Showing posts with label புலம்பல்கள். Show all posts
Showing posts with label புலம்பல்கள். Show all posts

Monday, March 7, 2011

விடுறா விடுறா கா.பா திரிசா இல்லனா திவ்யா


நண்பா உன் துயர் துடைக்க என் கைகள் சென்னையிலிருந்து மதுரைக்கு எட்டவில்லை............ இந்த பாடல்களை பார்த்து கேட்டு தெளிவடைந்து கொள் நண்பா


எப்படி இருந்த கா.பா


இப்படி ஆகிட்டாரு






                                       

எலக்கியவாதிக்கு இப்படியா சோதனை வரனும்???...........விடு கா.பா திரிசா இல்லனா திவ்யா........போய்க்கிட்டே இருக்கலாம்

Wednesday, June 30, 2010

பர்ஸை காலி பண்ணும் மாந(ர)கரப்பேருந்துகள்

சென்னை மாநகரப்பேருந்துகள் பயணிகளின் வசதிக்கு ஏற்ப சேவைகள் செய்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்ற பதில்.......... வேண்டுமானால் தினசரி மாநகரப்பேருந்தில் பயணம் செய்யும் மக்களிடம் கேட்டுப்பாருங்களேன்....... மக்களுக்காக இருந்த மாநகரப்பேருந்துகள் இன்று வெறும் வணிக நோக்குடன் மட்டுமே சாலையில் பயணிக்கின்றன என்றால் மிகையாகாது...


சென்னையில் பயணிகளின் தேவைக்கு கிட்டத்தட்ட 5000பேருந்துகள் தேவை ஆனால் இருப்பதோ 3000த்து சொச்சம் என போக்குவரத்து துறை அமைச்சரே விளக்கம் கொடுக்கிறார்.... இந்த 3000 பேருந்துகளில் இன்றைக்கு கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேல் சொகுசுப்பேருந்துகளே சென்னை சாலையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது............ காரணம் வணிக நோக்குதான்......... பயணிகளின் தேவை காற்றில் எப்போதோ விட்டுட்டாங்க..................


5ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரணப்பேருந்து வழித்தடங்கள் தான் சென்னையில் அதிகம்....... அதுக்கப்புறம் வருசத்துக்கு நாலைஞ்சி வாட்டி பெட்ரோல் விலை ஏத்திட்டாங்க........ஆனால் பஸ் கட்டணம் ஏற்றப்படவில்லை...கட்டணத்தையும் ஏற்றக்கூடாது..ஆனால் வருமானம் வரவேண்டும் என்ற அதிகாரிகளின் ஐடியாப்படி ஒவ்வொரு வழித்தடத்திலும் படிப்படியாக சாதாரணப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சொகுசு விரைவு.குளிர்சாதனப்பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு விட்டது.......... இதை பற்றி யாரும் கேட்பதில்லை...அப்படியே கேட்டாலும் நடத்துனரிடம் சண்டை போடும் பயணிகள்தான் அதிகம்.


மக்களின் டவுசரை அவிழ்க்காத குறையாத்தான் இப்போது மாநகரப்பேருந்துகள் பகற்கொள்ளையடித்துகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு பள்ளிக்கரணையில் இருந்து தி.நகருக்கு சாதாரணப்பேருந்தில் 5ரூபாய் விரைவுப்பேருந்தில் 7ரூபாய், சொகுசுப்பேருந்தில் 10 ரூபாய்............ஒரு மணி நேரத்தில் பத்து பேருந்துகள் தி.நகருக்கு செல்கிறதென்றால் அதில் 5 பேருந்துகள் சொகுசுப்பேருந்துகளாகவும் 3பேருந்துகள் விரைவுப்பேருந்துகளாகவும் 2பேருந்துகள் சாதாரணப்பேருந்துகளாகவும் செல்கின்றன...........சீசன் டிக்கெட்கள் சாதாரணப்பேருந்தில் மட்டுமே செல்லுபடியாகும்... சீசன் டிக்கெட் வைத்திருப்போர் நிலைமை சொல்லிமாளாது............ பேருந்து நிறுத்தத்தில்காத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்......தினசரி சொகுசுப்பேருந்திலோ விரைவுப்பேருந்திலோ காசு கொடுத்துதான் பயணம் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது............இதனாலே மாநகரப்பேருந்துகளுக்கு இரட்டிப்பு வருமானம்....


போன வருடம் மக்களவைத்தேர்தலின் போது இது ஒரு பிரச்சினையாக எதிர்க்கட்சிகள் கிளப்பிவிட பயந்து போன அரசு ஒரு மூன்று நாட்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட எல்லாப்பேருந்துகளையும் சாதாரண பேருந்துகளாக மாற்றியது....அதுக்கப்புறம் பழைய குருடி கதவ திறடி கதை தான்...... இப்ப கேட்டாக்கூட கலைஞரும் போக்குவரத்து துறை அமைச்சரும் தலையில் சத்தியம் பண்ணாத குறையாக சொல்வார்கள்.......”பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று.”........ ஏன் இந்த மறைமுக கட்டணம்..........


அதிகாலை 4மணியில் இருந்து இரவு 11மணி வரைக்கும் பயணிகள் கூட்டம் அதிகம்தான்.. ஆனால் அதுக்கேற்றார்போல் பேருந்து சேவை இருக்குதான்னா பாத்தா கண்டிப்பா கிடையாது.... இரவு 9மணி ஆச்சுன்னா எல்லா பேருந்துகளும் பணிமனையை நோக்கித்தான் செல்லும்... காலை 6மணி வரைக்கும் இதே நிலைமைதான்........


சரி இங்கதான் இதே நிலைமைனா மதுரையிலும் இதேதான்.....ஆரப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு எல்லாமே சொகுசு பேருந்துகள்தான்.. எனக்கே ஒரு நிமிடம் சந்தேகமாகிவிட்டது நாம நிக்கிறது மதுரையா இல்லை சென்னையா??...


இதுக்கெல்லாம் ஒரே காரணம்தான் சென்னையிலும் மதுரையிலும் நகருக்குள் தனியார் பேருந்து சேவைகள் கிடையாது..........அதனால நாங்க எந்த பேருந்தை விடுகிறோமோ அதுல தான் போக முடியும்... திருச்சி,நெல்லை ,சேலம்,கோவையில் இந்த பிரச்சினை குறைவாகதான் இருக்கும் ஏன்னா அங்க எல்லாம் தனியார் பேருந்துகளும் உண்டு........


சென்னை மாநகரப்பேருந்துகளில் மட்டும் இந்த மாற்றம் கிடையாது.... அரசு விரைவுப்பேருதுகளிலும் இதேதான் அல்ட்ரா டீலக்ஸ் என்ற பெயரில்....அப்படியே அரசுப்பேருந்துகளில் வெறும் போர்டை மட்டும் மாற்றி கட்டணத்தை உயர்த்துவது எனத் தமிழகம் முழுவதும் இந்த பகற்கொள்ளை பரவிக்கிடக்கிறது...............


இந்த பகற்கொள்ளைக்கு முடிவு எப்போது?????????????? சொல்லுங்க மக்களே....பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் பஸ் கட்ட்ணம் உயர்த்தப்படாது என கலைஞர் அறிவித்திருக்கிறார்.....அது சரி இப்ப இருக்கிற மறைமுக கட்டண உயர்வு இன்னும் 10வருசத்துக்கு கூட தாக்கு பிடிக்கும்........................

Saturday, February 27, 2010

எடுபடாமல் போன அஞ்சா நெஞ்சனின் கருத்து-- அவமானப்ப்படுத்திய மூவர் கூட்டணி

பாசத்தலைவன் எப்போதும் ஒன்று சொல்வார் மத்திய அமைச்சரவையில் எப்போதும் நம் குரல் தான் ஒலிக்கும்..தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று..... இதெல்லாம் 2009க்கு முந்தி என்றுதான் நினைக்கிறேன்..தற்போது அமைந்திருக்கும் காங்கிரசு அட்சியில் ஏற்கனவே தன்னுடைய துறைக்கு அதிக நிதி கேட்டு மம்தா பான்ர்ஜி பிரச்சினை எழுப்பியுள்ளார்..இன்னும் எழுப்புவார்....... தமிழக மத்திய அமைச்சர்கள் எப்பவும் ஆளும் காங்கிரஸு அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசமாட்டாங்க முக்கியமா திமுக மத்திய அமைச்சரகள்..
அஞ்சாநெஞ்சன் அழகிரி மத்திய அமைச்சராக பதவியேற்றதும் அதன் பிறகு அவரது துறையில் சரியாக கவனம் செலுத்தாமல் லோக்கல் பாலிடிக்சிலேயே குறியா அலைந்ததையும் டெல்லி பத்திரிக்கைகள் செயல்படாத ஒரே அமைச்சர் என்று எழுதின..அதன் பிறகும் அஞ்சாநெஞ்சன் அசரவில்லை..குறிப்பாக தன் துறை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பதில் சொல்ல அவர் அவைக்கு வரவில்லை.......இந்த சூழ்நிலையில் நிதிப்பற்றாக்குறை சிக்கனமாக்க மூவர் கூட்டணி உர மான்யம் சம்பந்தமாகஒரு முடிவெடுத்து அது குறித்து பேச துறை அமைச்சரான அழகிரியுடன் விவாதித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக விவசாயிகளுக்கு உரமான்யம் 30ஆயிரம் கோடி என்றிருந்தது,தற்போது 50 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது..இதுதான் இந்த மூவர் கூட்டணிக்கு (அதாவது நம்ம தாத்தா மன்மோகன் சிங், மாமா பிரணாப், நம்ம பங்காளி சிதம்பரம்)கண்ணை உறுத்தியது. எதற்கு 50ஆயிரம் கோடி மான்யம் அதை குறைத்தால் நிதி பற்றாக்குறையை தவிர்க்கலாமே என்ற ஐடியா..... ஆனா இந்த முடிவுக்கு அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து நேரடி விவாதத்தில் ஈடுப்பட்டார்.. உரமான்யத்தை குறைப்பது என்பது அரசின் நிதி பற்றாக்குறை குறையும் என்றாலும் விலை உயர்வு எனப்து விவசாயிகளின் மேல விழும் எனபதால் கடும் வாக்குவாதத்தில் மோதினார் நம்ம அஞ்சா நெஞ்சன்.. அவருக்கு ஆதவாக சில காங்கிரசு அமைச்சர்களும் கைகோர்த்துகொண்டனர்........ஏற்கன்வே விலைவாசி உயர்வினால அனைத்து தரப்பு மக்களும் அவதிப்படும் வேளையில் மான்யத்தை ரத்து செய்தால் இன்னும் கடுமையாக விலைவாசி உயரும் என்று என்று சொன்னாராம் நம்ம அஞ்சா நெஞ்சன்.......... ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை அந்த மூவர் கூட்டணி..
கடைசியாக அஞ்சாநெஞ்சன்இன்னும் ஒருவருடத்திற்காவது இந்த முடிவை தள்ளிப்போடுங்கள்..தேவைக்கேற்ற இருப்பு கவசம் வைத்துக்கொண்டு அப்புறம் யோசிக்கலாம் என்றார்....... ஆனால் இதற்கு உர நிறுவங்கள் சம்மதிக்கவில்லை என்று கூரீ மூவர் கூட்டணி உர மான்யம் ரத்து வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக உறுதியக சொல்லியதால் கடும் கோபத்துடன் பாதியிலே வெளியே வந்துவிட்டார் அமைச்சர் அழகிரி..
...
உயர்வை பற்றி மத்திய அரசு துளீயூண்டு கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை..நேற்று அறிவித்த மத்திய பட்ஜெட்டிலும் அது பற்றி ஒன்றும் இல்லை....கச்சா எண்ணெயின் வரியை உயர்த்தி மறைமுக பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வழிகாட்டியுள்ளார் மத்திய நிதி அமைச்சர்.......... அது போல் வரி குறைக்கப்பட்ட பொருட்களைப்பார்த்தால் செல்போனாம், பலூனாம்...அடப்பாவிங்களா....காலை டிபனுக்கு பலூனையும், மதியம் சாப்பாடுக்கு செல்போனையுமா சாப்பிட முடியும்.......
...
பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு............ நம்மைப்போன்ற சாமன்ய மக்களுக்கு இல்லை

Friday, February 26, 2010

மணத்தக்காளி கீரை பொரியல்---- பேச்சிலர் சமையல்

தினசரி கோதுமை தோசை,அரிசி மாவு தோசை, ஆம்லெட், சாம்பார்,அப்பளம் அப்படினு சப்பிட்டு ரொம்ப போரடிச்சிருச்சி......... வேற வழியில்லாம சாப்பிட வேண்டியதா போச்சு...... வித்தியாசமா ஏதாவது செய்து சாப்பிடனும்னு ஆசை...... சிக்கன் வைக்கலாம்னு பாத்தா சைவ சமையலில் ஏதாவது குறை என்றால் உப்போ காரமோ கொஞ்சம் அதிகம் சேர்த்து சமாளிச்சிடலாம்........ அசைவத்தில் குளறுபடி பண்ணிவிட்டால் கண்டிப்பா சாப்பிடமுடியாது...........இதனால கீரையை ஒரு கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்....... மணத்தக்காளி கீரை உடம்புக்கு நல்லதாமே........... ஒரு கட்டு கீரை வாங்கிட்டேன்.ஆனா எப்படி சமைப்பது என்று தெரியவில்லை.வழக்கம் போல் தங்கமணியிடம் வாங்கி கட்டிக்கொண்டு குறிப்பையும் கேட்டுக்கொண்டேன்.........

கீரையை நன்றாக உருவி அதை நறுக்கி கொள்ளவும்... கீரையை தண்ணியில் அலசிக்கொள்ளூங்கள்.சின்னவெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் தேவைக்கேற்றார்போல் எடுத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய் ஒன்று போதும்....ஒரு துண்டு தேங்காயை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்..... அடுப்பில் வானலி வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்....அதன் பிறகு அதனுடன் கீரையை சேர்த்து வதக்கவும்...குறைந்த பட்ச சூட்டில் வைத்து வதக்க வேண்டும்..அப்பதான் சட்டியின் அடியில் பிடிக்காது.. கொஞ்ச நேரம் மூடி வைத்து விட்டு மறுபடியும் கிளற வேண்டும்...... தோராயமாக பத்து நிமிடம் கழித்து தெவைக்கேற்றார் போல் உப்பும், அரைத்து வைத்த தேங்காயையும் சேர்த்து கிளறிவிடுங்கள்...மணத்தக்காளி கீரை பொறியல் ரெடி............. கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் அதன் ருசியே தனி........

டிஸ்கி:


கோதுமை தோசை நன்றக வர வேண்டுமா???..எவ்ளோதான் தண்ணியில் கோதுமையை நன்றாக கரைத்தாலும் தோசை வார்க்கும் பொழுது நன்றாக வராது....இதற்கு ஒரு முட்டையை உடைத்து கோதுமை கரைசலில் நன்றக கலக்கினால் கோதுமை தோசையும் நன்றாக வரும்..ருசியும் சூப்பரா இருக்கும்.... ஆறினாலும் சாப்பிடலாம்

Thursday, February 25, 2010

மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தென் தமிழகம்

எல்லா விசயங்களிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல..அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் சில தொழில் வளர்ச்சி தவிர...... போன வருடம் ரெயிவே பட்ஜெட்டிலெயே தென் தமிழகத்துக்கு ஒன்னும் இல்லை.இந்த வருடமும் அதே நிலைமைதான்......இது குறித்து போன வருடம் நான் எழுதிய பதிவு.



இந்த வருடமும் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு புதிதாக ரயிலகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.......ஏற்கனவே தினசரி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயிலகள் அனைத்தும் வருடம் முழுவதும் பயனிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது...முன்ன எல்லாம் திருநெல்வேலி செல்லனும் என்றால் 15 நாட்களுக்கு முன்னதாக முன் பதிவு செய்தால் டிக்கெட் கிடைக்கும்..இப்ப ரெண்டு மாதத்திற்கு முன்னதாக முன் பதிவு செய்தாலும் கிடைப்பதில்லை.....இது பற்றி ரெயிவே அதிகாரிகளிடம் கேட்டால்..சென்னை-திருச்சி மார்க்கத்தில் இதற்கு மேல் ரயில்கள் விட முடியாது ஏன்னா தண்டவாளத்திற்கும் கொஞ்சம் ஓய்வு தேவை என்கிறார்கள்......... தாம்பரம் முதல் திருச்சி வரை இன்னொரு வழித்தடம் அமைக்கும் திட்டம் என்னவாயிற்று?????????? இது மில்லியன் டாலர் கேள்வி.....
அடுத்ததா திருநெல்வேலி- தென்காசி அகலரயில் பாதை திட்டம் ஆரம்பித்து ஒருவருடத்திற்கு மேலாகியும் வேலை எதுவும் நடைபெற்ற மாதிரி தெரியலை........ அது பற்றி ஒரு அறிவிப்பும் இல்லை....... இதுல இன்னொரு காமெடி என்னன்னா ஏற்கனவே மீட்டர் கேஜில் ஓடிய திருநெல்வெலி- திருச்செந்தூர் பயனிகள் வண்டியை புதிய வழித்தடமாக அறிவித்திருப்பதுதான்.இதையும் நம்ம செய்கதி சேனல்கள் சொல்வது கொடுமைடா சாமி.......



எனக்கு ஒரே ஆசைதான் நம்ம மத்திய ரெயில்வே மந்திரியையும், மாநில போக்குவரத்து அமைச்சரையும் ஒரு நாள் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அல்லது தென்காசிக்கோ.. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் அதுவும் ஊதா நிற, ரோஸ் நிற மஞ்சள் நிற பேருந்தில் ஏறி பயணம் செய்ய சொல்ல வேண்டும்............ அப்பதான் தெரியும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Saturday, February 13, 2010

இதுக்கு என்ன சொல்லப்போறீங்க கேபிள் & கார்க்கி????

தமிழில் எதிர்பார்த்த வெற்றியை தராத ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் யுகானிகி ஒக்கடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது..........வெளியாகி நான்கு நாட்களில் ரூ.2கோடி வசூல் செய்துள்ளது....ஆனால் படம் 2மணிநேரமாக குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கார்த்தியின் பருத்தி வீரன் படம் மொழிமாற்றம் செய்யப்பட இருக்கிறது.



தமிழ் ரசிகர்கள் தராத வெற்றியை தெலுங்கு ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.... நம்ம ஆளுங்களுக்கு புரியாத கதை அவங்களுக்கு புரிஞ்சிது போல..............

Sunday, January 31, 2010

மத்திய அமைச்சரை முற்றுகையிட்ட விவசாயிகள்

மரபணு மாற்று கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிட அமெரிக்க கம்பெனிய விட நம்ம ஊர் அரசியல்வாதிகள் ரொம்ப ஆர்வம் காட்டுறங்க என்ன காரணம்னு தெரியல. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ளது.. ஏனெனில் அந்த கத்தரிக்காயில் இருக்கும் கிரை 1ஏசி என்ற வைரஸில் விஷத்தன்மை உள்ளது என்றும் இதை பயிரிட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் வேளாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால் உடலில் எதிர் விளைவுகள் ஏற்படும் எனவும் செய்தி நிலவுகிறது... மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதை சாப்பிடக்கூடாது என்ற செய்தியும் யோசிக்க வைக்கிறது.

இவ்வளவு பின்விளைவை ஏற்படுத்தக்கூடிய இந்த கத்தரிக்காயை அனுமதிப்பது தொடர்பாக மத்திய சுற்று சூழல் அமைச்சர் 7 நகரங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறார். இதில் சென்னை கிடையாது..எனென்றால் இந்த கத்தரிக்காய் குறித்த விழிப்புணர்வு குறும் படம் எடுத்து முதல்வரிடம் காட்டி தற்போதைக்கு இந்த கத்தரிக்காய்க்கு தடை வித்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த காரணத்தாலே சென்னையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்து விட்டார்.

இந்நிலையில் இன்று மரபணு மாற்று கத்தரிக்காய் குறித்த கூட்டம் ஹைதரபாத்தில் நடைபெற்றது..கூட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சூழ்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்... இதனால் பெரும் பரபரப்பு நிலவியது அந்த அரங்கில்..பின்னர் பேட்டியளித்த அமைச்சர் பிப்ரவரி 10ஆம் தேதி இது குறித்து முடிவடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அனைத்து விவசாய அமைப்புகளுமே இந்த மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஏன் இந்த கருத்து கேட்பு கூட்டம்.???????.....எல்லா நாடுகளும் இந்த கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ள நிலையில் எதற்கு இந்த சல்ஜாப்பு.......ஒரு வேளை அந்த அமெரிக்க கம்பெனியிடம் நம்மை அடகு வைத்து பொட்டி வாங்கிட்டாங்களோ..இதுக்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினோம்.............என்னவோ போங்க..............

Monday, September 21, 2009

எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

ஏற்கனவே பலமுறை அனுபவப்பட்டதால் அந்த தப்பை பண்ணக்கூடாது என்று ஒரு கொள்கையோடிருந்தேன்..ஆனா இந்தவாட்டி மறுபடியும் அதே தப்பை பண்ணவேண்டியதா போச்சு....அய்யய்யோ நீங்க வேற மாதிரி நினைக்காதிங்க...நான் செஞ்ச தப்பு மறுபடியும் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த கொடுமை .அவ்வ்வ்வ்வ்..............

இந்த மாத ஆரம்பத்தில் ஊரில் திருவிழா இருந்ததால் ஊருக்கு சென்றிருந்தேன்..போகும்போது பேச்சிலராக போனதால் பிரச்சினையில்லை...... வரும்போது தங்கமணியும் கூட வந்ததால் பிரச்சினை ஆரம்பமாகியது..ரெயில்ல ரிசர்வேசன் கெடைச்சா மறுபடியும் சுனாமியே வந்திடும்.......தனியார் டிராவல்சிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டது. சரி ஐந்தரைமணி அரசு விரைவுப்பேருந்தில் ரிசர்வேசன் பண்ணலாம்னா அதிலும் டிக்கெட் இல்லை ( ஹைவே ரைடராம்).நாலரைமணி அரசுப்பேருந்தில் தான் டிக்கெட் இருந்தது..மனதை கல்லாக்கி கொண்டு டிக்கெட் எடுத்தேன்...



தென்காசிக்கு 5 மணிக்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை..... அலுவலகத்தில் கேட்டால் 'வண்டில கொஞ்சம் பிராப்ளம் பாத்துட்டாங்க செங்கோட்டையில் இருந்து கிளம்பிடிச்சு' அப்படினாங்க.... 6 மணியாகியும் வண்டி வரலை...இடைப்பட்ட நேரத்தில் சென்னை போர்டு போட்டு ஒரு வண்டி வந்திச்சி ஏறலாம்னா அது வேளாங்கன்னி ஸ்பெசலாம்... என்ன சார் இது சென்னை வண்டிய ஸ்பெசலா வுட்டா எப்படி? .....என கோபமாக கேட்க ஆரம்பிக்க.....அந்த அலுவலர் எஸ்கேப்.ஒரு வழியா நாலரைக்கு வரவேண்டிய பேருந்து ஆறரைக்கு வந்தது......



பேருதான்  விரைவுப்பேருந்து...ராஜபாளையம்   வரவே 9:30 மணியாகியது.        ஆஹா திருச்சி போறதுக்கே காலை 5 மணியாகிடும்போல என்றே நினைத்தேன்....காலை 3மணிக்கே திருச்சிக்கு வந்துவிட்டது...இங்கே ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மாறுவார்கள்..ஏற்கனவே பலமுறை அனுபவம் என்பதால் நான் அமைதியாக இருந்தேன்...திருச்சி வந்தவுடன் ஒரு பயணி சற்று கோபத்துடன் அந்த ஓட்டுனரிடம் " என்ன சார் தென்காசியில் இருந்து இங்கு வர 9 மணிநேரம் ஆக்கிட்டீங்களே..ஒரு இடத்துல கூட நீங்க ப்ஸ்ஸை நிப்பாட்டலியே... ஏன் இப்படி ஸ்லோவா ஓட்டுறீங்கன்னு கேட்டார்"..அதற்கு ஓட்டுனர்" நீங்க சொல்றதெல்லாம் சரிதான் நாங்க என்னபண்றது ஒரு லிட்டர் டீசலுக்கு அஞ்சரை கிலோமீட்டர் மைலேஜ் கேக்குறாங்க...லாக் பண்ணிட்டாங்க..நான் முடிஞ்சவரைக்கும் வேகமாத்தான் வந்திருக்கேன்..இதுக்கே இப்படி சொன்னா எப்படி..அடுத்து வர்ற டிரைவர் ஓட்டும்போதுதான் தெரியும் உங்களுக்கு என்ன பத்தி" என்று ஒரு மரம் புன்னகையோடு இறங்கினார்....அவர் சொன்னது அந்த பயணிக்கு புரிந்ததோ இல்லையோ எனக்கு நன்றாக புரிந்தது...

திருச்சி ஓட்டுனரின் வேகம் 30-40கிலோமீட்டருக்குள்ளே இருந்தது......இப்படியே பேருந்து சென்றால் லிட்டருக்கு 8 கிலோமீட்டர் கிடைக்கும்போல... காலை7:30க்கு விழுப்புரம் வந்த பிறகுதான் கொஞ்சம் வேகம் எடுத்தார்............டவுன் பஸ்ஸைத்தவிர எல்லா வண்டிகளும் எங்கள் பேருந்தை முந்தி சென்றன....செங்கல்பட்டு தாண்டி நம்ம மாநகர பேருந்து கூட முந்திபோனதுதான் ஹைலைட்............ தமபரம் வந்தடையும் போது மணி காலை 10:30.......இதுக்கப்புறம் அந்த பேருந்து கோயம்பேடு போகவேண்டும்............நீங்களே கணக்கு போட்டுக்கிடுங்க பயணநேரம் எவ்வளவு என்று....

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு எல்லா பேருந்துகளூம் போன வருசம் வரைக்கும் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளாக இருந்தது....நம்ம கலைஞர் ஆட்சியில தான் பேருந்து கட்டணம் உயர்த்தலையே ..அதானால் பயணிகளின் நலன் கருதி!!!!!!!! இப்பா எல்லா பேருந்துகளும் அல்ட்ரா டீலக்ஸா மாத்திட்டாங்க.......... சரி காசுதான் அதிகம் ஓகே...ஆனா வேகம்.........ம்ம்ம்ம்ஹும்..................மக்களே தயவு செய்து அரசு விரைவுப்பேருந்தில் பயணம் செஞ்சி என்னை போல் எஞ்சாய் பண்ணுங்க............



மதுரையில் இருந்து சென்னை வரைக்கும் உள்ள நெடுஞ்சாலை தற்போது அருமையாஇருக்கு ..ஆனா நம்ம பேருந்துகள்தான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் யாரைத்தான் குற்றம் சொல்ல 12மணிநேர பயணத்தை 17மணிநேரமாக ஆக்கும் கொடுமையை......

Friday, August 14, 2009

ஒரே தண்ணி பிரச்சனை-ப்பா.......பதிவர் சந்திப்பை வைங்க

பன்றி காய்ச்சல பீதில எல்லோரும் இருக்கும் போது இவன் மட்டும் என்ன தண்ணி பிரச்சினைனு கிளம்புறான்னு தப்பு கணக்கு போடாதிங்க.......நான் சொன்னது வால் பையன் பிரச்சினையில்ல...............ராமாபுரத்தில் இருந்த வரைக்கும் இந்த பிரச்சினை வரவே இல்லை..ரெண்டு நாளைக்கு ஒரு முறை தவறாமல் குடி தண்ணீர் குழாயிலே வந்துவிடும்... வீட்டு ஓனர் பக்கத்துல கிடையாது....தண்ணீர் விசய்த்தில் பிரச்சினையே கிடையாது....

எப்ப பள்ளிக்கரணைக்கு வந்தேனோ.......அப்ப ஆரம்பிச்சிதுப்பா.....இங்க வந்ததுக்கப்புறம் குடிக்கிறதுக்கு கேன் தண்ணீர் தான்....பஞ்சாயத்து குழாயில் வரும் தண்ணிய வாயில கூட வைக்க முடியாது....பக்கத்துலயே வீட்டு ஓனர்......காலையில் 6 மணிக்கு எந்திச்சா டேப்புல தண்ணி வரது.......ஓனரை எழுப்பனும்.......இதே ஒரு வேலையாப்போச்சி அப்படினு பக்கத்து தெருவுக்கு வீடு மாறினேன்.

'தனியா உங்களுக்கு டேங்க் வச்சித்தாரேன்'..... ஆஹா பரவாயில்லையே. தண்ணி பிரச்சினையில்லப்பான்னு நினைச்சி டேங்கை பாத்தா.....அது டேங்க இல்ல டேங்க மாதிரி!!!.... சரி பரவாயில்ல... அப்படினு பாத்தா மோட்டார் சுவிட்ச் அவங்க வீட்டுக்குள்ள இருந்தது .மறுபடியும் அதே மாதிரி மறுபடியும் காலையில் எழுந்து தண்ணிக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.......

நீங்க தண்ணி அதிகமா யூஸ் பண்றீங்க ஆபடினு வேற அட்வைஸ்( அந்த டேங்க் தண்ணி ரெண்டு பேர் குளிப்பதற்கே பத்தாது)..இந்த கொடுமையில பஞ்சாயத்து தண்ணிய வேற வாரத்துக்கு ஒரு முறைதான் விடுறாங்க.. வேற வீடு பாக்கனும் ஓனர் பக்கத்துல இல்லாத வீடாத்தான் பாக்கனும்............
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பூறம் பதிவர் சந்திப்பு வச்சி ரொம்ப நாளவுது ராசாக்களா....... உங்களை பாத்து ரொம்ப மாசமாச்சு கண்ணுகளா???..........அதனால பிரபல பதிவர்களே நீங்க அத்திரிய பாக்கனும்னா உடனே பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க...எத்தன நாளைக்குத்தான் முகம் பாக்காம சண்டை போடுறது........தேதி விவரங்களை ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லுங்கப்பா.....அப்பதான் எங்க மேனேஜர்ட்ட டேமேஜ் இல்லாம டுட்டி மாத்திட்டு வர முடியும்..புரிஞ்சிதா..........

Monday, June 22, 2009

கட்ட வண்டி ..... ??? எக்ஸ்பிரஸ் வண்டி....??

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதல் விருப்பம் ரெயில் பயணம்,ரென்டாவது தனியார் டிராவல்ஸ், கடேசி சாய்ஸ்தான் அரசுப்பேருந்து பயணம்.தென் மாவட்டங்களுக்கு அரசுப்பேருந்தில் பயணம் என்றால் சகிப்புத்தன்மையுடன் கூடிய ஒரு பெரிய மனசு வேண்டும்.. நம்ம வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய பதிவில் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த ஓட்டுனர்க்கு நன்றி சொன்னதாக எழுதியிருந்தார்... சொன்ன நேரத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் ஓட்டுனர்கள் தெய்வத்தின் தெய்வத்திற்கு சமமானவர்கள். அந்த மாதிரி ஓட்டுனர்களுக்கு கோயிலே கட்டலாம்.....

ஒரே ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்கோ நெல்லைக்கோ
தென்காசிக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அரசு விரைவுப்பேரூந்தில் சென்றால்தான் நமக்கு எவ்ளோ பெரிய மனசு இருக்கும்னு தெரியும்.

என்னுடைய அனுபவத்தை சொல்லுகிறேன் ...

\1. சென்னையிலிருந்து தென்காசி செல்ல இரவு 8 மணிக்கு அரசு விரைவுப்பேருந்தில் ஏறினேன்.. நடத்துனரிடம் எத்தனை மணிக்கு அண்ணே தென்காசிக்கு போகும்ணே கேடதற்கு சிரிப்புடன் அதெல்லாம் டயத்துக்கு போயிடும் அப்படினார். இரவு 8மணிக்கு சென்னையில் இருந்தி கிளம்பிய பேருந்து மறுநாள் காலை 6 மணிக்குத்தான் திருச்சிக்கே வந்தது.... ஓட்டுனர் மாற்றம் என்று 30 நிமிடம் அங்கேயே நின்றது... அதுக்கப்புறம் வந்த ஓட்டுனர்  மதியம் 12 மணிக்கு தென்காசி கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.... 13 மணிநேரத்தில் தென்காசிக்கு செல்ல வேண்டிய பேருந்து சென்னை-திருச்சி ஓட்டுனரின் திறமையால் 16 மணி நேரம் ஆகியது.

2. அவசர வேலை காரணமாக ஊருக்கு போக வேண்டியிருந்ததால் மறுபடியும் மதுரை செல்லும் அரசு விரைவுப்பேருந்தில் பயணம்...... மதியம் 2மணிக்கு சென்னையில் கிளம்பிய பேருந்து மறுநாள் காலை 3 மணிக்கு மதுரையை வந்தடைந்தது........ மதுரைக்கே 13 மணி நேரம்னா அதுக்கப்புறம் தென்காசிக்கு அதுக்கப்புறம் எங்க ஊருக்கு கணக்கு போட்டுப்பாருங்க.............

பேருந்து நடத்துனரிடம் இது பற்றி கேட்டால்.நமக்குதான் மண்ட காயும்..... 1லிட்டர் டீசலுக்கு 5 கிலோமீட்டர், ஒரு டிரிப்புக்கு அதிகாரிகள் சொல்லும் கலெக்சன், ஆள் பற்றாக்குறை........ 1 லிட்டர் டீசலுக்கு 5கிலோமீட்டர் மைலேஜ் வேண்டும் என்றால் 40கிலோமீட்டர் வேகத்திற்கு போனால்தான் கிடைக்கும்....... டீசல் சிக்கனமும் வேணும் கலெக்சனும் வேணும் அதிகாரிங்க ரொம்பத்தான் ஆசைப்படுறாங்க....... சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு விரைவுப்பேருந்துகளில் இரண்டு ஓட்டுனர்கள் ஒரு நடத்துனர் அல்லது இரண்டு ஓட்டுனர்கள் மட்டும் ஒருவர் நடத்துனராகவும் இருப்பார் இருந்ததுண்டு.. இப்பவெல்லாம் நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் மதுரை வரை செல்லும் வழித்தட பேருந்துகளுக்கு திண்டிவனத்தில் ஓட்டுனர் நடத்துனர் மாறுவார்கள்.... மதுரை தாண்டி செல்லும் பேருந்துகளுக்கு திருச்சியில் மாறுவார்கள்...பயண நேரம் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

 இப்பவெல்லாம் அரசு விரைவுப்பேருந்துகளில் மறந்தும் கால் வைப்பதில்லை..... ஊருக்கு அவசரமாக போக வேண்டும் என்றால் சென்னையில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சிக்கு, அப்புறம் அங்கிருந்து தென்காசிக்கு காலை 5மணிக்குள் சென்றுவிடுவேன்.................

Saturday, May 30, 2009

பேருதான் பெருசா மெட்ரோ சிட்டி............

பேருதான் பெருசா மெட்ரோ சிட்டி மற்ற்படி பல விசயங்களில் சென்னை சொல்லிக்கிற மாதிரி இல்லை...நான் சொல்ல வருவது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் குறித்து. கிட்டத்தட்ட 10லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்... பெருமைதான். புதுப்புது வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்துகிறது. சந்தோசம்.எல்லாம் நல்லாத்தான் இருக்கு.......ஆனா......

நான் சொல்ல வருவது காலை 5 மணி முதல் 10 மணி வரை... இரவு 8 மணியிலிருந்து 11 மணி வரையுள்ள நெரிசல் நேரம் பற்றியது. பொதுவாக காலை நேரங்களில் சென்னை நகருக்கு வெளியே செல்லும் கூட்டத்தை விட உள்ளே வரும் கூட்டம் அதிகம்..அதற்கு ஏற்றார்போல் மாநகர போக்குவரத்து இருக்கிறதா என்றால் ..........பதில் கண்டிப்பாக இல்லை என்றுதான்வரும்..தற்போதுள்ளநிலையில் மாநகரசாதாரணப்
பேருந்துகளைவிட விரைவுப்ப்பேருந்துகள்,சொகுசுப்பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இந்த நடைமுறைதான் பேருந்துகளில் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது. காலை 5 மணிக்கு நீங்கள் மாநகர பேருந்துக்காக நின்றீர்களானால் கண்டிப்பாக சாதரணப்பேருந்துகள் வராது... விரைவோ,சொகுசு பேருந்துதான் வரும். சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களின் நிலைதான் மிக மோசம்.. சீசன் டிக்கெட் சாதாரண மற்றும் எல் எஸ் எஸ் பேருந்துகளில் மட்டும்தான் செல்லும்... ஆனால் அதிகலை நேரங்களிலும் நெரிசல் நேரங்களிலும் விரைவு மற்றும் சொகுசு வழித்தடங்கள் தான் அதிகம் வரும். இந்த தொல்லையால் தினசரி எக்ஸ்ட்ரா காசு கொடுத்துதான் செல்ல வேண்டியுள்ளது. அதே மாதிரி இரவு 8மணியை தாண்டிவிட்டாலே போதும் ஏறக்குறைய எல்லாப்பேருந்துகளும் கட்சர்வீஸாக பணிமணையை நோக்கி செல்ல ஆரம்பிக்கும்....

இரவு 9:30 மணிக்கு மேல் பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் அலையடிக்கும்..ஆனால் பேருந்து மட்டும் வராது..... அதற்கு மேல வரும் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக விரைவு அல்லது சொகுசாகத்தான் இருக்கும்.... போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர்களின் கல்லா நிறைந்தால் போதும்... மக்கள் எப்படி கஷ்டப்பட்டால் என்ன.... கண்டக்டரிடமோ டிரைவரிடமோ கேட்டால் "அதிகாரிகள் இந்த மாதிரியான விரைவு மற்றும் சொகுசுப்பேருந்துகளைத்தான் அதிகமாக இயக்க சொல்லுகிறார்கள்" என்கிறார்கள்.


மாநகர போக்குவரத்து துறை நெரிசலை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்...

1.நெரிசல் நேரம் என்பது இன்னும் பழைய நேரமான காலை 8மணி என்பதையே பின்பற்றுகிறார்கள். அதை 7 அல்லது 6மணியாக மாற்றவேண்டும்..


2.நெரிசல் நேரங்களில் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை அதிகமாக இயக்கவேண்டும்.


3.இரவு 11மணி வரை நெரிசல் நேரம் என கருத்தில் கொள்ள வேண்டும்.......


4.சீசன் டிக்கெட்களின் விலையை சற்று உயர்த்தி விரைவு மற்றும் சொகுசுப்பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும்( தற்போது மினிமம் சீசன் டிக்கெட் விலை 140ரூபாய்)


இதையெல்லாம் செய்வாங்களா ....................

 50 வது FOLLOWER வேத்தியனுக்கு நன்றிகள்

Saturday, May 23, 2009

சேட்டர்டே --- ரெண்டு மேட்டர்

சனிக்கிழமை என்றாலே பலபேருக்கு சந்தோசம்தான்...ஏன்னா ஞாயிற்றுக்கிழமை லீவு... ஆனா என்ன மதிரி ஷிப்டுகளில் வொர்க் பண்றவங்களுக்கு வார விடுமுறை எப்போது என்றே தெரியாது..என்னுடைய டேமேஜர் ஒவ்வொருவாரமும் வெவ்வேறு கிழமைகளில் வார விடுமுறை தருகிறார்......... ஆனாலும் இந்த சனி ,ஞாயிறுகளில் வேலை செய்வது ரொம்ப பிடிக்கும்.. காரணம் இந்த நாட்களில் டேமேஜர்,மேலதிகாரி யாரும் இருக்க மாட்டார்கள்... இருக்குற வேலய செஞ்சிட்டு பொழுதை போக்க வேண்டியதுதான்....என்ன பண்றது இப்பவெல்லாம் ஞாயிறு விடுமுறை அப்படினாலே மண்டை காயிது.......... பழக்க தோசம்.......... சும்மாவா ஞாயிறு விடுமுறை எடுத்து பத்து வருசமாவுதே....................

சரி மேட்டருக்கு வருவோம். முதல் மேட்டர் தங்கமணி-ரங்கமணி விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொன்னது.



பொதுவா குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் புத்திமதி சொலவது வழக்கம். அதிலும் கணவனுக்கு புத்திமதிகள் கொஞ்சம் அதிகமா விழும்.அதே மாதிரிதான் நம்ம சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கு.


சண்டிகரில் விமானப்படை அதிகாரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் புகார் கொடுத்து விவகாரம் ஹைகோர்ட் வரைக்கும் வந்துவிட்டது. ஹைகோர்ட் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால் இந்த முடிவை எதிர்த்து அந்த அதிகாரியின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் கணவன்மார்களுக்கு பல புத்திமதிகள் சொல்லியிருக்காங்க."உங்கள் மனைவி என்ன சொல்கிறாரோ அதையே செய்ங்க. அப்படி செய்யாமல் இருந்தீங்கன்னா அதனால் வரும் விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு....உங்க மனைவி இடது பக்கம் பாக்க சொன்னா இடது பக்கம் பாருங்க. வலது பக்கம் பாக்க சொன்ன வலது பக்கம் பாருங்க.... ஏனென்றால் நாமெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள்...அதனால் மனைவி பேச்சை கேளுங்க" அப்படினு சொல்லியிருக்காங்க...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எவ்ளோதான் விட்டுக்கொடுப்பது......... அடப்போங்கப்பா.
 
ரெண்டாவது மேட்டர் நம்ம முதல்வரை பற்றிதான்.



அகில இந்திய அளவில் காங்கிரசே எதிர்பார்க்காத அளவில் சென்ற தேர்தலைவிட இப்ப அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்... அதனால இந்த வாட்டி கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி ஒதுக்குவதில் கொஞ்சம் கறாராக இருக்காங்க போல... என்னதான் இருந்தாலும் இந்த காங்கிரசுக்காரவுக கொஞ்சம் யோசிக்கனும்.... எவ்ளோ இடர்பாடுகள் வந்தாலும் நம்ம முதல்வர் போன அஞ்சு வருசமா காங்கிரசு கூடத்தான் இருந்தாரு. அதையெல்லாம் நெனைச்சி பாருங்கப்பா... எதுக்காக இப்படி அடம் பிடிச்சி சீட் கேட்கிறார்.... எல்லாம் தம் மக்களின் அய்யய்யோ எழுத்து பிழையாகிருச்சே. எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு தானே............. கொடுங்களேன்பா.

Wednesday, February 18, 2009

(தென்) தமிழகத்திற்கு ஏமாற்றம் தரும் ரெயில்வே பட்ஜெட்

மத்திய அமைச்சர் லல்லு தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் வழக்கம் போல் தமிழகத்திற்கு ஒரு பட்டை நாமம் சாத்திவிட்டார். குறிப்பா தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு. தமிழகத்துக்கென இந்த ரெயில்வே பட்ஜெட்டில் 5 புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலாஸ்பூர் - நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் (திருவனந்தபுரம் வழி)
செங்கோட்டை - ஈரோடு தினசரி பாசஞ்சர்.
திருச்சி - மதுரை தினசரி எக்ஸ்பிரஸ்.
மும்பை - நெல்லை சூப்பர்பாஸ்ட். திருவனந்தபுரம் வழி. (வாரம் இருமுறை)
கோவை - தூத்துக்குடி இணைப்பு ரயில் (தினசரி)

இதில் திருநெல்வேலியிலிருந்து செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு ரெயில்களும் திருவனந்தபுரம் வழியாக செல்லும். பேசாம இந்த இரண்டு ரெயில்களையும் திருவனந்தபுரத்திலிருந்தே இயக்கிவிடலாம். ஒரு மாநிலத்துக்கு இயக்கப்படும் ரெயில்கள் அந்த மாநில மக்களுக்கே அதிகம் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கவேண்டும்.என்னகணக்கில்
இதைஅறிவிச்சாங்கன்னேதெரியலை.
மும்பையில்நெல்லை,கன்னியாகுமரி,விருதுநகர்,மதுரை மாவட்ட மக்களே அதிகம் உள்ளனர். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் மும்பை.நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வருடம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிஞ்சிதான் ஓடிக்கிட்டு இருக்கு.. இதே வழித்தடத்தில் இன்னொருவழித்தடத்தைஅறிமுகப்படுத்தினால் மக்களுக்கு பயன் தரும் வகையில்இருக்கும்...


அதேபோல்சென்னையிலிருந்து ,நெல்லைக்கோ,கன்னியாகுமரிக்கோ ரெயிலை அறிமுகப்படுத்தியிருக்கலாம்... ஆனால் அதை பற்றி ஒன்னையும் கானோம்..இத்தனைக்கும் தென் மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து செல்லும் ரெயில்களில் முன்பதிவு வேண்டும் என்றால் 3மாதத்திற்கு முன்னாலே முன்பதிவு செய்தால்தான் உண்டு... இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வரைக்கும் பண்டிகை காலங்களில் மட்டுமே முன்பதிவில் சிக்கல் இருக்கும். ஆனால் தற்போது எல்லா காலங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.தென்மாவட்டங்களுக்கு பஸ்ஸில் செல்வதற்கு மனதளவில் மிகுந்த தைரியம் வேண்டும்... ஆம் இதைப்பற்றி உண்மைத்தமிழன் நேற்றுதான் பதிவில் எழுதியிருந்தார்.. சென்னையில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப்பேருந்தில் செல்ல 13 மணி நேரம் ஆகியதாம்... கின்னஸில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார்களோ என்னவோ?.என்னோட அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன். திருச்சிக்கே 13மணி நேரம் என்றால் இன்னும் மதுரை,தென்காசி,நெல்லை,கன்னியாகுமரிக்கு செல்ல எவ்வளவு நேரமாகும் என்பதை நீங்களே கணக்கிட்டுகொள்ளுங்கள். நேரம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தென் மாவட்ட ரெயிலகள் நிரம்பி வழிகின்றன....

மொத்தத்தில் மெஜாரிட்டியான அளுங்கட்சி எம்பிக்கள், ஒரு ரெயில்வே துறை இணை அமைச்சர் இருந்தும் தமிழகத்திற்கு பட்டை நாமம் போடாத குறைதான்..லல்லுவின் சொந்த மநிலமான பீகாருக்கு 12 புதிய ரெயில்களாம்..............

Tuesday, February 17, 2009

100வது பதிவும்--பட்டாம்பூச்சி விருதும்--- சில விசயங்களும்


அப்படி, இப்படினு ஒரு வழியா 100வது பதிவை எழுதியாச்சு..... இந்த நேரத்துல நண்பர் கடையம் ஆனந்த் பட்டாம் பூச்சி விருதை வேறு கொடுத்துவிட்டார்... அந்தபட்டாம்பூச்சி விருதை 3 பேருக்கு கொடுக்கனுமாம்/.......கொடுத்திடலாம்,,,..காசா..பணமா?........... என்னையும் நம்பி என் பதிவை பாலோ செய்யும் சக பதிவர்களுகு நன்றி.....என்ன பதிவு போட்டாலும் படிச்சி பின்னூட்டமிட்டு ஆதரவு தரும் தாமிரா, கடையம் ஆனந்த்,கார்க்கி, பாபு,கேபிள் சங்கர், முரளி கண்ணன்,கமல்,ஜமால்,செய்யது,ரம்யா,வனம் ராஜராஜன்,அதிஷா,நசரேயன்,வடகரை அண்ணாச்சி, உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.....கடந்த ஒரு மாதமாக பதிவு எழுதமுடியவில்லை.... சில எதிர்பார்த்த விசயங்களில் ஏமாற்றம் அடைந்ததால்....... மறுபடியும் முயற்சிக்கிறேன்..... அடுத்த மாதம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்...............
பட்டாம் பூச்சி விருதை எனது தலைங்களுக்கும் சகாகளுக்கும் கொடுக்கிறேன்.
1. கேபிள் சங்கர் ( அண்ணே இப்ப ஏ ஜோக் மேலயும், தமன்னா மேலயும் ரொம்ப இதுவா இருக்கார்... இவருடைய சிறுகதைகளுக்கு நான் அடிமை)2. நர்சிம் ( சகா வழி தனி வழி....... மாற வர்மன் என்ன ஆச்சு)
3. முரளி கண்ணன்( நடமாடும் சினிமா நூலகம்)
4. கார்க்கி( சகாவுக்கு மாசத்துல ஒரு தடவ காதல் சோகக்கதை பதிவிடலனா தூக்கம் வராது)
5.பாபு( ஒன்னுமே புரியல)

அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள்
ஒரு சில அனுபவங்கள் அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள் மேல் கோபம் கொள்ள வைக்கிறது...
அனுபவம் 1
இடம் தாம்பரம் மண்டல அலுவலகம் கடந்த ஜனவரி மாதம் ரேஷன் கார்டு விலாசம் மாற்றம் தொடர்பாக தாம்பரம் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். விண்ணப்பம் கொடுப்பதற்கு ஒரு கவுன்டர் மட்டும் தான். வரிசை அலுவலகத்திற்கு வெளியே ரோடு வரைக்கும் இருந்தாது.. வரிசையில் உள்ளோரில் ஒரு சிலரை தவிர மீதி அனைவருமே 50 வயதை தாண்டியவர்களாக தெரிந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிஉருந்தது.. பாடாவதி இன்னும் பழைய மெத்தடுல தான் இன்னும் எழுதிக்கிட்டு இருக்காங்க... ஒரு வயதான பெண்மணி தான் கொண்டு வந்திருந்த விண்ணப்பத்தை கவுன்டரில் இருந்த பெண் ஊழியரிடம் கொடுத்தார்.

விண்ணப்பத்தை பார்த்த பெண் ஊழியர் " என்னம்மா உன் மகன் பெயருக்கு கார்டு கேட்டிருக்க சரி, ஆனா உன் மருமகள் பெயர் நீக்குன சான்றிதழ் இதுல இல்லையே.. அதை வாங்கிட்டு வா." என்று சொல்லி அந்த விண்ணப்பத்தை கையில் கூட கொடுக்காமல் அப்படியே கீழே போட்டார் அந்த பெண் ஊழியர். வயதான பெண்மணி " கொஞ்சம் வெவரமா சொன்னா நல்லாயிருக்கும்.. நானும் 10நாளா அலையுறேன்". என்னத்த வெவரமா சொல்ல சொல்லுற... போயி அந்த சர்டிபிகேட்டை வாங்கிட்டு வா... என உச்சஸ்தியில் கோபத்தில் கத்த ஆரம்பித்துவிட்டார் அந்த பெண் ஊழியர்... ஏன் அந்த பெண் ஊழியர் கோபப்பட வேண்டும்?.பெரும்பாலும் இந்த மாதிரி ரேசன் கார்டு சம்பந்தப்பட்ட சந்தேகங்கங்களை நிவர்த்தி செய்ய தனி அதிகாரியை நியமிக்கலாம்... செய்வார்களா?...

அனுபவம் 2

இடம் மாம்பலம் ரிசர்வேசன் கவுன்டர். எனக்கு ரெயில் பயண கட்டண சலுகை உண்டென்பதால் அதற்கான சான்றிதழுடன் விண்ணப்பத்தைக்கொடுத்தேன்... ( இங்கேயும் பெண் ஊழியர்தான்) "டாக்டர் சான்றிதழில் சீல் சரியாத் தெரியல"( டாக்டர் சீல் பச்சை கலரில் இருந்ததால் ஜெராக்ஸில் சரியாக தெரியவில்லை) இல்ல மேடம் 1 மணி நேரமா வரிசையில நிக்கிறேன்" அப்ப சூப்பர்வைசர் உள்ள இருக்கார் அவர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வாங்க" சூப்பர்வைசரை பார்க்க ஒரு அரை மணி நேரம் .... ஒரு வழியா டிக்கெட் வாங்கிட்டேன்.. " அடுத்த வாட்டி இந்த சர்டிபிகேட் கொண்டு வந்தீங்கன்னா டிக்கெட் தரமாட்டேன்"

அடுத்த வாட்டி போகும் பொழுது புது சர்டிபிகேட்டுடன் சென்றேன். சர்டிபிகேட்டை சரி பார்த்த பெண் ஊழியர் " வயசு சரியா எழுதலியே.. மேலே ஒரு கோடு மாதிரி இருக்கு எந்த டாக்டர் கிட்ட வாங்கினீங்களோ அவர் கையெழுத்தை இதுக்கு பக்கத்துல வாங்கிட்டு வாங்க" என்று மிக அலட்சியமாக சர்டிபிகேட்டை என்னைடம் கொடுத்தார்.. நானும் அப்போதுதான் கவனித்தேன்.. வயது 31 என்பதில் 3க்கு மேல் லைட்டா ஒரு கோடு .." மேடம் டாக்டருங்க கையெழுத்து அப்படித்தான் இருக்கும் உங்களுக்கே தெரியும்"." அதெல்லாம் முடியாது வேணும்னா நார்மல் டிக்கெட் வாங்கிக்கிடுங்க".. கோபமாக சொல்லிவிட்டார்... கொஞ்ச நேரம் காத்திருந்து பிறகு ஆண் ஊழியரிடம் சர்டிபிகேடை காண்பித்தேன்... டிக்கெட் கிடைத்தது...

ஒரு பெண் ஊழியருக்கு தவறு எனப்பட்ட சர்டிபிகேட் ஆண் ஊழியருக்கு எப்படி சரியென்று பட்டது...?ஏன் இப்படி கோபப்படுகிறார்கள் பெண் ஊழியர்கள்.......... என்ன காரணமாக இருக்கும்... சொல்லுங்க மக்கா

Saturday, January 24, 2009

மாநகரப்பேருந்துகளும்-- மாதாந்திர பயணச்சீட்டும்-- நானும்

சென்னை நகரில் மிக முக்கியமான தவிர்க்க முடியாத ஒன்று மாநகரப்பேருந்துகள் தான். அப்படிப்பட்ட மாநகரப்போக்குவரத்துக்கழகம் இன்றைக்கு அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்களை சுலபமாக காலியாக்கும் கழகமாக மாறிவிட்டதுதான் வேதனை... இதற்கு அச்சாரம் போட்டவர் அம்மையார்... அதிலேயே ரோடு போட்டுக்கொண்டிருப்பவர் கலைஞர் அய்யா.... ஆறு வகை வழித்தடப்பேருந்துகள் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது...


1. சாதாரண பேருந்துகள்( வெள்ளை போர்டு)-- மினிமம் டிக்கெட் 2ரூபாய்
2."M" வகைப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
3. விரைவுபேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
4.சொகுசுப்பேருந்துகள் --- மினிமம் டிக்கெட் 5ரூபாய்
5.குளிர்சாதனப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 10ரூபாய்.
6.எல் எஸ் எஸ் பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 2.50ரூபாய்.


சென்னையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து கோடம்பாக்கம் செல்வதற்கு ஒரு வாரம் எம்டிசிலதான் பயணித்தேன்..அசோக் பில்லர்ல இருந்து லிபர்டிக்கு பஸ் ஏறுவது சவாலான விசயம் என்பதால் மின்சார ரயிலில் பயணிக்க ஆரம்பித்தேன்...ஈக்காட்டுத்தாங்கல் டூ கிண்டி 20 நிமிட நடை அப்புறம் 10 நிமிடத்தில் கோடம்பாக்கம் ... நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது ராமாபுரத்திற்கு ரூமை மாற்றும் வரையில்.... இதுவரைக்கும் கண்ணில் எப்போதாவதுதான் விரைவு பேருந்து கண்ணில் தென்படும்.. இந்த நேரத்துல தான் மாதாந்திரப்பயணச்சீட்டு--மாநகரப்பேருந்து-- மின்சார ரயில்...பிரச்சினை இல்லாம நல்லா இருந்திச்சி.


2002ன்னு நினைக்கிறேன்..அப்போ முதல்வரா இருந்த நம்ம அம்மையார் ."M" வகைப்பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்... இந்த வகை பேருந்துகளில் மினிமம் கட்டணம் 3ரூபாய்..மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லாது...அந்த நேரத்தில் M49 இந்த வண்டிய பாத்தாலே கடுப்பா இருக்கும்..பீக் அவர்ல இந்த வண்டிதான் அதிகமா இருக்கும்... ராமச்சந்திரா டூ திருவான்மியூர் வழித்தடம்.........இருந்தாலும் அம்மையார் ஆட்சிக்காலத்தில் இந்த வகைப்பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தன,,


2006ல் நம்ம கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அந்த ஜூன் மாதத்தில் இருந்து ."M" வகைப்பேருந்துகளில் மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இங்கேயிருந்துதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பமாச்சு.. வழைப்பழத்தில ஊசிய குத்துற மாதிரி சாதாரண வெள்ளை போர்டு பேருந்துகளின் வழித்தடம் குறைக்கப்பட்டு அதே வழித்தடத்தில்"M" வகைப்பேருந்துகள் ஓட ஆரம்பித்தன..அம்மா ஆட்சியில் எப்போதாவது கண்ணில் தென்பட்ட விரைவுப்பேருந்துகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிமாக தென்பட ஆரம்பித்தது.இதனால் மாதாந்திர பயணசீட்டு வைத்திருப்போருக்கு செலவு கொஞ்சம் அதிகமாகியது.இந்த நேரத்தில்தான் சொகுசுப்பேருந்துகள் அறிமுகமாகியது..முதலில் புறநகர்களுக்கு இயக்கப்பட்ட இவ்வகைப்பேருந்துகள் கொஞ்ச நாள் கழிச்சி நகருக்குள்ளும் இயங்க ஆரம்பித்தன...நெரிசல் மிகுந்த நேரங்களில் சாதாணப்பேருதுகளின் வழித்தடங்கள் குறைக்கப்பட்டு அதே நேரத்தில் விரைவுப்பேருந்துகளும்,சொகுசுப்பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட்டு மாதாந்திரப்பயனச்சீட்டு வைத்திருப்போரின் பாக்கெட்டுகளை இரு மடங்காக காலி செய்யும் பணியை இன்று வரை செவ்வனே செய்கின்றன...


சொகுசுப்பேருந்துகள் மற்றும் விரைவுப்பேருதுகள் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை குறைத்துதான் இயக்கப்படுகின்றன. இங்கதான் பிரச்சினை ஆரம்பமாகுது. உதாரணத்துக்கு பள்ளிக்கரணையில் இருந்து நீங்க வேளச்சேரிக்கு மாநகரப்பேருந்தில் போகனும்னா காலையில் 7:25மணிக்கு முன்னால் பஸ் ஸ்டாப்புக்கு வந்தீங்கன்னா சுலபமா பஸ் ஏறிவிடலாம்.. ஆனால் 7:30 மணிக்கு வந்தீங்கன்னா நீங்க பஸ் ஏறுவதற்கு மினிமம் அரைமணி நேரமாகும்..7:30மணியில் இருந்து 8:00மணி வரை 11 மாநகரப்பேருந்துகள் வரும்ம்ம்ம்ம்ம்.......ஆனா ஏறமுடியாது..


வருகிற 11 பேருந்துகளில் 4 சொகுசுப்பேருந்துகள்,4 விரைவுப்பேருந்துகள்,2சாதாரணப்பேருந்துகள், 1 குளிர்சாதனப்பேருந்துகள்.


குளிர்சாதன பேருந்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம்.தினசரி சொகுசுப்பேருந்துகளில் போவது இயலாத காரியம்... விரைவுப்பேருந்துகளில் எக்ஸ்ட்ரா காசு கொடுத்தும் அழமுடியாது.. அவசரம்னா ஓகே. அந்த ரெண்டு சாதாரணப்பேருந்துகளுக்கும் அந்த நேரத்துல பஸ் நிறுத்தமே மறந்து போகும்....


மேலும் நெரிசல் மிகுந்த நேரம் என்பதை இன்னும் பழைய நேரத்தையே மாநகரப்பேருந்து நிர்வாகம் பயன்படுத்துகிறது... இப்பவெல்லாம் காலை 7 மணிக்கே நெரிசல் நேரம் ஆரம்பமாவுது... ஆனா இந்த நேரங்களில் இயக்கப்படும் வழித்தடங்கள் மிகக்குறைவு. மாநகரப்பேருந்து நிர்வாகம் இதை கவனிக்குமா?..இந்த புலம்பல்கள் போக்குவரத்து அமைச்சருக்கு கேக்குமா??