Friday, August 14, 2009

ஒரே தண்ணி பிரச்சனை-ப்பா.......பதிவர் சந்திப்பை வைங்க

பன்றி காய்ச்சல பீதில எல்லோரும் இருக்கும் போது இவன் மட்டும் என்ன தண்ணி பிரச்சினைனு கிளம்புறான்னு தப்பு கணக்கு போடாதிங்க.......நான் சொன்னது வால் பையன் பிரச்சினையில்ல...............ராமாபுரத்தில் இருந்த வரைக்கும் இந்த பிரச்சினை வரவே இல்லை..ரெண்டு நாளைக்கு ஒரு முறை தவறாமல் குடி தண்ணீர் குழாயிலே வந்துவிடும்... வீட்டு ஓனர் பக்கத்துல கிடையாது....தண்ணீர் விசய்த்தில் பிரச்சினையே கிடையாது....

எப்ப பள்ளிக்கரணைக்கு வந்தேனோ.......அப்ப ஆரம்பிச்சிதுப்பா.....இங்க வந்ததுக்கப்புறம் குடிக்கிறதுக்கு கேன் தண்ணீர் தான்....பஞ்சாயத்து குழாயில் வரும் தண்ணிய வாயில கூட வைக்க முடியாது....பக்கத்துலயே வீட்டு ஓனர்......காலையில் 6 மணிக்கு எந்திச்சா டேப்புல தண்ணி வரது.......ஓனரை எழுப்பனும்.......இதே ஒரு வேலையாப்போச்சி அப்படினு பக்கத்து தெருவுக்கு வீடு மாறினேன்.

'தனியா உங்களுக்கு டேங்க் வச்சித்தாரேன்'..... ஆஹா பரவாயில்லையே. தண்ணி பிரச்சினையில்லப்பான்னு நினைச்சி டேங்கை பாத்தா.....அது டேங்க இல்ல டேங்க மாதிரி!!!.... சரி பரவாயில்ல... அப்படினு பாத்தா மோட்டார் சுவிட்ச் அவங்க வீட்டுக்குள்ள இருந்தது .மறுபடியும் அதே மாதிரி மறுபடியும் காலையில் எழுந்து தண்ணிக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.......

நீங்க தண்ணி அதிகமா யூஸ் பண்றீங்க ஆபடினு வேற அட்வைஸ்( அந்த டேங்க் தண்ணி ரெண்டு பேர் குளிப்பதற்கே பத்தாது)..இந்த கொடுமையில பஞ்சாயத்து தண்ணிய வேற வாரத்துக்கு ஒரு முறைதான் விடுறாங்க.. வேற வீடு பாக்கனும் ஓனர் பக்கத்துல இல்லாத வீடாத்தான் பாக்கனும்............
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பூறம் பதிவர் சந்திப்பு வச்சி ரொம்ப நாளவுது ராசாக்களா....... உங்களை பாத்து ரொம்ப மாசமாச்சு கண்ணுகளா???..........அதனால பிரபல பதிவர்களே நீங்க அத்திரிய பாக்கனும்னா உடனே பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க...எத்தன நாளைக்குத்தான் முகம் பாக்காம சண்டை போடுறது........தேதி விவரங்களை ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லுங்கப்பா.....அப்பதான் எங்க மேனேஜர்ட்ட டேமேஜ் இல்லாம டுட்டி மாத்திட்டு வர முடியும்..புரிஞ்சிதா..........