Sunday, March 8, 2009

தங்கமணியும் ---- தலைவலியும்-- பகுதி-2

மகளிர் தின வாழ்த்துக்கள்

தங்கமணி ஊருக்கு போன பிறகு என்னோட பேச்சிலர் ஆடடம் தானாக அதிகமாயிடிச்சி மறுபடியும் .. ஊருக்கு கூப்பிட போனும் அதுக்காக ஆபிஸ்ல ரெண்டு நாள் பர்மிசன் போட்டு வீட்டை நன்றாக சுத்தம் செய்வதே வேலையாபோச்சு. ஊருக்கு பஸ் ஏறின பிறகும் ஒரு சந்தேகம் எல்லாத்தையும் கரெக்டா பண்ணிட்டோமா அப்படின்னு.... 4 பாட்டில் இருந்திச்சி எல்லாத்தையும் வெளியில கடாசிட்டமா அப்படினு ஒரு மிகப்பெரிய சந்தேகம் ...ஆஹா மாட்டினா கஞ்சி முதற்கொண்டு எதுவுமே கிடைக்காதே...((((( சண்டை போடுறதுக்கு உடம்புல தெம்பு கிடையாது அவ்வ்வ்வ்!!!

!தங்கமணியும் சென்னைக்கு வந்தாச்சி....வீட்டைத் திறந்தவுடன்..

"ஸ்மெல் இப்படி அடிக்குது" ( ஆஹா வீட்டை கிளீன் பண்ணினதுக்கப்புறம் ரெண்டு கம்பியூட்டர் சாம்பிராணி, 4 சைக்கிள் அகர் பத்திய கொளுத்தி வச்சேனே அவ்ளோதானா!!!)

"இல்லமா வீடு மூனு நாளா பூட்டியே இருந்திச்சில்ல அதான்..."( அவ்வ்வ்வ்வ்)

"வீட்டுல போட்டது போட்ட படியே கெடக்கு என்னதான் பண்ணினீங்க....."

"எப்ப போன் பண்ணினாலும் துணி துவச்சிட்டிருக்கேன் அப்படினீங்களே இது என்ன இவ்ளோ அழுக்கு துணி......"

"என்னமா பண்றது ஒரு மாசமா நைட் டூட்டி,12 மணிநேர டூட்டின்னு வேலைக்கே நேரம் போயிடிச்சி.... ( தப்பிச்சேன்)"

"ஃபிரிட்ஜ் கிளீன் பண்ணல.. கிட்சன் அப்படியே இருக்கு... எப்பவாவது நான் ஊருக்கு போய்ட்டு வரும்போது ஒழுங்கா வீட்டை வச்சிருக்கீங்களா??????////////"

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா....... இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட வேண்டியதுதான்......... இருந்தாலும் இப்படி பயப்படுறதுக்கு............. கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையே...............இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் ரொம்ப நல்ல பையன்பா................