Monday, August 17, 2009

ஓட்டுப் போட காசு வாங்கலையோ..........

அம்மா வாங்க, அய்யா வாங்க,பிரபல பதிவர்களே வாங்க,பிரபலமில்லா பதிவர்களே வாங்க, சின்ன பதிவர்களே வாங்க,பெரிய பதிவர்களே வாங்க, எல்லோரும் வாங்க வந்து ஓட்டு போடுங்க.........அப்படி இப்படினு எப்படி கத்தினாலும் கதறினாலும் நம்ம மக்களுக்கு ஓட்டு போடுறதுனாலே சோம்பேறித்தனம் தான்.


இந்தப்பதிவில் ஓட்டு போடுங்கன்னு சொல்லியிருந்தேன்.பதிவுக்கு கூட ஓட்டு போடவேண்டாம்..அந்த மேட்டர்ல குத்துங்கன்னு சொல்லியிருந்தேன்...அந்தப்பதிவுக்கு ரெண்டு நாள் சேர்த்து 1200 ஹிட்ஸ் வந்திருந்தது..ஆனால் ஓட்டு போட்டவங்களின் எண்ணிக்கையை பார்த்தால் 100க்கும் குறைவே...... இப்பதான் தெரியுது அரசியல்வாதிங்க எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு.பின்ன மக்கள் தங்கள் கட்சிக்கு ஓட்டு போடனும்றதுக்காக என்னவெல்லாம் செய்றாங்க...நீங்க அப்படி ஏதாவது செஞ்சத்தான் ஓட்டு போடுவாங்க அப்படினு ஒரு சில பேர் சொன்னாங்க....அதுக்காக ஒரு வோட்டுக்கு 100,200 குடுக்கனும்னு எதிர்பாத்தா எப்படினு கேட்ட பதில் இல்லை..

அதனால் யூத்து சங்க தலைவரின் ஆலோசனைப்படி ஒரு ஓட்டுக்கு அஞ்சு பைசா கொடுப்பதாக முடிவு பண்ணியுள்ளேன்..என் பதிவுக்கு தமிழிஷ்ல ஓட்டு போட்டிங்கன்னா அஞ்சு பைசா, தமிழ்மணத்தில் ஓட்டு போட்டா அஞ்சு பைசா, மொத்தமா உங்க கணக்கில் 100 ஓட்டு வந்ததும் அதற்கான தொகை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை சந்தோசமாக சொல்லிகொள்கிறேன்........

அதனால பதிவுலக மக்களே மறக்காம என் பதிவுக்கு ஓட்டு போடுங்க சொல்லிட்டேன்......

ஸ்பெசல் ஆபர்
1000 ஓட்டு போட்டா 1கிலோ ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா சுடச்சுட பார்சல் அனுப்பி வைக்கப்படும்