Monday, August 10, 2009

தமிழின் நம்பர் ஒன் மியூசிக் சேனல் எது? + 150

தமிழில் முதல் மியூசிக் சேனல் என்றால் அது சன் மியூசிக் சேனல் தான்........ முதலில் சென்னையில் மட்டும் எஸ்சிவி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சேனல் கொஞ்ச நாட்களில் சேட்டலைட் சேனலாக மாறியது..அதுவரைக்கும் தமிழ் பெருங்குடி மக்கள் "ஹலோ பெப்சி உமாவான்னு" கேட்டுக்கிட்டு இருந்த காலம் போய் புதுப்புது பிகர்களிடம் கடலை போடுவதை சன் மியூசிக் சேனல் தான் ஆரம்பித்து வைத்தது. இந்த பார்முலாவை அனைத்து தமிழ் மியூசிக் சேனல்களும் சரியாப்புடிச்சி நம்மளை மண்ட காய வக்கிறாங்க.

சன் மியூசிக்கிற்கு அடுத்ததா எஸ் எஸ் மியூசிக் சேனல் தென் இந்திய மொழிகளுக்கென்று ஆரம்பித்ததாக சொன்னாலும் இதிலும் தமிழ் பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம்...அதுக்கு அடுத்து ஜெயாமேக்ஸ்,இசையருவி,ராஜ் மியூசிக் அப்படினு வரிசையா இந்த சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும்...அதற்கேற்றார்போல் தினம் தினம் கடலை போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது...

பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு பாடல் ஒளிபரப்புறாங்களான்னு கேட்டா கண்டிப்பா இல்லைனு தான் சொல்லனும்......இதுதான் மக்கள் ரசனை இதைத்தான் அவங்க பார்ப்பார்கள் என்று அவர்களே ஒரு முடிவு பண்ணி...நம்ம ரசனையை ஒரு வழி பண்ணிட்டு இருக்காங்க. புதுப்பாடல்கள் தான் மக்கள் பாப்பாங்கன்னு அவங்க ரைட்ஸ் வாங்கியிருக்கிற மொக்கையான புதுப்பாடல்களை தேஞ்ச ரெக்கார்டு மாதிரி திரும்ப திரும்ப போட்டு மக்களை பார்க்க வைப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க.

ஒரு மியூசிக் சேனல்னா எல்லா வகையான பாடல்களையும் ஒளிபரப்ப் வேண்டும்...... முக்கியமா மிடில் சாங்க்ஸ் என்று சொல்லப்படும் 1980-1990 வருட பாடல்களை பார்ப்பதே அரிதாகியுள்ளது..........

இதனால முடிவு உங்க கையில.........நீங்களே ஓட்டு போடுங்க எந்த சேனல் நல்ல ரசனையான பாடல்களை ஒளிபரப்பி உங்கள் மனதில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது என்பதை நீங்களே தீமானியுங்கள்.. அப்படியே வலதுபுறம் பாத்து ஓட்டு பதிவிடுங்கள்...... என் பதிவுக்குத்தான் ஓட்டுப்போடமாட்டுக்கீங்க...இதையாவது செய்யுங்க

அப்புறம் இது என்னோட 150வது பதிவு...பதிவு எழுத வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.என்னை பொறுத்த வரைக்கும் நான் பதிவு எழுதுவதைவிட நல்ல வாசிப்பாளனாக இருப்பதுதான் எனக்கு பிடிக்கும்........என்னுடைய 60பாலோயர்ஸ்க்கும் நன்றி........இதுநாள்வரைக்கும் பொறுமையா என் பதிவையும் படிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.....

உங்களுக்காக ஒரு ஸ்பெசல் பாட்டு........எஞ்சாய்....