Thursday, April 2, 2009

த்ரீ ரோஸஸ் மைண்ட் ஷார்ப் டீயும்-- புரு காபியும்--- ரங்கமணிகளும்

பொதுவாக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை ரசிப்பது கிடையாது.. அப்படியே அடுத்த சேனலுக்கு தாவி விடுவேன் என் கையில் ரிமோட் இருந்தால்... பெரும்பான்மையான நேரங்களில் தங்க மணி கையில் ரிமோட் இருப்பதால் தற்போது விளம்பரங்களையும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன்... என்னைக்கவர்ந்த இரண்டு விளம்பரங்கள்.



1.த்ரீ ரோஸஸ் மைண்ட் ஷார்ப் டீ

த்ரீ ரோஸஸ் மைண்ட் ஷார்ப் டீயைக் குடிக்கும் ரங்கமணி தன்னுடைய தங்க மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுகிறார்... ஆனால் தங்கமணியோ தன்னுடைய பிறந்த நாள் அடுத்த மாதம் என்கிறார்.. அடுத்த சீனில் தங்கமணி தான் கட்டியிருக்கும் புடவையை காண்பித்து நல்லா இருக்கா என் கேட்க, ரங்கமணி போன வாரம் உங்க அம்மா வீட்ல கட்டினது நல்லா இருந்தது என சொல்ல ரொமான்ஸாகிறார் தங்கமணி.


2.புரு காபி
தஙமணி கொஞ்சம் டென்சனாக காபி குடிக்கிறார் ரங்க மணிக்கு..அதை புரிந்து கொண்ட ரங்கமணி உடனே ரேடியோவில் தன்னுடைய தங்கமணிக்காக பாடல் போட சொல்கிறார்... அந்த பாடலை கேட்டு தங்க மணி நார்மல் மூடுக்கு வருகிறார்.


இந்த இரண்டு விளம்பரங்களும் என்ன சொல்ல வருகின்றன??....ரங்கமணிகளே உஷாரா இருங்க உங்க தங்கமணிய இந்த மாதிரி சின்ன விசயத்துக்கெல்லாம் டென்சன் ஆக்காதிங்க அப்படின்றாங்க...யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி.... ஆங்......


Sunday, March 29, 2009

சென்னை எஸ்சிவி-- ஹாத்வே கேபிள் யுத்தம்--- ஒரு அலசல்....

கேபிள் டிவியின் அடுத்த கட்டமான டிடிஎச் வளர்ந்து வரும் இந்நிலையில் சென்னையில் தொழில் போட்டி காரணமாக எஸ்சிவியும் ஹாத்வேயும் அடித்துக்கொள்ளாத குறையாக களத்தில் இருக்கின்றன.. இவர்களுக்குள் ஏற்படும் இந்த மாதிரியான போட்டிக்காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவது கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மட்டுமே. இந்தியாவிற்கு டிடிஎச் டெக்னாலஜி வந்து 5 வருடங்கள் தான் ஆகிறது... அதற்கு முன்பு வரை கேபிள் டிவி ஆப்பரேட்டகள்தான் ஒன் மேன் ஆர்மி ஆக இருந்தனர்... எப்போது இந்த தொழிலில் அரசியல் குறுக்கிட ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து பாதிக்கப்படுது இந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தான்...


கொஞ்சம் ஒரு 10 வருசம் முன்னாடி போகலாம்.

10வருசம் முன்னாடி சென்னையில் ஒவ்வொரு ஏரியாவிலும் குறிப்பிட்ட ஆப்பரேட்டர்கள் எம் எஸ் ஓக்களாக செயல் பட்டுக் கொண்டிருந்தனர்... அப்போதைக்கு பெரிய எம் எஸ்ஓ என்று பார்த்தால் சிட்டி கேபிளும், ஹாத்வே மட்டுமே... இந்த சூழ்நிலையில் சூப்பர் டூப்பர் என்ற ஒரு கம்பெனி சென்னையில் உள்ள அனைத்து ஆப்பரேட்டர்களையும் தனக்கு கீழ் கொண்டுவர அஜால் குஜால் வேலையை செய்ய ஆரம்பித்தது.. அது வரை இந்த தொழிலை அமைதியாக நடத்திக்கொண்டிருந்த கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு ஆரம்பித்தது தலைவலி.. சூப்பர் டூப்பர் பின்னால் அதிமுக இருந்ததும் ஒரு காரணம்.. மேலும் சூப்பர் டூப்பர் அடாவடியாக செயல் பட்டதாலும் பல அரசியல் குறுக்கீடு அதிகமாக ஆப்பரேட்டர்களின் நிலை தடுமாறத் தொடங்கினர். அதுவரை வெறும் பார்வையாளராக கோலாச்சி கொண்டிருந்த சன் குழுமத்தினர் சில ஆப்பரேட்டர்களின் உதவியுடன் எஸ்சிவியை ஆரம்பித்தது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்களில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆப்பரேட்டர்கள் திமுகவினராக இருந்தது வசதியாக போய்விட்டது.. 1999ல் எஸ் சி வி சென்னையில் ஆரம்பிக்கும்போது ஹாட்வேயும், சிட்டி கேபிளும் எம் எஸ் ஓக்களாக இருந்தது... சிட்டி கேபிளின் சாம் ராஜ்யம் எஸ் சி வியினால் முடித்து வைக்கப்பட்டது... அந்த நேரத்தில் சென்னையில் சுமார் 60 சதவீத இணைப்புகள் ஹாத்வேயிடம் இருந்தது.



2003ஆம் ஆண்டு எஸ் சி விக்கும் ஹாத்வேக்கும் கே டிவியை வைத்து பிரச்சினை கிளம்பியது... அதை சாக்காக வைத்து சன் குழுமமம் கே டிவியை ஹாத்வேக்கு தராமல் இரண்டு நிறுவனங்களும் கோர்ட்டை நாடியது... கேடிவி இல்லாத காரணத்தால் ஹாத்வேயின் பல ஆப்பரேட்டர்கள் எஸ் சிவிக்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்... இதனால் சென்னையின் கேபிள் இணைப்பில் சுமார் 80 சதவீதம் எஸ் சிவியின் கீழ் வந்தது... இதே நேரத்தில் ஹாத்வே நிறுவனத்திற்கு ஆளுங்கட்சியான அதிமுக ஆதரவு இருந்தும் தமிழ் சேனல் இல்லாத காரணத்தால் ஹாத்வேயால் ஒன்றும் செய்ய இயலவில்லை..அதுவரை இலவசமாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த சன் டிவியும் கட்டண சேனலாக மாறியதால் ஹாத்வேயின் நிலை மேலும் சிக்கலானது... இந்த பிரச்சினையும் கோர்ட் வரை சென்றது....

 இந்நிலையில் கோர்ட் தீர்ப்பின் மூலம் சன் நெட்வொர்க் ஹாத்வேக்கு தனது சேனல்களை தர சம்மதித்தது.. அப்புறம் 2007 ல் நடந்த பிரச்சினை உங்களுக்கே தெரியும் இந்த பிரச்சினைக்கு பிறகு ஆளும் திமுகவின் ஆதரவு ஹாத்வேக்கு கிடைக்க மீண்டும் கேபிள் யுத்தம் ஆரம்பமாகியது... சென்னையில் மட்டும் அல்லாது எஸ் சிவியின் கட்டு பாட்டில் உள்ள நகரங்களிலும் குறிப்பா மதுரையில் ராயல் கேபிள் விசன் ஆரம்பித்து மதுரையில் சன் நெட்வொர்க் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டது... சென்னையில் பழையபடி ஆப்பரேட்டர்கள் ஹாத்வேயில் இணைந்தனர்... இணைத்து வைக்கப்பட்டனர்.... சில புத்திசாலி ஆப்பரேட்டர்கள் இரண்டு நிறுவனத்தின் இணைப்புகளையும் வைத்திருந்தனர்.... நாளைக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று... இவ்வளவு நடந்தும் சன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இயலாத நிலையில் அரசு கேபிள் டிவி அவசரமாக ஆரம்பிக்கப்பட்டது.. அரசு கேபிளும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை காரணம் ஸ்டார் குழுமம் மற்றும் சன் நெட்வொர்க் தனது சேனல்களை வழங்கவில்லை...தமிழ்நட்டில் உள்ள பெரும்பான்மையான ஆப்பரேட்டர்கள் திமுகவினராக இருந்தும் அரசு கேபிள் செயல் படாததற்கு சன் நெட்வொர்க் சேனல்களும் ஒரு காரணம்.. சன் சேனல்களை புறக்கணித்து தங்கள் தொழிலை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சமும் ஒரு காரணம். இப்போது அரசு கேபிள் இருக்கிறதா என்பதே ஒரு சந்தேகம்.....



போன வருசம் கடேசியில் மீண்டும் கண்கள் பணித்து இதயம் இனித்ததும் பழைய ஆட்டங்கள் ஆரம்பித்து விட்டன.. கிட்டத்தட்ட 1மாதமாக நடக்கும் கேபிள் யுத்தம் இன்று வெளிவந்து விட்டது... எஸ் சிவி இணைப்புகள் உள்ள ஏரியாக்கள் அனைத்திலும் இன்று காலை முதல் படம் தெரியவில்லை... காரணம் கேட்டால் எதிர் நிறுவனத்தினர் சென்னையில் உள்ள எஸ் சிவிக்கு சொந்தமான அனைத்து கேபிள்களையும் துண்டித்து விட்டதாக தகவல்...



ஒட்டு மொத்தமாக இந்த ஆட்டத்தில் பாதிக்கப்படுவது


1. கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள்


2. மக்கள்


3. செட் டாப் பாக்ஸ்


இந்த இரு நிறுவனங்களும் அடித்து கொள்வதன் மூலம் டிடி எச் இணைப்பு அதிகமாவதற்கும் காரணமாகிறார்கள்..


இந்த இரண்டு பூனைகளுக்கும் மணி கட்ட போவது யார்???????????

Friday, March 27, 2009

கபடி ,கபடி,கபடி,கபடி (வெண்ணிலா கபடிக் குழு)

என்னடா இது படம் வந்து ரொம்ப நாளாச்சே இப்ப விமர்சனமா? அப்படியெல்லாம் கேட்கக்கூடாது.இன்றைக்குத்தான் வெண்ணிலா கபடி குழு படம் பார்த்தேன்.... பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் படங்களின் வரிசையில் கிரமத்து நிகழ்வுகளை கண் முன்னே கொண்டுவந்திருக்கும் படம் இந்த கபடி படம். முன்னிரண்டு படங்களும் கிராம வன்முறையையும், காதலையும் சொல்லிய படங்கள்.இவற்றிலிருந்து வேறுபட்டு முழுக்க முழுக்க கபடியை மையமாக வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.



இயக்குனர் சுசீந்திரன் காட்சியமைப்புகளுக்கும் வசனத்திற்கும் மெனக்கெடவில்லை. ஒரு கிராமத்தில் பொங்கல் பண்டிகை நடந்தால் என்ன நிகழ்வுகள் இருக்குமோ அதை அப்படியே கொண்டு வந்திருப்பதில் அவரது சாமர்த்தியம் பலே.... புதுமுகம் விஷ்ணு கிராமத்து இளைஞனாக நடிப்பில் பாஸாகிவிட்டார்... கதாநாயகியிடம் பேசும் போது வெட்கப்படுவது முதற்கொண்டு எல்லாக்காட்சியிலும் அசத்துகிறார்...அவரின் தோழர்களாக வரும் அனைவரின் நடிப்பும் நம்மை கட்டிப்போடுகிறது.. அதுவும் பழனி மேட்சில் ஒரு பாயிண்டில் ஜெயித்ததாக குண்டு இளைஞன் கூறுமிடம்...அதற்கு அந்த தாத்தா நான் சாகிறதுக்குள்ள நீங்க கப்பு வாங்கிடுவீங்களா??? நக்கலாக கேட்பது.. உரியடி திருவிழாவில் மாமியாரின் ம்னண்டையை பிளக்கும் காட்சி, முக்கியமா பரோட்டா சாப்பிடும் போட்டி காட்சி என படம் முழுக்க கதையோடு ஒட்டிய நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலம்...

இந்த படத்திற்கு கதாநாயகி தேவையா?? என்ற கேள்வி எழுந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் சரண்யா...அந்த குட்டி கிராமத்தில் கேமரா சும்மா பூந்து விளையாடுது... பயிற்சியாளராக வரும் கிஷோர் இருகிய முகத்துடன் அருமையாக நடித்திருக்கிறார்... மதுரையில் போட்டி நட்க்கும் காட்சியில் ஆரம்பிக்கும் வேகம் கிளைமாக்ஸ் வரை பறக்கிறது... சாதி வெறிக்கு சவுக்கடி கொடுக்கும் இடங்களில் வட்டார மொழி பின்னி பெடலெடுக்குது.



சைக்கிளில் செல்லும் ஹீரோவுக்கு வழி கொடுக்கும் பஸ் டிரைவர்... தூரத்து சொந்தம் என சொல்லும் நடுத்தர வயதுக்காரர்... அவருடைய மகள் என ஒவ்வொரு கேரக்டரும் மனதில் நிற்கிறது... கபடி போட்டி காட்சிகள் தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். ஒவ்வொரு போட்டிக்கும் சுவாரஸ்யம் கூடுகிறது... படத்தில் ஒட்டாதது கிளைமாக்ஸ் மட்டுமே.. இந்த படத்திற்கு இந்த கிளைமாக்ஸ் தேவையா என்ற கேள்வியும் எழுகிறாது.... ஒரு வேளை கிளைமாக்ஸ் மட்டும் பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் படங்களின் சென்டிமென்டோ என்னவோ??


மொத்தத்தில் விழுந்து கிடக்கும் கபடி விளையட்டுக்கு ஒரு ஆக்ஸிஜன் இந்தப் படம்....


டிஸ்கி: நான் எழுதும் முதல் திரைவிமர்சனம் இதுதான்... ஓட்டு போட்டு பதிவ சூடாக்கிருங்க...

Monday, March 23, 2009

தேர்தல்-- கூட்டணி குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பமாகுது.. ஆனால் பல மாநிலங்களில் கட்சிகல் தங்களுடைய கூட்டணி குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாமல் இன்னும் தடுமாற்றத்துடன் இருக்கின்றன. மாநிலக் கட்சிகளின் ஆட்டத்தை காங்கிரசாலும், பிஜேபியாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.. இதுல மூன்றாவது அணிய வேற ஆரம்பிச்சிட்டாங்க.... இந்த உச்சக்கட்ட குழப்பத்தில் அரங்கேற்ம் காமெடி காட்ட்சிகள் மக்களை சலிப்படைய செய்திருக்கிறது.


 காங்கிரசுக்கு நாமம் போட்ட லல்லு


பீகாரில் மொத்தமுள்ள தொகுதிகளில் 3 தொகுதியை மட்டுமே காங்கிரசுக்கு ரொம்ப பெரிய மனசு பண்ணி ஒதுக்கினார் லல்லு. ஆனா காங்கிரசு "ஐயா நாங்க நாட்டையே ஆளுறவங்க கொஞ்சம் மேல போட்டுக் கொடுங்க என காலில் விழாத குறையாக கெஞ்சி பார்த்தும் லல்லு மசியவில்லை... வேறு வழியில்லாமல் காங்கிரசு 37 தொகுதிகளில் தனித்து போட்டி என அறிவித்து விட்டது.இவ்ளோ நடந்த பிறகும் லல்லு தான் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய்ப்பொவதில்லை என்றும் இன்னும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருப்பதாகவும் கூறுகிறார்....

கம்யூனிஸ்ட்களின் உச்சக்கட்ட காமெடி அறிக்கை



சில மாதங்களுக்கு முன்பிருந்து காங்கிரசை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் தேர்தலுக்கு பிறகு மதச்சர்பற்ற அரசு அமைய காங்கிரஸ் தங்களுக்கு உதவ வேண்டும் என்று பிரகாஷ் கரத் அறிக்கை விட்டுள்ளார்... இதுதான் இந்த ஆண்டின் சிறந்த அரசியல் பல்டி.... வாழ்க கம்யூனிஸ்ட்களின் மதச்சார்பின்மை


தமிழகத்தில் கட்சிகளின் நிலை


இன்று வரை தமிழகத்தில் இன்னும் தெளிவான கூட்டணி அமையவில்லை..காரணம் தேமுதிக மற்றும் பாமக... மக்களுடந்தான் கூட்டணி என்று விசயகாந்த் அறிவித்தாலும் அவர் இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வரவில்லை...40 தொதிகளுக்கும் வேட்பாள்ரை அறிவித்தாலும் மதுரைக்கு தெற்கே தேமுதிகவின் நிலை பரிதாபம்தான்.. காரணம் போன சட்டமன்றதேர்தலில் மதுரை மற்றும் வடதமிழகத்தில் கணிசமான வாக்குகள் பெற்ற தேமுதிக திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் சொற்ப வாக்குகளே வாங்கியது. இருந்தாலும் ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி அப்படின்றாரோ கேப்டன்.


பாமகவின் வியாபாரக்கணக்கு இன்னும் முடியவில்லை போலும்...அதனாலதான் இன்னும் ஒரு தெளிவில்லாமல் இருக்காங்க போல. எப்பவுமே அய்யா சூப்பரா கணக்கு போட்டு கச்சிதமா முடிப்பார்.... இப்ப என்ன ஆச்சு???... இப்ப இருக்கிற அமைதியை பார்த்தால் அம்மாவுடன் ஐக்கியமாகிவிடுவார் என்பது போல் தெரிகிறது.


தமிழகத்தில் பிஜேபியின் நிலைதான் மிக பரிதபமாக இருக்கிறது.. அவர்கள் பெரிதும் எதிர்பார்த்த அம்மா இப்படி நட்டாத்துல விடுவாங்கன்னு கனவுல கூட நினைத்திருக்கமாட்டாங்க.... கவலையேப்படாதிங்க தேதல் முடிவு இந்திய அளவில் உங்களுக்கு சாதகமாச்சுன்னா அமமா உங்களுக்கு கண்டிப்பா கை கொடுப்பாங்க.


மொத்தத்தில் நாளுக்கு நாள் தேர்தலை முன்னிட்டு மிக சிறப்பான காமெடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன.. மக்களே உசாரா இருங்க........

Saturday, March 21, 2009

ரேஷன்-சீனி, கோதுமை அரிசி -ரெயில்வேயின் ஆன் லைன் ரிசர்வேசன் யாருக்காக....

அப்படி இப்படினு பள்ளிக்கரணை முகவரிக்கே ரேஷன் கார்டை மாற்றிவிட்டேன். இந்த மாதம் ரேஷனில் பொருள் வாங்கனும் என்பதால் போன புதன் கிழமை ரேஷன் கடைக்கு சென்றிருந்தேன்.. கூட்டம் சற்று அதிகமாவே இருந்தது. என்னன்னு கேட்டா இன்னைக்குத்தான் அரிசி போடுறாங்களாம்.. ஆண்கள் வரிசையைவிட பெண்கள் வரிசை நீண்டிருந்தது..கடைக்காரர் ரொம்ப டென்சனா பில் போட்டுக்கிட்டு இருந்தார். அவரின் உருவமும் உயரமும் நடிகர் செந்திலை போன்று இருந்ததாலோ என்னவோ பெண்கள் வரிசையில் இருந்து அவரை பற்றி ஒரே கமெண்ட். ஆண்கள் வரிசை மிக அமைதியாக பெண்கல் வரிசை தள்ளுமுள்ள்விலும், சண்டையிலும் கடைக்காரர் டென்சன் ஆகிட்டார்.

"ஏம்மா இப்படி சத்தம் போட்டுக்கிட்டு இருந்தா நான் பில் போடமாட்டேன்.."

"அது எப்படி நான் பக்கத்தில் வந்ததும் பில் போடாம இருக்கீங்க இவரு எப்பவுமே இப்படித்தான்.. "நமட்டு சிரிப்புடன் நடுத்தர வய்து பெண்மணி

'ஆம்பிளைங்க எவ்ளோ அமைதியா நிக்காங்க... ஏம்மா இப்படி"

"என் அருகில் நின்றவர் நாங்கெல்லாம் தண்ணி உள்ள போற வரைக்கும் தான் அமைதி... அதுக்கப்புறம்"

"நானும் ஒவ்வொரு மாசமும் கவனிக்கிறேன் நீ வேற பொருள் எதுவும் வாங்க மாட்டேங்குற.. அட்த்த மாசம் எப்படி பொருள் வாங்குறன்னு பாக்குரேன்.".. இது கடைக்காரர் ஒரு பெருசுவிடம் காட்டமாக சொன்னது.

என் முறை வந்தது "என்ன சார் வேணும்?"

"சீனி, கோதுமை அரிசி பாமாயில்"

"வேற ஏதும் ?"

"கடுகு இருக்கா?"

"இல்லை"

"மிளகு?"

"இல்லை"

"அப்ப எதுவும் வேணாம்."

"வேற ஏதாவது வாங்கனும் முதல் தடவ வாங்குறீங்க"

"அதான் பாமாயில் வாங்கிட்டேனே.."...

இல்ல சார் இந்தாங்க என்று கோல்கேட் பற்பசையை கையில் வலுக்கட்டாயமாக திணித்தார்

வலுக்கட்டாயமாக இதை வாங்கித்தான் ஆகனும் என்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரையோ என்னவோ????.... வீட்ல வந்து வாங்கி கட்டிக்கிட்டதுதான் மிச்சம் பற்பசை வாங்கியதுக்காக..

-----------------------*--------------------------*-------------------------------------*-------------------
ரெயில்வேயின் ஆன் லைன் ரிசர்வேசன் யாருக்காக....


ஒவ்வொருவாட்டியும் ஊருக்கு போறதுக்கு டிக்கெட் ரிசர்வேசன் பண்ணுவதற்கு வரிசையில் நின்னு மண்டை காய்வதாலும், சர்டிபிகேட்ல அது சொத்தை இது சொத்தன்னு அது வேற டென்சன் படுத்துவதாலும் இந்த முறை ஆன்லைன் ரிசர்வேசன் பண்ணலாம் அப்படினு நெட் ஓப்பன் பண்ணி உள்ள போனா ஜெனரல் ,சீனியர் சிட்டிசன் கோட்டா இருந்தது.. ஆனா உடல் ஊனமுற்றோருக்கான கோட்டா எதுவும் அந்த ரிசர்வேசன் பக்கத்தில் இல்லை..... ரெயில்வே கால் சென்டருக்கு போன் பண்ணி கேட்டா சரியான பதில் இல்லை.


நீங்களே சொல்லுங்க அப்ப என்ன இதுக்கு ஆன் லைன் ரிசர்வேசன் இருக்கு? அது யாருக்காக...

Tuesday, March 17, 2009

சிவசைலம் -- கடனா நதி அணை--- படங்கள்

சிவசைலம் கடனா நதி அணை தென்காசி-அம்பசமுத்திரம் மெயின் ரோட்டில் ஆழ்வார்க்குறிச்சியில் இருந்து சுமார் 8கி.மீ தூரத்தில் இருக்கிறது... மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்த அணை அமைந்துள்ளது... இந்த அணைக்கு தோணியாறு மற்றும் கல்லாறுகளில் இருந்து வரும் நீர்தான் கடனா அணையில் தேக்கப்படுகிறது. தோணியாறு அணையில் வந்து கலக்குமிடம் பனிஞ்சி என அழைக்கப்படும்.... இந்த இடம் மிக அருமையாக இருக்கும்.... அணையின் அடிவாரத்தில் உள்ள பூங்கா பரமரிப்பின்றி புதர்களாக மண்டி கிடக்கிறது.. மற்றபடி ஒரு அருமையான இயற்கை சூழல் நிறைந்த இடம் ...........ஒரு வாட்டி போய் பாருங்கடே...........



தூரத்தில் தெரிவதுதான் எங்க ஊரு
தோணியாறு




டிஸ்கி: புது கம்பெனியில் ஆணி புடுங்குற வேலை அதிகமா இருப்பதால் நான் ரொம்ப பிசி.மேலும் எனது பாலோயர்ஸ் லிஸ்ட் காணாம போயிடிச்சி..யாராவது கம்பியூட்டர் புலிகள் இருந்தா சொல்லுங்க.... நம்ம ஜமால் சொன்ன முறையிலும் வரல......... படங்கள் தந்து உதவிய தம்பி மீரான் அன்வர்க்கு ஒரு ஸ்பெசல் டேங்சு..http://www.meerananwar.blogspot.com/

Tuesday, March 10, 2009

தேர்தல் லவ்வுகளும்-- மேரேஜ்களும்-- டைவர்ஸ்களும்...

மக்களவைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தங்களுடைய வேலையை ஆரம்பித்துவிட்டன... இதில் பல டைவர்ஸ்களும்,மேரேஜ்களும்,லவ்வுகளும் வரும் தேர்தல் தேதிக்குள் நடக்கலாம். இந்திய அளவில் 10 ஆண்டு காலமாக கொஞ்சி குலாவிய பிஜேபியும்,பிஜேடியும் டைவர்ஸ் பண்ணிக்கொண்டன.இதில் புது ஜோடியாக பிஜேடியுடன் கம்யூனிஸ்ட்கள் இணைந்து கொண்டது. மிகப்பெரிய காமெடி... அதேப்போல் காங்கிரசுக்கும்,எஸ்பிக்கும் இடையே புகைச்சல் வெளியே வந்துக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு கட்சிகளோட தேர்தல் லவ்,மேரேஜ், டைவர்ஸ் எப்படினு சொல்றேன்.. யாரும் சீரியஸா எடுக்க கூடாது.. ஒன்லி காமெடியா எடுத்துக்கணும்.... சொல்லிட்டேன்



திமுக-- காங்கிரசு ( கணவன் --மனைவி)


2004ல் புதுமணத் தம்பதிகளான திமுகவும் காங்கிரசும் இப்பவும் சோடியா இருக்குறது பல பேர் கண்ணை உறுத்துகிறது... இடைப்பட்ட காலங்களில் பல புகைச்சல் ஏற்பட்டாலும் தற்போது ஒருவரை ஒருவர் தாங்கிப்பிடித்து உறுதியாக நிற்பதை பார்த்தால் கண்ணுல தண்ணிதான் வருது. திமுகவுக்கு இது பாதுகாப்பாக தெரிந்தாலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வருவதால் காங்கிரசுக்கு இளம் பெண்ணான தேமுதிக மேல் ஒரு கண்.. ஆனா இளம்பெண் தங்கள் குடும்பத்தில் வருவது திமுகவுக்கு கொஞ்சம் பயம்... ரெண்டு பெண்களும் சேந்து நமக்கு ஏதாவது வச்சிட்டாங்கன்னா.... இது போக காங்கிரசுக்குளே ரெண்டு அணி இருக்கு திமுக காங்கிரசு--அதிமுக காங்கிரசு... இந்த ரெண்டையும் சாமாளிப்பதற்கு திமுக தண்ணி குடிக்கனும் போல... அதனால் குடும்பத்துக்குள்ள என்னதான் உள்குத்து வேலை நடந்தாலும் வெளியே எப்பவுமே ஒற்றுமைதான்.. வேற வழியில்ல ... இப்போதைக்கு திமுகவுக்கு ஏகப்பட்ட பிரச்சினை இருந்தாலும் 5 ஆண்டுகால மத்திய அரசின் சாதனைகளையும், மூன்றாண்டுகால திமுக அரசின் சாதனைகளையும் ஒழுங்காக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2004ல் பிடித்த இடங்களில் பாதியையாவது தக்க வைக்கலாம்.. அதை விட்டு நாங்க 1975ல் இதை செய்தோம் அப்படினு ஆரம்பிச்சா கஷ்டம்தான்..


அதிமுக- மதிமுக- கம்யூனிஸ்ட் ( சர்வாதிகாரி-அல்லக்கை- புதுத்தொடுப்பு)
 

அம்மா 2004ல் வாங்கிய பூஜ்ஜியத்தை அவ்ளோ எளிதில் மறக்க மாட்டார்கள்..அதனால் இந்த வாட்டி எடுக்கிற ஒவ்வொருஅடியையும் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் எடுத்து வைக்கிறாங்க.. அதிமுக-மதிமுக இருவருக்குமே கொள்கை அளவில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தாலும் ஏதோ ஒன்னு ரெண்டு பேரையும் ஒன்னா நிக்க வைக்குது... இப்ப கம்யூனிஸ்ட்டும் ஒன்னா சேர்திருப்பதால் அம்மா கூட்டணி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருப்பதா தெரியுது... எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு... அனா அம்மாவோட பிரச்சாரம் தான் கொஞ்சம் அவங்களுக்கே ஆப்பு வைக்கிற மாதிரி... உதாரணம் திருமங்கலம் இடைத்தேர்தல்... இந்த இடைத்தேர்தலின் போது ஆளும் திமுகவின் மேல ஏகப்பட்ட பிரச்சினை...அம்மா ஒழுங்கா அதைப் பற்றி பேசியிருந்தா திருமங்கலத்துல ஒரு கடும் போட்டியை கொடுத்திருக்கலாம்... ஆனா என்ன செஞ்சாங்க.. தனிநபர் தாக்குதாலில் தேவையில்லாம பேசி தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிட்டாங்க... இதை தவிர்த்து மத்திய மாநில அரசின் மேலுள்ள புகார்கள்,பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்த்தால் அம்மாவுக்கு ஜெயம்..........


பாமக ( ஒரிஜினல் அரசியல் கம்பெனி )



எந்த தேர்தல் அய்யாவோட கட்சி மதில் மேல் பூனை அப்படின்ற அளவுக்கு வந்திடும்.சரியான நேரத்தில யாருடனாவது ஒட்டிக்கொண்டு ஆட்சிக்கு ஆட்சி பவரில் இருப்பதுதான் அய்யாவோட கொள்கை... இந்த வாட்டி யாரோட அக்ரிமெண்ட் போடப்போறாங்களோ? மாநிலத்தில் ஒரு கொள்கை, மத்தியில் ஒரு கொள்கை இதுதான் பாமகவின் தாரகமந்திரம்... உதாரணம் இலங்கைப்பிரச்சினை



தேமுதிக ( இளம் கன்னி)


திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு முன்பு வரைக்கும் இந்த இளம் பெண் மேல் எல்லோருக்கும் ஒரு கண்... கடைகண் பார்வை கிடைக்காதா என்று. வெளியில் ஆயிரம்தாம் திட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள் எல்லா கட்சிகளுக்குமே இதன் மேல் ஒரு இது... ஆனா இடைத்தேர்தலுக்கப்புறம் இந்த இளம் பெண்ணின் நிலை தான் பாவம்... திமுகவா அதிமுகவான்னு குழம்பி போய் மண்ட காஞ்சிட்டு இருக்கு.... இருந்தாலும் கேப்டன் அசரமாட்டார்.. இவங்களுக்குன்னே ஒரு டயலாக் இருக்கு அரசியல்ல நிரந்தர நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது...... பார்க்கலம் இந்த கன்னிப்பெண் யாரோட லவ்வுதுன்னு..


இது போக முதிர் கன்னியான பிஜேபி, வயசுக்கெ வாராத சமக அப்பட்fஇன்னு ஏகப்பட்ட பேர் வரிசையில் நிக்குறாங்க...


விசிக வின் நிலை????

Sunday, March 8, 2009

தங்கமணியும் ---- தலைவலியும்-- பகுதி-2

மகளிர் தின வாழ்த்துக்கள்

தங்கமணி ஊருக்கு போன பிறகு என்னோட பேச்சிலர் ஆடடம் தானாக அதிகமாயிடிச்சி மறுபடியும் .. ஊருக்கு கூப்பிட போனும் அதுக்காக ஆபிஸ்ல ரெண்டு நாள் பர்மிசன் போட்டு வீட்டை நன்றாக சுத்தம் செய்வதே வேலையாபோச்சு. ஊருக்கு பஸ் ஏறின பிறகும் ஒரு சந்தேகம் எல்லாத்தையும் கரெக்டா பண்ணிட்டோமா அப்படின்னு.... 4 பாட்டில் இருந்திச்சி எல்லாத்தையும் வெளியில கடாசிட்டமா அப்படினு ஒரு மிகப்பெரிய சந்தேகம் ...ஆஹா மாட்டினா கஞ்சி முதற்கொண்டு எதுவுமே கிடைக்காதே...((((( சண்டை போடுறதுக்கு உடம்புல தெம்பு கிடையாது அவ்வ்வ்வ்!!!

!தங்கமணியும் சென்னைக்கு வந்தாச்சி....வீட்டைத் திறந்தவுடன்..

"ஸ்மெல் இப்படி அடிக்குது" ( ஆஹா வீட்டை கிளீன் பண்ணினதுக்கப்புறம் ரெண்டு கம்பியூட்டர் சாம்பிராணி, 4 சைக்கிள் அகர் பத்திய கொளுத்தி வச்சேனே அவ்ளோதானா!!!)

"இல்லமா வீடு மூனு நாளா பூட்டியே இருந்திச்சில்ல அதான்..."( அவ்வ்வ்வ்வ்)

"வீட்டுல போட்டது போட்ட படியே கெடக்கு என்னதான் பண்ணினீங்க....."

"எப்ப போன் பண்ணினாலும் துணி துவச்சிட்டிருக்கேன் அப்படினீங்களே இது என்ன இவ்ளோ அழுக்கு துணி......"

"என்னமா பண்றது ஒரு மாசமா நைட் டூட்டி,12 மணிநேர டூட்டின்னு வேலைக்கே நேரம் போயிடிச்சி.... ( தப்பிச்சேன்)"

"ஃபிரிட்ஜ் கிளீன் பண்ணல.. கிட்சன் அப்படியே இருக்கு... எப்பவாவது நான் ஊருக்கு போய்ட்டு வரும்போது ஒழுங்கா வீட்டை வச்சிருக்கீங்களா??????////////"

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா....... இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட வேண்டியதுதான்......... இருந்தாலும் இப்படி பயப்படுறதுக்கு............. கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையே...............இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் ரொம்ப நல்ல பையன்பா................

Monday, March 2, 2009

நண்பன் பதிவர் கடையம் ஆனந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று 02.03.09 நண்பன் கடையம் ஆனந்துக்கு பிறந்த நாள்... வாழ்த்துக்கள் நண்பா.... பதிவெழுத ஆரம்பித்த நாளில் இருந்து நம்ம ஊர் ஆளுங்க பதிவெழுதுறாங்களான்னு ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்தேன்... முதலில் அறிமுகமாகியவர் தங்கமணி தாமிரா...... அடுத்து கடையம் ஆனந்த்... எங்க ஊருக்கு ரொம்ப பக்கத்து ஊர்க்காரர் ஆச்சே.... எந்த விசயத்தை பற்றி எழுதினாலும் மென்மையாகவே எழுதுவார் .. தன் பதிவை படிக்கும் யார் மனதும் புண்படக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருப்பவர்... தற்போது வர் ஊரில் நடந்த திருவிழா பற்றி அழகாக எழுதி வருகிறர்...



கடையம் ஆனந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.........நண்பா இந்த இனிய பிறந்த நாளில் நீ நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்... அப்படியே இந்த வருசத்துக்குள் பேச்சிலர் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்......


அப்புறம் இன்றைக்கு ஊருக்கு செல்ல இருக்கிறேன்...பொதுவா நான் பதிவு போட்டாலே என் கட காத்து வாங்கும்.. இப்ப மூன்று நாள் விடுமுறை... அதனால சொல்லவே வேண்டாம்.....


இதனால் பதிவர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.... இந்த மூன்று நாளும் என் கடையை காத்து வாங்காம்ல் காப்பாற்றுபவருக்கு 1 கிலோ திருநெல்வேலி அல்வா இலவசமாக வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..




மீண்டும் என் நண்பன் கடையம் ஆனந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......

Sunday, March 1, 2009

தங்கமணியும்--- தலைவலியும்

"என்னங்க நான் ஊர்ல இல்லன்னு சொல்லிட்டு வெளியில சாப்பிடாதிங்க சமைச்சே சாப்பிடுங்க. அப்புறம் வீடை சுத்தமா வச்சிருங்க... ரொம்ப செலவு பண்ணிடாதிங்க"


"நீ ஊருக்கு கிளம்பினாலே என் கையில காசு இருக்காது அப்புறம் எப்படி வெளிய சாப்பிடமுடியும்..."


"உங்க தம்பி வீடு, மச்சான் வீட்டுக்கு போறது பிரச்சினையில்ல வேற ஏதாவது கேள்விப்பட்டேனா அவ்ளோதான்..... சொல்லிட்டேன்."


"செலவுக்கே காசு கம்மியா இருக்கும்போது நான் எங்க போக முடியும்.....வீட்டை விட்டா ஆபிஸ் ....வேற வழியில்ல.."

"என்னங்க ஊருக்கு போனதுக்கப்புறம் போன்ல கூட பேச நேரமில்லையோ."


"அதான் காலையில பேசினேனே... நைட் கால் பண்ணலாம்னு இருந்தேன்."


'முன்னாடியெல்லம் அடிக்கடி போன் பண்ணுவீங்களே...'


"அதுக்காக பொழுதன்னைக்கும் உன் கூட பேசிக்கிட்டேவா இருக்க முடியும் .. ஏம்பா இப்படி இருக்க....'


"உங்க பையன் பண்ற சேட்டை தாங்க முடியல சொன்ன பேச்சை கேக்கமாட்டேங்குறான்..'


"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".


"ஏம்மா சாம்பார் பொடி, கடலை பருப்பு டப்பா எங்கப்பா வச்சிருக்க... எல்லாமே ஒரே மாதிரி தெரியுது"


"சிவப்பு டப்பா மூடி சாம்பார் பொடி கடலைபருப்பு மஞ்ச கலர் டப்பாவுல இருக்கு..சரி இனிமே போன் பண்ணாதிங்க எங்க அக்க வீட்டுக்கு போறேன்.. "


"செல்லை எடுத்திட்டு போக வேண்டியதுதான.. எதுக்கு அத வாங்கி கொடுத்திருக்கேன்.மிளகாய் பொடி டப்பா எங்க இருக்கு"


"இத கேக்குறதுக்குத்தான் போன் வாங்கி கொடுத்தீங்களா?"


"மச்சி இன்னைக்கு சனிக்கிழமைடா...!!!!!!

"என்ன மாமா வீட்ல ஆள் இல்லையா?", ஆமாடா..


"என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.."


"சமையல் பண்ண போறேம்பா" ( கையில் சரக்குடன்)


"அப்படியா தொசை சுடுறதுக்கே 10 வாட்டி போன் பண்ணுவீங்க எல்லாத்தையும் கேட்டிருங்க"!!!.....


'இல்லமா எல்லாத்தையும் பாத்து வச்சிடேன்'........


இன்னைக்கு தலைவலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்... தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா..........

டிஸ்கி : நாளைக்கு ஊருக்கு செல்ல இருக்கிறேன்......ஆங்

Sunday, February 22, 2009

பூவே உனக்காக--- காதல் கோட்டை--- சென்னை பதிவர் சந்திப்பு???

கடந்த வெள்ளியன்று கே டிவியில் பூவே உனக்காக படம் போட்டிருந்தார்கள்... ம்ம்ம் படம் நல்லாவே இருந்தது.... பூவே உனக்காக படம் பார்க்கும் போதெல்லாம் காதல் கோட்டை படமும் ஞாபகத்திற்கு வரும்... காரணம் இரண்டு படங்களும் கிட்டதட்ட ஒரே நேரத்தில் வெளியாகி சளைக்காமல் சக்கை போடு போட்ட படம்.... என்னுடைய டிப்ளமா படிப்பின் கடைசி செமஸ்டரின் போது இரு படங்களும் வெளியாகி இருந்தது. இரண்டு படங்களிலும் டாக்டரும், தலயும் இயல்பான நடிப்பை வெளிக்கொண்டுவந்திருப்பார்கள்.


இரண்டு படங்களின் மையக்கரு காதல் என்றாலும் டாக்டரின் படம் காதல் தோல்வியையும், தலயின் படம்  காதலுக்கு புது வழியையும் ஏற்படுத்தியது... டாகடர் செந்தூரப்பாண்டி, ரசிகன்,தேவா அப்படின்னு கில்மா படங்களில் நடித்தாலும், அனைத்து ரசிகர்களை கவர்கிற மாதிரி படங்கள் அவருக்கு அதுவரை அமையவில்லை.. அதே போல தலயும் ஒரு பிரேக் கிடைக்காமல் தடுமாறி வந்தார்...இந்தக் கட்டத்தில்தான் இருவருக்குமே இந்தப்படங்கள் இவர்களின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது....மொத்தத்தில் இந்தபடங்களை இருவருமே அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.. இதுக்கப்புறமா இவர்களின் படங்கள் ஒரே நேத்தில் வெளியாகினாலும் ஏதாவது ஒரு படம் தான் வெற்றியை தொட்டது


குஷி -- உன்னைக்கொடு என்னைத்தருவேன்
பகவதி -- வில்லன்
திருமலை -- ஆஞ்சனேயா
ப்ரெண்ட்ஸ் -- தீனா
போக்கிரி -- ஆழ்வார்

வேற ஏதாவது படங்கள் இப்படி வெளியாகி இருந்தால் சொல்லுங்கப்பு ( டாக்டரும், தலயும்) சரி இப்ப இருவரும் எந்த அளவில் படங்களை தேந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வேறச் சொல்லனுமா... அதிரடி ஓப்பனிங் பாடல், பஞ்ச் டயலாக், அயிட்டம் பாடல், ஒரே மாதிரியான நடிப்பு கேட்டா எங்க ரசிகனுங்க இப்படித்தான் எதிர் பாக்குறாங்க அப்படினு ஒரு டயலாக்.... அப்படியா கார்க்கி.... தலயாவது பரவயில்லை ஒரு சில படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்கிறார்... ஆனால் டாக்டர்???!!!!!!!!!!!!!!!!..

சென்னை பதிவர் சந்திப்பு இந்த மாதம் ஆரம்பத்தில் நடந்தது... அதுக்கப்புறம் அதுபற்றி பேச்சேயில்லை... நேற்று சகா நர்சிம்மிடம் பேசினேன் மும்பையில் இருந்து அனுஜன்யா வந்திருப்பதாக சொன்னார்... அதனால சென்னை பதிவர்களே உங்க முகமெல்லாம் மறந்துகொண்டு வருகிறது... அதுக்காகவாது ஒரு சந்திப்பை வைங்கப்பா.நர்சிம்,அதிஷா,முரளி கண்ணன் கவனிக்க..... தாமிரா ஹைதையில் கார்க்கிய பாத்தீங்களா??

இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை பிரச்சினையில் பதிவுலகமே சூடாக இருந்தது.. இப்பதான் ரெண்டு நாளா பத்து கேள்விகள் அப்படின்னு கொஞ்சம் ரிலாக்ஸா ஆகியிருக்கு........ அதனால சந்திப்பை வைங்கப்பா..........

ஒரு எச்சரிக்கை


ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடுவாங்களா?. அக்பர்பாய் கறிக்கடையில் முஸ்லிம்கள் மட்டும் தான் கறி வாங்குவாங்களா?? என்ற அதி நவீன வசனங்களுடன் அடுத்தவாரம் ரிலீஸ் ஆவுது..................தீ திரைப்படம்

Wednesday, February 18, 2009

முந்துவது சன்டிவியா? கலைஞர் டிவியா?--- ஒரு பார்வை

சன் தொலைக்காட்சியும்,கலைஞர் தொலைக்காட்சியும் பாடல் ஒளிபரப்புவதில் இருந்து சேனல் துவங்குவது வரை எல்லா நிலையிலும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றன்.. மேலோட்டமாகப் பார்த்தல் சபாஷ் சரியான போட்டி என்றே தோன்றும். கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும். கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு முன்பு வரை சன் கொஞ்சமாக போட்டிப்போட்டுகொண்டு தன்னுடைய ஆதிக்கத்தை பரவவிட்டது... முதலிடத்தை தக்கவைத்துகொண்டது... கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பித்ததற்கு அப்புறம் தொய்வு கொஞ்சம் அதிகமாகியது. எல்லா நிலையில் இருந்தும் கடும் போட்டி உருவானது.நம்ம பதிவர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு சன்னை முந்துகிறது கலைஞர் பயங்கரமா எழுத ஆரம்பிச்சாங்க....



ஆனால் மக்கள் பார்வையில் இருந்து எப்படியாவது சன்னை முந்தி முதலிடத்துக்கு வர கலைஞர் தொலைக்காட்சி ரொம்பவே பகீரத முயற்சி எடுத்தது..அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார்கள். குடும்ப சண்டைக்கு பிறகு சன் நடுநிலைமை எனும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு எந்த அளவுக்கு ஆட்சிக்கு எதிரான செய்திகளை வெளிக்கொணர முடியுமோ அந்த அளவுக்கு திறமையா செயல்பட்டது. சன்னின் நடுநிலைமையால் ஜெயாவே கொஞ்சம் ஆச்சரியப்பட்டது... முக்கியமா மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்சினைகளில் எந்த அளவுக்கு விளையாமுடியுமோ அந்த அளவுக்கு புகுந்து விளையாடுனாங்கோ..இதுக்கு விளக்கம் சொல்லி முடியல கலைஞர் தொலைக்காட்சிக்கு. இந்த கூத்தெல்லாம் கண்கள் பணித்தது இதயம் இனிக்கும் வரைக்கும்தான் இருந்தது...


இதுக்கு அப்புறம் மின்வெட்டு கிலோ எவ்ளோ? ஸ்பெக்ட்ரம் எந்த ஊர்ல இருக்கு அப்படின்ற ரேஞ்சில தான் சன்னின் நடுநிலைமை இருந்திச்சி... கலைஞர் தொலைக்காட்சியை தன் வழிக்கு கொண்டு வரவே சன் தொலைக்காட்சி நடுநிலைமை என்ற முகமூடியை அணிந்து கொண்டிருந்தது... இப்போதைக்கு தமிழக மக்கள் சன் தொலைக்காட்சி இல்லைனா கலைஞர் தொலைக்காட்சிதான் பாக்கனும் என்பதில் மிக முனைப்போடு போட்டிப்போடுக்கொண்டு சேனல்களை ஆரம்பித்து வருகிறார்கள். தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்களில் பெரும்பான்மையோர் திமுக அனுதாபிகள் மற்றும் திமுக பிரமுகர்களாக இருப்பது இரு நிறுவங்களுக்கும் ஆதாயமே.


இப்படி எல்லா நிலையிலும் போட்டி போடும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகள் ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருப்பதுதான் வேதனைக்குறிய விசயம். அது என்னன்னு உங்களுக்கே தெரியும். ஈழப்பிரச்சினை சன்னாவது பரவாயில்லை மேம்போக்கா ஏதோ சொல்றாங்க.. ஆனா கலைஞர் தொலைக்காட்சி இந்த விசயத்தில் மவுனமாக இருப்பது வேதனைக்குறிய வெட்கப்படவேண்டிய விசயம். இதுக்கு உதாரணம் இலங்கை சுதந்திர தினத்தன்று ராஜபக்ஷே பேசியதை தலைப்பு செய்தியிலும் முதலாவதா சொல்லி காங்கிரசு கட்சியின் மானத்தை காப்பாற்றி விட்டது கலைஞர் தொலைக்காட்சி. இன்று நக்கீரன் குழுமத்திற்கு இலங்கை தூதுவர் கொடுத்த மிரட்டல்,மக்கள்,தமிழன் தொலைக்காட்சிகள் இலங்கையில் ஒளிபரப்ப தடை போன்ற விசயத்திலும் மவுனத்தை சாதிப்பது கொடுமையிலும் கொடுமை......


இந்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?

(தென்) தமிழகத்திற்கு ஏமாற்றம் தரும் ரெயில்வே பட்ஜெட்

மத்திய அமைச்சர் லல்லு தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் வழக்கம் போல் தமிழகத்திற்கு ஒரு பட்டை நாமம் சாத்திவிட்டார். குறிப்பா தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு. தமிழகத்துக்கென இந்த ரெயில்வே பட்ஜெட்டில் 5 புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலாஸ்பூர் - நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் (திருவனந்தபுரம் வழி)
செங்கோட்டை - ஈரோடு தினசரி பாசஞ்சர்.
திருச்சி - மதுரை தினசரி எக்ஸ்பிரஸ்.
மும்பை - நெல்லை சூப்பர்பாஸ்ட். திருவனந்தபுரம் வழி. (வாரம் இருமுறை)
கோவை - தூத்துக்குடி இணைப்பு ரயில் (தினசரி)

இதில் திருநெல்வேலியிலிருந்து செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு ரெயில்களும் திருவனந்தபுரம் வழியாக செல்லும். பேசாம இந்த இரண்டு ரெயில்களையும் திருவனந்தபுரத்திலிருந்தே இயக்கிவிடலாம். ஒரு மாநிலத்துக்கு இயக்கப்படும் ரெயில்கள் அந்த மாநில மக்களுக்கே அதிகம் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கவேண்டும்.என்னகணக்கில்
இதைஅறிவிச்சாங்கன்னேதெரியலை.
மும்பையில்நெல்லை,கன்னியாகுமரி,விருதுநகர்,மதுரை மாவட்ட மக்களே அதிகம் உள்ளனர். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் மும்பை.நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வருடம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிஞ்சிதான் ஓடிக்கிட்டு இருக்கு.. இதே வழித்தடத்தில் இன்னொருவழித்தடத்தைஅறிமுகப்படுத்தினால் மக்களுக்கு பயன் தரும் வகையில்இருக்கும்...


அதேபோல்சென்னையிலிருந்து ,நெல்லைக்கோ,கன்னியாகுமரிக்கோ ரெயிலை அறிமுகப்படுத்தியிருக்கலாம்... ஆனால் அதை பற்றி ஒன்னையும் கானோம்..இத்தனைக்கும் தென் மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து செல்லும் ரெயில்களில் முன்பதிவு வேண்டும் என்றால் 3மாதத்திற்கு முன்னாலே முன்பதிவு செய்தால்தான் உண்டு... இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வரைக்கும் பண்டிகை காலங்களில் மட்டுமே முன்பதிவில் சிக்கல் இருக்கும். ஆனால் தற்போது எல்லா காலங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.தென்மாவட்டங்களுக்கு பஸ்ஸில் செல்வதற்கு மனதளவில் மிகுந்த தைரியம் வேண்டும்... ஆம் இதைப்பற்றி உண்மைத்தமிழன் நேற்றுதான் பதிவில் எழுதியிருந்தார்.. சென்னையில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப்பேருந்தில் செல்ல 13 மணி நேரம் ஆகியதாம்... கின்னஸில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார்களோ என்னவோ?.என்னோட அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன். திருச்சிக்கே 13மணி நேரம் என்றால் இன்னும் மதுரை,தென்காசி,நெல்லை,கன்னியாகுமரிக்கு செல்ல எவ்வளவு நேரமாகும் என்பதை நீங்களே கணக்கிட்டுகொள்ளுங்கள். நேரம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தென் மாவட்ட ரெயிலகள் நிரம்பி வழிகின்றன....

மொத்தத்தில் மெஜாரிட்டியான அளுங்கட்சி எம்பிக்கள், ஒரு ரெயில்வே துறை இணை அமைச்சர் இருந்தும் தமிழகத்திற்கு பட்டை நாமம் போடாத குறைதான்..லல்லுவின் சொந்த மநிலமான பீகாருக்கு 12 புதிய ரெயில்களாம்..............

Tuesday, February 17, 2009

100வது பதிவும்--பட்டாம்பூச்சி விருதும்--- சில விசயங்களும்


அப்படி, இப்படினு ஒரு வழியா 100வது பதிவை எழுதியாச்சு..... இந்த நேரத்துல நண்பர் கடையம் ஆனந்த் பட்டாம் பூச்சி விருதை வேறு கொடுத்துவிட்டார்... அந்தபட்டாம்பூச்சி விருதை 3 பேருக்கு கொடுக்கனுமாம்/.......கொடுத்திடலாம்,,,..காசா..பணமா?........... என்னையும் நம்பி என் பதிவை பாலோ செய்யும் சக பதிவர்களுகு நன்றி.....என்ன பதிவு போட்டாலும் படிச்சி பின்னூட்டமிட்டு ஆதரவு தரும் தாமிரா, கடையம் ஆனந்த்,கார்க்கி, பாபு,கேபிள் சங்கர், முரளி கண்ணன்,கமல்,ஜமால்,செய்யது,ரம்யா,வனம் ராஜராஜன்,அதிஷா,நசரேயன்,வடகரை அண்ணாச்சி, உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.....கடந்த ஒரு மாதமாக பதிவு எழுதமுடியவில்லை.... சில எதிர்பார்த்த விசயங்களில் ஏமாற்றம் அடைந்ததால்....... மறுபடியும் முயற்சிக்கிறேன்..... அடுத்த மாதம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்...............
பட்டாம் பூச்சி விருதை எனது தலைங்களுக்கும் சகாகளுக்கும் கொடுக்கிறேன்.
1. கேபிள் சங்கர் ( அண்ணே இப்ப ஏ ஜோக் மேலயும், தமன்னா மேலயும் ரொம்ப இதுவா இருக்கார்... இவருடைய சிறுகதைகளுக்கு நான் அடிமை)2. நர்சிம் ( சகா வழி தனி வழி....... மாற வர்மன் என்ன ஆச்சு)
3. முரளி கண்ணன்( நடமாடும் சினிமா நூலகம்)
4. கார்க்கி( சகாவுக்கு மாசத்துல ஒரு தடவ காதல் சோகக்கதை பதிவிடலனா தூக்கம் வராது)
5.பாபு( ஒன்னுமே புரியல)

அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள்
ஒரு சில அனுபவங்கள் அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள் மேல் கோபம் கொள்ள வைக்கிறது...
அனுபவம் 1
இடம் தாம்பரம் மண்டல அலுவலகம் கடந்த ஜனவரி மாதம் ரேஷன் கார்டு விலாசம் மாற்றம் தொடர்பாக தாம்பரம் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். விண்ணப்பம் கொடுப்பதற்கு ஒரு கவுன்டர் மட்டும் தான். வரிசை அலுவலகத்திற்கு வெளியே ரோடு வரைக்கும் இருந்தாது.. வரிசையில் உள்ளோரில் ஒரு சிலரை தவிர மீதி அனைவருமே 50 வயதை தாண்டியவர்களாக தெரிந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிஉருந்தது.. பாடாவதி இன்னும் பழைய மெத்தடுல தான் இன்னும் எழுதிக்கிட்டு இருக்காங்க... ஒரு வயதான பெண்மணி தான் கொண்டு வந்திருந்த விண்ணப்பத்தை கவுன்டரில் இருந்த பெண் ஊழியரிடம் கொடுத்தார்.

விண்ணப்பத்தை பார்த்த பெண் ஊழியர் " என்னம்மா உன் மகன் பெயருக்கு கார்டு கேட்டிருக்க சரி, ஆனா உன் மருமகள் பெயர் நீக்குன சான்றிதழ் இதுல இல்லையே.. அதை வாங்கிட்டு வா." என்று சொல்லி அந்த விண்ணப்பத்தை கையில் கூட கொடுக்காமல் அப்படியே கீழே போட்டார் அந்த பெண் ஊழியர். வயதான பெண்மணி " கொஞ்சம் வெவரமா சொன்னா நல்லாயிருக்கும்.. நானும் 10நாளா அலையுறேன்". என்னத்த வெவரமா சொல்ல சொல்லுற... போயி அந்த சர்டிபிகேட்டை வாங்கிட்டு வா... என உச்சஸ்தியில் கோபத்தில் கத்த ஆரம்பித்துவிட்டார் அந்த பெண் ஊழியர்... ஏன் அந்த பெண் ஊழியர் கோபப்பட வேண்டும்?.பெரும்பாலும் இந்த மாதிரி ரேசன் கார்டு சம்பந்தப்பட்ட சந்தேகங்கங்களை நிவர்த்தி செய்ய தனி அதிகாரியை நியமிக்கலாம்... செய்வார்களா?...

அனுபவம் 2

இடம் மாம்பலம் ரிசர்வேசன் கவுன்டர். எனக்கு ரெயில் பயண கட்டண சலுகை உண்டென்பதால் அதற்கான சான்றிதழுடன் விண்ணப்பத்தைக்கொடுத்தேன்... ( இங்கேயும் பெண் ஊழியர்தான்) "டாக்டர் சான்றிதழில் சீல் சரியாத் தெரியல"( டாக்டர் சீல் பச்சை கலரில் இருந்ததால் ஜெராக்ஸில் சரியாக தெரியவில்லை) இல்ல மேடம் 1 மணி நேரமா வரிசையில நிக்கிறேன்" அப்ப சூப்பர்வைசர் உள்ள இருக்கார் அவர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வாங்க" சூப்பர்வைசரை பார்க்க ஒரு அரை மணி நேரம் .... ஒரு வழியா டிக்கெட் வாங்கிட்டேன்.. " அடுத்த வாட்டி இந்த சர்டிபிகேட் கொண்டு வந்தீங்கன்னா டிக்கெட் தரமாட்டேன்"

அடுத்த வாட்டி போகும் பொழுது புது சர்டிபிகேட்டுடன் சென்றேன். சர்டிபிகேட்டை சரி பார்த்த பெண் ஊழியர் " வயசு சரியா எழுதலியே.. மேலே ஒரு கோடு மாதிரி இருக்கு எந்த டாக்டர் கிட்ட வாங்கினீங்களோ அவர் கையெழுத்தை இதுக்கு பக்கத்துல வாங்கிட்டு வாங்க" என்று மிக அலட்சியமாக சர்டிபிகேட்டை என்னைடம் கொடுத்தார்.. நானும் அப்போதுதான் கவனித்தேன்.. வயது 31 என்பதில் 3க்கு மேல் லைட்டா ஒரு கோடு .." மேடம் டாக்டருங்க கையெழுத்து அப்படித்தான் இருக்கும் உங்களுக்கே தெரியும்"." அதெல்லாம் முடியாது வேணும்னா நார்மல் டிக்கெட் வாங்கிக்கிடுங்க".. கோபமாக சொல்லிவிட்டார்... கொஞ்ச நேரம் காத்திருந்து பிறகு ஆண் ஊழியரிடம் சர்டிபிகேடை காண்பித்தேன்... டிக்கெட் கிடைத்தது...

ஒரு பெண் ஊழியருக்கு தவறு எனப்பட்ட சர்டிபிகேட் ஆண் ஊழியருக்கு எப்படி சரியென்று பட்டது...?ஏன் இப்படி கோபப்படுகிறார்கள் பெண் ஊழியர்கள்.......... என்ன காரணமாக இருக்கும்... சொல்லுங்க மக்கா

Saturday, January 24, 2009

மாநகரப்பேருந்துகளும்-- மாதாந்திர பயணச்சீட்டும்-- நானும்

சென்னை நகரில் மிக முக்கியமான தவிர்க்க முடியாத ஒன்று மாநகரப்பேருந்துகள் தான். அப்படிப்பட்ட மாநகரப்போக்குவரத்துக்கழகம் இன்றைக்கு அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்களை சுலபமாக காலியாக்கும் கழகமாக மாறிவிட்டதுதான் வேதனை... இதற்கு அச்சாரம் போட்டவர் அம்மையார்... அதிலேயே ரோடு போட்டுக்கொண்டிருப்பவர் கலைஞர் அய்யா.... ஆறு வகை வழித்தடப்பேருந்துகள் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது...


1. சாதாரண பேருந்துகள்( வெள்ளை போர்டு)-- மினிமம் டிக்கெட் 2ரூபாய்
2."M" வகைப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
3. விரைவுபேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
4.சொகுசுப்பேருந்துகள் --- மினிமம் டிக்கெட் 5ரூபாய்
5.குளிர்சாதனப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 10ரூபாய்.
6.எல் எஸ் எஸ் பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 2.50ரூபாய்.


சென்னையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து கோடம்பாக்கம் செல்வதற்கு ஒரு வாரம் எம்டிசிலதான் பயணித்தேன்..அசோக் பில்லர்ல இருந்து லிபர்டிக்கு பஸ் ஏறுவது சவாலான விசயம் என்பதால் மின்சார ரயிலில் பயணிக்க ஆரம்பித்தேன்...ஈக்காட்டுத்தாங்கல் டூ கிண்டி 20 நிமிட நடை அப்புறம் 10 நிமிடத்தில் கோடம்பாக்கம் ... நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது ராமாபுரத்திற்கு ரூமை மாற்றும் வரையில்.... இதுவரைக்கும் கண்ணில் எப்போதாவதுதான் விரைவு பேருந்து கண்ணில் தென்படும்.. இந்த நேரத்துல தான் மாதாந்திரப்பயணச்சீட்டு--மாநகரப்பேருந்து-- மின்சார ரயில்...பிரச்சினை இல்லாம நல்லா இருந்திச்சி.


2002ன்னு நினைக்கிறேன்..அப்போ முதல்வரா இருந்த நம்ம அம்மையார் ."M" வகைப்பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்... இந்த வகை பேருந்துகளில் மினிமம் கட்டணம் 3ரூபாய்..மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லாது...அந்த நேரத்தில் M49 இந்த வண்டிய பாத்தாலே கடுப்பா இருக்கும்..பீக் அவர்ல இந்த வண்டிதான் அதிகமா இருக்கும்... ராமச்சந்திரா டூ திருவான்மியூர் வழித்தடம்.........இருந்தாலும் அம்மையார் ஆட்சிக்காலத்தில் இந்த வகைப்பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தன,,


2006ல் நம்ம கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அந்த ஜூன் மாதத்தில் இருந்து ."M" வகைப்பேருந்துகளில் மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இங்கேயிருந்துதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பமாச்சு.. வழைப்பழத்தில ஊசிய குத்துற மாதிரி சாதாரண வெள்ளை போர்டு பேருந்துகளின் வழித்தடம் குறைக்கப்பட்டு அதே வழித்தடத்தில்"M" வகைப்பேருந்துகள் ஓட ஆரம்பித்தன..அம்மா ஆட்சியில் எப்போதாவது கண்ணில் தென்பட்ட விரைவுப்பேருந்துகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிமாக தென்பட ஆரம்பித்தது.இதனால் மாதாந்திர பயணசீட்டு வைத்திருப்போருக்கு செலவு கொஞ்சம் அதிகமாகியது.இந்த நேரத்தில்தான் சொகுசுப்பேருந்துகள் அறிமுகமாகியது..முதலில் புறநகர்களுக்கு இயக்கப்பட்ட இவ்வகைப்பேருந்துகள் கொஞ்ச நாள் கழிச்சி நகருக்குள்ளும் இயங்க ஆரம்பித்தன...நெரிசல் மிகுந்த நேரங்களில் சாதாணப்பேருதுகளின் வழித்தடங்கள் குறைக்கப்பட்டு அதே நேரத்தில் விரைவுப்பேருந்துகளும்,சொகுசுப்பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட்டு மாதாந்திரப்பயனச்சீட்டு வைத்திருப்போரின் பாக்கெட்டுகளை இரு மடங்காக காலி செய்யும் பணியை இன்று வரை செவ்வனே செய்கின்றன...


சொகுசுப்பேருந்துகள் மற்றும் விரைவுப்பேருதுகள் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை குறைத்துதான் இயக்கப்படுகின்றன. இங்கதான் பிரச்சினை ஆரம்பமாகுது. உதாரணத்துக்கு பள்ளிக்கரணையில் இருந்து நீங்க வேளச்சேரிக்கு மாநகரப்பேருந்தில் போகனும்னா காலையில் 7:25மணிக்கு முன்னால் பஸ் ஸ்டாப்புக்கு வந்தீங்கன்னா சுலபமா பஸ் ஏறிவிடலாம்.. ஆனால் 7:30 மணிக்கு வந்தீங்கன்னா நீங்க பஸ் ஏறுவதற்கு மினிமம் அரைமணி நேரமாகும்..7:30மணியில் இருந்து 8:00மணி வரை 11 மாநகரப்பேருந்துகள் வரும்ம்ம்ம்ம்ம்.......ஆனா ஏறமுடியாது..


வருகிற 11 பேருந்துகளில் 4 சொகுசுப்பேருந்துகள்,4 விரைவுப்பேருந்துகள்,2சாதாரணப்பேருந்துகள், 1 குளிர்சாதனப்பேருந்துகள்.


குளிர்சாதன பேருந்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம்.தினசரி சொகுசுப்பேருந்துகளில் போவது இயலாத காரியம்... விரைவுப்பேருந்துகளில் எக்ஸ்ட்ரா காசு கொடுத்தும் அழமுடியாது.. அவசரம்னா ஓகே. அந்த ரெண்டு சாதாரணப்பேருந்துகளுக்கும் அந்த நேரத்துல பஸ் நிறுத்தமே மறந்து போகும்....


மேலும் நெரிசல் மிகுந்த நேரம் என்பதை இன்னும் பழைய நேரத்தையே மாநகரப்பேருந்து நிர்வாகம் பயன்படுத்துகிறது... இப்பவெல்லாம் காலை 7 மணிக்கே நெரிசல் நேரம் ஆரம்பமாவுது... ஆனா இந்த நேரங்களில் இயக்கப்படும் வழித்தடங்கள் மிகக்குறைவு. மாநகரப்பேருந்து நிர்வாகம் இதை கவனிக்குமா?..இந்த புலம்பல்கள் போக்குவரத்து அமைச்சருக்கு கேக்குமா??

Thursday, January 22, 2009

அபி ஜெயிச்சாச்சு-- கலைஞர் பயந்தாச்சு--- தொங்கபாலு பேரு நியுஸ்ல வந்தாச்சு...

ஏஹே அபி ஜெயிச்சாச்சுப்பா.. எத்தனை வருசமா போரடிக்கிட்டு இருக்கா தெரியுமா?.. எங்க போனாலும், எந்த வேலை ஆரம்பிச்சாலும் அபிக்குத்தான் எத்தனை கஷ்டம்?. அந்த அளவுக்கு அவளுக்கு வாழ்க்கையில ஏகப்பட்ட வில்லனுங்க... முதல் முறையா நேத்துதான் அவ வாழ்க்கையில ஒரு விடிவு காலமே பொறந்திருக்கு.... தேர்தல்ல ஜெயிச்சுட்டாப்பா... தேர்தல்ல அவளோட எதிரிய மண்ண கவ்வ வச்சிட்டாள்ல... அது சரி எத்தனை நாளைக்குத்தான் அபி தோக்குற மாதிரியே காட்ட முடியும் டைரக்டருக்கு.... அதனாலதான் நேற்று ஒரு மாற்றத்துக்கு அபிய ரொம்பக்கஷ்டப்பட்டு ஜெயிக்கவச்சிட்டாரு... அபியோட தொல்லை எப்ப முடியும்?????

கலைஞருக்கு ஏன் இந்த திடீர் பயம் வந்துச்சின்னெ தெரியல... இலங்கை பிரச்சினையை திசை திருப்பி திமுக ஆட்சியை கவிழ்க்க சதி அப்படின்னு அறிக்கை மூலமா அழுகிறார்... ஏன அழுகிறது இந்த கிழச்சிங்கம்... ஈழப்பிரச்சினையில் கலைஞர்தான் சரியான் முடிவு எடுப்பார் என்று உலத்தமிழர்களெல்லாம் நம்புனாங்க... ஆனா அவரு இன்னா பண்ணினார்... அறிக்கை வுட்டாரு... கூட்ட்டத்த கூட்டினார், டில்லிக்கு காவடி தூக்கினார்... ஒன்னும் முடியல... ஆட்சியா? ஈழப்பிரச்சினையா?? அப்படினா ஆட்சிதான் அப்படின்னு சொல்லாம சொல்லிட்டார் கலைஞர்... திருமா உண்ணவிரதம்-- ராமதாசு-திருமா சந்திப்பு--- அதிமுக காங்கிரசு இதுல ஏதாவது ஒன்னுதான் அவர் இப்படி அறிக்கை விட வச்சிருச்சி....



யப்பா கலைஞருக்கு இன்னும் ஏகப்பட்ட குடும்ப கடமைகள் இருக்கு... அதுவரைக்கும் அவர் ஆட்சியை ஒன்னும் கவுத்திடாதிங்க....ஒரு தொகுதிக்கு 60,70 கோடி செலவு செய்யலாம்.. 234தொகுதிக்கும் செலவு செய்ய முடியுமா?
 
நம்ம தொங்கபாலுவோட நியூஸ் தலைப்புல வரணும்னு ரொம்ப யோசிச்சு நேத்து ஒரு உண்ணவிரத போராட்டம் நடத்துனாரு மது விலக்கை அமல்படுத்தக்கோரி..அவருக்குத் தெரியல இப்போதைக்கு ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுத்தத்தான் தலைப்புல வரும்னு...இந்த போராட்டத்துல எத்தனை காங்கிரசு கோஷ்டிகள் கலந்துகிச்சின்னு யாருக்காவது தெரியுமா?? அய்யா தொங்க பாலு முதல்ல தமிழனுக்காக போராடுறதுக்கு யோசிங்க... பேசாம உங்க போரட்டத்தை பாண்டிச்சேரில வச்சிருக்கலாம்...... அங்கதான் அளவில்லாம கரை புரண்டு ஓடிக்கிட்டு இருக்கு....உங்களுக்கு நீங்களே ஒரு ஆப்பு வச்சிக்கிட்டீங்களே அதப்பத்தி யாராவது சொன்னாங்களா??... தென் மாவட்டத்துல உங்க கட்சிக்கு கொஞ்சம் அதிகமா செல்வாக்கு உண்டு நேற்றைய உங்களோட போராட்டத்தால அதுலயும் மண்ண அள்ளி நீங்களே போட்டுட்டீங்க..உருப்படியா ஏதாவது யோசிங்க..தொங்கபாலுக்கிட்ட ஒரு கேள்வி: நீங்க திமுக காங்கிரசா? இல்ல அதிமுக காங்கிரசா?/



நேற்று என்னுடைய ரேஷன் அட்டை முகவரி மற்றத்திற்காக தி.நகர் அரசு அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்.. எங்க ஆட்சியில எல்லாத்தையும் கணிணி மயமாக்கிட்டோம் எனகூவும் அரசுக்கு இந்த துறை மட்டும் எப்படி கண்ணுல படாம போச்சின்னு தெரியல... இன்னும் அதே பழைய மெத்தடுதான்.... கொஞ்சம் கவனிங்க கலைஞரே... எப்பதான் மாறுமோ??


வில்லு-- லொள்ளு



கண்ணு கேட்ட பிறகு நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம்
"குருவி" செத்த பிறகு "வில்லு" விட்டு என்ன பிரயோஜனம்...


படிக்கிற பயபுள்ளைங்க ஓட்டு போடுங்கப்பா

Saturday, January 17, 2009

கில்லி- சிவசங்கர் மேனன் - கலைஞர்-திருமா--இலங்கை --அரசியலோ அரசியல்..

மாட்டு பொங்கல் அன்று உங்கள் சன் டிவியில் கில்லி படம் போட்டிருந்தாங்க... ம்ம்ம் நம்ம டாக்டர் விசய் இயல்பான நடிப்பு,அளவான வசனம்,நல்ல காமெடின்னு சும்மா கில்லி மாதிரி விர்ருன்னு நடிச்சிருந்தார்.... இந்த மாதிரி படம் இனிமே அவருக்கு கிடைக்குமா?. ஷாஜகான் படம் கொடுத்த படிப்பினைக்கு அப்புறம் விசய் படத்த முதல் நாள் பார்க்கும் பழக்கத்தை மறந்தேன்.. வில்லு படத்துல பல இடத்துல போக்கிரி படத்துல வசனம் பேசுர மாதிரியே இதுலயும் தாங்க முடியல சாமீஈஈஈஇ.........



இலங்கை பிரச்சினை பற்றி பேச பிரணாப் முகர்ஜி இந்தியா சார்பில் இலங்கை செல்வதாக இருந்தது. இடையில என்ன உள்குத்து நடந்துதோ என்னவோ சிவசங்கர் மேனன் இலங்கை சென்றிருக்கிறார்.சிவசங்கர் மேனனின் திறமைய பற்றி நான் ஒன்றும் சொலவதற்கில்லை....அவர் இலங்கைக்கு சென்றிருப்பது போரில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்குவது, சார்க் மாநாடு குறித்து பேசுவதற்காகவேன்னு ஒரு பேச்சு அடிபடுகிறது.போர்நிறுத்தம் பற்றி பேசுவது என்பது சந்தேகமே.. ஒருவேளை நம்ம கலைஞரின் தொல்லை தாங்காமல் வேற வழியில்லாம இவர அனுப்பியிருப்பாங்களோ என்னவோ. அப்ப பிரணாப்புக்கு விசா கிடைக்கலையா இல்ல விமான டிக்கெட் கிடைக்கலையா? பாவம் அவர் என்ன செய்வார் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓப்ப்டைக்கவேண்டும் என்ற ஒரு விசயத்துல எப்படி பேசனுமுனு அவருக்கு தெரியல....


நேற்று நம்ம கலைஞர் 1956ல் இருந்தே உன்னிப்பா கவனிச்சு தீர்மானம் போட்டதாக கூறியுள்ளார். மேலும் இலங்கைப்பிரச்சினைக்காக இன்னும் சில நாட்களாவது ( இல்ல இன்னும் சில காலமா)பொறுத்திருக்கலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்..திருமா தன்னிச்சையாக உண்ணாவிரதத்தை கையில் எடுத்துள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.இதுல இருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது.ஈழப்பிரச்சினையில் யார் யாரையும் முந்திவிடக்கூடாது என்ற ராசதந்திரம் நல்லாவே தெரியுது. கலைஞருக்கு ஊதுகுழலாக ராமதாசு "கலைஞரின் சொல்படி திருமா உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்கிறார்....கலைஞர் சொல்லியிருக்கும் சில காலம் என்பது எதுவரை... லட்சக்கணக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குறையும் வரைக்குமா... அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ.................மீண்டும் மீண்டும் ஒரு விசயம் மிக மிகத் தெளிவா தெரியுது அடுத்த கண்துடைப்பு நாடகம் ஈழப்பிரச்சினையில் மிக தெளிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

Tuesday, January 13, 2009

தைப்பொங்கல் --சில நினைவுகள் --- வில்லு???(((((((

நாளைக்கு பொங்கல் பண்டிகை. சென்னை போன்ற பெரிய நகரங்களில் பொங்கல் பண்டிகை ஒரு குக்கர் விசில் சத்தத்தில் ஆரம்பித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முடிந்துவிடும். எனக்கும் அப்படித்தான் சென்னை வந்த பிறகு.

" ஏங்க பொங்கல் வரப்போவுது ஒரு கரும்பு கூட இன்னும் வாங்கலையே". எங்க வீட்ல இருக்கும்போது என் அண்ணன் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வாங்கி கொடுத்திடுவார்"
"எனக்கு கூடத்தான் சின்ன வயசுல எங்க வீட்டில எல்லாம் வாங்கி கொடுப்பாங்க"..
"நேத்து வரைக்கும் பள்ளிக்கரணையில ஒரு கடையில கூட கரும்பு இல்லப்பா..லாரி ஸ்ட்ரைக் முடிஞ்சிருச்சி.. இன்னைக்கு வாங்கிட்டு வாரேன்"..இப்படியேத்தான் போவுது.


பொதுவாக கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் அதாவது சுண்ணாம்பு அடித்தல், வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்துதல் என பல வேலைகளில் மக்கள் அனைவரும் 15நாட்களுக்கு முன்னரே ரொம்ப பிசி ஆகிடுவாங்க. சென்னையில் இந்த மாதிரி வேலைகளை பொங்கலுக்கு பார்ப்பது மிகவும் அரிது.பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு வீடு முழுவதும் அம்மா சுண்ணாம்பினால் கோலமிடுவதை அருகில் உட்கார்ந்து பார்க்கும் அழகே தனி...பொங்கல் அன்றைக்கு அதிகாலை 5 மணிக்கு எழுந்து ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பாவிடம் திட்டு வாங்கிகொண்டே ஆற்றில் குளிப்பது தனி சுகம்.

பொங்கல் வைப்பதற்கு வயலில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்மணிகளை கொஞ்சம் எடுத்து வருவோம்.. புது அரிசிதான் பொங்கலுக்கு.. ஆனா இப்போது அரசாங்கம் கொடுக்கும் இலவசத்துக்கு காத்திருக்கிறோம்.. பொங்கல் வைப்பதற்கு பனைமர ஓலை அல்லது தென்னை மர ஓலை தான் எரிக்க பயன் படுத்துவோம்.. அந்த காலை குளிருக்கு இந்த சூடு நல்ல இருக்கும்.
 
காலையில் வெறும் சக்கரைப்பொங்கலையும், கரும்பையும் முடித்து விட்டு எப்படா சாப்பாடு ரெடியாகும் என்று ஆகிவிடும்.. எல்லா வகை காய்கறியையும் போட்டு வைக்கும் சாம்பார் வாசம் தெரு முனை வரைக்கும் மூக்கை துளைக்கும். மாட்டுப்பொங்கல் அன்றைக்கு விளையாட்டுப்போட்டிகள்தான் ஹைலைட் கபடி போட்டியில் ஜெயித்தது... ஒட்டப்பந்தயத்தில் இரண்டாவதா வந்தது.( மொத்தம் 5 பேர் ஓட ஆரம்பித்தோம் நான் கடைசிக்கு முன்னதாக இருந்தேன். ஆனால் 3பேர் எல்லைக்கோட்டை தொடாமல் திரும்ப வந்ததால் அப்பீட்டு)...



ஆங்.... நேத்து நம்ம குடுகுடுப்பையார் வில்லு விமரசனம் நல்ல எழுதியிருந்தார்...என்னுடைய நண்பன் அஜித்,விசய் படம் ரெண்டையும் முதல் நாள்லயே பாத்திடுவான்.. கடைசியா ஏகன் பாத்திட்டு மறுநாள் பேயறைஞ்ச மாதிரி வந்தான். அந்த அளவுக்கு படம் தாக்கிரிச்சி போல. குடுகுடுப்பையார் விமசர்சனத்தை படிச்சும் சொல் பேச்சுக் கேக்காம நேத்து போய் பாத்துட்டான்.


" என்ன மாமா படம் எப்படிடா இருக்கு"
" டேய் தியேட்டர் பக்கமே போயிடாத... குருவி படமே பரவாயில்லடா...நயந்தாரா மட்டும் ஓகே... தாங்கலடா சாமீ" வில்லு தாக்குதல் ஒரு வாரம் இருக்கும் போல... அதனால மக்களே......பத்து சூதானமா நடந்துக்குங்க..


SMS ல் வந்த கவிதை

அழகு சிலைகள் அனைத்தும்
அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்
"அவள்" கோவிலை சுற்றி வரும் போது

டிஸ்கி: என்னோட சிறந்த மொக்கை படங்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்த நாயகன் படம் கலைஞர் தொலைக்காட்சியிலும், இரண்டாம் இடத்தை பிடித்த பழனி சன் தொலைக்காட்சியிலும் பார்த்து மகிழ்ந்து பொங்கலை கொண்டாடுங்கள்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்

Monday, January 12, 2009

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- இது விளையாட்டல்ல..

பிறந்த நாள் கொண்டாடும் ஒரு வயதுக் குழந்தைக்கு பரிசு வாங்குவதற்காக நேற்று புரசைவாக்கத்தில் ஒரு பொம்மைக் கடைக்குச் சென்றிருந்தேன். என் குழந்தைப் பருவத்தில் இந்த பொம்மைகளில் கால் பங்கு கூட பார்த்ததில்லை. அத்தனை வகைவகையான பொம்மைகள். குறிப்பாக வகைவகையான மிருக பொம்மைகள். பஞ்சும், வெல்வெட்டும் பிளாஸ்டிக்குமாக வெவ்வேறு அளவுகளில் இருந்த அவற்றை எல்லாமே வாங்கிக் கொண்டு போய் வைத்துக் கொண்டு குழந்தைகளும் நானுமாக விளையாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நான் தேடிய உடலைச் சுற்றி மாட்டிக் கொள்ளக்கூடிய பெரிய அளவு குரங்கு பொம்மை மட்டும் கிடைக்கவில்லை.கடையில் ஓர் இஸ்லாமியரும் பொம்மை வாங்கிக் கொண்டிருந்தார். அவருடன் சுமார் நான்கு வயது மதிக்கக்கூடிய இரு சிறுவர்கள் இருந்தனர். இருவருக்கும் ஒலி எழுப்பக்கூடிய துப்பாக்கி பொம்மைகளை அவர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


`துப்பாக்கி பொம்மைகளை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டா'மென்று அவரிடம் சொன்னேன். `வன்முறை உணர்ச்சியைக் குழந்தைகளிடம் தூண்டிவிடவேண்டாம் என்று விளக்கினேன்.அவருடைய பதில் வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருந்தது. `துப்பாக்கி பொம்மையினால் வன்முறை உணர்ச்சி பரவிவிடாது' என்றார். `அதைப் பரப்பியிருப்பது புஷ்' என்றார். புஷ்ஷை எதிர்ப்பது வேறு. நம் குழந்தைகளுக்கு வன்முறை உணர்வைத் தூண்டும் பொம்மைகளை நாம் வாங்கித்தரவேண்டாம் என்று கருத்து சொல்வது சக மனிதனாக என் கடமை என்று அவரிடம் சொல்லிவிட்டு மேற்கொண்டு தொடர்ந்து விவாதிக்காமல் நான் புறப்பட்டேன்.


கடைக்காரர் தாமாகவே என்னுடன் பேசினார். அவரும் ஓர் இஸ்லாமியர். (இந்துக் கடைகளிலேயே வாங்குங்கள் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை நான் எப்போதும் ஞாபகமாகப் புறக்கணிப்பது வழக்கம்) `துப்பாக்கி பொம்மைகள்தான் அதிகம் விற்கின்றன' என்று கடைக்காரர் சொன்னார். குறிப்பாக, ஒரு பிரபல சர்வதேச பொம்மை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆயிரம் ரூபாய் விலையுள்ள துப்பாக்கி பொம்மைக்கு பெரும் கிராக்கி இருப்பதாகவும் தன்னால் போதுமான அளவு வரவழைத்து விற்க முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். துப்பாக்கி பொம்மையை பலரும் விரும்பி வாங்குவது பற்றிய வருத்தம் அவர் பேச்சில் இருந்தது.


உலக அளவிலும் இந்திய அளவிலும் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் அமைப்புகள் பல இருந்த போதும், விளையாட்டு பொம்மைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றைத் தயாரிப்பவர்களை முறையாகக் கட்டுப்படுத்த போதுமான சட்டங்களும் வழிமுறைகளும் இன்னமும் இல்லை. துப்பாக்கி பொம்மைகள் மட்டுமல்ல, `டாம் அண்ட் ஜெர்ரி' காமிக்சின் வன்முறை பற்றியெல்லாம் நம் ஆட்சியாளர்களுக்கு எந்தக் கொள்கைப் பார்வையும் கிடையாது. புதிய அரசியல்வாதிகள் கூட இவற்றில் அக்கறை காட்டுவது இல்லை.


புஷ், அமெரிக்கா ஆகியோர் உலகில் வன்முறையைப் பரப்புவது, நான் என் வீட்டுக் குழந்தைகளிடம் வன்முறையைப் பரப்புவதற்கான நியாயமாக ஒருபோதும் ஆக முடியாது. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு முறை அமெரிக்காவோ இஸ்ரேலோ வன்முறையை அவிழ்த்துவிட்டாலும், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்கும் வெறியர்கள் யுத்தம் சீக்கிரமே வந்துவிடும் என்ற பீதியைக் கிளப்பும்போதும், இப்படிப்பட்ட வன்முறைகளை ஏற்க மறுக்கும் மன வலிமையை நம் குழந்தைகளுக்கு ஊட்டுவது எப்படி என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.


கல்வி, அத்துடன் சார்ந்த சந்தோஷமான விளையாட்டுகள் இவைதான் நம் குழந்தைகளை ஆரோக்கியமான மன நிலை உடையவர்களாக வளர்த்தெடுக்கக்கூடியவை என்பதில் சந்தேகம் இல்லை. நிறைய வாசிக்க வாசிக்க, நம் குழந்தைகள் படிப்பின் மகிழ்ச்சியில் திளைக்க முடியும். சுவையான கதைகளைத் தொடர்ந்து படிக்கும் மனம், மனித உறவுகளை ஆரோக்கியமானதாக ஆக்குவதற்கு ஏற்ற பக்குவத்தை அடையும்.


போர்களிலும் வன்முறையிலும் படிப்பறிவற்றவர்களை அதிகம் ஈடுபடுத்தி பலி கொடுக்கும் மூளைகள் மெத்தப் படித்த மூளைகள்தான். அதே சமயம் தேசபக்தி பொங்க, உயிர்த்தியாகம் செய்த ஜவான்களுக்காக மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் வரும் படித்த வர்க்கத்தினரிடம் ஊர்வல முடிவில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை ராணுவத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்ப பாரங்களை நீட்டினால் போதும்; ஊர்வலம் எந்த லத்தி சார்ஜும் இல்லாமல் கலைந்துவிடும். படிப்பின் ருசியை அறிய அறிய, அமைதியான வாழ்க்கைக்கான ஆவல் அதிகரிக்கும். படித்தவர்களை கடும் மூளைச்சலவை செய்யாமல் வன்முறையில் பயன்படுத்த முடியாது. எனவே மேலும் மேலும் சமூகத்தில் படிப்பை, வாசிப்பு ரசனையைத் தூண்டும் அத்தனையும் நம்மால் ஆதரிக்கப்பட வேண்டும்.


இந்த மாதம் 8 முதல் 18 வரை சென்னையில் நடக்க இருக்கும் 32வது புத்தகக் கண்காட்சி அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இதுவரையிலும் ஒரு வருடம் கூடத் தவறாமல் அதில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு வருடம் என்னுடைய அனல் பறக்கும் வசனங்கள் நிறைந்த நாடக நூலைக் கண்காட்சியில் கொண்டு வந்து வைத்த சில மணி நேரங்களில், கண்காட்சி தீப்பிடித்துக் கொண்டு விட்டது. ஒவ்வொரு வருடமும் சென்னைக் கண்காட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நூல்கள் விற்பனையாகின்றன. இந்திய புத்தகத்துறை வரலாற்றில் முதல்‌முறையாக இப்போதெல்லாம் சில தமிழ் எழுத்தாளர்கள் ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து நூல்களை வெளியிடும் அதிசயம் நடக்கிறது.ஆனாலும் அதிகமாக விற்கும் புத்தகங்கள் சமையல், ஜோதிடம், வாஸ்து, சுய முன்னேற்றம் மட்டும்தான் என்பது ஆரோக்கியமான நிலை அல்ல.




நமக்கு வரலாறு தெரிய வேண்டும். அப்போதுதான் நிகழ்காலம் புரியும். போரில் சிக்கித் துயரத்தின் உச்சத்தில் தவிக்கும் இலங்கைத் தமிழருக்காக இங்கே உணர்ச்சிவசப்படும் ஏராளமானவர்களுக்கு அந்தத் துயரத்தின் 60 வருட கால அரசியல் வரலாறு தெரியாது. இட ஒதுக்கீட்டில் பயன் பெற்று கல்வியும் வேலையும் அடைய முடிந்த லட்சக் கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு, பெரியாரின் முழு வாழ்க்கைக் கதையே தெரியாது. அரசியல், சமூக நீதி மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் அசல் வரலாறு கூட தெரியாததால்தான், எதையெதையோ காவியம் என்று இன்று எழுதுகிறவர்கள் கூட சொல்லிவிடுகிறார்கள்.நம் இன்றைய வாழ்க்கையின் அரசியல், சினிமா, பொருளாதாரம் அவ்வளவு ஏன் நம் குடும்ப வாழ்க்கையைக் கூடப் புரிந்துகொள்ள, நாம் ஏராளமாகப் படிக்க வேண்டும். படிக்கப் படிக்கத் தீராத பக்கங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன.


மரணத்தை நோக்கி அவரை அழைத்துச் சென்ற புற்று நோய்க்காக அறுவை சிகிச்சைக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைக்கப்பட்டபோது கூட, அண்ணா தன் கையில் இருந்த பாதி படித்த புத்தகத்தை முழுக்கப் படித்து முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று டாக்டரிடம் அனுமதி கேட்டார். அதுதான் வாசிப்பின் ரசனை.துப்பாக்கி பொம்மைகள் ஒருபோதும் அதை ஈடு செய்ய முடியாது. நம் குழந்தைகள் கையில் எதைக் கொடுக்கப் போகிறோம்?

நன்றி குமுதம்.

Tuesday, January 6, 2009

ரிலையன்ஸ்பிரஷும் நானும்.........

ராமாபுரத்திலிருந்து பள்ளிக்கரணை வந்து 6 மாதம் ஆகிறது. ராமாபுரத்தில் இருந்த வரைக்கும் மளிகை சாமான் வாங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அங்க திருவள்ளுவர் சாலையில் உள்ள அய்யனார் சூப்பர் மார்க்கெட்டில் எல்லா சாமான்களும் முக்கியமா மளிகை சாமான்கள் நல்ல குறைந்த விலையிலும் தரமானதாவும் இருக்கும். ஒன்னும் பிரச்சினையில்லாம இருந்தது. இன்னும் பள்ளிக்கரணையில ஒரு கடை கூட செட் ஆகல... எல்லா கடையிலுமே விலை ஜாஸ்தியா இருக்கு. மேடவாக்கம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள முருகன் ஸ்டோரில் இரண்டு மாதங்கள் மளிகை வாங்கினேன். அதுலயும் பிரச்சினை வந்தது. லிஸ்ட் கொடுத்திட்டு வந்திடனும் டோர் டெலிவரி பண்ணிடுவாங்க. ஆனா ஒரு சில பொருட்கள் நாம கேட்ட கம்பெனி அயிட்டம் இருக்காது. பக்கத்துல புட் வேல்டு சூப்பர் மார்க்கெட் இருக்குதுன்னு ஒரு நாள் தெரியாத்தனமா உள்ள நுழைஞ்சிட்டேன்.உள்ள போனா மளிகை சாமான்களைவிட மற்ற பொருட்கள் தான் அதிகம் இருந்தது. சரி அப்படியே வாங்கலாம்னு பொருட்களை பாத்தா விலை இரண்டு மடங்கு ஜாஸ்தி.. அப்படியே ஒன் ஸ்டெப் பேக்..........




தி.நகர் சரவனாஸ்டோரில் மளிகை பொருட்கள் வாங்கலாம்னு போனால் அங்கேயும் புட் வேல்டு கதைதான்... ஆனா சரியான விலை. பொருட்கள் கம்மி. எதுக்கு தி.நகர் அலையனும் எங்க தெருவில் உள்ள  கடையில் 1 மாதம் சாமான் வாங்கினேன். அந்த மாசம் எனக்கு செலவு கிட்டதட்ட 500 ரூபாய் அதிகமாகியது... உதாரணத்துக்கு பள்ளிக்கரணை மெயின் ரோட்டில் உள்ள கடையில் ஒரு பினாயில் பாட்டில் விலை 15ரூபாய் என்றால் எங்க தெருவில் உள்ள  கடையில் அதே பினாயில் விலை 25ரூபாய்....இந்த ஒரு சாமானே இப்படினா மத்த விலையெல்லாம்!!!!!!!!!!!!!!


மீண்டும் தி.நகர் இந்த வாட்டி சரவணா மளிகை ஸ்டோரில் கடந்த 3 மாதங்களாக வாங்கிகொண்டிருக்கிறேன். இதுக்காக தி.நகர் போகும்பொழுது பிளஸ்டிக் சாமான் எடுக்கனும், அது எடுக்கனும், இது எடுக்கனும்னு சொல்லி என்னோட பட்ஜெட் மறுபடியும் எகிற ஆரம்பமாச்சு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை இருக்கு... என்னுடைய தம்பி சொன்னான்"ரிலையன்ஸ் பிரெஷில் எல்லாம் விலை கம்மியா இருக்குடான்னு.... என் வீட்டுலயும் ரிலையன்ஸ் பிரெஷ்க்கு போகனும் அப்படினு.....


கடந்த ஞாயிறு காலை ரிலையன்ஸ்க்கு போனேன்.. உள்ள நுழைவதற்கு முன்னால் தங்கமணியிடம் எல்லா பொருட்களின் விலையை பாத்துட்டுதான் வாங்கனும் சொல்லித்தான் உள்ள போனேன். காய்கறிகலையெல்லாம் நல்லாவே பேக் பண்ணி வச்சிருந்தாங்க. கூட்டத்துக்கும் குறைவில்லை...ஒரு ஆள் 2000ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினார் அப்படி என்ன வாங்கினார்னு பாத்தா கெலாக்ஸ்,லேய்ஸ், ஓட்ச் அப்படின்னு வாயில நுழையா பெயர் கொண்ட எல்லாத்தையும் வாங்கி போட்டிருந்தார்...... அங்க ஆப்பிள் மட்டும்தான் நல்லா இருந்திச்சி.. மத்ததெல்லாம்


உதாரணத்திற்கு 1லிட்டர் கோல்டுவின்னர் விலை ரூபாய் 71
இதே கோல்டுவின்னர் விலை சரவணா மளிகை ஸ்டோரில் விலை ரூபாய் 65..


நீங்களே சொல்லுங்க...............????????????????

டிஸ்கி: நான் பக்கா மிடில் கிளாஸ்ங்க......