Saturday, July 25, 2009

குற்றாலத்தில் கும்மாளம் போட்ட பிரபல பதிவர்

எனக்கு தெரிந்த அந்தப் பிரபல பதிவர் சென்னையில் குடியிருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெளியூர் செல்லவில்லை என்றால் அவருக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்பது போல் பேசுவார்.


கடந்த வாரம் அவரிடம் பேசும் போது " உங்க ஊருக்குத்தான் போறேன்".( ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு)
"எங்க ஊர்ல உங்களுக்கு என்ன வேலை அண்ணே...அதற்கு அவர் "உங்க ஊர்னா உங்க ஊர் கிடையாது குற்றாலம்பா" என்றார்
"அண்ணே குடும்பத்தோடவா போறீங்க?".... இந்த கேள்விக்கு காதுல ரத்தம் வர்ற மாதிரி பதில் வந்தது.... " நாங்க எல்லாம் யூத்துப்பா"( அவர் வீட்டில் இருக்கும் வரைதான் குடும்ப இஸ்திரி ...... வெளிய வந்தா யூத்து போல...அன்னியன் மாதிரி)

"குற்றாலத்துல எந்த பரோட்டா கடை நல்லாயிருக்கும்?"( எங்க போனாலும் ஓட்டலை தேடும் பழக்கத்தை விடமாட்டாரோ)
"அண்ணே குற்றாலத்துல ஒரு ஓட்டலும் நல்லாயிருக்காது...பிரானூர் பார்டர்ல ஏகப்பட்ட பரோட்டா கடை இருக்குது...அங்க போங்கண்ணே....
"சரி அங்க எந்த கடை நல்லாயிருக்கும்"( விடவே மாட்டாரோ)
"தெரியல அண்ணே அங்க எல்லாம் போய் வருசக்கணக்காவுது...."
"பக்கத்து ஊரை பற்றி ஒன்னுமே தெரியல உன்ன்னையெல்லாம்".( ஆஹா மறுபடியுமா)

சென்னையில நாலு சுவத்துக்குள்ள பக்கெட்ல தண்ணிய மொண்டு குளிச்சவரு குற்றால அருவிய நேர்ல பார்த்ததும் காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பாஞ்ச மாதிரி ஓவர் குஷி ஆகிட்டார்.... கூட வந்தவங்கதான் யோவ் கொஞ்சம் அடக்கி வாசின்னதும்..கொஞ்சம் அமைதி ஆனார்.....அருவியில் குளிப்பதற்கு கியூவில் நிற்கும் போது புலம்பிக்கொண்டே இருந்ததால் அவருக்கு முன்னாடி இருந்தவர் "அண்ணாச்சி சென்னையில இருந்தா வர்றீக"...... ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்?.......... நீங்க புலம்புறத வச்சிதான்....


"சென்னையிலதான் எதுக்கு எடுத்தாலும் வரிசைனா இங்கயுமா?....."
 "சரி முன்னாடி போங்க நல்லா குளிச்சிட்டு வாங்க என்று வழி விட்டார்............ "

நம்ம பதிவர் குளிக்க ஆரம்பித்ததும் அருவியிலே டிராபிக் ஜாம் ஆயிடிச்சி.....அவருக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் குளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்......நம்ம பதிவர் நாலு பேர் குளிக்கிற இடத்தை இவருடைய தொப்பை மறைத்ததால் வந்த விளைவுதான் இந்த டிராபிக் ஜாம்........ இதை அறியாத நம்ம பதிவர் வாழ்க்கையிலே முதல் முறையா அருவியில குளிச்ச சந்தோசத்தில் இருந்தார்.... அதற்குள் ஒரு காவலர் வந்து நம்ம பதிவரிடம் வந்து" சார் குளிச்சது போதும். பாருங்க எவ்ளோ பேர் வெயிட் பண்றாங்கன்னு" என்றார்...நம்ம பதிவர்" சார் இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் முடிச்சிட்டு வந்திடுறேன்.யோவ் சொன்ன கேக்க மாட்டியா... ஆமா எங்க இருந்து வர்ற...... சென்னையில் இருந்து...

"சென்னையில என்ன பண்ற"....
"நான் பதிவர்ங்க"......
என்னது பதிவரா... பத்திரமெல்லாம் பதிவு பண்றவரா?........."
இல்ல சார் அது வந்து இன்டெர் நெட்ல எழுதி எல்லோருக்கும் மொக்கை போடுவோம்.........".
"ஓ நீங்க அந்த கோஷ்டியா...."


எந்த கோஷ்டி சார்?...... கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து ஆட்களை நேராக பாக்காம நெட் மூலமா திட்டி ஒரு பெரும் கலவரத்தையே உண்டாக்குவீங்களே அந்த கோஷ்டியா????" அப்படினு கேட்டதுதான் தாமதம்................. அடுத்த செகண்டுல நம்ம பதிவர் எஸ்கேப்.

அடுத்ததா பிரானூர் பார்டர்ல என்ன கலாட்டா பண்ணினாரோ.......விசாரிச்சி சொல்றேன்.


அந்த பிரபல பதிவர் இவர்தான்