டும் எஸ்சிவி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சேனல் கொஞ்ச நாட்களில் சேட்டலைட் சேனலாக மாறியது..அதுவரைக்கும் தமிழ் பெருங்குடி மக்கள் "ஹலோ பெப்சி உமாவான்னு" கேட்டுக்கிட்டு இருந்த காலம் போய் புதுப்புது பிகர்களிடம் கடலை போடுவதை சன் மியூசிக் சேனல் தான் ஆரம்பித்து வைத்தது. இந்த பார்முலாவை அனைத்து தமிழ் மியூசிக் சேனல்களும் சரியாப்புடிச்சி நம்மளை மண்ட காய வக்கிறாங்க.

சன் மியூசிக்கிற்கு அடுத்ததா எஸ் எஸ் மியூசிக் சேனல் தென் இந்திய மொழிகளுக்கென்று ஆரம்பித்ததாக சொன்னாலும் இதிலும் தமிழ் பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம்...அதுக்கு அடுத்து ஜெயாமேக்ஸ்,இசையருவி,ராஜ் மியூசிக் அப்படினு வரிசையா இந்த சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும்...அதற்கேற்றார்போல் தினம் தினம் கடலை போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது...

பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு பாடல் ஒளிபரப்புறாங்களான்னு கேட்டா கண்டிப்பா இல்லைனு தான் சொல்லனும்......இதுதான் மக்கள் ரசனை இதைத்தான் அவங்க பார்ப்பார்கள் என்று அவர்களே ஒரு முடிவு பண்ணி...நம்ம ரசனையை ஒரு வழி பண்ணிட்டு இருக்காங்க. புதுப்பாடல்கள் தான் மக்கள் பாப்பாங்கன்னு அவங்க ரைட்ஸ் வாங்கியிருக்கிற மொக்கையான புதுப்பாடல்களை தேஞ்ச ரெக்கார்டு மாதிரி திரும்ப திரும்ப போட்டு மக்களை பார்க்க வைப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க.

ஒரு மியூசிக் சேனல்னா எல்லா வகையான பாடல்களையும் ஒளிபரப்ப் வேண்டும்...... முக்கியமா மிடில் சாங்க்ஸ் என்று சொல்லப்படும் 1980-1990 வருட பாடல்களை பார்ப்பதே அரிதாகியுள்ளது..........

இதனால முடிவு உங்க கையில.........நீங்களே ஓட்டு போடுங்க எந்த சேனல் நல்ல ரசனையான பாடல்களை ஒளிபரப்பி உங்கள் மனதில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது என்பதை நீங்களே தீமானியுங்கள்.. அப்படியே வலதுபுறம் பாத்து ஓட்டு பதிவிடுங்கள்...... என் பதிவுக்குத்தான் ஓட்டுப்போடமாட்டுக்கீங்க...இதையாவது செய்யுங்க

அப்புறம் இது என்னோட 150வது பதிவு...பதிவு எழுத வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.என்னை பொறுத்த வரைக்கும் நான் பதிவு எழுதுவதைவிட நல்ல வாசிப்பாளனாக இருப்பதுதான் எனக்கு பிடிக்கும்........என்னுடைய 60பாலோயர்ஸ்க்கும் நன்றி........இதுநாள்வரைக்கும் பொறுமையா என் பதிவையும் படிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.....

உங்களுக்காக ஒரு ஸ்பெசல் பாட்டு........எஞ்சாய்....






Saturday, August 8, 2009

தொப்பை "யூத்தின்" அடையாளம்.......!!!

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்...அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.நான் சொல்ல வருவது நம்ம யூத் பதிவர்களின் தொப்பை பிரச்சினை பற்றியது.

இந்த பதிவர் எப்போதும் தன்னுடைய பதிவில் தான் ஒரு யூத்து எனபதை மறக்காமல் எழுதிவிடுவார்... இவரை அங்கிள் என்று சொன்னால் போதும் இந்த பதிவர் நம்மை அடிக்கவே வந்து விடுவார்.காரணம் இவரும் அவரைப்போலவே யூத்துதான்..என்னதான் யூத்துன்னு வெளியில சொல்லிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள இவங்க தொப்பைய நினைச்சி இவங்களுக்கு பலநாள் தூக்கமே கிடையாதாம்....பதிவுலகில் ஒல்லியா இருந்தாலும் கில்லியா இருக்கும் இந்த பதிவரிடம் அதன் ரகசியத்த கேட்டு டார்ச்சர் பண்றாங்களாம்...கடேசியாக கிடைத்த தகவல் படி இந்த இரு பதிவர்களும் காசி தியேட்டர் பாலத்திலிருந்து கத்திப்பாரா ஜங்ஷன் வைக்கும் தினசரி ஜாக்கிங் என்ற பெயரில் அந்த பக்கம் வருகிற ஆன்டிகளை சைட் அடிப்பதாக கேள்விப்பட்டேன்.
 
  அடுத்த பதிவர் நிஜமாவே இவர் யூத்துதான்..ஆனா என்ன 25ஐ தாண்டியதன் விளைவு இளந்தொப்பைதான் இவருக்கு மெயின் தலைவலி....ஒவ்வொருவாட்டியும் ஊருக்கு வரும்போதும் போகும் போதும் பிகரை உஷார் பண்ணிடுவார்....அந்த வாரத்தில் பகலில் அந்த பிகரை வெளியில் கூட்டி செல்லும் போது"நீங்க பாக்க நல்லாத்தான் இருக்கீங்க ஆனா இந்த தொப்பை தான்ன்னு இழுக்கும் போது ரொம்ப டென்சன் ஆகி அவர் இருக்கிற ஊரில் உள்ள மிகப்பெரிய பஸ் ஸ்டாண்டை பத்து முறை சுற்றி ஓடுவதாக உளவுத்துறை தகவல் கூறுகிறது.....

இந்த பதிவர் அந்த சைடு யூத்தா இல்லை இந்த சைடு யூத்தான்னு தெரியல... இவருக்கும் இந்த தொப்பை பிரச்சினைதான்....சிட்டிக்கு உள்ள இருக்கும் வரைக்க்கும் வாக்கிங் போகக்கூட இடமில்லாமல் தவித்தார்....அதற்காகவே தன்னுடை வீட்டை சென்னை புறநகருக்கு மாறிவிட்டார்....இப்போது அவர் கிஷ்கிந்தாவை மூணு வாட்டி சுற்றி வருகிறாராம்.

சீக்கிரமே குடும்ப இஸ்திரியாக மாறப்போகும் இந்த இளம்பதிவருக்கும் இதே பிரச்சினைதான்..அதுக்காக தமுக்கம் மைதானத்தை காலையிலும் மாலையிலும் நேரம் காலம் பாக்காமல் சுற்றி வருகிறாராம்..

இவங்க எல்லாரும் ஜாக்கிங் வாக்கிங் தினசரி போனாலும் அவர்களால் வாயை கட்டவே முடியவில்லையாம்.... இவங்க படுற கஷ்டத்தை கேள்விப்பதும் என் கண்ணுல தண்ணி வந்திடிச்சிப்பா.........அதனால என் யோசனைய கேளுங்க...


தொப்பை குறையனும்னா முதல்ல உடம்புல உள்ள கொழுப்பு குறையனும். கொழுப்பு குறையனும்னா தினசரி அதிகாலையில 5 முதல் 10 டம்ளர் வெந்நீர் குடிச்சா உடம்புல உள்ள கொழுப்பு கரைஞ்சிடுமாம்.............. அதுக்கப்புறம் இஞ்சி சாறு, சுக்கு காப்பி இதையெல்லாம் அடிக்கடி குடிங்க..........

-------------
------------
-----------
-------------------
-------------

ஏன்னா இதையெல்லாம் நானும் செஞ்சிட்டு இருக்கேன்............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Sunday, August 2, 2009

எனக்கு பிடித்த பாடல்

சினிமா பாடல்களில் தமிழ் தவிர்த்து மற்ற மொழி பாடல்கள் என்றால் ஹிந்தி பாடல்கள் தான் எனக்கு பிடிக்கும்( அர்த்தம் புரியுமானு கேட்கக்கூடாது).......சென்னை வந்ததற்கு அப்புறம் இந்த லிஸ்டில் தெலுங்கு பாடல்களும் சேர்ந்து கொண்டன............ஊரில் இருக்கும் போது எப்போதாவது மலையாளப்பாடல்கள் கேட்டதுண்டு.... ஆனால் கன்ன்டம்.........தமிழ்நாட்டுக்கும் அதுக்கும் ஒத்தே வராதே....பெங்களூரில் கன்னடப்படங்களை விட தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள் தான் அதிகம் ஓடுகின்றன...............

சமீபத்தில்தான் இந்த கன்னடப்பாடலை கேட்டேன்..............நல்ல லொக்கேசன், அருமையான ஒளிப்பதிவு.....பாட்டின் வேகத்துக்கேற்ற கேமரா மூவ்மென்ட் அருமையா இருக்கு.........பார்த்து ரசியுங்கள். முதல்ல பாக்கும் போது இது கன்னட பாடல்தானா? அப்படினு ஒரு சந்தேகம்......ஏன்னா நமக்கும் கன்னடத்துக்கும் ரொம்ப தூரமாச்சே.....

படம் : சினேக லோகா ( கண்ணெதிரே தோன்றினாள் ரீமேக்)
இசை : ஹம்சலேகா
பாடகர்கள் : ராஜேஷ்,சித்ரா