Thursday, April 23, 2009

திருடா திருடி-வெள்ளித்திரை-டாஸ்மாக்-- ஷேர் ஆட்டோ--தொங்க பாலு-தமிழக பந்த் அபார வெற்றி

இன்னும் சற்று நேரத்தில் தமிழினத்தலைவர் அவருடைய தொலைக்காட்சியில் கீழ்க்கண்டவாறு பேட்டியளிப்பார் " தமிழக மக்களின் ஒத்துழைப்போடு பந்த் அபார வெற்றி என்று"... நாமளும் அத கேட்டுக்கினு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.. நேற்று நம்ம தலைமை செயலாளர் விட்ட அறிக்கை இவ்வளவு காமெடியா போவும்னு நினைக்கலை....

காலையில் சன் டிவியில் திருடா திருடி, மதியம் சரவணா .... கேடிவியில் காலையில் ஆயுதம்,மதியம் ஆனந்தம், கலைஞர் டிவியில் காலையில் முரட்டுக்காளை, மதியம் வெள்ளித்திரை... வழக்கம் போல் தமிழ் மியூசிக் சேனல்களில் தன் காதலிக்கோ பிரண்டுக்கோ பாட்டுக்கேட்கும் கூட்டம்.....எதையும் கண்டுகொள்ளாத எதிரணியிணரின் தொலைக்காட்சிகள்...... பணிமணைகளில் அழகாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப்பேருந்துகள்... அதற்கு காவலாக காவல் துறையினர்....முக்கிய சாலைகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தும்... தமிழ்நாட்டு மக்களின் குடிதாகத்தை மட்டும் எப்பவும் தீர்த்து வைக்கும் டாஸ்மாக் திறந்திருந்த காட்சிகள்....பிராய்லர் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையைவிட இன்று அதிக கூட்டம்.... அபார வசூல் செய்த ஷேர் ஆட்டோக்கள் மற்றும்ஆட்டோக்கள்...தொட்டுக்கொள்ள ஊறுகாயாக ஐபிஎல் போட்டிகள்இப்படி பொது மக்களின் ஒத்துழைப்போடு இந்த பந்த் அபார வெற்றி பெற்று விட்டது....

மொத்தத்தில் பந்த் என்ற பெயரில் தமிழ்நட்டு மக்களை ஒரு நாள் ஓய்வு எடுக்க வைத்த கலைஞரின் அன்புக்கு நான் அடிமை..........



கடைசியா ஒரு கேள்வி இன்னைக்கு எதுக்கு பந்த் நடத்தினாங்க.........யாருக்காவது தெரியுமா ........... சொல்லுங்கப்பா



தொங்க பாலு அளித்த பேட்டி இன்னும் டென்சனை கிளப்பியது.... இலங்கை பிரச்சினையில் மத்திய அரசும் மாநில அரசும் தலையிட்டு இருப்பதால்தான் அங்குள்ள நிகழ்வுகள் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கிறதாம்.... மேலும் இலங்கைக்கு உதவும் இஸ்ரேல் சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தை நிறுத்த பன்னாட்டு அமைப்பிடம் மத்திய அரசு பேசுமாம்......... முடியல................ பேட்டி அளிக்கும் போது அந்த முகத்தை பாக்கனுமே... திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி..