Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, May 17, 2010

என்டர் கவிதைகள் 2--- கோடை கூட சுகம்தான்

ஒரு மாத தற்காலிக பேச்சிலர்கள்

எப்போதாவது எட்டிப்பார்க்கும் மழை
பூத்துக்குலுங்கும் வேப்ப மரம்
காய்த்துக் குலுங்கும் மாமரம்
இளந்தளிரான அரசமரம்
அதிசயமாக தெருவில் விளையாடும் குழந்தைகள்
கூட்டம் இல்லா மாநகரப்பேருந்துகள்
வெறிச்சோடும் வார நாட்கள்
அடிக்கடி கோபித்துக்கொள்ளும் மின்சாரம்
எப்போதோ தீண்டும் தென்றல்


ம்ம்ம்ம்..கோடை கூட சுகம்தான்

Sunday, February 21, 2010

கொலுசு கொஞ்சும் பாதம்









கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசுபோடும் தாளம்
அது பிடிபடாமல் ஓட
காற்றிலே காறிலே என் மனம் நீந்துதே
வெண்ணிலா வீதியில் ஊர்வலம் போகுதே
கண்களை நான் மூடினால்
தேன் மழை தினம் சிந்துதே
சோலை பனிப்பூவாய் சேலை மலராட
சிந்தும் மணிமாலை நெஞ்சில் விளையாட
மல்லிச்சரம் வாசம் பட்டு சூடானேன்
அள்ளித்தர ஆசைப்பட்டு ஆளானேன்
குளிருதே மாம்பனி கூந்தலில் மூடடி அழகே
வெள்ளை மனம் பார்த்தேன்
கொஞ்சம் இடம் கேட்டேன்
அன்பே உனைப் பார்த்தேன்
அன்பின் நிறம் பார்த்தேன்
கட்டில் சுகம் காணும் முன்னே
நான் வேர்ப்பேன்
மற்ற விழி ஜாடை சொன்னால்
கை சேர்ப்பேன்
நாளெல்லாம் பவுர்ணமி
சாய்வதே நிம்மதி உயிரே

டிஸ்கி: கண்டுபிடிங்க பார்க்கலாம்

Monday, January 11, 2010

என்டர் கவிதைகள்- 1 யூத் கேபிளுக்கு சமர்ப்பணம்


வா என்கிறேன்
வரமாட்டேன் என்கிறாய்
வரவேண்டாம் என்கிறேன்
வருவேன் என்கிறாய்
தா என்கிறேன்
தரமாட்டேன் என்கிறாய்
தர வேண்டாம் என்கிறேன்
தருவேன் என்கிறாய்
இப்படி எதிர்வாதம் செய்யாதே என்கிறேன்
செய்வேன் என்கிறாய்
செய் என்கிறேன்
செய்யமாட்டேன் என்கிறாய்.
பேசு என்கிறேன்

பேச மாட்டேன் என்கிறாய்
பேசவேண்டாம் என்கிறேன்
பேசுவேன் என்கிறாய்..
இப்படி ஒவ்வொன்றிலும் எதிராக இருந்தாலும்

ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்கிறோம்


Sunday, November 23, 2008

என் சந்தேகங்கள்... கவித... இன்னும்...........

முதன்முறையா மொக்கை போடபோறேன். ஆதரவு குடுங்கோ.

முதல்ல என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கடே.

1.கலைஞரும் ,மாறனும் மாத்தி மாத்தி அறிக்கை வுட்டு திட்டிக்கிறாங்க, ஆனா ஏன் இவரும் கட்சியவுட்டு தூக்கமாட்டுக்காரு, அவரும் வெளிய போமாட்டுக்காரே ஏன்??????


2.எதோ கச்சா எண்ணையாமே விலை ரொம்ப குறைஞ்சிச்சாம். ஏன் பெட்ரோல் விலையை குறைக்கல????


3. கம்யூனிஸ்ட் காரவுக அம்மா கூட கூட்டணி சேரப்போறாங்களாம். அப்போ விசயகாந்தும்,பிஜேபியும் என்னலே பண்ணுவாங்க??????


4.அதிமுககாரவுக இனிமே யாரையும் புகழ்ந்து பேசக்குடாதுன்னு அம்ம சொல்லிருச்சே, இனிமே அதிமுக காரவுக பேசுரதுக்கு என்ன பண்ணுவாங்க??

மேலே கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிடனும். சொன்னா திருநெல்வேலி அல்வா தருவேன்.


இல்லைனா திருநெல்வேலி அருவா வரும்... சொல்லிட்டேன்



கவித

உன்னைப் பார்த்த நாள் முதல்
உன் நட்புக்கு ஆசைப்பட்டேன்
பின்பு காதலிக்க ஆரம்பித்தேன்
உன்னை அல்ல
உன் நட்பை!!!!!!!!!!

( உபயம்: வெளச்சேரி டூ பீச் புகைவண்டி)


ஜோக்

கலைஞரும், ஜெயலலிதாவும் லவ் பண்ணினால் ஜெயா கலைஞரைப் பாத்து என்ன பாடல் பாடுவார்?????

.

." உன் தலை முடி உதிவதைக்கூட தாங்க முடியாது அன்பே."...........