Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, April 28, 2016


திமுகவும் அதிமுகவும் ஒன்றா???


சொத்துக்குவிப்பு வழக்கிலும், டான்சி நில ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட்டவர் ஜெயா என்ற போதும், இந்த இரண்டு வழக்குகளிலும் அவர் விடுதலையை வாங்கியது சட்டத்திற்குப் புறம்பானது என்ற போதும், அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, 2ஜி வழக்கு விசாரணை முடிவதற்கு முன்பே தி.மு.க.வையும் கருணாநிதியையும் மன்னிக்கவே முடியாத குற்றவாளியென மக்களின் மனதில் பதிய வைப்பதில் ஜெயா, துக்ளக் சோ, பா.ஜ.க., உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் வெற்றி பெற்றுவிட்டது.
2ஜி விற்பனையில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தணிக்கைத் துறையின் அனுமானம்தான். அந்த இழப்பு குறித்து இந்தத் தொகையைவிடக் குறைவான அனுமானங்களையும் முன்வைத்திருக்கிறது தணிக்கைத் துறை. அவ்விற்பனையில் விதிமுறையை மீறி நடந்துகொண்டு, சில நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதுதான் ஆ.ராசா மீதான வழக்கு; அதற்காக, கலைஞர் டி.வி.க்கு இருநூறு கோடி ரூபாய் இலஞ்சமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கொள்ளையோ தி.மு.க. மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி ஊழலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானது.
சமச்சீர் கல்வி போராட்டம்
பதவியேற்றவுடனேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்த பார்ப்பன ஜெயா அரசைக் கண்டித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை அணிதிரட்டி நடத்திய சாலை மறியல் போராட்டம் (கோப்புப் படம்)
2ஜி ஊழல் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் விவாதிக்கப்பட்ட அளவிற்கு அம்மா அடித்திருக்கும் இந்தக் கொள்ளை பேசப்படவில்லை. அப்படி விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போதெல்லாம், “தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் ஊறிய கட்சிகள், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளை வீழ்த்தினால்தான் தமிழகம் உருப்படும்” என சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் ஒரு நரித்தனமான வாதத்தைக் கிளப்பி அதற்குள் புகுந்து கொண்டு, பார்ப்பன ஜெயாவைப் பாதுகாக்கிறது. பார்ப்பனக் கும்பலின் இந்தக் கிரிமினல்தனத்தை ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., நாம் தமிழர் கட்சிகள் மட்டுமின்றி, போலி கம்யூனிஸ்டுகளும் இந்தத் தேர்தலில் வழிமொழிந்து வருகின்றனர்.
சமச்சீர் கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க.வையும், அக்கல்வித் திட்டத்தைப் பதவியேற்றவுடனேயே குழிதோண்டிப் புதைக்க முயற்சி செய்த ஜெயாவின் அ.தி.மு.க.வையும்; அனைத்துச் சாதியினரும் அரச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்த தி.மு.க.வையும், அரசியல் தரகன் பார்ப்பன சு.சாமியோடு கைகோர்த்துக்கொண்டு அச்சட்டத்தை வேரறுத்த அ.தி.மு.க.வையும்; மோடி அரசின் இந்தி, சம்ஸ்கிருத திணிப்புகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் தி.மு.க.வையும், அத்திணிப்புகளை மௌனமாக இருந்து அங்கீகரித்து வரும் அ.தி.மு.க.வையும்; ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.-மோடியின் இயற்கை கூட்டாளியான ஜெயாவையும்; பதவி, அதிகாரம் என்ற பிழைப்புவாத நோக்கில் பா.ஜ.க.வோடு தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட தி.மு.க.வையும் ஒன்று என சாதிப்பதும், ஊழலைச் சாக்காக வைத்துக் கொண்டு அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே வேறுபாடே கிடையாது என வாதிடுவதும் நரித்தனமானது.
நன்றி: ‪#‎வினவு‬

Friday, October 28, 2011

காட்டு காட்டுனு காட்டிய வேலாயுதம் வயித்தெரிச்சலில் பிரபல பதிவர்

அனைத்து பதிவர்களின் எண்ணத்தில் மண் அள்ளி போட்டுவிட்டார் இளைய தளபதி......ஆம் வேலாயுதம் வரும் வழக்கம் போல் கும்மலாம் என்ற எண்ணத்தில்......... படம் நல்லாயிருக்கு அப்படினு சொல்றதுக்கு பதிலா அரைச்ச மாவையே அரைத்திருக்கிறார் அப்படினு சொல்றாங்க வேற வழியே இல்லாம.................................. ஒரு பிரபல பதிவர் தன்னுடைய
கூகுள் பஸ்ஸில் “ஏழாம் அறிவு நல்லால்லைங்கிறது கூட கஷ்டமாயில்ல. அதுனால வேலாயுதம் பரவாயில்லைன்னு ஓட வச்சிடுவாங்கன்னு நினைக்கும் போது வருத்தமாயிருக்கு” அப்படினு தன்னுடைய வயித்தெரிச்சலை கொட்டியிருக்கிறார்................ இதை என்னனு சொல்ல..........இதே படத்தில் விஜய் தவிர்த்து வேறு யாரவது நடித்திருந்தால் படம் செம மாஸ் என்றிருப்பார்..................... இதுதான் அநேக பதிவர்களின் எண்ணமும் கூட.........................................

வேலாயுதம் படத்தை பற்றி பதிவர்களின் விமர்சன தொகுப்பு

1.http://cablesankar.blogspot.com/2011/10/blog-post_27.html
2.http://shayan2613.blogspot.com/2011/10/blog-post_27.html
3.http://www.arvloshan.com/2011/10/blog-post_26.html
4.இணைய தளபதியின் விமர்சனம்
5.http://nellainanban.blogspot.com/2011/10/blog-post.html
6.http://kaviyulagam.blogspot.com/2011/10/blog-post_26.html
7.http://pavithulikal.blogspot.com/2011/10/blog-post_28.html
8.http://cricketnanparkal.blogspot.com/2011/10/blog-post_26.html
9.http://tamilraja-thotil.blogspot.com/2011/10/blog-post_28.html
10.http://www.luckylookonline.com/2011/10/blog-post_2100.html

Wednesday, October 5, 2011

காட்டு காட்டுனு காட்டுமா வேலாயுதம்???



வேலாயுதத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஹிட் அடித்துள்ளது.........மாயம் செய்தாயோ மற்றும் முளைச்சி மூனு இலைய விடல.........................பட ட்ரெயிலரும் பட்டய கெளப்புவதால்..................................................... மீண்டும் இமாலய நம்பிக்கையுடன்......................................................... தளபதிக்கு மீண்டும் ஒரு கில்லியாக வாழ்த்துக்கள்..............

Monday, January 17, 2011

தளபதி தேடிக்கொள்ளும் ஆப்பு???????????????

என் ரசிகர்களின் விருப்பத்திற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார் இளைய தளபதி விஜய்......ஆனால் என்னைப்போன்ற சாதாரண ரசிகனுக்கு அவர் வெற்றிப்படங்களை கொடுத்தாலே போதும்.........அரசியல் எல்லாம் வேணாம் என்பதுதான்....................காவலன் பட வெளியீட்டில் என்ன உள்குத்தோ வெளிக்குத்தோ........... அதெல்லாம் தெரியாது...................ஆனால் நேற்று 16.01.11 மாலைமலரில் இந்த விளம்பரத்தை பார்த்ததும்............................................................................ என்னத்த சொல்ல......................  


அரசியல் வேணாம்
தளபதி..........................................................

வருத்ததுடன்
வெள்ளந்தியான விஜய் ரசிகன்.............

Tuesday, December 7, 2010

தமிழ்நாட்டுல சென்னை மட்டும்தான் இருக்கோ???????


 
இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு...அதுக்கு காரணம் ஆளுங்கட்சி மற்றும் ஊடகங்கள்...சென்னைக்குள் எது நடந்தாலும் அய்யோ என அலறும் ஆளுங்கட்சியும், ஊடங்களும்...........சென்னைக்கு வெளியே பூகம்பமே வந்தாலும் மேம்போக்காக ஒரு பார்வை பார்த்து விட்டு செல்கின்றன................... எந்த விசயம் என்றாலும் இதே நிலைதான்...

கடந்த ஒரு மாதமாக சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் நீரில் மூழ்கியும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு்ம் இருக்கின்றன. கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்டோர் மழைக்கு பலியாகி உள்ளனர்.இந்த நிகழ்வுகளை தொலைக்காட்சி ஊடகங்களும், செய்தி நாளேடுகளும் ஒரு மேம்போக்கான செய்தியாக சொல்லி வருகின்றது........ஆனால் கடந்த இரு நாட்களாக சென்னையில் மழை பெய்யும் செய்தியை அரைமணிக்கு ஒரு தடவை சொல்லி கூப்பாடு போடுகின்றன........ அங்க தண்ணீர் நிக்கு இங்க தண்ணீர் நிக்கு வேளச்சேரி வெள்ளமாயிடிச்சி, வியாசர்பாடி சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளம்...மக்கள் வெளிய வரவேயில்லை இயல்பு வாழ்க்கை பாதிப்பு அப்படினு இன்னும் முழங்கிக்கொண்டிருக்கின்றன.................என்னமோ இவை அனைத்தும் இந்த வருசம்தான் நடக்கிற மாதிரி..............


டெல்டா மாவட்டங்களில் மக்கள் இரு வாரங்களுக்கும் மேலாக முடங்கி கெடக்காங்களே............இதெல்லாம் இந்த ஊடக கண்களுக்கு எப்போ தெரியும்.....................................அடுத்த வருட தேர்தலுக்கு ஆளும்கட்சிக்கு ஓட்டுக்களை கவர ஒரு அருமையான வாய்ப்பு............அவ்ளோதாம்பா............................

Friday, October 1, 2010

பதிவர் கடையம் ஆனந்த் அப்பா ஆனார்

நெல்லை சிங்கம், கடையத்து இளவல் அன்பு மாப்பிள்ளை கடையம் ஆனந்த்- நேற்று (30.09.10) அழகான பெண் குழந்தைக்கு அப்பா ஆனார்..........தாயும் சேயும் நலம்...................................................

பூமிக்கு வந்த குட்டி இளவரசியை வாழ்த்துவோம்...............................

Wednesday, June 30, 2010

பர்ஸை காலி பண்ணும் மாந(ர)கரப்பேருந்துகள்

சென்னை மாநகரப்பேருந்துகள் பயணிகளின் வசதிக்கு ஏற்ப சேவைகள் செய்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்ற பதில்.......... வேண்டுமானால் தினசரி மாநகரப்பேருந்தில் பயணம் செய்யும் மக்களிடம் கேட்டுப்பாருங்களேன்....... மக்களுக்காக இருந்த மாநகரப்பேருந்துகள் இன்று வெறும் வணிக நோக்குடன் மட்டுமே சாலையில் பயணிக்கின்றன என்றால் மிகையாகாது...


சென்னையில் பயணிகளின் தேவைக்கு கிட்டத்தட்ட 5000பேருந்துகள் தேவை ஆனால் இருப்பதோ 3000த்து சொச்சம் என போக்குவரத்து துறை அமைச்சரே விளக்கம் கொடுக்கிறார்.... இந்த 3000 பேருந்துகளில் இன்றைக்கு கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேல் சொகுசுப்பேருந்துகளே சென்னை சாலையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது............ காரணம் வணிக நோக்குதான்......... பயணிகளின் தேவை காற்றில் எப்போதோ விட்டுட்டாங்க..................


5ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரணப்பேருந்து வழித்தடங்கள் தான் சென்னையில் அதிகம்....... அதுக்கப்புறம் வருசத்துக்கு நாலைஞ்சி வாட்டி பெட்ரோல் விலை ஏத்திட்டாங்க........ஆனால் பஸ் கட்டணம் ஏற்றப்படவில்லை...கட்டணத்தையும் ஏற்றக்கூடாது..ஆனால் வருமானம் வரவேண்டும் என்ற அதிகாரிகளின் ஐடியாப்படி ஒவ்வொரு வழித்தடத்திலும் படிப்படியாக சாதாரணப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சொகுசு விரைவு.குளிர்சாதனப்பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு விட்டது.......... இதை பற்றி யாரும் கேட்பதில்லை...அப்படியே கேட்டாலும் நடத்துனரிடம் சண்டை போடும் பயணிகள்தான் அதிகம்.


மக்களின் டவுசரை அவிழ்க்காத குறையாத்தான் இப்போது மாநகரப்பேருந்துகள் பகற்கொள்ளையடித்துகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு பள்ளிக்கரணையில் இருந்து தி.நகருக்கு சாதாரணப்பேருந்தில் 5ரூபாய் விரைவுப்பேருந்தில் 7ரூபாய், சொகுசுப்பேருந்தில் 10 ரூபாய்............ஒரு மணி நேரத்தில் பத்து பேருந்துகள் தி.நகருக்கு செல்கிறதென்றால் அதில் 5 பேருந்துகள் சொகுசுப்பேருந்துகளாகவும் 3பேருந்துகள் விரைவுப்பேருந்துகளாகவும் 2பேருந்துகள் சாதாரணப்பேருந்துகளாகவும் செல்கின்றன...........சீசன் டிக்கெட்கள் சாதாரணப்பேருந்தில் மட்டுமே செல்லுபடியாகும்... சீசன் டிக்கெட் வைத்திருப்போர் நிலைமை சொல்லிமாளாது............ பேருந்து நிறுத்தத்தில்காத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்......தினசரி சொகுசுப்பேருந்திலோ விரைவுப்பேருந்திலோ காசு கொடுத்துதான் பயணம் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது............இதனாலே மாநகரப்பேருந்துகளுக்கு இரட்டிப்பு வருமானம்....


போன வருடம் மக்களவைத்தேர்தலின் போது இது ஒரு பிரச்சினையாக எதிர்க்கட்சிகள் கிளப்பிவிட பயந்து போன அரசு ஒரு மூன்று நாட்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட எல்லாப்பேருந்துகளையும் சாதாரண பேருந்துகளாக மாற்றியது....அதுக்கப்புறம் பழைய குருடி கதவ திறடி கதை தான்...... இப்ப கேட்டாக்கூட கலைஞரும் போக்குவரத்து துறை அமைச்சரும் தலையில் சத்தியம் பண்ணாத குறையாக சொல்வார்கள்.......”பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று.”........ ஏன் இந்த மறைமுக கட்டணம்..........


அதிகாலை 4மணியில் இருந்து இரவு 11மணி வரைக்கும் பயணிகள் கூட்டம் அதிகம்தான்.. ஆனால் அதுக்கேற்றார்போல் பேருந்து சேவை இருக்குதான்னா பாத்தா கண்டிப்பா கிடையாது.... இரவு 9மணி ஆச்சுன்னா எல்லா பேருந்துகளும் பணிமனையை நோக்கித்தான் செல்லும்... காலை 6மணி வரைக்கும் இதே நிலைமைதான்........


சரி இங்கதான் இதே நிலைமைனா மதுரையிலும் இதேதான்.....ஆரப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு எல்லாமே சொகுசு பேருந்துகள்தான்.. எனக்கே ஒரு நிமிடம் சந்தேகமாகிவிட்டது நாம நிக்கிறது மதுரையா இல்லை சென்னையா??...


இதுக்கெல்லாம் ஒரே காரணம்தான் சென்னையிலும் மதுரையிலும் நகருக்குள் தனியார் பேருந்து சேவைகள் கிடையாது..........அதனால நாங்க எந்த பேருந்தை விடுகிறோமோ அதுல தான் போக முடியும்... திருச்சி,நெல்லை ,சேலம்,கோவையில் இந்த பிரச்சினை குறைவாகதான் இருக்கும் ஏன்னா அங்க எல்லாம் தனியார் பேருந்துகளும் உண்டு........


சென்னை மாநகரப்பேருந்துகளில் மட்டும் இந்த மாற்றம் கிடையாது.... அரசு விரைவுப்பேருதுகளிலும் இதேதான் அல்ட்ரா டீலக்ஸ் என்ற பெயரில்....அப்படியே அரசுப்பேருந்துகளில் வெறும் போர்டை மட்டும் மாற்றி கட்டணத்தை உயர்த்துவது எனத் தமிழகம் முழுவதும் இந்த பகற்கொள்ளை பரவிக்கிடக்கிறது...............


இந்த பகற்கொள்ளைக்கு முடிவு எப்போது?????????????? சொல்லுங்க மக்களே....பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் பஸ் கட்ட்ணம் உயர்த்தப்படாது என கலைஞர் அறிவித்திருக்கிறார்.....அது சரி இப்ப இருக்கிற மறைமுக கட்டண உயர்வு இன்னும் 10வருசத்துக்கு கூட தாக்கு பிடிக்கும்........................

Monday, June 28, 2010

ஆற்காட்டாரால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி

மின்வெட்டால் யாருக்கு லாபமோ இல்லையோ ரேசன் கடை ஊழியர்களுக்கு லாபம்தான்....சென்னை தவிர்த்து அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றவர்களுக்கு எப்படியோ ரேசன் கடை ஊழியர்கள் ஆற்காட்டாரை தூக்கி வைத்து கொண்டாடாத குறைதான்...


குறைந்தபட்சம் ரெண்டாயிரம் பேருக்கு பில் போட்டு களைத்த ரேசன் கடை ஊழியர்களுக்கு கலைஞர் அரசு பில் போடும் இயந்திரம் வழங்கியது............. மின்சாரம் கட் ஆகாத வரைக்கும் இது நல்லாத்தான் போகும்.........மின்சாரம் கட் ஆகினாலே அடுத்து ரெண்டு பில் கூட போட்டிருக்க மாட்டாங்க...........சார்ஜ் தீர்ந்து விடும். இனிமே கரண்ட் வந்தாத்தான் பில் போட முடியும் என்பார் ரேசன் கடை ஊழியர்........ஏங்க சார்ஜ் எல்லாம் போட்டு வைக்க மாட்டீங்களா..ன்னு கேட்டா.... ரொம்ப நேரம் சார்ஜ் போடக்கூடாதுனு அதிகாரிங்க சொல்லியிருக்காங்க.. அதனால தான் அப்படினு சொல்லிட்டு எடுத்து வச்சிருவார்......இந்த மாதிரியான சூழ்நிலை மாசத்துக்கு எப்படியும் ஒரு ஐந்து நாளாவது வந்து விடும்.  இது நடப்பது பள்ளிக்கரணையில் நான் பொருட்கள் வாங்கும் ரேசன் கடையில தான்.............இங்கேயே இப்படினா....மற்ற இடத்துல........?????????????????????/


மின்சாரம் இல்லாத நேரத்தில் பழைய முறைப்படி பில் போடலாம் அதிகாரிங்க சொல்லலாமில்ல... .......................... என்னவோ போங்கப்பா........................... எது எப்படியோ ஆற்காட்டார் இவங்களையாவது சந்தோசப்பட வச்சிருக்காரே..........................????

Sunday, June 13, 2010

இவ்ளோ நாள் புடுங்கவா போயிருந்தீங்க..................

போபால் விஷ வாயு விபத்து நடந்து 25 ஆண்டுகள் முடிந்த நிலையில் போனவாரம் தீர்ப்பு அளித்தாகிவிட்டது........வழக்கம்போல் தீர்ப்பு வெளியானவுடன் இன்னைக்குத்தான் தூக்கத்திலிருந்து எழுந்தவன் மாதிரி செய்தி ஊடகங்கள் கூப்பாடு போட ஆரம்பித்திருக்கின்றன... முக்கிய குற்றவாளியான ஆண்டர்செனை யார் தப்பிக்கவிட்டது என்பதிலிருந்து இப்ப அவர் எங்க இருக்கார் என்பது வரை சூட்டோடு சூடாக செய்திகளை அள்ளி தெளித்து தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த முயற்சித்து கொண்டிருக்கின்றன.....

பிரபல் தமிழ் நாளிதளில் இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த வழக்கு தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது... அதில் போபால் விஷ வாயு வழக்கில் இந்த தண்டணை கொடுத்ததே அதிகபட்சம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. காரணம் வழக்கு போடப்பட்டதேஅந்த மாதிரியான செக்சன்களை தேடி போட்டிருக்கிறார்கள்......... அப்பொழுதில் இருந்தே அமெரிக்காவின் அடிவருடியாக இருந்துள்ளது மத்திய அரசு. இந்த லட்சணத்துல ஆண்டரசனை தப்பிக்க விட்டது யார் என்பது பற்றி காங்கிரசுக்குள்ளே ஒரு பெரிய பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கிறது.

ஊடகங்களுக்கு தெரியாதா இந்த வழக்கில் ஆண்டர்சென் முதன்மை குற்ற வாளி என்று..என்னமோ இன்னைக்குத்தான் கண்டுபிடிச்ச மாதிரி கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கின்றன.......... அரசும் வாய்மூடி மவுனியாக இருக்கிறது.........போன உசுருகள் எல்லாம் என்ன  கோமான்களா என்ன நடவடிக்கை எடுக்க................ சாதாரண மக்கள் தானே....................

நடக்கிற சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம் இந்தியாவில் வசிக்க தகுதியற்றவர்களோ என எண்ணத்தோன்றுகிறது.........ஆம் இந்தியாவுல அரசியல்வியாதிகள்,பன்னாட்டுக்கோமான்கள்,அரசியல் புரோக்கர்கள்,
அம்பானி மாதிரியான தொழில் அதிபர்கள் தான் வாழனும் போல...அவங்களுக்குக்காகத்தான் மத்திய அரசு இருக்கு...............நமக்கெல்லாம் கிடையாது............

வாழுக மன்மோகன் சோனியா
வாழுக இந்திய சனநாயகம்...

Monday, May 17, 2010

T20உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து

கிட்டத்தட்ட 30 ஆண்டுகால கனவை நிறைவேற்றியிருக்கிறது கோலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி.....இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சுலபமாக மண்ணை கவ்வ வைத்து முதல் முதலாக ஐசிசி உலகக்கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.

டாசில் வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை பேட் செய்யும் படி பணித்து சிறப்பான பந்து வீச்சின் மூலம் 147 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது...எளிதான இலக்கை இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் எடுத்து கோப்பையை கைப்பற்றியது


சுருக்கமான ஸ்கோர்



ஆஸ்திரேலியா 147/6 20வது ஓவர்களில் டேவிட் ஹசி 59ரன்கள்
இங்கிலாந்து 148/3 17 ஓவர்களில் கிரெக் கிஸ்வெட்டர் 69ரன்கள் 49பந்துகளில்

Saturday, May 15, 2010

தளபதி ரசிகராக மாறப்போகும் பிரபல பதிவர்

பதிவு எழுதி பலமாசமாகுது.... பல பேர் "யப்பா தொல்லை விட்டதுனு நிம்மதியா இருந்திருப்பீங்க"..ஆனாலும் ஒரு சிலரின் அன்புத்தொல்லையால் மீண்டும் எழுதுகிறேன்( யாருடா அதுன்னு கேட்கக்கூடாது)....



குறுகிய காலத்தில் தன்னுடைய எழுத்தால் பிரபலமான அந்த தென் தமிழக பதிவர் ஒரு தீவிர தல ரசிகர்... தளபதி படம் எப்படி இருந்தாலும் வாரு வாருன்னு வாருவதில் அவருக்கு அலாதி பிரியம்.சில வாரங்களுக்கு முன் அவரிடம் பேசும் போது தான் விரைவில் தளபதி ரசிகராக மாறப்போகும் சூழ்நிலை இருப்பதாக கூறினார். நம்ம மர மண்டைக்கு ஒன்னும் புரியல..அப்புறம்தான் தெரிஞ்சிது அவர் கூடிய விரைவில் குடும்ப இஸ்திரியாக மாறப்போறாராம்.ஆனாலும் அவரின் தளபதி பற்றிய பதிவுகளை பிரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன்... அவருக்கு கல்யாண பரிசா கொடுக்கிறதுக்கு......


சுறாவை வழக்கம் போல் வறுத்தெடுத்துட்டாங்க நம்ம ஆளுங்க.... அடுத்த படத்திலாவது நம்ம தளபதி அடக்கி வாசிப்பாருனு எதிர்பார்க்கலாமா???????


இந்திய மருத்துவக்கவுன்சில் தலைவராக இருந்த கேசன் தேசாயின் ஊழல் அரசியல்வாதிகளை மிஞ்சி விட்டது... 1800 கோடி ரூபாய் பணமாக கைப்பற்றப்பட்டதாம்... அந்த அளவுக்கா பணத்தாசை பிடிக்கும்...வாழ்க இந்திய சனநாயகம்....


ராவணன் படப்பாடல்களில் உசிரே போகுது பாடல் இந்த வருட சூப்பர் ஹிட் பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது...வைரமுத்து ரொம்ப நாள் கழித்து வரிகளில் கலக்குகிறார்....இந்த பாட்டை கேட்டாலே உசிரு எங்கியோ போவுது............

Saturday, February 27, 2010

எடுபடாமல் போன அஞ்சா நெஞ்சனின் கருத்து-- அவமானப்ப்படுத்திய மூவர் கூட்டணி

பாசத்தலைவன் எப்போதும் ஒன்று சொல்வார் மத்திய அமைச்சரவையில் எப்போதும் நம் குரல் தான் ஒலிக்கும்..தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று..... இதெல்லாம் 2009க்கு முந்தி என்றுதான் நினைக்கிறேன்..தற்போது அமைந்திருக்கும் காங்கிரசு அட்சியில் ஏற்கனவே தன்னுடைய துறைக்கு அதிக நிதி கேட்டு மம்தா பான்ர்ஜி பிரச்சினை எழுப்பியுள்ளார்..இன்னும் எழுப்புவார்....... தமிழக மத்திய அமைச்சர்கள் எப்பவும் ஆளும் காங்கிரஸு அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசமாட்டாங்க முக்கியமா திமுக மத்திய அமைச்சரகள்..
அஞ்சாநெஞ்சன் அழகிரி மத்திய அமைச்சராக பதவியேற்றதும் அதன் பிறகு அவரது துறையில் சரியாக கவனம் செலுத்தாமல் லோக்கல் பாலிடிக்சிலேயே குறியா அலைந்ததையும் டெல்லி பத்திரிக்கைகள் செயல்படாத ஒரே அமைச்சர் என்று எழுதின..அதன் பிறகும் அஞ்சாநெஞ்சன் அசரவில்லை..குறிப்பாக தன் துறை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பதில் சொல்ல அவர் அவைக்கு வரவில்லை.......இந்த சூழ்நிலையில் நிதிப்பற்றாக்குறை சிக்கனமாக்க மூவர் கூட்டணி உர மான்யம் சம்பந்தமாகஒரு முடிவெடுத்து அது குறித்து பேச துறை அமைச்சரான அழகிரியுடன் விவாதித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக விவசாயிகளுக்கு உரமான்யம் 30ஆயிரம் கோடி என்றிருந்தது,தற்போது 50 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது..இதுதான் இந்த மூவர் கூட்டணிக்கு (அதாவது நம்ம தாத்தா மன்மோகன் சிங், மாமா பிரணாப், நம்ம பங்காளி சிதம்பரம்)கண்ணை உறுத்தியது. எதற்கு 50ஆயிரம் கோடி மான்யம் அதை குறைத்தால் நிதி பற்றாக்குறையை தவிர்க்கலாமே என்ற ஐடியா..... ஆனா இந்த முடிவுக்கு அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து நேரடி விவாதத்தில் ஈடுப்பட்டார்.. உரமான்யத்தை குறைப்பது என்பது அரசின் நிதி பற்றாக்குறை குறையும் என்றாலும் விலை உயர்வு எனப்து விவசாயிகளின் மேல விழும் எனபதால் கடும் வாக்குவாதத்தில் மோதினார் நம்ம அஞ்சா நெஞ்சன்.. அவருக்கு ஆதவாக சில காங்கிரசு அமைச்சர்களும் கைகோர்த்துகொண்டனர்........ஏற்கன்வே விலைவாசி உயர்வினால அனைத்து தரப்பு மக்களும் அவதிப்படும் வேளையில் மான்யத்தை ரத்து செய்தால் இன்னும் கடுமையாக விலைவாசி உயரும் என்று என்று சொன்னாராம் நம்ம அஞ்சா நெஞ்சன்.......... ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை அந்த மூவர் கூட்டணி..
கடைசியாக அஞ்சாநெஞ்சன்இன்னும் ஒருவருடத்திற்காவது இந்த முடிவை தள்ளிப்போடுங்கள்..தேவைக்கேற்ற இருப்பு கவசம் வைத்துக்கொண்டு அப்புறம் யோசிக்கலாம் என்றார்....... ஆனால் இதற்கு உர நிறுவங்கள் சம்மதிக்கவில்லை என்று கூரீ மூவர் கூட்டணி உர மான்யம் ரத்து வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக உறுதியக சொல்லியதால் கடும் கோபத்துடன் பாதியிலே வெளியே வந்துவிட்டார் அமைச்சர் அழகிரி..
...
உயர்வை பற்றி மத்திய அரசு துளீயூண்டு கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை..நேற்று அறிவித்த மத்திய பட்ஜெட்டிலும் அது பற்றி ஒன்றும் இல்லை....கச்சா எண்ணெயின் வரியை உயர்த்தி மறைமுக பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வழிகாட்டியுள்ளார் மத்திய நிதி அமைச்சர்.......... அது போல் வரி குறைக்கப்பட்ட பொருட்களைப்பார்த்தால் செல்போனாம், பலூனாம்...அடப்பாவிங்களா....காலை டிபனுக்கு பலூனையும், மதியம் சாப்பாடுக்கு செல்போனையுமா சாப்பிட முடியும்.......
...
பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு............ நம்மைப்போன்ற சாமன்ய மக்களுக்கு இல்லை

Thursday, February 25, 2010

மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தென் தமிழகம்

எல்லா விசயங்களிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல..அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் சில தொழில் வளர்ச்சி தவிர...... போன வருடம் ரெயிவே பட்ஜெட்டிலெயே தென் தமிழகத்துக்கு ஒன்னும் இல்லை.இந்த வருடமும் அதே நிலைமைதான்......இது குறித்து போன வருடம் நான் எழுதிய பதிவு.



இந்த வருடமும் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு புதிதாக ரயிலகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.......ஏற்கனவே தினசரி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயிலகள் அனைத்தும் வருடம் முழுவதும் பயனிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது...முன்ன எல்லாம் திருநெல்வேலி செல்லனும் என்றால் 15 நாட்களுக்கு முன்னதாக முன் பதிவு செய்தால் டிக்கெட் கிடைக்கும்..இப்ப ரெண்டு மாதத்திற்கு முன்னதாக முன் பதிவு செய்தாலும் கிடைப்பதில்லை.....இது பற்றி ரெயிவே அதிகாரிகளிடம் கேட்டால்..சென்னை-திருச்சி மார்க்கத்தில் இதற்கு மேல் ரயில்கள் விட முடியாது ஏன்னா தண்டவாளத்திற்கும் கொஞ்சம் ஓய்வு தேவை என்கிறார்கள்......... தாம்பரம் முதல் திருச்சி வரை இன்னொரு வழித்தடம் அமைக்கும் திட்டம் என்னவாயிற்று?????????? இது மில்லியன் டாலர் கேள்வி.....
அடுத்ததா திருநெல்வேலி- தென்காசி அகலரயில் பாதை திட்டம் ஆரம்பித்து ஒருவருடத்திற்கு மேலாகியும் வேலை எதுவும் நடைபெற்ற மாதிரி தெரியலை........ அது பற்றி ஒரு அறிவிப்பும் இல்லை....... இதுல இன்னொரு காமெடி என்னன்னா ஏற்கனவே மீட்டர் கேஜில் ஓடிய திருநெல்வெலி- திருச்செந்தூர் பயனிகள் வண்டியை புதிய வழித்தடமாக அறிவித்திருப்பதுதான்.இதையும் நம்ம செய்கதி சேனல்கள் சொல்வது கொடுமைடா சாமி.......



எனக்கு ஒரே ஆசைதான் நம்ம மத்திய ரெயில்வே மந்திரியையும், மாநில போக்குவரத்து அமைச்சரையும் ஒரு நாள் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அல்லது தென்காசிக்கோ.. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் அதுவும் ஊதா நிற, ரோஸ் நிற மஞ்சள் நிற பேருந்தில் ஏறி பயணம் செய்ய சொல்ல வேண்டும்............ அப்பதான் தெரியும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Wednesday, February 24, 2010

இரட்டை சதம் அடித்து சச்சின் சாதனை

குவாலியரில் நடைபெற்று வரும் ஒரு தினப்போட்டியில் சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்...... இந்த இரட்டை சதத்தை வெறும் 147 பந்துகளில் எடுத்து சாதனை......சச்சினின் இந்த உலக சாதனை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு வைர கிரீடம்



தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் 3 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது இந்திய அணி.....

சச்சின் உலக சாதனை

குவாலியரில் நடக்கும் ஒரு நாள் போட்டியில் சச்சின் உலக சாதனை படைத்தார்முந்தைய சயீத் அன்வரின் 194 ரன்களை முறியடித்து சாதனை படைத்திருக்கிறார்............... சச்சின பேட்டிங்கிற்கு பதில் சொல்ல இயலாமல் தென் ஆப்ப்ரிக்கா திணறல்............... சச்சின் 197 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் உள்ளார்

Monday, February 15, 2010

புத்தக வெளியீடும், பச்சை சட்டை பதிவரும்(யூத்தாம்)

நம்ம பயபுள்ளங்கள பாத்து மாசக்கணக்காயிட்டதால இந்த வாட்டி புத்த்க வெளியீடு விழாவை தவறவிடவில்லை..... மாலை 5மணிக்கு நானும் டிவிஆர்கே ஐயாவும் சொன்ன இடத்துக்கு வந்தாச்சு. என்னடா யாரையும் காணோம் என்றிருதபோது....அரங்கினுள் இருந்து உண்மைத்தமிழன் அண்ணன் சில பதிவர் புடை சூழ வெளியில் வந்தார்..... அதற்குள் மணி 5:30 ஆகியிருந்தது....... விழா நாயகர்களே இன்னும் வரவில்லை......அவர்களெல்லாம் வந்து விழா ஆரம்பிப்பதற்கு மணி6:15ஆகியது..... பரிசலும் கேபிளும் குடும்ப சகிதமா வந்திருந்தார்கள்.


AKANALIKAI,PIRAMID,AJAYAN BALA, YOUTH
விழாவை அட்டகாசமான டயலாக்குடன் ஆரம்பித்து வைத்தான் கேபிள் சங்கரின் இளைய வாரிசு....அப்பா எப்பவும் காமேடி பீசு சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.கேபிளின் புத்தகத்தை பிரமிட் நடராஜனும், பரிசலின் புத்த்கத்தை அஜயன் பாலவும் வெளியிட்டனர். பிரமிட் நடராஜன் பேசும்போது கேபிளின் விட தன்னை யூத்தாக காட்டிக்கொண்டார்...... தமிழ்ப்படம் இயக்குனர் அமுதன் பதிவர்கள் எல்லோருக்கும் தன் நன்றியை தெரிந்து கொண்டார்.......அஜயன் பாலாவிடம் மைக்கை கொடுத்ததுதான் தாமதம் பேசினார் பேசினார் பேசினார் பேசிக்கொண்டேயிருந்தார்..... ஏதாவது சுவாரஸ்யமாக பேசுகிறாரா என்றால் அதுவும் இல்லை.எப்படா பேச்சை முடிப்பார் என்றிருந்தது.... கேபிளும் பரிசலும் இறுதி வரை ஒருவித நெகிழ்ச்சி கலந்த டென்சனுடன் காணப்பட்டார்கள்................ சரி நம்ம மேட்டருக்கு வருவோம்


GUGAN,AKANALIKAI,PIRAMID,AJAYAN BALA,PARISAL
பதிவ்ர்களை ஞாபகப்படுத்தி எழுதுகிறேன் யார் பெயராவது விடுப்பட்டிருந்தால் மன்னிக்கவும்........ டிவிஆர்கே,உண்மைத்தமிழன்,ஷங்கர் ரோமியோ,ஜெய மார்த்தாண்டன்,சர்புதீன் (வெள்ளி நிலா)அதி பிரதாபன்,சங்கர், கார்க்கி, நர்சிம்,ஆதி,ஜியோவ்ராம் சுந்தர்,பட்டர்பிளை சூர்யா, தண்டோரா,தராசு,லக்கி, அதிஷா,ஜெட்லி,வடகரை வேலன், சொல்லரசன், வெயிலான், சஞ்சய் காந்தி, டோண்டு,அப்துல்லா, புலவன் புலிகேசி இன்னும் பலர் வந்திருந்தனர்....விழா ஆரம்பிக்கும்போது இரண்டு பேர் போட்டிப்போடுக்கொண்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தானர்.... அதில் நம்ம யூத்து கொஞ்ச நேரத்தில் களைப்படைந்துவிட்டார்..அவர் ஆதிஆண்ணன்........... இன்னொருவர் கடைசி வரைக்கும் அதே சுறுசுறுப்புடன் படம் எடுத்துக்கொண்டிருந்தாள் அவள் பரிசலின் இளைய வாரிசு மேகா.......



SHANKAR, ME, TVRK, UNMAI TAMILAN, ROMEO
நேற்றுதான் காதலர் தினம் ஆயிற்றே யாரெல்லாம் பச்சை சட்டை போட்டிருந்தனர் எனப்பார்த்தால் இருவர் அந்த கலரில் வந்திருந்தனர். ஒருவர் கார்க்கி, இன்னொருவர் நம்ம ஆதி அண்ணன்...கார்க்கி பச்சை சட்டை போட்டதுல ஒரு அர்த்தம் இருக்கு..விட்டிடலாம்....ஆனால் ஆதி அண்ணன் ஏன் அந்த கலர்ல சட்டை போட்டார்......... ?????? கேடதற்கு அவர் யூத்தாம் அதானாம்........ அய்யய்யோ எப்ப அவர் இந்தச கேபிள், தண்டோரா, தராசோட சேர்ந்தார்........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ அண்ணே நீங்க இன்னும் சின்னப்பையந்தாம்ணே........



அப்புறம் நம்ம பெஸ்கி ஆளே மாறிட்டாப்ல. என்னனு கேட்டா அவரும் ஆயுள் கைதியா ஆகப்போறாராம்....புலவன் புலிகேசி இந்த பெயரை பார்த்ததும் கேபில் மாதிரி யூத்தான் ஆளா இருப்பர்னு பார்த்தால்.........சத்தியமா இல்ல பச்சபுள்ளயா இருக்கார்.......ஜெட்லிக்கும் எங்க ஊர்தான் எங்க ஊர்க்காரங்க ஏகப்பட்ட பேர் இருக்காங்க போல...............



நானும் புக் வாங்கியிருக்கேன். பஸ்ல வரும்போது பரிசல் புக்கில் ஒரே ஒரு கதை தான் படித்தேன்......... சிறுவயது பசங்களின் மனநிலையை அருமையா சொல்லியிருக்கார் இந்த கதையில்

மேலும் போட்டோக்களுக்கு மோகன் குமார்

Sunday, January 31, 2010

மத்திய அமைச்சரை முற்றுகையிட்ட விவசாயிகள்

மரபணு மாற்று கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிட அமெரிக்க கம்பெனிய விட நம்ம ஊர் அரசியல்வாதிகள் ரொம்ப ஆர்வம் காட்டுறங்க என்ன காரணம்னு தெரியல. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ளது.. ஏனெனில் அந்த கத்தரிக்காயில் இருக்கும் கிரை 1ஏசி என்ற வைரஸில் விஷத்தன்மை உள்ளது என்றும் இதை பயிரிட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் வேளாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால் உடலில் எதிர் விளைவுகள் ஏற்படும் எனவும் செய்தி நிலவுகிறது... மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதை சாப்பிடக்கூடாது என்ற செய்தியும் யோசிக்க வைக்கிறது.

இவ்வளவு பின்விளைவை ஏற்படுத்தக்கூடிய இந்த கத்தரிக்காயை அனுமதிப்பது தொடர்பாக மத்திய சுற்று சூழல் அமைச்சர் 7 நகரங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறார். இதில் சென்னை கிடையாது..எனென்றால் இந்த கத்தரிக்காய் குறித்த விழிப்புணர்வு குறும் படம் எடுத்து முதல்வரிடம் காட்டி தற்போதைக்கு இந்த கத்தரிக்காய்க்கு தடை வித்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த காரணத்தாலே சென்னையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்து விட்டார்.

இந்நிலையில் இன்று மரபணு மாற்று கத்தரிக்காய் குறித்த கூட்டம் ஹைதரபாத்தில் நடைபெற்றது..கூட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சூழ்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்... இதனால் பெரும் பரபரப்பு நிலவியது அந்த அரங்கில்..பின்னர் பேட்டியளித்த அமைச்சர் பிப்ரவரி 10ஆம் தேதி இது குறித்து முடிவடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அனைத்து விவசாய அமைப்புகளுமே இந்த மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஏன் இந்த கருத்து கேட்பு கூட்டம்.???????.....எல்லா நாடுகளும் இந்த கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ள நிலையில் எதற்கு இந்த சல்ஜாப்பு.......ஒரு வேளை அந்த அமெரிக்க கம்பெனியிடம் நம்மை அடகு வைத்து பொட்டி வாங்கிட்டாங்களோ..இதுக்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினோம்.............என்னவோ போங்க..............

Friday, January 1, 2010

எலக்கிவியாதியான அந்த பதிவர்,என்னை தோற்கடித்த கலைஞர்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.... இன்றைக்கு எனக்கு வேலை நாள் என்பதால் ஒரு சபதம் எடுத்தேன்.... பள்ளிக்கரணையில் இருந்து தரமணிக்கு சாதாரணப்பேருந்தில்தான் போக வேண்டும் என்பது.. முதல் ஷிப்ட் என்பதால் காலை 6மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்...05:15மணியிலிருந்து காத்திருந்தேன் சாதாரண பேருந்துக்காக...இன்னைக்கு ஒரு நாளாவது எக்ஸ்ட்ரா காசு கோடுக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.05:30மணிக்குள் 4 பேருந்துகள் வந்தன. ஒன்று கூட சாதாரண பேருந்துகள் இல்லை..05:40க்குதான் வந்தது.05:50க்கு விஜய நகரில் இறங்கினேன்.காத்திருந்தேன் இங்கேயும் அதே கதைதான்..... 10நிமிடம் காத்திருந்து வேற வழியில்லாமல் சொகுசுப்பேருந்தில் ஏறினேன்.. என் சபதத்தை முறியடித்த கலைஞர் அரசு வாழ்க....


போன வருடத்தில் கிட்டத்தட்ட 120படங்கள் வெளியாகியிருக்கின்றன..இதில் நான் பார்த்த படங்கள்... அயன்,வெண்ணிலா கபடிக்குழு,பசங்க,நாடோடிகள்,மாயாண்டி குடும்பத்தார்,பேராண்மை,உன்னைப்போல் ஒருவன் இதில் அயன் இந்த வருட பிளாக்பஸ்டர் படம்.......அதிவேகமான திரைக்கதை, பாடல்கள் என கலக்கியது.

அடுத்ததாக வெண்ணிலா கபடிக்குழு,பசங்க,நாடோடிகள்........ இந்த மூனு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை.....இயல்பான திரைக்கதை......கதைதான் இந்த படங்களில் நாயகன். கடேசியா இந்த மூனு படங்களிலும் சைட் அடிக்கிற விசயங்கள் அருமையா இருக்கும்.இப்பவெல்லாம் யாரும் பொண்ணுங்க பின்னாடி சைட் அடித்து சுற்றுவதில்லை..ஏன்னா இன்டர்நெட்,ஈமெயில் செல்போன்,மெசேஜ் அப்படினு பசங்களும் பொண்ணுங்களும் ரொம்ப ஸ்பீடா இருக்காங்க.............

உன்னைப்போல் ஒருவன் -- பதிவுலகில் இந்த வருடம் அதிகம் விமர்சிக்கப்பட்ட படம்...இந்துயிசம், அந்த இசம் ஆயாயிசம்னு துவைச்சி காயப்போட்டாலும்......ஒன்றரை மணிநேரத்துக்குள் படம் ஜெட்டாகபறக்கிறது.......பேராண்மை முதல் பாதி மண்டை காய வைத்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையும், சண்டைக்காட்சிகளாக படம் பறக்கிறது........
-------------------------------------------------------------------------------------------------------------

அந்தப்பிரபல பதிவரிடம் பேசும்போது என்ன அண்ணே இந்த வருடக்கடைசில (2009)பதிவர் சந்திப்பே வைக்கலியே அப்படினு கேட்டேன்."யோவ் நாங்க எல்லாம் இப்ப ரொம்ப பிசி தினசரி புத்தக வெளியீட்டு விழா, எலக்கிய கூட்டம் அப்படினு போய்க்கிட்டே இருக்கு..நீ என்ன சின்ன புள்ளத்தனாமா இப்படி கேக்குற" அப்படினு ஏறிட்டார்..நானும் இப்ப ரவுடிதான் அப்படின்ற ரேஞ்சில நானெல்லாம் இப்ப எலக்கியவியாதி ஆயிட்டேன் தேரியுமா என ஷாக் கொடுத்தார்..........அல்லாரும் பெரிய ஆளாயிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..


அப்படியே நம்ம மதுரை பதிவருக்கு போன் போட்டேன்.. என்னப்பா சென்னை புத்தக கண்காட்சிக்கு போகலியா..நீங்கதான் ஒரு ஊர் விடாம போவிங்களே அப்படினேன்... "நான் அங்க வாங்கின புக்கே இன்னும் தூங்கிட்டு இருக்கும் அதுக்குள்ளயா?? "அப்படினார்..நீங்க தான் இப்ப எலக்கியவியாதி ஆகிட்டீங்களே.....ஆப்படினு சொன்னதுதான் தாமதம் "தலைவரே இதுல ஏதோ சதி நடக்குது.எனக்கும் அதுக்கும் சம்பந்த்மே கிடையாது" அப்படின்ற ரேஞ்சில ஸ்டேட்மென்ட் குடுத்துட்டார்........பாவம் பொழைச்சி போகட்டும்
-------------------------------------------------------------------------------------------------------------

இந்த வருடம் பதிவுலகில் நான் எதிர்பார்ப்பது

1. எதிர் கவுஜை இல்லாமல் நைனா அண்ணாச்சி  பதிவு போட வேண்டும்
2.மீண்டும் தங்கமணி பதிவுகளை ஆதி அண்ணன் போட வேண்டும் பழைய உத்வேகத்துடன்.
3.உண்மைத்தமிழன் அண்ணன் கவிதை எழுத வேண்டும்( எப்படினாலும் ஒரு பக்க்கத்துக்குள்ள முடிஞ்சிருமில்ல)
4.சினிமா பற்றி எதுவும் இல்லாமல் கேபிள் அண்ணன் ஒரு பதிவு போடவேண்டும்
5.சினிமாக்காரனை வம்புக்கு இழுக்காமல் அரவிந்த் ஒரு பதிவு போடவேண்டும்
6.அல்லாருக்கும் புரியிற மாதிரி அனுஜன்யா அண்ணாச்சி கவித எழுதனும்
7.கார்க்கியும் , வசந்தும் டாக்டர் இளைய தளபதிய பேஜார் பண்ணி ஒரு பதிவு போடனும்.

Friday, November 6, 2009

பதுங்கிய கலைஞர் & பொய் சொன்ன ஸ்டாலின்

ரொம்ப வருசத்துக்கு அப்புறம் நம்ம கலைஞர் ஐயாவுக்கு எப்படித்தான் இநத அளவுக்கு தைரியம் வந்ததோ??.. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசும் மத்திய அரசும் அங்கு வரவிருக்கும் சட்டமன்றதேர்தலை மனதில் வைத்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன..... கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் தேர்தலுக்காகத்தான் முல்லைப்பெரியாறு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.. எங்கே இந்த விவகாரத்தில் தமிழகத்து பக்கம் சாஞ்சா கேரளாவில் மறுபடியும் ஆட்சியை பிடிக்க முடியாதே என்ற கணக்கில் மத்திய காங்கிரசு அரசும் கேரள அரசும் கூட்டு செர்ந்து கொண்டன.

தமிழகத்துக்கு முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் துரோகம் இழைத்துவிட்டதாக கூறி மதுரையில் அவருக்கு எதிராக கணடன கூட்டம் போடப்போவதாக நம்ம முதல்வர் வேங்கையாக சீறினார். ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம கலைஞர் இப்பவாவது பாய்கிறாரேன்னு பாத்தா.... திடீர்னு இந்த விசயத்துல பதுங்க ஆரம்பிச்சி மதுரை கூட்டத்தையே நிறுத்திவைத்துவிட்டார். காரணம் மறுபடியும் ஸ்பெக்ட்ரம் பூதம் கிளம்பிடிச்சி.


நீ எனக்கு எதிரா கூட்டம் போடுறியா....இருஇதுக்கு பதிலடியா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிபிஐ மூலமா மறுபடியும் ஒரு ஸ்டண்ட் ஷோவை காட்டிடிச்சு மத்திய அரசு. நம்ம கலைஞரும் மத்திய அமைச்சர் பதவியா??? தமிழக மக்கள் நலனா?? வழக்கம் போல் தமிழக நலனுக்கு ஒரு நாமம்......... கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஒகேனெக்கல் திட்டம் நிறைவேற்றப்படும் அப்படினார்..இப்ப அங்க ஆட்சியே கவிழ்கிறமாதிரி இருக்கு..அப்ப ஒகேனெக்கல்...............???

போன வாரம் அரசு விழா ஒன்றில் பொருளாதார மந்த சூழ்நிலையிலும் திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றார் துணைமுதல்வர். நேரடியாக உயர்த்தவில்லை என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.ஒரு வேளை அவர் தனியார் பேருந்துகளை மனதில் வைத்து சொல்லி இருப்பாரோ?....... அரசுப்பேருந்துகளில்தான் எம் சர்வீஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், SFS,TSS,நான் ஸ்டாப்..அப்படினு வெறும் போர்டை மற்றும் மாட்டிட்டு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை அடிப்பது துணை முதல்வருக்கு தெரியாதோ?

Thursday, October 15, 2009

ஹலோ மைக் டெஸ்டிங்.............ஹேப்பி தீவாளி

300 வருசத்துக்கு அப்புறம் இந்த தீபாவளிதான் புரட்டாசி மாசம் வருதாம்....அதனால எல்லோருக்கு ஒரு ஸ்பெசல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.எனக்கு ஒரு சின்ன ஆப்பரேசன் நடந்து முடிந்துள்ளது( சைனஸ்).. அதனால் தான் இரு வாரமாக பதிவுகள் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை.



மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த தீபாவளி பேச்சிலர் தீபாவளியாக இருக்கும் என்று நானே எதிர்பாக்கலை..... ஆப்பரேசன் நடந்துள்ளதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிவேண்டியுள்ளது..படிப்பு காரணமாக் தங்கமணியும் பையனும் ஊரில் இருக்க வேண்டிய அவசியம் என்பதால்.எனக்கு இந்த வருசம் தனிமைதீபாவளிதான்........


ஓகே போதும் விசயத்துக்கு வருவோம்.....டப்பாசு... இந்த வார்த்தையை சென்னையில் மட்டுமே கேட்க முடியும்.. டப்பாசுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..???



பட்டுனு வெடிச்சா அது பட்டாசு
டப்புனு வெடிச்சா அது டப்பாசு........இது எப்படி இருக்கு


குறுஞ்செய்தி அனுப்பும் அனைத்து நண்பர்களும் வேட்டைக்காரனை பற்றியே அனுப்புகிறார்கள்..என்னதான் காண்டோ அப்படி விஜய் மேல்............


ஒரு கிசுகிசு


வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகாத காரணத்தால் அந்த இளம் பதிவர் ரொம்ப மனமுடைந்திருக்கிறாராம்...என்னைக்கு வேட்டைக்காரன் ரிலீஸ் ஆகுதோ அன்னைக்குதான் குளிக்க போவதாக சபதம் எடுத்துள்ளார்....வேணாம் சகா.........

ஒரு அரசியல்

இலங்கைக்கு சென்று திரும்பிவிட்டது நம் எம்பிக்கள் குழு....வழக்கம் போல் ஒரு அறிக்கை....ஏதாவது நல்லது நட்ந்தால் சரி.........ரெண்டு மணி நேரத்தில் போர் நிறுத்தம் செஞ்சது போல் ஆகிவிடக்கூடாது........


மீண்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
 
நம்பர் ஒன் மியூசிக் சேனல் எது? இதுக்கு ஓட்டு போட்ட 132 அன்பு உள்ளங்களுக்கும் நன்றி