Friday, March 27, 2009

கபடி ,கபடி,கபடி,கபடி (வெண்ணிலா கபடிக் குழு)

என்னடா இது படம் வந்து ரொம்ப நாளாச்சே இப்ப விமர்சனமா? அப்படியெல்லாம் கேட்கக்கூடாது.இன்றைக்குத்தான் வெண்ணிலா கபடி குழு படம் பார்த்தேன்.... பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் படங்களின் வரிசையில் கிரமத்து நிகழ்வுகளை கண் முன்னே கொண்டுவந்திருக்கும் படம் இந்த கபடி படம். முன்னிரண்டு படங்களும் கிராம வன்முறையையும், காதலையும் சொல்லிய படங்கள்.இவற்றிலிருந்து வேறுபட்டு முழுக்க முழுக்க கபடியை மையமாக வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.



இயக்குனர் சுசீந்திரன் காட்சியமைப்புகளுக்கும் வசனத்திற்கும் மெனக்கெடவில்லை. ஒரு கிராமத்தில் பொங்கல் பண்டிகை நடந்தால் என்ன நிகழ்வுகள் இருக்குமோ அதை அப்படியே கொண்டு வந்திருப்பதில் அவரது சாமர்த்தியம் பலே.... புதுமுகம் விஷ்ணு கிராமத்து இளைஞனாக நடிப்பில் பாஸாகிவிட்டார்... கதாநாயகியிடம் பேசும் போது வெட்கப்படுவது முதற்கொண்டு எல்லாக்காட்சியிலும் அசத்துகிறார்...அவரின் தோழர்களாக வரும் அனைவரின் நடிப்பும் நம்மை கட்டிப்போடுகிறது.. அதுவும் பழனி மேட்சில் ஒரு பாயிண்டில் ஜெயித்ததாக குண்டு இளைஞன் கூறுமிடம்...அதற்கு அந்த தாத்தா நான் சாகிறதுக்குள்ள நீங்க கப்பு வாங்கிடுவீங்களா??? நக்கலாக கேட்பது.. உரியடி திருவிழாவில் மாமியாரின் ம்னண்டையை பிளக்கும் காட்சி, முக்கியமா பரோட்டா சாப்பிடும் போட்டி காட்சி என படம் முழுக்க கதையோடு ஒட்டிய நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலம்...

இந்த படத்திற்கு கதாநாயகி தேவையா?? என்ற கேள்வி எழுந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் சரண்யா...அந்த குட்டி கிராமத்தில் கேமரா சும்மா பூந்து விளையாடுது... பயிற்சியாளராக வரும் கிஷோர் இருகிய முகத்துடன் அருமையாக நடித்திருக்கிறார்... மதுரையில் போட்டி நட்க்கும் காட்சியில் ஆரம்பிக்கும் வேகம் கிளைமாக்ஸ் வரை பறக்கிறது... சாதி வெறிக்கு சவுக்கடி கொடுக்கும் இடங்களில் வட்டார மொழி பின்னி பெடலெடுக்குது.



சைக்கிளில் செல்லும் ஹீரோவுக்கு வழி கொடுக்கும் பஸ் டிரைவர்... தூரத்து சொந்தம் என சொல்லும் நடுத்தர வயதுக்காரர்... அவருடைய மகள் என ஒவ்வொரு கேரக்டரும் மனதில் நிற்கிறது... கபடி போட்டி காட்சிகள் தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். ஒவ்வொரு போட்டிக்கும் சுவாரஸ்யம் கூடுகிறது... படத்தில் ஒட்டாதது கிளைமாக்ஸ் மட்டுமே.. இந்த படத்திற்கு இந்த கிளைமாக்ஸ் தேவையா என்ற கேள்வியும் எழுகிறாது.... ஒரு வேளை கிளைமாக்ஸ் மட்டும் பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் படங்களின் சென்டிமென்டோ என்னவோ??


மொத்தத்தில் விழுந்து கிடக்கும் கபடி விளையட்டுக்கு ஒரு ஆக்ஸிஜன் இந்தப் படம்....


டிஸ்கி: நான் எழுதும் முதல் திரைவிமர்சனம் இதுதான்... ஓட்டு போட்டு பதிவ சூடாக்கிருங்க...