விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணம் உறுதிப்படுத்தபட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவிப்பு செய்து அதற்கு ஆதாரமாக வீடியோ படத்தையும் வெளியிட்டுள்ளது.... பின்தலை முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதுதான் பிரபாகரன் உடல் என அடித்து சொல்கிறது இலங்கை அரசு..... இலங்கை அரசு செய்தி வெளியிட்டதில் ஒரு சில சந்தேகங்கள் கேள்விகள் எழுகின்றன
1.நேற்று அவர் இலங்கை ராணுவத்துடன் போரிட்டு இறந்ததாக இலங்கை ராணுவ செய்திக்குறிப்பு சொல்கிறது. ஆனால் அவர் தப்பிச்செல்ல முயன்றபோது சுட்டுக்கொன்றுவிட்டதாக இலங்கை அரசு சொல்கிறது..... ஏன் இந்த முரண்பாடு?
2.25ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை ராணுவத்தால் நெருங்க முடியாத பிரபாகரனை இப்போது சரியாக குறி வைத்து கொல்ல முடிந்தது?
3.இலங்கை அரசின் கூற்றுப்படி புலிகள் தலைவர் தப்பி சென்றிருந்தால் சீருடை அணிந்தா சென்றிருப்பார்?
4.இலங்கை அரசு காண்பித்த உடல் பிரபாகனைப்போலே வேறொரு உருவமாக இருக்கலாமே...?
5.டி என் ஏ டெஸ்ட் முடிவு எப்படி உடனடியாக கிடைத்தது?
6.தப்பி செல்லும் ஒருவர் எப்படி அவருடைய அடையாள அட்டையையுமா எடுத்து செல்வார்?
யோகி இணைய ஒலி 24x7
15 years ago