டிஸ்கி: புது கம்பெனியில் ஆணி புடுங்குற வேலை அதிகமா இருப்பதால் நான் ரொம்ப பிசி.மேலும் எனது பாலோயர்ஸ் லிஸ்ட் காணாம போயிடிச்சி..யாராவது கம்பியூட்டர் புலிகள் இருந்தா சொல்லுங்க.... நம்ம ஜமால் சொன்ன முறையிலும் வரல......... படங்கள் தந்து உதவிய தம்பி மீரான் அன்வர்க்கு ஒரு ஸ்பெசல் டேங்சு..http://www.meerananwar.blogspot.com/
Tuesday, March 17, 2009
சிவசைலம் -- கடனா நதி அணை--- படங்கள்
டிஸ்கி: புது கம்பெனியில் ஆணி புடுங்குற வேலை அதிகமா இருப்பதால் நான் ரொம்ப பிசி.மேலும் எனது பாலோயர்ஸ் லிஸ்ட் காணாம போயிடிச்சி..யாராவது கம்பியூட்டர் புலிகள் இருந்தா சொல்லுங்க.... நம்ம ஜமால் சொன்ன முறையிலும் வரல......... படங்கள் தந்து உதவிய தம்பி மீரான் அன்வர்க்கு ஒரு ஸ்பெசல் டேங்சு..http://www.meerananwar.blogspot.com/
Tuesday, March 10, 2009
தேர்தல் லவ்வுகளும்-- மேரேஜ்களும்-- டைவர்ஸ்களும்...
தமிழ்நாட்டு கட்சிகளோட தேர்தல் லவ்,மேரேஜ், டைவர்ஸ் எப்படினு சொல்றேன்.. யாரும் சீரியஸா எடுக்க கூடாது.. ஒன்லி காமெடியா எடுத்துக்கணும்.... சொல்லிட்டேன்
திமுக-- காங்கிரசு ( கணவன் --மனைவி)
2004ல் புதுமணத் தம்பதிகளான திமுகவும் காங்கிரசும் இப்பவும் சோடியா இருக்குறது பல பேர் கண்ணை உறுத்துகிறது... இடைப்பட்ட காலங்களில் பல புகைச்சல் ஏற்பட்டாலும் தற்போது ஒருவரை ஒருவர் தாங்கிப்பிடித்து உறுதியாக நிற்பதை பார்த்தால் கண்ணுல தண்ணிதான் வருது. திமுகவுக்கு இது பாதுகாப்பாக தெரிந்தாலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வருவதால் காங்கிரசுக்கு இளம் பெண்ணான தேமுதிக மேல் ஒரு கண்.. ஆனா இளம்பெண் தங்கள் குடும்பத்தில் வருவது திமுகவுக்கு கொஞ்சம் பயம்... ரெண்டு பெண்களும் சேந்து நமக்கு ஏதாவது வச்சிட்டாங்கன்னா.... இது போக காங்கிரசுக்குளே ரெண்டு அணி இருக்கு திமுக காங்கிரசு--அதிமுக காங்கிரசு... இந்த ரெண்டையும் சாமாளிப்பதற்கு திமுக தண்ணி குடிக்கனும் போல... அதனால் குடும்பத்துக்குள்ள என்னதான் உள்குத்து வேலை நடந்தாலும் வெளியே எப்பவுமே ஒற்றுமைதான்.. வேற வழியில்ல ... இப்போதைக்கு திமுகவுக்கு ஏகப்பட்ட பிரச்சினை இருந்தாலும் 5 ஆண்டுகால மத்திய அரசின் சாதனைகளையும், மூன்றாண்டுகால திமுக அரசின் சாதனைகளையும் ஒழுங்காக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2004ல் பிடித்த இடங்களில் பாதியையாவது தக்க வைக்கலாம்.. அதை விட்டு நாங்க 1975ல் இதை செய்தோம் அப்படினு ஆரம்பிச்சா கஷ்டம்தான்..
அதிமுக- மதிமுக- கம்யூனிஸ்ட் ( சர்வாதிகாரி-அல்லக்கை- புதுத்தொடுப்பு)
அம்மா 2004ல் வாங்கிய பூஜ்ஜியத்தை அவ்ளோ எளிதில் மறக்க மாட்டார்கள்..அதனால் இந்த வாட்டி எடுக்கிற ஒவ்வொருஅடியையும் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் எடுத்து வைக்கிறாங்க.. அதிமுக-மதிமுக இருவருக்குமே கொள்கை அளவில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தாலும் ஏதோ ஒன்னு ரெண்டு பேரையும் ஒன்னா நிக்க வைக்குது... இப்ப கம்யூனிஸ்ட்டும் ஒன்னா சேர்திருப்பதால் அம்மா கூட்டணி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருப்பதா தெரியுது... எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு... அனா அம்மாவோட பிரச்சாரம் தான் கொஞ்சம் அவங்களுக்கே ஆப்பு வைக்கிற மாதிரி... உதாரணம் திருமங்கலம் இடைத்தேர்தல்... இந்த இடைத்தேர்தலின் போது ஆளும் திமுகவின் மேல ஏகப்பட்ட பிரச்சினை...அம்மா ஒழுங்கா அதைப் பற்றி பேசியிருந்தா திருமங்கலத்துல ஒரு கடும் போட்டியை கொடுத்திருக்கலாம்... ஆனா என்ன செஞ்சாங்க.. தனிநபர் தாக்குதாலில் தேவையில்லாம பேசி தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிட்டாங்க... இதை தவிர்த்து மத்திய மாநில அரசின் மேலுள்ள புகார்கள்,பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்த்தால் அம்மாவுக்கு ஜெயம்..........
பாமக ( ஒரிஜினல் அரசியல் கம்பெனி )
எந்த தேர்தல் அய்யாவோட கட்சி மதில் மேல் பூனை அப்படின்ற அளவுக்கு வந்திடும்.சரியான நேரத்தில யாருடனாவது ஒட்டிக்கொண்டு ஆட்சிக்கு ஆட்சி பவரில் இருப்பதுதான் அய்யாவோட கொள்கை... இந்த வாட்டி யாரோட அக்ரிமெண்ட் போடப்போறாங்களோ? மாநிலத்தில் ஒரு கொள்கை, மத்தியில் ஒரு கொள்கை இதுதான் பாமகவின் தாரகமந்திரம்... உதாரணம் இலங்கைப்பிரச்சினை
தேமுதிக ( இளம் கன்னி)
திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு முன்பு வரைக்கும் இந்த இளம் பெண் மேல் எல்லோருக்கும் ஒரு கண்... கடைகண் பார்வை கிடைக்காதா என்று. வெளியில் ஆயிரம்தாம் திட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள் எல்லா கட்சிகளுக்குமே இதன் மேல் ஒரு இது... ஆனா இடைத்தேர்தலுக்கப்புறம் இந்த இளம் பெண்ணின் நிலை தான் பாவம்... திமுகவா அதிமுகவான்னு குழம்பி போய் மண்ட காஞ்சிட்டு இருக்கு.... இருந்தாலும் கேப்டன் அசரமாட்டார்.. இவங்களுக்குன்னே ஒரு டயலாக் இருக்கு அரசியல்ல நிரந்தர நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது...... பார்க்கலம் இந்த கன்னிப்பெண் யாரோட லவ்வுதுன்னு..
இது போக முதிர் கன்னியான பிஜேபி, வயசுக்கெ வாராத சமக அப்பட்fஇன்னு ஏகப்பட்ட பேர் வரிசையில் நிக்குறாங்க...
விசிக வின் நிலை????
Sunday, March 8, 2009
தங்கமணியும் ---- தலைவலியும்-- பகுதி-2
தங்கமணி ஊருக்கு போன பிறகு என்னோட பேச்சிலர் ஆடடம் தானாக அதிகமாயிடிச்சி மறுபடியும் .. ஊருக்கு கூப்பிட போனும் அதுக்காக ஆபிஸ்ல ரெண்டு நாள் பர்மிசன் போட்டு வீட்டை நன்றாக சுத்தம் செய்வதே வேலையாபோச்சு. ஊருக்கு பஸ் ஏறின பிறகும் ஒரு சந்தேகம் எல்லாத்தையும் கரெக்டா பண்ணிட்டோமா அப்படின்னு.... 4 பாட்டில் இருந்திச்சி எல்லாத்தையும் வெளியில கடாசிட்டமா அப்படினு ஒரு மிகப்பெரிய சந்தேகம் ...ஆஹா மாட்டினா கஞ்சி முதற்கொண்டு எதுவுமே கிடைக்காதே...((((( சண்டை போடுறதுக்கு உடம்புல தெம்பு கிடையாது அவ்வ்வ்வ்!!!
!தங்கமணியும் சென்னைக்கு வந்தாச்சி....வீட்டைத் திறந்தவுடன்..
"ஸ்மெல் இப்படி அடிக்குது" ( ஆஹா வீட்டை கிளீன் பண்ணினதுக்கப்புறம் ரெண்டு கம்பியூட்டர் சாம்பிராணி, 4 சைக்கிள் அகர் பத்திய கொளுத்தி வச்சேனே அவ்ளோதானா!!!)
"இல்லமா வீடு மூனு நாளா பூட்டியே இருந்திச்சில்ல அதான்..."( அவ்வ்வ்வ்வ்)
"வீட்டுல போட்டது போட்ட படியே கெடக்கு என்னதான் பண்ணினீங்க....."
"எப்ப போன் பண்ணினாலும் துணி துவச்சிட்டிருக்கேன் அப்படினீங்களே இது என்ன இவ்ளோ அழுக்கு துணி......"
"என்னமா பண்றது ஒரு மாசமா நைட் டூட்டி,12 மணிநேர டூட்டின்னு வேலைக்கே நேரம் போயிடிச்சி.... ( தப்பிச்சேன்)"
"ஃபிரிட்ஜ் கிளீன் பண்ணல.. கிட்சன் அப்படியே இருக்கு... எப்பவாவது நான் ஊருக்கு போய்ட்டு வரும்போது ஒழுங்கா வீட்டை வச்சிருக்கீங்களா??????////////"
அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா....... இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட வேண்டியதுதான்......... இருந்தாலும் இப்படி பயப்படுறதுக்கு............. கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையே...............இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் ரொம்ப நல்ல பையன்பா................
Monday, March 2, 2009
நண்பன் பதிவர் கடையம் ஆனந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கடையம் ஆனந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.........நண்பா இந்த இனிய பிறந்த நாளில் நீ நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்... அப்படியே இந்த வருசத்துக்குள் பேச்சிலர் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்......
அப்புறம் இன்றைக்கு ஊருக்கு செல்ல இருக்கிறேன்...பொதுவா நான் பதிவு போட்டாலே என் கட காத்து வாங்கும்.. இப்ப மூன்று நாள் விடுமுறை... அதனால சொல்லவே வேண்டாம்.....
இதனால் பதிவர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.... இந்த மூன்று நாளும் என் கடையை காத்து வாங்காம்ல் காப்பாற்றுபவருக்கு 1 கிலோ திருநெல்வேலி அல்வா இலவசமாக வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
மீண்டும் என் நண்பன் கடையம் ஆனந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......
Sunday, March 1, 2009
தங்கமணியும்--- தலைவலியும்
"நீ ஊருக்கு கிளம்பினாலே என் கையில காசு இருக்காது அப்புறம் எப்படி வெளிய சாப்பிடமுடியும்..."
"உங்க தம்பி வீடு, மச்சான் வீட்டுக்கு போறது பிரச்சினையில்ல வேற ஏதாவது கேள்விப்பட்டேனா அவ்ளோதான்..... சொல்லிட்டேன்."
"செலவுக்கே காசு கம்மியா இருக்கும்போது நான் எங்க போக முடியும்.....வீட்டை விட்டா ஆபிஸ் ....வேற வழியில்ல.."
"என்னங்க ஊருக்கு போனதுக்கப்புறம் போன்ல கூட பேச நேரமில்லையோ."
"அதான் காலையில பேசினேனே... நைட் கால் பண்ணலாம்னு இருந்தேன்."
'முன்னாடியெல்லம் அடிக்கடி போன் பண்ணுவீங்களே...'
"அதுக்காக பொழுதன்னைக்கும் உன் கூட பேசிக்கிட்டேவா இருக்க முடியும் .. ஏம்பா இப்படி இருக்க....'
"உங்க பையன் பண்ற சேட்டை தாங்க முடியல சொன்ன பேச்சை கேக்கமாட்டேங்குறான்..'
"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".
"ஏம்மா சாம்பார் பொடி, கடலை பருப்பு டப்பா எங்கப்பா வச்சிருக்க... எல்லாமே ஒரே மாதிரி தெரியுது"
"சிவப்பு டப்பா மூடி சாம்பார் பொடி கடலைபருப்பு மஞ்ச கலர் டப்பாவுல இருக்கு..சரி இனிமே போன் பண்ணாதிங்க எங்க அக்க வீட்டுக்கு போறேன்.. "
"செல்லை எடுத்திட்டு போக வேண்டியதுதான.. எதுக்கு அத வாங்கி கொடுத்திருக்கேன்.மிளகாய் பொடி டப்பா எங்க இருக்கு"
"இத கேக்குறதுக்குத்தான் போன் வாங்கி கொடுத்தீங்களா?"
"மச்சி இன்னைக்கு சனிக்கிழமைடா...!!!!!!
"என்ன மாமா வீட்ல ஆள் இல்லையா?", ஆமாடா..
"என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.."
"சமையல் பண்ண போறேம்பா" ( கையில் சரக்குடன்)
"அப்படியா தொசை சுடுறதுக்கே 10 வாட்டி போன் பண்ணுவீங்க எல்லாத்தையும் கேட்டிருங்க"!!!.....
'இல்லமா எல்லாத்தையும் பாத்து வச்சிடேன்'........
இன்னைக்கு தலைவலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்... தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா..........
டிஸ்கி : நாளைக்கு ஊருக்கு செல்ல இருக்கிறேன்......ஆங்
Sunday, February 22, 2009
பூவே உனக்காக--- காதல் கோட்டை--- சென்னை பதிவர் சந்திப்பு???
இரண்டு படங்களின் மையக்கரு காதல் என்றாலும் டாக்டரின் படம் காதல் தோல்வியையும், தலயின் படம் காதலுக்கு புது வழியையும் ஏற்படுத்தியது... டாகடர் செந்தூரப்பாண்டி, ரசிகன்,தேவா அப்படின்னு கில்மா படங்களில் நடித்தாலும், அனைத்து ரசிகர்களை கவர்கிற மாதிரி படங்கள் அவருக்கு அதுவரை அமையவில்லை.. அதே போல தலயும் ஒரு பிரேக் கிடைக்காமல் தடுமாறி வந்தார்...இந்தக் கட்டத்தில்தான் இருவருக்குமே இந்தப்படங்கள் இவர்களின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது....மொத்தத்தில் இந்தபடங்களை இருவருமே அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.. இதுக்கப்புறமா இவர்களின் படங்கள் ஒரே நேத்தில் வெளியாகினாலும் ஏதாவது ஒரு படம் தான் வெற்றியை தொட்டது
குஷி -- உன்னைக்கொடு என்னைத்தருவேன்
பகவதி -- வில்லன்
திருமலை -- ஆஞ்சனேயா
ப்ரெண்ட்ஸ் -- தீனா
போக்கிரி -- ஆழ்வார்
வேற ஏதாவது படங்கள் இப்படி வெளியாகி இருந்தால் சொல்லுங்கப்பு ( டாக்டரும், தலயும்) சரி இப்ப இருவரும் எந்த அளவில் படங்களை தேந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வேறச் சொல்லனுமா... அதிரடி ஓப்பனிங் பாடல், பஞ்ச் டயலாக், அயிட்டம் பாடல், ஒரே மாதிரியான நடிப்பு கேட்டா எங்க ரசிகனுங்க இப்படித்தான் எதிர் பாக்குறாங்க அப்படினு ஒரு டயலாக்.... அப்படியா கார்க்கி.... தலயாவது பரவயில்லை ஒரு சில படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்கிறார்... ஆனால் டாக்டர்???!!!!!!!!!!!!!!!!..
சென்னை பதிவர் சந்திப்பு இந்த மாதம் ஆரம்பத்தில் நடந்தது... அதுக்கப்புறம் அதுபற்றி பேச்சேயில்லை... நேற்று சகா நர்சிம்மிடம் பேசினேன் மும்பையில் இருந்து அனுஜன்யா வந்திருப்பதாக சொன்னார்... அதனால சென்னை பதிவர்களே உங்க முகமெல்லாம் மறந்துகொண்டு வருகிறது... அதுக்காகவாது ஒரு சந்திப்பை வைங்கப்பா.நர்சிம்,அதிஷா,முரளி கண்ணன் கவனிக்க..... தாமிரா ஹைதையில் கார்க்கிய பாத்தீங்களா??
இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை பிரச்சினையில் பதிவுலகமே சூடாக இருந்தது.. இப்பதான் ரெண்டு நாளா பத்து கேள்விகள் அப்படின்னு கொஞ்சம் ரிலாக்ஸா ஆகியிருக்கு........ அதனால சந்திப்பை வைங்கப்பா..........
ஒரு எச்சரிக்கை
ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடுவாங்களா?. அக்பர்பாய் கறிக்கடையில் முஸ்லிம்கள் மட்டும் தான் கறி வாங்குவாங்களா?? என்ற அதி நவீன வசனங்களுடன் அடுத்தவாரம் ரிலீஸ் ஆவுது..................தீ திரைப்படம்
Wednesday, February 18, 2009
முந்துவது சன்டிவியா? கலைஞர் டிவியா?--- ஒரு பார்வை
ஆனால் மக்கள் பார்வையில் இருந்து எப்படியாவது சன்னை முந்தி முதலிடத்துக்கு வர கலைஞர் தொலைக்காட்சி ரொம்பவே பகீரத முயற்சி எடுத்தது..அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார்கள். குடும்ப சண்டைக்கு பிறகு சன் நடுநிலைமை எனும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு எந்த அளவுக்கு ஆட்சிக்கு எதிரான செய்திகளை வெளிக்கொணர முடியுமோ அந்த அளவுக்கு திறமையா செயல்பட்டது. சன்னின் நடுநிலைமையால் ஜெயாவே கொஞ்சம் ஆச்சரியப்பட்டது... முக்கியமா மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்சினைகளில் எந்த அளவுக்கு விளையாமுடியுமோ அந்த அளவுக்கு புகுந்து விளையாடுனாங்கோ..இதுக்கு விளக்கம் சொல்லி முடியல கலைஞர் தொலைக்காட்சிக்கு. இந்த கூத்தெல்லாம் கண்கள் பணித்தது இதயம் இனிக்கும் வரைக்கும்தான் இருந்தது...
இதுக்கு அப்புறம் மின்வெட்டு கிலோ எவ்ளோ? ஸ்பெக்ட்ரம் எந்த ஊர்ல இருக்கு அப்படின்ற ரேஞ்சில தான் சன்னின் நடுநிலைமை இருந்திச்சி... கலைஞர் தொலைக்காட்சியை தன் வழிக்கு கொண்டு வரவே சன் தொலைக்காட்சி நடுநிலைமை என்ற முகமூடியை அணிந்து கொண்டிருந்தது... இப்போதைக்கு தமிழக மக்கள் சன் தொலைக்காட்சி இல்லைனா கலைஞர் தொலைக்காட்சிதான் பாக்கனும் என்பதில் மிக முனைப்போடு போட்டிப்போடுக்கொண்டு சேனல்களை ஆரம்பித்து வருகிறார்கள். தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்களில் பெரும்பான்மையோர் திமுக அனுதாபிகள் மற்றும் திமுக பிரமுகர்களாக இருப்பது இரு நிறுவங்களுக்கும் ஆதாயமே.
இப்படி எல்லா நிலையிலும் போட்டி போடும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகள் ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருப்பதுதான் வேதனைக்குறிய விசயம். அது என்னன்னு உங்களுக்கே தெரியும். ஈழப்பிரச்சினை சன்னாவது பரவாயில்லை மேம்போக்கா ஏதோ சொல்றாங்க.. ஆனா கலைஞர் தொலைக்காட்சி இந்த விசயத்தில் மவுனமாக இருப்பது வேதனைக்குறிய வெட்கப்படவேண்டிய விசயம். இதுக்கு உதாரணம் இலங்கை சுதந்திர தினத்தன்று ராஜபக்ஷே பேசியதை தலைப்பு செய்தியிலும் முதலாவதா சொல்லி காங்கிரசு கட்சியின் மானத்தை காப்பாற்றி விட்டது கலைஞர் தொலைக்காட்சி. இன்று நக்கீரன் குழுமத்திற்கு இலங்கை தூதுவர் கொடுத்த மிரட்டல்,மக்கள்,தமிழன் தொலைக்காட்சிகள் இலங்கையில் ஒளிபரப்ப தடை போன்ற விசயத்திலும் மவுனத்தை சாதிப்பது கொடுமையிலும் கொடுமை......
இந்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?
(தென்) தமிழகத்திற்கு ஏமாற்றம் தரும் ரெயில்வே பட்ஜெட்
செங்கோட்டை - ஈரோடு தினசரி பாசஞ்சர்.
திருச்சி - மதுரை தினசரி எக்ஸ்பிரஸ்.
மும்பை - நெல்லை சூப்பர்பாஸ்ட். திருவனந்தபுரம் வழி. (வாரம் இருமுறை)
கோவை - தூத்துக்குடி இணைப்பு ரயில் (தினசரி)
இதைஅறிவிச்சாங்கன்னேதெரியலை.
மும்பையில்நெல்லை,கன்னியாகுமரி,விருதுநகர்,மதுரை மாவட்ட மக்களே அதிகம் உள்ளனர். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் மும்பை.நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வருடம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிஞ்சிதான் ஓடிக்கிட்டு இருக்கு.. இதே வழித்தடத்தில் இன்னொருவழித்தடத்தைஅறிமுகப்படுத்தினால் மக்களுக்கு பயன் தரும் வகையில்இருக்கும்...
மொத்தத்தில் மெஜாரிட்டியான அளுங்கட்சி எம்பிக்கள், ஒரு ரெயில்வே துறை இணை அமைச்சர் இருந்தும் தமிழகத்திற்கு பட்டை நாமம் போடாத குறைதான்..லல்லுவின் சொந்த மநிலமான பீகாருக்கு 12 புதிய ரெயில்களாம்..............
Tuesday, February 17, 2009
100வது பதிவும்--பட்டாம்பூச்சி விருதும்--- சில விசயங்களும்
அப்படி, இப்படினு ஒரு வழியா 100வது பதிவை எழுதியாச்சு..... இந்த நேரத்துல நண்பர் கடையம் ஆனந்த் பட்டாம் பூச்சி விருதை வேறு கொடுத்துவிட்டார்... அந்தபட்டாம்பூச்சி விருதை 3 பேருக்கு கொடுக்கனுமாம்/.......கொடுத்திடலாம்,,,..காசா..பணமா?........... என்னையும் நம்பி என் பதிவை பாலோ செய்யும் சக பதிவர்களுகு நன்றி.....என்ன பதிவு போட்டாலும் படிச்சி பின்னூட்டமிட்டு ஆதரவு தரும் தாமிரா, கடையம் ஆனந்த்,கார்க்கி, பாபு,கேபிள் சங்கர், முரளி கண்ணன்,கமல்,ஜமால்,செய்யது,ரம்யா,வனம் ராஜராஜன்,அதிஷா,நசரேயன்,வடகரை அண்ணாச்சி, உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.....கடந்த ஒரு மாதமாக பதிவு எழுதமுடியவில்லை.... சில எதிர்பார்த்த விசயங்களில் ஏமாற்றம் அடைந்ததால்....... மறுபடியும் முயற்சிக்கிறேன்..... அடுத்த மாதம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்...............
பட்டாம் பூச்சி விருதை எனது தலைங்களுக்கும் சகாகளுக்கும் கொடுக்கிறேன்.
1. கேபிள் சங்கர் ( அண்ணே இப்ப ஏ ஜோக் மேலயும், தமன்னா மேலயும் ரொம்ப இதுவா இருக்கார்... இவருடைய சிறுகதைகளுக்கு நான் அடிமை)2. நர்சிம் ( சகா வழி தனி வழி....... மாற வர்மன் என்ன ஆச்சு)
3. முரளி கண்ணன்( நடமாடும் சினிமா நூலகம்)
4. கார்க்கி( சகாவுக்கு மாசத்துல ஒரு தடவ காதல் சோகக்கதை பதிவிடலனா தூக்கம் வராது)
5.பாபு( ஒன்னுமே புரியல)
அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள்
ஒரு சில அனுபவங்கள் அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள் மேல் கோபம் கொள்ள வைக்கிறது...
அனுபவம் 1
இடம் தாம்பரம் மண்டல அலுவலகம் கடந்த ஜனவரி மாதம் ரேஷன் கார்டு விலாசம் மாற்றம் தொடர்பாக தாம்பரம் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். விண்ணப்பம் கொடுப்பதற்கு ஒரு கவுன்டர் மட்டும் தான். வரிசை அலுவலகத்திற்கு வெளியே ரோடு வரைக்கும் இருந்தாது.. வரிசையில் உள்ளோரில் ஒரு சிலரை தவிர மீதி அனைவருமே 50 வயதை தாண்டியவர்களாக தெரிந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிஉருந்தது.. பாடாவதி இன்னும் பழைய மெத்தடுல தான் இன்னும் எழுதிக்கிட்டு இருக்காங்க... ஒரு வயதான பெண்மணி தான் கொண்டு வந்திருந்த விண்ணப்பத்தை கவுன்டரில் இருந்த பெண் ஊழியரிடம் கொடுத்தார்.
விண்ணப்பத்தை பார்த்த பெண் ஊழியர் " என்னம்மா உன் மகன் பெயருக்கு கார்டு கேட்டிருக்க சரி, ஆனா உன் மருமகள் பெயர் நீக்குன சான்றிதழ் இதுல இல்லையே.. அதை வாங்கிட்டு வா." என்று சொல்லி அந்த விண்ணப்பத்தை கையில் கூட கொடுக்காமல் அப்படியே கீழே போட்டார் அந்த பெண் ஊழியர். வயதான பெண்மணி " கொஞ்சம் வெவரமா சொன்னா நல்லாயிருக்கும்.. நானும் 10நாளா அலையுறேன்". என்னத்த வெவரமா சொல்ல சொல்லுற... போயி அந்த சர்டிபிகேட்டை வாங்கிட்டு வா... என உச்சஸ்தியில் கோபத்தில் கத்த ஆரம்பித்துவிட்டார் அந்த பெண் ஊழியர்... ஏன் அந்த பெண் ஊழியர் கோபப்பட வேண்டும்?.பெரும்பாலும் இந்த மாதிரி ரேசன் கார்டு சம்பந்தப்பட்ட சந்தேகங்கங்களை நிவர்த்தி செய்ய தனி அதிகாரியை நியமிக்கலாம்... செய்வார்களா?...
அனுபவம் 2
இடம் மாம்பலம் ரிசர்வேசன் கவுன்டர். எனக்கு ரெயில் பயண கட்டண சலுகை உண்டென்பதால் அதற்கான சான்றிதழுடன் விண்ணப்பத்தைக்கொடுத்தேன்... ( இங்கேயும் பெண் ஊழியர்தான்) "டாக்டர் சான்றிதழில் சீல் சரியாத் தெரியல"( டாக்டர் சீல் பச்சை கலரில் இருந்ததால் ஜெராக்ஸில் சரியாக தெரியவில்லை) இல்ல மேடம் 1 மணி நேரமா வரிசையில நிக்கிறேன்" அப்ப சூப்பர்வைசர் உள்ள இருக்கார் அவர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வாங்க" சூப்பர்வைசரை பார்க்க ஒரு அரை மணி நேரம் .... ஒரு வழியா டிக்கெட் வாங்கிட்டேன்.. " அடுத்த வாட்டி இந்த சர்டிபிகேட் கொண்டு வந்தீங்கன்னா டிக்கெட் தரமாட்டேன்"
அடுத்த வாட்டி போகும் பொழுது புது சர்டிபிகேட்டுடன் சென்றேன். சர்டிபிகேட்டை சரி பார்த்த பெண் ஊழியர் " வயசு சரியா எழுதலியே.. மேலே ஒரு கோடு மாதிரி இருக்கு எந்த டாக்டர் கிட்ட வாங்கினீங்களோ அவர் கையெழுத்தை இதுக்கு பக்கத்துல வாங்கிட்டு வாங்க" என்று மிக அலட்சியமாக சர்டிபிகேட்டை என்னைடம் கொடுத்தார்.. நானும் அப்போதுதான் கவனித்தேன்.. வயது 31 என்பதில் 3க்கு மேல் லைட்டா ஒரு கோடு .." மேடம் டாக்டருங்க கையெழுத்து அப்படித்தான் இருக்கும் உங்களுக்கே தெரியும்"." அதெல்லாம் முடியாது வேணும்னா நார்மல் டிக்கெட் வாங்கிக்கிடுங்க".. கோபமாக சொல்லிவிட்டார்... கொஞ்ச நேரம் காத்திருந்து பிறகு ஆண் ஊழியரிடம் சர்டிபிகேடை காண்பித்தேன்... டிக்கெட் கிடைத்தது...
ஒரு பெண் ஊழியருக்கு தவறு எனப்பட்ட சர்டிபிகேட் ஆண் ஊழியருக்கு எப்படி சரியென்று பட்டது...?ஏன் இப்படி கோபப்படுகிறார்கள் பெண் ஊழியர்கள்.......... என்ன காரணமாக இருக்கும்... சொல்லுங்க மக்கா
Saturday, January 24, 2009
மாநகரப்பேருந்துகளும்-- மாதாந்திர பயணச்சீட்டும்-- நானும்
1. சாதாரண பேருந்துகள்( வெள்ளை போர்டு)-- மினிமம் டிக்கெட் 2ரூபாய்
2."M" வகைப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
3. விரைவுபேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
4.சொகுசுப்பேருந்துகள் --- மினிமம் டிக்கெட் 5ரூபாய்
5.குளிர்சாதனப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 10ரூபாய்.
6.எல் எஸ் எஸ் பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 2.50ரூபாய்.
சென்னையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து கோடம்பாக்கம் செல்வதற்கு ஒரு வாரம் எம்டிசிலதான் பயணித்தேன்..அசோக் பில்லர்ல இருந்து லிபர்டிக்கு பஸ் ஏறுவது சவாலான விசயம் என்பதால் மின்சார ரயிலில் பயணிக்க ஆரம்பித்தேன்...ஈக்காட்டுத்தாங்கல் டூ கிண்டி 20 நிமிட நடை அப்புறம் 10 நிமிடத்தில் கோடம்பாக்கம் ... நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது ராமாபுரத்திற்கு ரூமை மாற்றும் வரையில்.... இதுவரைக்கும் கண்ணில் எப்போதாவதுதான் விரைவு பேருந்து கண்ணில் தென்படும்.. இந்த நேரத்துல தான் மாதாந்திரப்பயணச்சீட்டு--மாநகரப்பேருந்து-- மின்சார ரயில்...பிரச்சினை இல்லாம நல்லா இருந்திச்சி.
2002ன்னு நினைக்கிறேன்..அப்போ முதல்வரா இருந்த நம்ம அம்மையார் ."M" வகைப்பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்... இந்த வகை பேருந்துகளில் மினிமம் கட்டணம் 3ரூபாய்..மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லாது...அந்த நேரத்தில் M49 இந்த வண்டிய பாத்தாலே கடுப்பா இருக்கும்..பீக் அவர்ல இந்த வண்டிதான் அதிகமா இருக்கும்... ராமச்சந்திரா டூ திருவான்மியூர் வழித்தடம்.........இருந்தாலும் அம்மையார் ஆட்சிக்காலத்தில் இந்த வகைப்பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தன,,
2006ல் நம்ம கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அந்த ஜூன் மாதத்தில் இருந்து ."M" வகைப்பேருந்துகளில் மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இங்கேயிருந்துதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பமாச்சு.. வழைப்பழத்தில ஊசிய குத்துற மாதிரி சாதாரண வெள்ளை போர்டு பேருந்துகளின் வழித்தடம் குறைக்கப்பட்டு அதே வழித்தடத்தில்"M" வகைப்பேருந்துகள் ஓட ஆரம்பித்தன..அம்மா ஆட்சியில் எப்போதாவது கண்ணில் தென்பட்ட விரைவுப்பேருந்துகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிமாக தென்பட ஆரம்பித்தது.இதனால் மாதாந்திர பயணசீட்டு வைத்திருப்போருக்கு செலவு கொஞ்சம் அதிகமாகியது.இந்த நேரத்தில்தான் சொகுசுப்பேருந்துகள் அறிமுகமாகியது..முதலில் புறநகர்களுக்கு இயக்கப்பட்ட இவ்வகைப்பேருந்துகள் கொஞ்ச நாள் கழிச்சி நகருக்குள்ளும் இயங்க ஆரம்பித்தன...நெரிசல் மிகுந்த நேரங்களில் சாதாணப்பேருதுகளின் வழித்தடங்கள் குறைக்கப்பட்டு அதே நேரத்தில் விரைவுப்பேருந்துகளும்,சொகுசுப்பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட்டு மாதாந்திரப்பயனச்சீட்டு வைத்திருப்போரின் பாக்கெட்டுகளை இரு மடங்காக காலி செய்யும் பணியை இன்று வரை செவ்வனே செய்கின்றன...
சொகுசுப்பேருந்துகள் மற்றும் விரைவுப்பேருதுகள் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை குறைத்துதான் இயக்கப்படுகின்றன. இங்கதான் பிரச்சினை ஆரம்பமாகுது. உதாரணத்துக்கு பள்ளிக்கரணையில் இருந்து நீங்க வேளச்சேரிக்கு மாநகரப்பேருந்தில் போகனும்னா காலையில் 7:25மணிக்கு முன்னால் பஸ் ஸ்டாப்புக்கு வந்தீங்கன்னா சுலபமா பஸ் ஏறிவிடலாம்.. ஆனால் 7:30 மணிக்கு வந்தீங்கன்னா நீங்க பஸ் ஏறுவதற்கு மினிமம் அரைமணி நேரமாகும்..7:30மணியில் இருந்து 8:00மணி வரை 11 மாநகரப்பேருந்துகள் வரும்ம்ம்ம்ம்ம்.......ஆனா ஏறமுடியாது..
வருகிற 11 பேருந்துகளில் 4 சொகுசுப்பேருந்துகள்,4 விரைவுப்பேருந்துகள்,2சாதாரணப்பேருந்துகள், 1 குளிர்சாதனப்பேருந்துகள்.
குளிர்சாதன பேருந்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம்.தினசரி சொகுசுப்பேருந்துகளில் போவது இயலாத காரியம்... விரைவுப்பேருந்துகளில் எக்ஸ்ட்ரா காசு கொடுத்தும் அழமுடியாது.. அவசரம்னா ஓகே. அந்த ரெண்டு சாதாரணப்பேருந்துகளுக்கும் அந்த நேரத்துல பஸ் நிறுத்தமே மறந்து போகும்....
மேலும் நெரிசல் மிகுந்த நேரம் என்பதை இன்னும் பழைய நேரத்தையே மாநகரப்பேருந்து நிர்வாகம் பயன்படுத்துகிறது... இப்பவெல்லாம் காலை 7 மணிக்கே நெரிசல் நேரம் ஆரம்பமாவுது... ஆனா இந்த நேரங்களில் இயக்கப்படும் வழித்தடங்கள் மிகக்குறைவு. மாநகரப்பேருந்து நிர்வாகம் இதை கவனிக்குமா?..இந்த புலம்பல்கள் போக்குவரத்து அமைச்சருக்கு கேக்குமா??
Thursday, January 22, 2009
அபி ஜெயிச்சாச்சு-- கலைஞர் பயந்தாச்சு--- தொங்கபாலு பேரு நியுஸ்ல வந்தாச்சு...
கலைஞருக்கு ஏன் இந்த திடீர் பயம் வந்துச்சின்னெ தெரியல... இலங்கை பிரச்சினையை திசை திருப்பி திமுக ஆட்சியை கவிழ்க்க சதி அப்படின்னு அறிக்கை மூலமா அழுகிறார்... ஏன அழுகிறது இந்த கிழச்சிங்கம்... ஈழப்பிரச்சினையில் கலைஞர்தான் சரியான் முடிவு எடுப்பார் என்று உலத்தமிழர்களெல்லாம் நம்புனாங்க... ஆனா அவரு இன்னா பண்ணினார்... அறிக்கை வுட்டாரு... கூட்ட்டத்த கூட்டினார், டில்லிக்கு காவடி தூக்கினார்... ஒன்னும் முடியல... ஆட்சியா? ஈழப்பிரச்சினையா?? அப்படினா ஆட்சிதான் அப்படின்னு சொல்லாம சொல்லிட்டார் கலைஞர்... திருமா உண்ணவிரதம்-- ராமதாசு-திருமா சந்திப்பு--- அதிமுக காங்கிரசு இதுல ஏதாவது ஒன்னுதான் அவர் இப்படி அறிக்கை விட வச்சிருச்சி....
யப்பா கலைஞருக்கு இன்னும் ஏகப்பட்ட குடும்ப கடமைகள் இருக்கு... அதுவரைக்கும் அவர் ஆட்சியை ஒன்னும் கவுத்திடாதிங்க....ஒரு தொகுதிக்கு 60,70 கோடி செலவு செய்யலாம்.. 234தொகுதிக்கும் செலவு செய்ய முடியுமா?
நம்ம தொங்கபாலுவோட நியூஸ் தலைப்புல வரணும்னு ரொம்ப யோசிச்சு நேத்து ஒரு உண்ணவிரத போராட்டம் நடத்துனாரு மது விலக்கை அமல்படுத்தக்கோரி..அவருக்குத் தெரியல இப்போதைக்கு ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுத்தத்தான் தலைப்புல வரும்னு...இந்த போராட்டத்துல எத்தனை காங்கிரசு கோஷ்டிகள் கலந்துகிச்சின்னு யாருக்காவது தெரியுமா?? அய்யா தொங்க பாலு முதல்ல தமிழனுக்காக போராடுறதுக்கு யோசிங்க... பேசாம உங்க போரட்டத்தை பாண்டிச்சேரில வச்சிருக்கலாம்...... அங்கதான் அளவில்லாம கரை புரண்டு ஓடிக்கிட்டு இருக்கு....உங்களுக்கு நீங்களே ஒரு ஆப்பு வச்சிக்கிட்டீங்களே அதப்பத்தி யாராவது சொன்னாங்களா??... தென் மாவட்டத்துல உங்க கட்சிக்கு கொஞ்சம் அதிகமா செல்வாக்கு உண்டு நேற்றைய உங்களோட போராட்டத்தால அதுலயும் மண்ண அள்ளி நீங்களே போட்டுட்டீங்க..உருப்படியா ஏதாவது யோசிங்க..தொங்கபாலுக்கிட்ட ஒரு கேள்வி: நீங்க திமுக காங்கிரசா? இல்ல அதிமுக காங்கிரசா?/
நேற்று என்னுடைய ரேஷன் அட்டை முகவரி மற்றத்திற்காக தி.நகர் அரசு அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்.. எங்க ஆட்சியில எல்லாத்தையும் கணிணி மயமாக்கிட்டோம் எனகூவும் அரசுக்கு இந்த துறை மட்டும் எப்படி கண்ணுல படாம போச்சின்னு தெரியல... இன்னும் அதே பழைய மெத்தடுதான்.... கொஞ்சம் கவனிங்க கலைஞரே... எப்பதான் மாறுமோ??
வில்லு-- லொள்ளு
கண்ணு கேட்ட பிறகு நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம்
"குருவி" செத்த பிறகு "வில்லு" விட்டு என்ன பிரயோஜனம்...
படிக்கிற பயபுள்ளைங்க ஓட்டு போடுங்கப்பா
Saturday, January 17, 2009
கில்லி- சிவசங்கர் மேனன் - கலைஞர்-திருமா--இலங்கை --அரசியலோ அரசியல்..
இலங்கை பிரச்சினை பற்றி பேச பிரணாப் முகர்ஜி இந்தியா சார்பில் இலங்கை செல்வதாக இருந்தது. இடையில என்ன உள்குத்து நடந்துதோ என்னவோ சிவசங்கர் மேனன் இலங்கை சென்றிருக்கிறார்.சிவசங்கர் மேனனின் திறமைய பற்றி நான் ஒன்றும் சொலவதற்கில்லை....அவர் இலங்கைக்கு சென்றிருப்பது போரில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்குவது, சார்க் மாநாடு குறித்து பேசுவதற்காகவேன்னு ஒரு பேச்சு அடிபடுகிறது.போர்நிறுத்தம் பற்றி பேசுவது என்பது சந்தேகமே.. ஒருவேளை நம்ம கலைஞரின் தொல்லை தாங்காமல் வேற வழியில்லாம இவர அனுப்பியிருப்பாங்களோ என்னவோ. அப்ப பிரணாப்புக்கு விசா கிடைக்கலையா இல்ல விமான டிக்கெட் கிடைக்கலையா? பாவம் அவர் என்ன செய்வார் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓப்ப்டைக்கவேண்டும் என்ற ஒரு விசயத்துல எப்படி பேசனுமுனு அவருக்கு தெரியல....
நேற்று நம்ம கலைஞர் 1956ல் இருந்தே உன்னிப்பா கவனிச்சு தீர்மானம் போட்டதாக கூறியுள்ளார். மேலும் இலங்கைப்பிரச்சினைக்காக இன்னும் சில நாட்களாவது ( இல்ல இன்னும் சில காலமா)பொறுத்திருக்கலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்..திருமா தன்னிச்சையாக உண்ணாவிரதத்தை கையில் எடுத்துள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.இதுல இருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது.ஈழப்பிரச்சினையில் யார் யாரையும் முந்திவிடக்கூடாது என்ற ராசதந்திரம் நல்லாவே தெரியுது. கலைஞருக்கு ஊதுகுழலாக ராமதாசு "கலைஞரின் சொல்படி திருமா உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்கிறார்....கலைஞர் சொல்லியிருக்கும் சில காலம் என்பது எதுவரை... லட்சக்கணக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குறையும் வரைக்குமா... அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ.................மீண்டும் மீண்டும் ஒரு விசயம் மிக மிகத் தெளிவா தெரியுது அடுத்த கண்துடைப்பு நாடகம் ஈழப்பிரச்சினையில் மிக தெளிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
Tuesday, January 13, 2009
தைப்பொங்கல் --சில நினைவுகள் --- வில்லு???(((((((
" ஏங்க பொங்கல் வரப்போவுது ஒரு கரும்பு கூட இன்னும் வாங்கலையே". எங்க வீட்ல இருக்கும்போது என் அண்ணன் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வாங்கி கொடுத்திடுவார்"
"எனக்கு கூடத்தான் சின்ன வயசுல எங்க வீட்டில எல்லாம் வாங்கி கொடுப்பாங்க"..
"நேத்து வரைக்கும் பள்ளிக்கரணையில ஒரு கடையில கூட கரும்பு இல்லப்பா..லாரி ஸ்ட்ரைக் முடிஞ்சிருச்சி.. இன்னைக்கு வாங்கிட்டு வாரேன்"..இப்படியேத்தான் போவுது.
பொதுவாக கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் அதாவது சுண்ணாம்பு அடித்தல், வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்துதல் என பல வேலைகளில் மக்கள் அனைவரும் 15நாட்களுக்கு முன்னரே ரொம்ப பிசி ஆகிடுவாங்க. சென்னையில் இந்த மாதிரி வேலைகளை பொங்கலுக்கு பார்ப்பது மிகவும் அரிது.பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு வீடு முழுவதும் அம்மா சுண்ணாம்பினால் கோலமிடுவதை அருகில் உட்கார்ந்து பார்க்கும் அழகே தனி...பொங்கல் அன்றைக்கு அதிகாலை 5 மணிக்கு எழுந்து ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பாவிடம் திட்டு வாங்கிகொண்டே ஆற்றில் குளிப்பது தனி சுகம்.
பொங்கல் வைப்பதற்கு வயலில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்மணிகளை கொஞ்சம் எடுத்து வருவோம்.. புது அரிசிதான் பொங்கலுக்கு.. ஆனா இப்போது அரசாங்கம் கொடுக்கும் இலவசத்துக்கு காத்திருக்கிறோம்.. பொங்கல் வைப்பதற்கு பனைமர ஓலை அல்லது தென்னை மர ஓலை தான் எரிக்க பயன் படுத்துவோம்.. அந்த காலை குளிருக்கு இந்த சூடு நல்ல இருக்கும்.
காலையில் வெறும் சக்கரைப்பொங்கலையும், கரும்பையும் முடித்து விட்டு எப்படா சாப்பாடு ரெடியாகும் என்று ஆகிவிடும்.. எல்லா வகை காய்கறியையும் போட்டு வைக்கும் சாம்பார் வாசம் தெரு முனை வரைக்கும் மூக்கை துளைக்கும். மாட்டுப்பொங்கல் அன்றைக்கு விளையாட்டுப்போட்டிகள்தான் ஹைலைட் கபடி போட்டியில் ஜெயித்தது... ஒட்டப்பந்தயத்தில் இரண்டாவதா வந்தது.( மொத்தம் 5 பேர் ஓட ஆரம்பித்தோம் நான் கடைசிக்கு முன்னதாக இருந்தேன். ஆனால் 3பேர் எல்லைக்கோட்டை தொடாமல் திரும்ப வந்ததால் அப்பீட்டு)...
ஆங்.... நேத்து நம்ம குடுகுடுப்பையார் வில்லு விமரசனம் நல்ல எழுதியிருந்தார்...என்னுடைய நண்பன் அஜித்,விசய் படம் ரெண்டையும் முதல் நாள்லயே பாத்திடுவான்.. கடைசியா ஏகன் பாத்திட்டு மறுநாள் பேயறைஞ்ச மாதிரி வந்தான். அந்த அளவுக்கு படம் தாக்கிரிச்சி போல. குடுகுடுப்பையார் விமசர்சனத்தை படிச்சும் சொல் பேச்சுக் கேக்காம நேத்து போய் பாத்துட்டான்.
" என்ன மாமா படம் எப்படிடா இருக்கு"
" டேய் தியேட்டர் பக்கமே போயிடாத... குருவி படமே பரவாயில்லடா...நயந்தாரா மட்டும் ஓகே... தாங்கலடா சாமீ" வில்லு தாக்குதல் ஒரு வாரம் இருக்கும் போல... அதனால மக்களே......பத்து சூதானமா நடந்துக்குங்க..
SMS ல் வந்த கவிதை
அழகு சிலைகள் அனைத்தும்
அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்
"அவள்" கோவிலை சுற்றி வரும் போது
டிஸ்கி: என்னோட சிறந்த மொக்கை படங்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்த நாயகன் படம் கலைஞர் தொலைக்காட்சியிலும், இரண்டாம் இடத்தை பிடித்த பழனி சன் தொலைக்காட்சியிலும் பார்த்து மகிழ்ந்து பொங்கலை கொண்டாடுங்கள்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்
Monday, January 12, 2009
இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- இது விளையாட்டல்ல..
`துப்பாக்கி பொம்மைகளை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டா'மென்று அவரிடம் சொன்னேன். `வன்முறை உணர்ச்சியைக் குழந்தைகளிடம் தூண்டிவிடவேண்டாம் என்று விளக்கினேன்.அவருடைய பதில் வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருந்தது. `துப்பாக்கி பொம்மையினால் வன்முறை உணர்ச்சி பரவிவிடாது' என்றார். `அதைப் பரப்பியிருப்பது புஷ்' என்றார். புஷ்ஷை எதிர்ப்பது வேறு. நம் குழந்தைகளுக்கு வன்முறை உணர்வைத் தூண்டும் பொம்மைகளை நாம் வாங்கித்தரவேண்டாம் என்று கருத்து சொல்வது சக மனிதனாக என் கடமை என்று அவரிடம் சொல்லிவிட்டு மேற்கொண்டு தொடர்ந்து விவாதிக்காமல் நான் புறப்பட்டேன்.
கடைக்காரர் தாமாகவே என்னுடன் பேசினார். அவரும் ஓர் இஸ்லாமியர். (இந்துக் கடைகளிலேயே வாங்குங்கள் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை நான் எப்போதும் ஞாபகமாகப் புறக்கணிப்பது வழக்கம்) `துப்பாக்கி பொம்மைகள்தான் அதிகம் விற்கின்றன' என்று கடைக்காரர் சொன்னார். குறிப்பாக, ஒரு பிரபல சர்வதேச பொம்மை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆயிரம் ரூபாய் விலையுள்ள துப்பாக்கி பொம்மைக்கு பெரும் கிராக்கி இருப்பதாகவும் தன்னால் போதுமான அளவு வரவழைத்து விற்க முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். துப்பாக்கி பொம்மையை பலரும் விரும்பி வாங்குவது பற்றிய வருத்தம் அவர் பேச்சில் இருந்தது.
உலக அளவிலும் இந்திய அளவிலும் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் அமைப்புகள் பல இருந்த போதும், விளையாட்டு பொம்மைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றைத் தயாரிப்பவர்களை முறையாகக் கட்டுப்படுத்த போதுமான சட்டங்களும் வழிமுறைகளும் இன்னமும் இல்லை. துப்பாக்கி பொம்மைகள் மட்டுமல்ல, `டாம் அண்ட் ஜெர்ரி' காமிக்சின் வன்முறை பற்றியெல்லாம் நம் ஆட்சியாளர்களுக்கு எந்தக் கொள்கைப் பார்வையும் கிடையாது. புதிய அரசியல்வாதிகள் கூட இவற்றில் அக்கறை காட்டுவது இல்லை.
புஷ், அமெரிக்கா ஆகியோர் உலகில் வன்முறையைப் பரப்புவது, நான் என் வீட்டுக் குழந்தைகளிடம் வன்முறையைப் பரப்புவதற்கான நியாயமாக ஒருபோதும் ஆக முடியாது. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு முறை அமெரிக்காவோ இஸ்ரேலோ வன்முறையை அவிழ்த்துவிட்டாலும், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்கும் வெறியர்கள் யுத்தம் சீக்கிரமே வந்துவிடும் என்ற பீதியைக் கிளப்பும்போதும், இப்படிப்பட்ட வன்முறைகளை ஏற்க மறுக்கும் மன வலிமையை நம் குழந்தைகளுக்கு ஊட்டுவது எப்படி என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
கல்வி, அத்துடன் சார்ந்த சந்தோஷமான விளையாட்டுகள் இவைதான் நம் குழந்தைகளை ஆரோக்கியமான மன நிலை உடையவர்களாக வளர்த்தெடுக்கக்கூடியவை என்பதில் சந்தேகம் இல்லை. நிறைய வாசிக்க வாசிக்க, நம் குழந்தைகள் படிப்பின் மகிழ்ச்சியில் திளைக்க முடியும். சுவையான கதைகளைத் தொடர்ந்து படிக்கும் மனம், மனித உறவுகளை ஆரோக்கியமானதாக ஆக்குவதற்கு ஏற்ற பக்குவத்தை அடையும்.
போர்களிலும் வன்முறையிலும் படிப்பறிவற்றவர்களை அதிகம் ஈடுபடுத்தி பலி கொடுக்கும் மூளைகள் மெத்தப் படித்த மூளைகள்தான். அதே சமயம் தேசபக்தி பொங்க, உயிர்த்தியாகம் செய்த ஜவான்களுக்காக மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் வரும் படித்த வர்க்கத்தினரிடம் ஊர்வல முடிவில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை ராணுவத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்ப பாரங்களை நீட்டினால் போதும்; ஊர்வலம் எந்த லத்தி சார்ஜும் இல்லாமல் கலைந்துவிடும். படிப்பின் ருசியை அறிய அறிய, அமைதியான வாழ்க்கைக்கான ஆவல் அதிகரிக்கும். படித்தவர்களை கடும் மூளைச்சலவை செய்யாமல் வன்முறையில் பயன்படுத்த முடியாது. எனவே மேலும் மேலும் சமூகத்தில் படிப்பை, வாசிப்பு ரசனையைத் தூண்டும் அத்தனையும் நம்மால் ஆதரிக்கப்பட வேண்டும்.
இந்த மாதம் 8 முதல் 18 வரை சென்னையில் நடக்க இருக்கும் 32வது புத்தகக் கண்காட்சி அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இதுவரையிலும் ஒரு வருடம் கூடத் தவறாமல் அதில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு வருடம் என்னுடைய அனல் பறக்கும் வசனங்கள் நிறைந்த நாடக நூலைக் கண்காட்சியில் கொண்டு வந்து வைத்த சில மணி நேரங்களில், கண்காட்சி தீப்பிடித்துக் கொண்டு விட்டது. ஒவ்வொரு வருடமும் சென்னைக் கண்காட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நூல்கள் விற்பனையாகின்றன. இந்திய புத்தகத்துறை வரலாற்றில் முதல்முறையாக இப்போதெல்லாம் சில தமிழ் எழுத்தாளர்கள் ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து நூல்களை வெளியிடும் அதிசயம் நடக்கிறது.ஆனாலும் அதிகமாக விற்கும் புத்தகங்கள் சமையல், ஜோதிடம், வாஸ்து, சுய முன்னேற்றம் மட்டும்தான் என்பது ஆரோக்கியமான நிலை அல்ல.
நமக்கு வரலாறு தெரிய வேண்டும். அப்போதுதான் நிகழ்காலம் புரியும். போரில் சிக்கித் துயரத்தின் உச்சத்தில் தவிக்கும் இலங்கைத் தமிழருக்காக இங்கே உணர்ச்சிவசப்படும் ஏராளமானவர்களுக்கு அந்தத் துயரத்தின் 60 வருட கால அரசியல் வரலாறு தெரியாது. இட ஒதுக்கீட்டில் பயன் பெற்று கல்வியும் வேலையும் அடைய முடிந்த லட்சக் கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு, பெரியாரின் முழு வாழ்க்கைக் கதையே தெரியாது. அரசியல், சமூக நீதி மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் அசல் வரலாறு கூட தெரியாததால்தான், எதையெதையோ காவியம் என்று இன்று எழுதுகிறவர்கள் கூட சொல்லிவிடுகிறார்கள்.நம் இன்றைய வாழ்க்கையின் அரசியல், சினிமா, பொருளாதாரம் அவ்வளவு ஏன் நம் குடும்ப வாழ்க்கையைக் கூடப் புரிந்துகொள்ள, நாம் ஏராளமாகப் படிக்க வேண்டும். படிக்கப் படிக்கத் தீராத பக்கங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன.
மரணத்தை நோக்கி அவரை அழைத்துச் சென்ற புற்று நோய்க்காக அறுவை சிகிச்சைக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைக்கப்பட்டபோது கூட, அண்ணா தன் கையில் இருந்த பாதி படித்த புத்தகத்தை முழுக்கப் படித்து முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று டாக்டரிடம் அனுமதி கேட்டார். அதுதான் வாசிப்பின் ரசனை.துப்பாக்கி பொம்மைகள் ஒருபோதும் அதை ஈடு செய்ய முடியாது. நம் குழந்தைகள் கையில் எதைக் கொடுக்கப் போகிறோம்?
நன்றி குமுதம்.
Tuesday, January 6, 2009
ரிலையன்ஸ்பிரஷும் நானும்.........
தி.நகர் சரவனாஸ்டோரில் மளிகை பொருட்கள் வாங்கலாம்னு போனால் அங்கேயும் புட் வேல்டு கதைதான்... ஆனா சரியான விலை. பொருட்கள் கம்மி. எதுக்கு தி.நகர் அலையனும் எங்க தெருவில் உள்ள கடையில் 1 மாதம் சாமான் வாங்கினேன். அந்த மாசம் எனக்கு செலவு கிட்டதட்ட 500 ரூபாய் அதிகமாகியது... உதாரணத்துக்கு பள்ளிக்கரணை மெயின் ரோட்டில் உள்ள கடையில் ஒரு பினாயில் பாட்டில் விலை 15ரூபாய் என்றால் எங்க தெருவில் உள்ள கடையில் அதே பினாயில் விலை 25ரூபாய்....இந்த ஒரு சாமானே இப்படினா மத்த விலையெல்லாம்!!!!!!!!!!!!!!
மீண்டும் தி.நகர் இந்த வாட்டி சரவணா மளிகை ஸ்டோரில் கடந்த 3 மாதங்களாக வாங்கிகொண்டிருக்கிறேன். இதுக்காக தி.நகர் போகும்பொழுது பிளஸ்டிக் சாமான் எடுக்கனும், அது எடுக்கனும், இது எடுக்கனும்னு சொல்லி என்னோட பட்ஜெட் மறுபடியும் எகிற ஆரம்பமாச்சு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை இருக்கு... என்னுடைய தம்பி சொன்னான்"ரிலையன்ஸ் பிரெஷில் எல்லாம் விலை கம்மியா இருக்குடான்னு.... என் வீட்டுலயும் ரிலையன்ஸ் பிரெஷ்க்கு போகனும் அப்படினு.....
கடந்த ஞாயிறு காலை ரிலையன்ஸ்க்கு போனேன்.. உள்ள நுழைவதற்கு முன்னால் தங்கமணியிடம் எல்லா பொருட்களின் விலையை பாத்துட்டுதான் வாங்கனும் சொல்லித்தான் உள்ள போனேன். காய்கறிகலையெல்லாம் நல்லாவே பேக் பண்ணி வச்சிருந்தாங்க. கூட்டத்துக்கும் குறைவில்லை...ஒரு ஆள் 2000ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினார் அப்படி என்ன வாங்கினார்னு பாத்தா கெலாக்ஸ்,லேய்ஸ், ஓட்ச் அப்படின்னு வாயில நுழையா பெயர் கொண்ட எல்லாத்தையும் வாங்கி போட்டிருந்தார்...... அங்க ஆப்பிள் மட்டும்தான் நல்லா இருந்திச்சி.. மத்ததெல்லாம்
உதாரணத்திற்கு 1லிட்டர் கோல்டுவின்னர் விலை ரூபாய் 71
இதே கோல்டுவின்னர் விலை சரவணா மளிகை ஸ்டோரில் விலை ரூபாய் 65..
நீங்களே சொல்லுங்க...............????????????????
டிஸ்கி: நான் பக்கா மிடில் கிளாஸ்ங்க......
Monday, January 5, 2009
இவ்வாரம் ஞாநியின் பார்வையில்--- மனம் விரும்புதே...
இந்தத் தீர்மானங்கள் அத்தனைக்கும் பின்னால் ஓர் எளிமையான உண்மை இருக்கிறது. அது என்ன? ஒவ்வொரு மனிதனும் இந்த வருடம் தனக்கு தீங்காக இருந்த பழக்கங்களை விட்டுவிட்டு, நல்ல பழக்கங்களை அடுத்த வருடத்தில் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறான்.அதாவது சாதாரண மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டு மேம்பட விரும்புகிறான். தன்னைத்தானே ஏதோ ஒரு வடிவத்தில் சுயவிமர்சனம் செய்து கொள்கிறான்.
ஆனால் நினைத்தபடி எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள முடியாமற் போய்விடுகிறது. பைபிளில் எனக்குப் பிடித்த ஒரு வாசகம், இதைப்பற்றிச் சொல்கிறது. The spirit is willing but the flesh is weak. மறு தினம் தான் காட்டிக் கொடுக்கப்பட்டு கைதாகி சித்ரவதைக்குள்ளாவோம் என்பது ஏசுவுக்குத் தெரிந்திருக்கிறது. அந்த நிலையில் முன்னிரவு முழுவதும் இறைவனைத் தொழுவோம் என்று சீடர்களை அழைத்துக் கொண்டு கெத்சமனே தோட்டத்துக்கு செல்கிறார். இரவு வளர, வளர, ஒவ்வொரு சீடராக தூங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு விழித்திருந்து தொழ மனதில் விருப்பம்தான்; ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை என்ற பொருளில் ஏசு சொன்னதாக இந்த வாக்கியம் விளக்கப்படுகிறது. எனக்கென்னவோ ஏசு அதைத் தன்னைப் பற்றியே சொல்லிக் கொண்டதாகத்தான் தோன்றுகிறது. மறு நாள் சந்திக்கப்போகும் சிலுவை சித்ரவதைக்கு அவர் சித்தம் தயாராக இருக்கிறது. உடல் இன்னமும் அஞ்சுகிறது. தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவே அவர் அன்றிரவு முழுவதும் இறைவனுடன் பிரார்த்தனை வழியே உரையாடுகிறார்
தான் சரி என்று நம்பும் உண்மைக்காக எந்த துன்பத்தையும் சந்திக்க ஒருவர் மனதில் தயாராக இருக்கலாம். அவர் உடலும் தயாராக இருக்க வேண்டும் என்பது அடுத்த கட்ட சுய தயாரிப்பு. கொள்கையில் பிடிப்பு இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் சந்திக்கும் சவால் இது. பெரும்பாலான மக்கள் இதற்குத் தயாராக இல்லாத நிலையில் தான் வாழ்க்கையில் சமரசங்களைச் செய்கிறார்கள். ரயிலில், தெருவில், ஓட்டலில், டீக்கடையில் என்னை சந்திக்கும் பல வாசகர்கள் `எப்பிடி தைரியமா எழுதறீங்க ?' என்று ரகசியக் குரலில் கேட்கும்போது, அதன் பின்னே இருப்பது, விமர்சனங்களின் விளைவாக ஏற்படக்கூடிய துன்பங்களை எப்படி சந்திப்பது என்பது பற்றிய பொதுக் கவலைதான். அந்தக் கவலை இல்லையென்றால் அவர்களும் விமர்சிக்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். The spirit is willing but the flesh is weak.
ஒவ்வொரு புது வருடத்திலும் தசையின் பலவீனத்தைக் கடக்கும் முயற்சியில், சாமான்ய மக்கள் இந்த வருடம் இதைச் செய்வேன் என்று சுயத் தீர்மானங்கள் போடுகிறர்கள்.
ஆனால் நம் சமூகத்தின் மிக பலமான சக்திகளாக இருக்கிற அரசியல், அரசாங்கம், சினிமா, ஊடகங்கள், பத்திரிகைகள், தொழில்கள் இவற்றில் இருக்கிற முக்கியமான புள்ளிகள் யாரும் இப்படி புது வருடத் தீர்மானம் போடுவதே இல்லை. போன வருடம் ரொம்ப அராஜகம் செய்துவிட்டேன். இந்த வருடம் கொஞ்சம் குறைத்துக் கொள்வேன்; போன வருடம் ஓவராக லஞ்சம் வாங்கினேன். இந்த வருடம் கம்மியாக வாங்குவேன்; போன வருடம் ஆபாசமாகவும் அபத்தமாகவும் படங்கள் செய்தேன். இந்த வருடம் கொஞ்சம் நல்ல படங்கள் செய்வேன்; போன வருடம் நம் பத்திரிகை முழுக்க ஆபாசக் களஞ்சியமாக இருந்தது; இந்த வருடம் கொஞ்சம் அடக்கி வாசிப்பேன்; போன வருடம் அபத்தமான சீரியலும் குலுக்கல் டான்சுமாக சேனலை ஓட்டிவிட்டேன். இந்த வருடம் கொஞ்சம் நல்ல ப்ரொகிராம் செய்வேன்.......என்றெல்லாம் துளிக் கூட சுயவிமர்சனப் புது வருடத் தீர்மானங்கள் இந்த அயோக்கியர்கள் செய்வதே இல்லை.
இரண்டு வருடங்களாக நானும் ஒவ்வொரு புத்தாண்டின்போதும் ஒரு தீர்மானத்தை யோசிக்கிறேன். இது என்னைத் திருத்திக் கொண்டு மேம்படுவது சம்பந்தப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க விரக்தியால் எடுக்கும் தீர்மானம். இனி அரசியல் விமர்சனமே எழுதுவதில்லை என்று சென்ற டிசம்பரில் யோசிக்கத் தொடங்கினேன். அதற்குக் காரணம் என் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து புத்தகங்களாக வெளியிடுவதற்காக, முந்தைய நான்கு வருடக் கட்டுரைகளையும் ஒரே மூச்சில் படித்ததுதான். அவற்றைப் படிக்கப் படிக்க, தமிழகத்தின் பிரதான அரசியல்வாதிகளைப் பற்றிப் புதிதாக சொல்ல எதுவும் மீதியில்லை என்று தோன்றியது. இவர்களுடைய அயோக்கியத்தனங்களின் அந்தந்த வாரத்து நிகழ்ச்சிகளின் பரிமாணங்களை மட்டுமே தொடர்ந்து எழுத முடியுமே தவிர, அடிப்படையாக இவர்களைப் பற்றிப் புதிதாக சொல்ல எதுவும் இல்லை.
விரக்தியை அதிகப்படுத்திய இன்னொரு காரணம், இப்படி தொடர்ந்து எழுதியும், இவர்கள் எதையும் திருத்திக் கொள்வதாக இல்லை என்பதும் என் கட்டுரைகளிலிருந்தே தெரிய வருகிறது. பழைய தவறுகளையே இன்னும் பெரிசு பெரிசாக தொடர்ந்து செய்கிறார்களே ஒழிய துளியும் வெட்கம், கூச்சம், சூடு, சுரணை போன்ற அடிப்படை மனிதப் பண்புகள் எதுவும் இவர்களிடம் காணப்படவில்லை. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆராய்ச்சியை நோக்கித்தான் நாம் தள்ளப்படுகிறோம். உடனடி உதாரணங்களாகவே சிலவற்றைச் சொல்லலாம். மின்வெட்டால் சிறு தொழில்கள் எல்லாம் மூடப்படும் வேளையில் திருச்சி உறையூரில் ஸ்டாலின் கூட்டத்துக்காக பல கிலோமீட்டர் தூரத்துக்கு அருவருப்பாக மின் அலங்காரங்கள் செய்திருந்ததைக் குறிப்பிட்டு திருந்தவே மாட்டிங்களா என்று ஒரு வாரம் முன்னால் ஓ பக்கங்களில் கேட்டிருந்தேன். இந்த வாரம் சென்னை வேளச்சேரியில், முதலமைச்சர் அடுத்த வாரம் வரப்போகும் நிகழ்ச்சிக்காக சாலைகளில் செய்துவரும் வரவேற்பு ஏற்பாடுகள் போக்குவரத்தையே நிலைகுலைய வைத்து, அந்தப் பகுதி மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன? திருந்த மாட்டோம், போங்கடா என்பதுதானே?
முதலமைச்சரின் புது வருடக் கனவு, கூவத்தின் பளிங்கு போன்ற நீரில் அவர் வீட்டுப் பிள்ளைகள் குளிப்பது என்று மேம்பாலத் திறப்பு விழாவில் சொல்லியிருக்கிறார். இதே கனவை அவர் 1972ல் நான் கல்லூரியில் படிக்கும்போதும் சொன்னார். அப்போது அவருடைய ஆட்சியில் அதற்கு பணம் ஒதுக்கிச் செலவும் செய்தார்கள். இப்போது என் மகனும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டான். முதலமைச்சர் கலைஞரும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து சாதனை செய்துவிட்டார். கூவம் இன்னும் நாறிக் கொண்டிருக்கிறது. 37 வருடங்களுக்கு முன்னால் கூவம் சீரமைப்பு திட்டத்தைப் போட்டவர் ஏன் அதை அப்போதே சரியாக நிறைவேற்றவில்லை என்ற காரணத்தை, இப்போது இன்னொரு திட்டம் போடும்போது சொல்ல வேண்டாமா? சொல்ல மாட்டார். நம் மக்களின் மறதி, அலட்சியம், விமர்சிப்பதற்கான பயம் இவையெல்லாம்தான் அரசியல்வாதிகளின் முதலீடுகள்.
கலைஞருக்கு மாற்றாக தன்னை முன் நிறுத்தும் எதிர்க் கட்சித்தலைவர் ஜெயலலிதாவின் உச்சகட்ட அரசியல் சாணக்யத்தனம் என்ன தெரியுமா? திருமங்கலம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரின் மாமியார், மாமனார், கொழுந்தன் எல்லாரையும் அ.தி.மு.க.வில் சேரச் செய்வதுதான். இதுவா அரசியல்?தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி நடத்தி வந்திருப்பதே இந்தக் குடும்ப அரசியல்தான். அரசியலில் இருக்கும் பல குடும்பங்களில் சிலர் தி.மு.க.விலும் சிலர் அ.தி.மு.க.விலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குடும்பத்துக்கு லாபம். இரு கட்சிகளும் மேல் மட்டத்திலிருந்து கீழ் வரை, குடும்பங்களின் வாரிசு அரசியல்தான் நடக்கிறது.
ஒரு ஆர்.டி.ஓ. லஞ்ச வழக்கில் கைதானால் அவரிடம் கோடிக்கணக்கில் சொத்து, பிடிபடுகிற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கோடிக்கணக்கில் சொத்து. அரசாங்கத்தின் கீழ்மட்ட, நடுமட்ட ஊழியர்களிடமே இவ்வளவு சொத்து குவிகிறதென்றால், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என்று யூகிக்கலாம்.
இன்று தமிழ்நாட்டின் எந்தப் பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வேராக இருப்பது லஞ்சம் ஊழல் அராஜகம்தான். நில ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, ஆற்று நீர் மாசுபடுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பது லஞ்சம் ஊழல் அராஜக அரசியல். இதை 1969 முதல் 2009 வரை செய்துவந்திருப்பவர்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரு கட்சிகளும்தான். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும்தான் இதற்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். புதிதாக உருவாகி வந்த கட்சிகள் இயக்கங்கள் எதுவுமே தங்களுக்கு மாற்றாக உருவாகாதபடி, அவற்றையும் தங்கள் வழியில் அழைத்துச் சென்ற குற்றமும் இவர்களுடையதே.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்காக நான் தொடர்ந்து அரசியல் விமர்சனம் எழுத வேண்டும் என்ற விரக்தியில் சென்ற ஜனவரியில் எழுதுவதை நிறுத்த முடிவு செய்தேன். அப்போதுதான், எனக்கெதிரான அவதூறுப் பிரசாரங்கள். கண்டனக் கூட்டங்கள். அரசியல் நிர்ப்பந்தங்கள் எல்லாம் நிகழ்ந்தன. விகடனில் என் தொடர் நிறுத்தப்பட்டது. நானாக நிறுத்துவேனே தவிர, இன்னொருவர் நிர்ப்பந்தத்தால் என் குரல் ஒலிப்பது நிற்காது என்று நிரூபிப்பதற்காகவே தொடர்ந்து குமுதத்தில் எழுதத் தொடங்கினேன். ஆனால் என் விரக்திக்கான காரணங்கள் அப்படியே உள்ளன.2009_ல் தமிழக அரசியலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் திருக்குவளை குடும்பமும் மன்னார்குடி குடும்பமும் பலவீனப்படுத்தப்பட்டு அவற்றை அண்டிப் பிழைக்கும் அரசியல் கட்சிகளும் பலவீனப்படுத்தப்பட்டு, முற்றிலும் புதிய நேர்மையான அரசியல் சக்திகள் இளைய தலைமுறையிலிருந்து முகிழ்த்தெழ வேண்டும் என்பதுதான் என் கனவு. இதை நிறைவேற்றப் போகிற பொதுமக்கள், வாசகர்கள், இளைஞர்கள் எங்கே இருக்கிறீர்கள்? தயவுசெய்து வெளியே வந்து என் மனச் சோர்வை நீக்குங்கள். அதுவே நீங்கள் எனக்குத் தரும் புத்தாண்டுப் பரிசு. The spirit must be willing and the flesh should not be weak..
இந்த வருட பூச்செண்டு
மும்பையில் பயங்கரவாதி கசாபை, தன்வசம் எந்த ஆயுதமும் இல்லாதபோதும் துணிச்சலாகப் பிடித்து தன் உயிரையே கடமைக்காகக் கொடுத்த காவலர் துக்காராமுக்கு இந்த வருடப் பூச்செண்டு.
இந்த வருட குட்டு.
பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக எதுவுமே செய்யாமல் அரசியல் நடத்திய ஜெயலலிதாவுக்கு இந்த வருடக் குட்டு.
இந்த வருட பரிதாப விருது.
சன் டி.வி.யிலிருந்து கலைஞர் டி.வி.க்கு சென்ற ஊழியர்கள் அனைவருக்கும் இ.வ.பரிதாப விருது.
Tuesday, December 30, 2008
Monday, December 29, 2008
இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- மும்பை மேரி ஜான்.....
ஒரு காரணம் சினிமா. இரண்டாவது காரணம் நாடகம். மூன்றாவது ஆட்டோ. சென்னையில் 200 ரூபாய் கொடுக்கும் தொலைவுகளுக்கு மும்பையில் 70 ரூபாய்தான் ஆட்டோ கட்டணம். சென்னையில் 20 ரூபாய் வாங்கும் இடத்துக்கு அங்கே ஒன்பது ரூபாய். நானும் எனக்குத் தெரிந்த பல ஆட்டோ டிரைவர் தோழர்களையும் யூனியன் நண்பர்களையும் என் செலவில் மும்பை வந்து, இங்கே மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது, சென்னையில் இது சாத்தியமாக விடாமல் தடுக்கும் அம்சங்கள் என்ன என்பதை ஆராயும்படி கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டேன்.
ஹிந்தி சினிமாவில் அரிவாள், துப்பாக்கி, வெட்டு குத்து, பழி வாங்கல் ஃபார்முலாவுக்கு டாப் ஹீரோக்கள் விடை கொடுத்துவிட்டார்கள். தமிழ் இயக்குநர் முருகதாசும் தெலுங்குத் தயாரிப்பாளர்களும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் ஹிந்திப் படமான `கஜினி' ஒரு விதிவிலக்கு.
அதில் கூட ஹீரோ அமீர்கான், இது என் பாணிப் படமல்ல என்று பேட்டிகளில் எச்சரிக்கையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். படத்தின் கடைசிக் காட்சி தமிழைப் போல வன்முறையில் முடியக்கூடாது என்று மாற்றியமைத்திருக்கிறார். வன்முறையில்லாத கிறிஸ்துமஸைக் கொண்டாடுங்கள் என்று அக்ஷய் குமார் குரல் கொடுத்திருக்கும் அனிமேஷன் படமான ஜம்போ விளம்பரத்தில் கஜினியை மறைமுகமாக கிண்டலடித்திருக்கிறார்கள்.
அமீர்கான், ஷாருக்கான், சல்மான் கான், சஞ்சய் தத், அக்ஷய், அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரஹாம் என்று அத்தனை ஹீரோக்களும் ரொமான்ஸ், காமெடி, திக்கான கதைப்படங்கள், வன்முறையில்லாத த்ரில்லர்கள் என்று இறங்கி ஏழெட்டு வருடங்களாகின்றன. தமிழிலோ பிரசன்னா, நரேன், ஷ்ரீகாந்த் போன்றவர்கள் கூட அரை டிராயர், லுங்கி, அரிவாளுடன் கதை சொல்லும்படி புது இயக்குநர்களை டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறார்களாம்.தஸ்விதான்யா என்று ஒரு படம் பார்த்தேன். லோ பட்ஜெட் படம். பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் இதுவும் லாபகரமாகவே ஓடியிருக்கிறது. கதாநாயகன் வினய் பதக், பெரிய படங்களில் ஹீரோவின் நண்பன் வேடங்களில் வரக்கூடிய குணச்சித்திர நடிகர்.
தனியார் அலுவலக ஊழியர் பாத்திரம். 35 வயதாகியும் திருமணம் செய்யாமல், காது கேட்காத அம்மாவைப் பார்த்துக் கொண்டு விஸ்வாசமாக ஆபீஸுக்கு உழைக்கும் பாத்திரம். குடல் புற்று நோயால் இன்னும் ஓரிரு மாதங்களில் இறந்துவிடுவோம் என்பது தெரிந்ததும், பத்து ஆசைகளைப் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொள்வதுதான் கதை. சிவப்பு கார் வாங்குவது, வெளி நாடு செல்வது, பள்ளியில் தனக்குப் பிடித்த வகுப்புத் தோழியை தேடிப் பிடித்து சந்திப்பது போன்ற பத்து ஆசைகள். நகைச்சுவையும் மெல்லிய சோகமும் கலந்து இயல்பாக சொல்லப்பட்டிருக்கும் படம்.
பார்த்த இன்னொரு படம் மகாரதி. குஜராத்தி மொழியில் 21 வருடங்களாக மேடை நாடகமாக நடிகர் பரேஷ் ரவால் நடத்தி வந்த நாடகம் படமாகியிருக்கிறது. தன் சொத்துக்கு ஆசைப்படும் இளம் மனைவியை எரிச்சலூட்டுவதற்காக குடிகார பணக்காரக் கணவன், தான் தற்கொலை செய்துகொண்டால் அவளுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்று மிரட்டுகிறான். தன் தற்கொலையை கொலை என்று நிரூபித்து பணத்தை அடையும்படி சொல்லிவிட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு செத்துப் போகிறான். பணத்துக்காக அவளும் ஒரு குட்டித் திருடனும், வக்கீலும் போடும் திட்டங்கள், முடிவில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற சஸ்பென்ஸ் எல்லாம்தான் படம். நசிரூதீன் ஷா, ஓம் பூரி, போமன் இரானி, பரேஷ் ரவால் என்று திறமையான நடிகர்களின் நடிப்புதான் படத்தின் சிறப்பு
ஹிந்தி சினிமாவில் இப்படி வித்தியாசமான முயற்சிகள் சிறிய பட்ஜெட்டில் சகஜமாக நடக்கின்றன. இன்னொரு பக்கம் அபிஷேக், ஜான் ஆப்ரஹாம் போன்ற ஹீரோக்கள் கூட தயக்கம் இல்லாமல் ஹோமோசெக்ஷுவல் பாத்திரங்களில் `தோஸ்தானா' போன்ற படங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட சூழலே இல்லை.
ஒரு வித்தியாசமான முயற்சி இங்கே எவ்வளவு கடினமானது என்பதற்கு சென்ற வருடம் இதே டிசம்பர் மாதம் நான் பிரமிட் சாய்மீரா நிறுவன உதவியுடன் ஆரம்பித்த ஒற்றை ரீல் இயக்க அனுபவமே ஓர் உதாரணம். நல்ல சிறுகதைகள், வித்தியாசமான முயற்சிகள், புதிய திறமைசாலிகள் ஆகியோரை அறிமுகப்படுத்தி வளர்ப்பதே இதன் நோக்கம். படத்தின் நீளம் ஒரே ரீல். அதாவது பத்து நிமிடம். மெயின் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு தியேட்டரில் இதை இலவசமாகப் போட்டுக் காண்பிப்பதே திட்டம்.
எழுத்தாளர் திலீப்குமாரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, இரண்டே பாத்திரங்கள் கொண்ட ஒரு படத்தை உருவாக்கினேன். நடிகை ரோஹிணியும் எங்கள் நாடகக்குழு நடிகர் நீல்சன்னும் நடித்த `திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்யவேண்டும்?' என்ற இந்த முதல் படத்தை கடந்த டிசம்பரில் 40 அரங்குகளில் பிரமிட் சாய்மீரா திரையிட்டது. லூமியர் பிரதர்ஸ் முதல் சினிமாவைக் காட்டிய அதே நாளில், 40 ஊர்களில் 40 தமிழ் எழுத்தாளர்கள் இதைத் தொடங்கி வைத்தார்கள். அஜீத் நடித்த `பில்லா' படத்துக்கு முன்பாக காட்டப்பட்ட படம் இரு மாதங்கள் அரங்குகளில் இருந்து பெருமளவு வரவேற்பு பெற்றது.
மொத்தமாக நான் ஆறு படங்கள் செய்வதாக திட்டம். புது திறமையாளர்கள் அனுப்பும் விண்ணப்பங்களிலிருந்து தேர்வு செய்து மேலும் ஆறு படங்களை உருவாக்கத் திட்டமிட்டிருந்தோம். சுமார் 80 பேர் விண்ணப்பித்தனர். அவற்றில் நடிகை ரோஹிணியின் ஸ்க்ரிப்ட் உட்பட 10 கதைகள் தயாரிப்புக்குத் தகுதியானவையாக இருந்தன.
முதல் பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் இப்படிப்பட்ட முயற்சிகளில் தான் இலவசமாகக் கூட நடித்துத் தரத் தயார் என்று அறிவித்தார். அடுத்த படத்துக்கே அவரைக் கேட்டேன். (இலவசமாக அல்ல. டோக்கன் சம்பளத்துக்குத்தான்.) எழுத்தாளர் அன்பாதவன் எழுதிய சிறுகதை. சத்யராஜுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடை அளவு எல்லாம் எடுத்தாகிவிட்டது. இன்னும் இரு தினங்களில் படப்பிடிப்பு. சத்யராஜ் விலகிக் கொண்டார். காரணம், அவருடைய அடுத்த இரு படத் தயாரிப்பாளர்கள், ஒற்றை ரீலில் அவர் நடித்தால் அவர் மார்க்கெட் அடிபடும் என்று பயப்படு(த்து)கிறார்களாம்.
நிச்சயித்த படப்பிடிப்பு தினத்தன்று, நண்பர் நடிகர் தலைவாசல் விஜய் அந்தப் பாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். `உள்ளேன் அய்யா' என்ற அந்தப் படம் முடிந்து தணிக்கையெல்லாம் ஆகி பத்து மாதங்களாகிவிட்டன. இன்னும் தியேட்டருக்கு வரவில்லை. காரணம், பிரமிட் சாய்மீராவின் மார்க்கெட்டிங் டிவிஷன் இன்னும் படத்துக்கு ஸ்பான்சர் தேடிக் கொண்டிருக்கிறது.ஒற்றை ரீல் இயக்கத்தை ஆரம்பிக்கும்போதே அவர்களிடம் சொன்னேன். படத் தயாரிப்புச் செலவு மூன்று லட்சம் ரூபாய். 40 பிரிண்ட், விநியோகச் செலவெல்லாம் இன்னொரு மூன்று லட்சம். மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் செலவுக்கு, படத்தின் ஆரம்பத்தில் 30 செகண்ட், முடிவில் 30 செகண்ட் விளம்பரதாரர் கிடைத்தால் போதும். லாபம் நஷ்டம் இல்லாத புராஜெக்ட்டாக இதைச் செய்யமுடியும்.
பல தொலைக்காட்சிகளில் பல தொடர்களைத் தயாரித்து ஒளிபரப்பும் நிறுவனத்துக்கு விளம்பரதாரர்கள் கிடைப்பது பெரிய சிக்கலாக இருக்கக்கூடாது. விளம்பரதாரர்கள் கிடைக்கவே இல்லையென்று வைத்துக் கொண்டாலும் கூட, வருடத்தில் 12 ஒற்றை ரீல் படங்களுக்கு ஆகப் போகும் மொத்தச் செலவு வெறும் 72 லட்சம் ரூபாய்கள்தான்.`குசேலன்' படத்தில் மட்டும் அவர்கள் அடைந்த நஷ்டம் 20 கோடி ரூபாய்க்கும் மேல். அதே சமயம் ஒற்றை ரீல் போன்ற முயற்சிகளில் ஒரு கம்பெனிக்குக் கிடைக்கும் நன் மதிப்பு விலைமதிப்பற்றது.
ஆனால் இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிகள், எங்கேயும் எப்போதுமே வணிக முயற்சிகள் நகரும் வேகத்தில் நகர்வதில்லை. ஒரு நிறுவனத்தின் தலை முதல் வேர் வரை எல்லாருக்கும் ஈடுபாடு இருந்தாலொழிய இவை வெற்றி பெறமுடியாது. மேல் மட்டத்தில் மூன்று நான்கு பேர் மட்டும் காட்டும் அக்கறை போதுமானதல்ல. இதை நிர்வாக இயக்குநர் சாமிநாதனும் நானும் இந்த ஓராண்டில் பல விஷயங்களில் புரிந்துகொண்டோம்.இப்படிப்பட்ட சூழலில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் ஓரடி முன்னே போயிருந்தாலே ஆறுதல்தான் என்றே கருதவேண்டும். போன டிசம்பரில் என்வசம் இல்லாத இரு குறும்படங்கள் இந்த டிசம்பரில் உள்ளன. ஓரடி முன்னே ?!
ஒற்றை ரீல் இயக்கம் போன்ற வணிக சினிமாவுக்கு நேரடித் தொடர்பு இல்லாத முயற்சிகளே தமிழ்ச் சூழலில் சிரமமானவை என்கிறபோது, வணிக சினிமாவுக்குள் மாற்று முயற்சிகள் மேலும் கடினமானவை.
மும்பையில் என்னை ஈர்க்கும் இன்னொரு அம்சம் நாடகம். இரவு 9 மணிக் காட்சிக்கு ஜுஹு பிருதிவி அரங்கம் நிரம்பி வழிவது மனம் நிறைக்கும் காட்சி. பயங்கரவாதத் தாக்குதல் முடிந்த சில தினங்களிலேயே நாடக அரங்குகளுக்கு வழக்கம் போல மும்பைவாசிகள் வந்துவிட்டார்கள்.
தமிழ் சினிமா ரசிகர்கள் கொடூரமான போலீஸ் அதிகாரி, அரசியல்வாதி பாத்திரங்களில் பார்த்து `ரசிக்கும்` நடிகர் அஷீஷ் வித்யார்த்தியை பிருதிவி அரங்கில் முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் பார்த்தேன். நாடகத்தில் அவர் ஒரே ஒரு நடிகர் மட்டும்தான். 90 நிமிடம் இடைவெளி இல்லாமல் பேசி நடித்தார். நதீரா பாபர் இயக்கிய இந்த நாடகம் கிராமத்திலிருந்து சினிமா ஆசையுடன் மும்பைக்கு வந்து வாழ்க்கை அனுபவங்களில் அடிபட்டு மன நிலை சிதைந்து நடிகனாகாமலே இறந்து போகும் ஒரு இளைஞனைப் பற்றியது. அஷீஷ் வித்யார்த்தி போன்று தேசிய நாடகப் பள்ளியில் படித்துத் தேர்ந்த ஒரு திறமையான நடிகரையெல்லாம் தமிழ் சினிமா எப்படி வீண்படுத்துகிறது என்ற வருத்தம் ஏற்பட்டது. அதே சமயம் தெலுங்கு, தமிழ் என்று பிஸியான சினிமா வேலைக்கு நடுவில், இப்படி தாய்மொழியில் நாடகம் நடிப்பதற்கு அஷீஷ் போன்றவர்கள் காட்டும் அக்கறை அவர் மீது மதிப்பேற்படுத்தியது. ஒரு தமிழ் நடிகர் நாடகம் நடிப்பது பற்றி பத்து வருடமாகப் பேசிக் கொண்டே இருக்கிறார்.
வஜினா மோனோலாக்ஸ் (யோனி பேசுகிறது) என்ற நாடகம் மும்பையில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அடிக்கடி நிகழ்த்தப்படுகிறது. இதே நாடகக் குழுவினர் சென்னையில் இதை ஆங்கிலத்தில் நடத்த கடந்த மூன்று வருடங்களில் இரு முறை வந்தபோது, ஒவ்வொரு முறையும் கடைசி நிமிடத்தில் சென்னைக் காவல் துறையால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை கூட எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. மும்பையாக இருந்திருந்தால் அதுவே ஓ என்று சத்தம் போட்டிருக்கும். சென்னையில் இருக்கும்போது சென்னைவாசி போல நடந்துகொள்கிறது.ஒவ்வொரு முறை சென்னை திரும்பும்போதும் அடுத்த முறை மும்பைக்கு வரத் தேவை இருக்கக் கூடாது என்றே நினைத்துக் கொள்கிறேன். காரணம், தாய்மொழி மீது இருக்கும் அன்புதான். ஆனால் சென்னையின் ஆட்டோ,சினிமா, நாடகச் சூழல் என்னை அவ்வப்போது இளைப்பாற மும்பைக்குத் துரத்திவிடுகின்றன..
நன்றி. குமுதம்...
Sunday, December 28, 2008
தி.நகர்-- நடேசன் பார்க்--- பதிவர் சந்திப்பு 27.12.08--- தங்கமணி
சந்திப்பு ஆரம்பமாகியிருந்தது. அதிஷா தனியாக நின்று செல் பேசிக்கொண்டிருந்தார்.
வந்திருந்தவர்கள்
1. டோண்டு
2.ஜியோராம் சுந்தர்.
3.கேபிள் சங்கர்
4.காவேரி கணேஷ்
5.லக்கி லுக்
6.அதிஷா
7.தாமிரா
8.நர்சிம்
9.முரளிகண்ணன்.
10.அக்னி பார்வை
12.பாலபாரதி
14.கார்க்கி
15.இளவஞ்சி
16.பாபு ( தமிழ்கணிணி)
17.தராசு
18.ராஜராஜன்
19.ஊர்சுற்றி
20. ஜோசப் பால்ராஜ்
21.பாலு
22.புதுகை அப்துல்லா
23.குகன்
+ 3 வாசகர்கள் ( பெயர் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)
திருமணமானவர்களின் பிரச்சினை பற்றி ரொம்ப சீரியஸா பேசிக்கிட்டு இருந்தாங்க. காமெடியா பேசவேண்டிய மேட்டர் எப்படித்தான் சீரியஸ் மேட்டரா ஆச்சோ?. டோண்டு சார் நேபாளிகளின் திருமணமுறை பற்றி தெரியாத மேட்டரையெல்லாம் சொன்னார். திடீர்னு பாலபாரதி திருமண வாழ்க்கையில் ஆண்களுடைய டாமினேஷன் தான் அதிகம்னு ஒரு குண்டை தூக்கிப்போட்டுட்டார். நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.. என்னத்த சொல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்..... நீங்களே ஒருநியாயத்தை சொல்லுங்க. அப்படியே பேச்சு ஒரின சேர்க்கை பற்றி திசைதிரும்பியது. அதிஷா இதுக்கு ஆதரவு கொடுத்ததால "அவனா நீ" அப்படி சொல்லிட்டு நகர்ந்து உட்கார்ந்தார். நம்ம தங்கமணித்தாமிரா " கல்யாணம் தேவையில்லை காதல் ஓகே" ( இருங்க ஊர்ல இருந்து அண்ணி வரட்டும்)என்றார். ஒருவேளை படிக்கும் போதும், திருமணத்திற்கு முன்னாலும் ஏகமா லவ்விக்கிட்டு இருந்திருப்பாரோ ?????!!!!!!
பேச்சு அரசியல் பக்கமும், மீடியாக்களின் செயல்பாடு பற்றியும் திரும்பியது.வருகிற மக்களவைத்தேர்தலில் திமுகவுக்கு எப்படியும் 20 சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னார். அப்படியே திருமங்கலம் தேர்தலில் அதிமுக ஜெயிக்கனும் என்றும். இப்படி நடந்தால் திமுக உஷாராகும்னு சொன்னார். அஞ்சா நெஞ்சன் அவ்வளவு எளிதில் விட்டுவிடுவாரா???.. மீடியாக்களின் செய்தி வெளியிடும் முறை குறித்து பாலபாரதி குமுறிட்டார்.( மனுஷர் எதை பற்றி பேசினாலும் ஓவர் டென்சன் ஆகிறார்). இவ்வளவு கூத்தும் நடக்கும்போது கார்க்கியிடமும், தாமிராவிடமும் சில சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றேன். கொசுக்கடி அதிகமானதால் அப்படியே டீக்கடைக்கு நகர்ந்துவிட்டோம். கடைசி நேரத்தில் ஜோசப் பால்ராஜ் இணைந்துகொண்டார்.வீரத்தளபதி ஜேகே ரித்தீஷ் மன்றத்திலிருந்து என்ன பரிசு கொடுக்கபோகிறீர்கள் என்று அப்துல்லா அண்ணாச்சியிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிவிட்டு ராஜராஜனுடன் சைதாப்பேட்டை வந்து பின் பஸ் ஏறினேன். தமிழ் எழுதும் முறை குறித்து ராஜராஜன் பல யோசனைகள் சொன்னார்.
வீட்டை அடையும் போது மணி 8:45. சன் டீவியில் அதிரடி சிங்கர் ஓடிக்கொண்டிருந்தது.போட்டியாளர் " நீயா பேசியது என் அன்பே" என்றபாடலை நரம்பு புடைக்க பாடிக்கொண்டிருந்தார். பாடல் முடிந்ததும் ஈரோடு மகேஷ் உங்க தாடிக்குப் பின்னால் யாருங்க ?? என்று கலாய்த்தார். இந்தக் கேள்வி எனக்கு வந்தது. " வேற யாரு இதுக்கு பின்னாடி நீதான்" முடிப்பதற்குள் ணங்......அவ்வ்வ்வ்...........
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Thursday, December 25, 2008
2008ன் சிறந்த மொக்கை திரைப்படங்கள்.--என் பார்வையில்
6. குசேலன்
கிளிய வளர்த்து பூனை கையில கொடுத்த மாதிரி, கதபறயும் போள் எனும் அருமையான கதையை டைரக்டர் வாசு கையில கொடுத்ததால இந்த படம் சிறந்த வரிசையில வர வேண்டியது, மொக்கையில வந்திடிச்சி. இந்த ஜென்மத்துல ரசினி காந்த் வாசு இருக்குற பக்கம் தல வச்சி கூட படுக்க மாட்டார். கிளைமாக்ஸை மட்டும் நம்பி திரைக்கதையை கொத்தி கூறு போட்டுட்டாரு நம்ம டைரக்டர்.ரசினி படம்னாலே பாட்டுதான் ஹிட்டாவும். ஆனா எல்லா பாட்டுமே....????/ நயந்தாரா குனிவது, சோனா வின் மேல் வச்ச நம்பிக்கையை கொஞ்சம் திரைக்கதை மேல் கவனம் செலுத்தியிருந்தால் கண்டிப்பா ஹிட் ஆகியிருக்கும். சூப்பர் ஸ்டாருக்கு எந்திரனாவது எந்திச்சி நிக்கும் என்ற நம்பிக்கையில் இருப்போம்.
5.குருவி
என் தல விசய் படம் இந்த மொக்கையில வந்ததுக்கு என் மனசு அழுதுப்பா............அவ் அவ்வ்..என்ன பண்றது... கடப்பா மேட்டர் மட்டும் இல்லைனா படம் டப்பா ஆகியிருக்கும். படத்துல விசயின் பல சாகசங்களால் தான் இந்த இடத்துக்கு வந்திருக்கு. ஓட்டைக் காரை நல்லா ஓட்டி ஜெயிப்பது-- தலாஇக்கு ஆப்பு வச்சதா நினச்சி தனக்கே ஆப்பு வச்சிக்கிட்டார். ரெயில்வே பாலத்தை அசால்டா தாவுறதுன்னு சும்மா கில்லி மாதிரி சுத்தி சுத்தி அடிச்சாரு.. ஆனா என்ன பண்றது சரக்கு இல்லாம போச்சே.....பேசாம இந்தியா சார்பா ஒலிம்பிக்ல நீளம் தாண்டுவதில் கலந்திருந்தா கூட ஒரு பதக்கம் கிடைச்சிருக்கும்.. இல்ல பார்முலா 1 ரேஸ் ல கலந்துகிட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கலாம். இந்தியா ஒரு விளையாட்டு வீரனை மிஸ் பண்ணிடுச்சிப்பா.... வில்லு சும்மா விர்ர்ருனு வருமா??
4.சத்யம்
இந்தப்படம் வெளிவருவதற்கு முன்னால இன்னா பில்டப் கொடுத்தாங்கோ..வசூல்ல அப்படியே பிச்சிக்கிட்டு போகனும்னு பாத்தாங்க.. ஆனா தியேட்ட்ர வுட்டே பிச்சிக்கிட்டு போயிடுச்சி.. அண்ணன் விசாலு உடம்பை ஏத்துறேன்னு சொல்லி சும்மா சோனி பையன் மாதிரி வந்து நின்னாரு பாருங்க ... முடியல.. அதுவும் கிளைமாக்ஸ்ல ரெண்டு டுப்பாக்கிய வச்சிக்கிட்டு சும்மா டமார் டம்மர் நு சுட்டுக்கிட்டே மொட்டை தலையோட வில்லன ரணகளம் பண்றதுதான் உச்சகட்ட காமெடி. இந்த படத்துக்கு இசை ஹாரிஸ்னா யாராவது நம்புவாங்களா?.... டைரக்டருக்கு இதுதான் முதல் படமாம். அவரோட எதிர்காலத்துல விசாலு விளையாடிட்டாரு.
3.ஏகன்
அட தலயோட படம் சிரிப்பு சிரிப்பா வருதுப்பா.. மொத்தத்துல இந்த படமே சிரிப்பு படம் தான். பின்ன தல காலேஜ் பையனா வருவாரு பாருங்க... !!!!! முடியலைங்க....அவ் அவ்... ராஜூ சுந்தரம் பேசாம தன்க்கு தெரிஞ்ச வேலையவே பாத்துருக்கலாம். தலயோட டான்ஸ் தான் ஹைலைட்.. ஷாலா ஷாலான்னு தொப்பய வச்சிக்கிட்டு ஆடுற ஆட்டம்............. தாங்காது இந்த பூமி?????. தலைக்கு அடுத்தப்படமாவது நல்லா களையா வருமானு பாக்கலாம்.
2.பழனி
மசாலா படம் எடுக்கிறேன்னு சொல்லிட்டு காமெடிப்படமா எடுத்து தமிழ் மக்களை சிரிக்க வைக்கும் பணியை நல்லாவே செய்றார் பேரரசு. நம்ம பரத்து இதுல அடிக்கிற பன்ச் டயலாக்கால தான் இது ரெண்டாவது இடத்துக்கு வந்திருக்கு. போதாக்குறைக்கு டைரக்டர் பேரரசு இன்சுபெக்டரா வந்து டெரரா நடிப்புல பின்னி எடுப்பார்.நம்ம குசுபு அக்கா சென்டிமென்டுல பின்னியிருப்பார். இந்த படம் சன் டிவியில டாப் டெனல முதல் இடத்துல இருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை....
1.
....
...
....
....
....
....
....
.....
.....
நாயகன்
நம்ம பதிவுலகம் எதிர்பார்த்த மாதிரியே ரொம்பக் கஷ்டப்பட்டு முதல் இடத்துக்கு வந்திருக்கு.. நம்ம வரிசையில் உள்ள படங்களை விட 0.00001 மதிப்பெண் அதிகம் பெற்று முதல் இடத்தை பிடிச்சிருக்கு. இந்த படத்த பற்றி என்ன சொல்ல நம்ம பதிவுலக மக்கள் ஏற்கனவே வீரத்தளபதி பேர்ல பிளாக் ஆரம்பிச்சி கலக்குறாங்க. இந்தபடம் முதல் இடத்துக்கு வருவதற்கு முழுமுதற்காரணம் சிங்கம் ஜேகே ரித்தீஸ்தான். இருந்தாக்கா அள்ளிக்கொடு இல்லனா சொல்லிக்கொடு பாடல் காட்சி ஒன்றே போதும்..... கிராபிக்ஸ்னா என்ன என்பதை இந்த பாடல் காட்சி மூலம் தான் கத்துக்கனும்.. நிலா நிலா ஓடி வா பாடல் காட்சியில் நம்ம சிங்கம் எல்லா எக்ஸசைசையும் செஞ்சு முடிச்சிருவார். அவர் ஆடும் போதும், டயலாக் பேசும் போதும் அவர் கண்ணில் தெரியும் தன்னம்பிக்கைதான் படத்துக்கு மிகப்பெரிய பலம். ரவுடிய ஊஞ்சல் கட்டி அடிக்கிற மேட்டர்தான் நம்ம தமிழ்நாடு காவல்துறையில ஹைலைட்டான பேச்சாம்.
முதலிடத்துக்கு வந்த வெற்றியை வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்ற போர்ப்படைத்தளபதி கார்க்கிக்கு அர்ப்பணிக்கிறேன்.( ஏதோ பரிசு கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க... அதான் ஐஸ் )
டிஸ்கி: உங்க ஓட்டை நல்லா குத்துங்கடே...







