Monday, May 17, 2010

என்டர் கவிதைகள் 2--- கோடை கூட சுகம்தான்

ஒரு மாத தற்காலிக பேச்சிலர்கள்

எப்போதாவது எட்டிப்பார்க்கும் மழை
பூத்துக்குலுங்கும் வேப்ப மரம்
காய்த்துக் குலுங்கும் மாமரம்
இளந்தளிரான அரசமரம்
அதிசயமாக தெருவில் விளையாடும் குழந்தைகள்
கூட்டம் இல்லா மாநகரப்பேருந்துகள்
வெறிச்சோடும் வார நாட்கள்
அடிக்கடி கோபித்துக்கொள்ளும் மின்சாரம்
எப்போதோ தீண்டும் தென்றல்


ம்ம்ம்ம்..கோடை கூட சுகம்தான்

T20உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து

கிட்டத்தட்ட 30 ஆண்டுகால கனவை நிறைவேற்றியிருக்கிறது கோலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி.....இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சுலபமாக மண்ணை கவ்வ வைத்து முதல் முதலாக ஐசிசி உலகக்கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.

டாசில் வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை பேட் செய்யும் படி பணித்து சிறப்பான பந்து வீச்சின் மூலம் 147 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது...எளிதான இலக்கை இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் எடுத்து கோப்பையை கைப்பற்றியது


சுருக்கமான ஸ்கோர்



ஆஸ்திரேலியா 147/6 20வது ஓவர்களில் டேவிட் ஹசி 59ரன்கள்
இங்கிலாந்து 148/3 17 ஓவர்களில் கிரெக் கிஸ்வெட்டர் 69ரன்கள் 49பந்துகளில்