Saturday, February 27, 2010

எடுபடாமல் போன அஞ்சா நெஞ்சனின் கருத்து-- அவமானப்ப்படுத்திய மூவர் கூட்டணி

பாசத்தலைவன் எப்போதும் ஒன்று சொல்வார் மத்திய அமைச்சரவையில் எப்போதும் நம் குரல் தான் ஒலிக்கும்..தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று..... இதெல்லாம் 2009க்கு முந்தி என்றுதான் நினைக்கிறேன்..தற்போது அமைந்திருக்கும் காங்கிரசு அட்சியில் ஏற்கனவே தன்னுடைய துறைக்கு அதிக நிதி கேட்டு மம்தா பான்ர்ஜி பிரச்சினை எழுப்பியுள்ளார்..இன்னும் எழுப்புவார்....... தமிழக மத்திய அமைச்சர்கள் எப்பவும் ஆளும் காங்கிரஸு அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசமாட்டாங்க முக்கியமா திமுக மத்திய அமைச்சரகள்..
அஞ்சாநெஞ்சன் அழகிரி மத்திய அமைச்சராக பதவியேற்றதும் அதன் பிறகு அவரது துறையில் சரியாக கவனம் செலுத்தாமல் லோக்கல் பாலிடிக்சிலேயே குறியா அலைந்ததையும் டெல்லி பத்திரிக்கைகள் செயல்படாத ஒரே அமைச்சர் என்று எழுதின..அதன் பிறகும் அஞ்சாநெஞ்சன் அசரவில்லை..குறிப்பாக தன் துறை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பதில் சொல்ல அவர் அவைக்கு வரவில்லை.......இந்த சூழ்நிலையில் நிதிப்பற்றாக்குறை சிக்கனமாக்க மூவர் கூட்டணி உர மான்யம் சம்பந்தமாகஒரு முடிவெடுத்து அது குறித்து பேச துறை அமைச்சரான அழகிரியுடன் விவாதித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக விவசாயிகளுக்கு உரமான்யம் 30ஆயிரம் கோடி என்றிருந்தது,தற்போது 50 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது..இதுதான் இந்த மூவர் கூட்டணிக்கு (அதாவது நம்ம தாத்தா மன்மோகன் சிங், மாமா பிரணாப், நம்ம பங்காளி சிதம்பரம்)கண்ணை உறுத்தியது. எதற்கு 50ஆயிரம் கோடி மான்யம் அதை குறைத்தால் நிதி பற்றாக்குறையை தவிர்க்கலாமே என்ற ஐடியா..... ஆனா இந்த முடிவுக்கு அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து நேரடி விவாதத்தில் ஈடுப்பட்டார்.. உரமான்யத்தை குறைப்பது என்பது அரசின் நிதி பற்றாக்குறை குறையும் என்றாலும் விலை உயர்வு எனப்து விவசாயிகளின் மேல விழும் எனபதால் கடும் வாக்குவாதத்தில் மோதினார் நம்ம அஞ்சா நெஞ்சன்.. அவருக்கு ஆதவாக சில காங்கிரசு அமைச்சர்களும் கைகோர்த்துகொண்டனர்........ஏற்கன்வே விலைவாசி உயர்வினால அனைத்து தரப்பு மக்களும் அவதிப்படும் வேளையில் மான்யத்தை ரத்து செய்தால் இன்னும் கடுமையாக விலைவாசி உயரும் என்று என்று சொன்னாராம் நம்ம அஞ்சா நெஞ்சன்.......... ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை அந்த மூவர் கூட்டணி..
கடைசியாக அஞ்சாநெஞ்சன்இன்னும் ஒருவருடத்திற்காவது இந்த முடிவை தள்ளிப்போடுங்கள்..தேவைக்கேற்ற இருப்பு கவசம் வைத்துக்கொண்டு அப்புறம் யோசிக்கலாம் என்றார்....... ஆனால் இதற்கு உர நிறுவங்கள் சம்மதிக்கவில்லை என்று கூரீ மூவர் கூட்டணி உர மான்யம் ரத்து வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக உறுதியக சொல்லியதால் கடும் கோபத்துடன் பாதியிலே வெளியே வந்துவிட்டார் அமைச்சர் அழகிரி..
...
உயர்வை பற்றி மத்திய அரசு துளீயூண்டு கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை..நேற்று அறிவித்த மத்திய பட்ஜெட்டிலும் அது பற்றி ஒன்றும் இல்லை....கச்சா எண்ணெயின் வரியை உயர்த்தி மறைமுக பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வழிகாட்டியுள்ளார் மத்திய நிதி அமைச்சர்.......... அது போல் வரி குறைக்கப்பட்ட பொருட்களைப்பார்த்தால் செல்போனாம், பலூனாம்...அடப்பாவிங்களா....காலை டிபனுக்கு பலூனையும், மதியம் சாப்பாடுக்கு செல்போனையுமா சாப்பிட முடியும்.......
...
பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு............ நம்மைப்போன்ற சாமன்ய மக்களுக்கு இல்லை

Friday, February 26, 2010

மணத்தக்காளி கீரை பொரியல்---- பேச்சிலர் சமையல்

தினசரி கோதுமை தோசை,அரிசி மாவு தோசை, ஆம்லெட், சாம்பார்,அப்பளம் அப்படினு சப்பிட்டு ரொம்ப போரடிச்சிருச்சி......... வேற வழியில்லாம சாப்பிட வேண்டியதா போச்சு...... வித்தியாசமா ஏதாவது செய்து சாப்பிடனும்னு ஆசை...... சிக்கன் வைக்கலாம்னு பாத்தா சைவ சமையலில் ஏதாவது குறை என்றால் உப்போ காரமோ கொஞ்சம் அதிகம் சேர்த்து சமாளிச்சிடலாம்........ அசைவத்தில் குளறுபடி பண்ணிவிட்டால் கண்டிப்பா சாப்பிடமுடியாது...........இதனால கீரையை ஒரு கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்....... மணத்தக்காளி கீரை உடம்புக்கு நல்லதாமே........... ஒரு கட்டு கீரை வாங்கிட்டேன்.ஆனா எப்படி சமைப்பது என்று தெரியவில்லை.வழக்கம் போல் தங்கமணியிடம் வாங்கி கட்டிக்கொண்டு குறிப்பையும் கேட்டுக்கொண்டேன்.........

கீரையை நன்றாக உருவி அதை நறுக்கி கொள்ளவும்... கீரையை தண்ணியில் அலசிக்கொள்ளூங்கள்.சின்னவெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் தேவைக்கேற்றார்போல் எடுத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய் ஒன்று போதும்....ஒரு துண்டு தேங்காயை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்..... அடுப்பில் வானலி வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்....அதன் பிறகு அதனுடன் கீரையை சேர்த்து வதக்கவும்...குறைந்த பட்ச சூட்டில் வைத்து வதக்க வேண்டும்..அப்பதான் சட்டியின் அடியில் பிடிக்காது.. கொஞ்ச நேரம் மூடி வைத்து விட்டு மறுபடியும் கிளற வேண்டும்...... தோராயமாக பத்து நிமிடம் கழித்து தெவைக்கேற்றார் போல் உப்பும், அரைத்து வைத்த தேங்காயையும் சேர்த்து கிளறிவிடுங்கள்...மணத்தக்காளி கீரை பொறியல் ரெடி............. கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் அதன் ருசியே தனி........

டிஸ்கி:


கோதுமை தோசை நன்றக வர வேண்டுமா???..எவ்ளோதான் தண்ணியில் கோதுமையை நன்றாக கரைத்தாலும் தோசை வார்க்கும் பொழுது நன்றாக வராது....இதற்கு ஒரு முட்டையை உடைத்து கோதுமை கரைசலில் நன்றக கலக்கினால் கோதுமை தோசையும் நன்றாக வரும்..ருசியும் சூப்பரா இருக்கும்.... ஆறினாலும் சாப்பிடலாம்

Thursday, February 25, 2010

மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தென் தமிழகம்

எல்லா விசயங்களிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல..அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் சில தொழில் வளர்ச்சி தவிர...... போன வருடம் ரெயிவே பட்ஜெட்டிலெயே தென் தமிழகத்துக்கு ஒன்னும் இல்லை.இந்த வருடமும் அதே நிலைமைதான்......இது குறித்து போன வருடம் நான் எழுதிய பதிவு.



இந்த வருடமும் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு புதிதாக ரயிலகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.......ஏற்கனவே தினசரி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயிலகள் அனைத்தும் வருடம் முழுவதும் பயனிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது...முன்ன எல்லாம் திருநெல்வேலி செல்லனும் என்றால் 15 நாட்களுக்கு முன்னதாக முன் பதிவு செய்தால் டிக்கெட் கிடைக்கும்..இப்ப ரெண்டு மாதத்திற்கு முன்னதாக முன் பதிவு செய்தாலும் கிடைப்பதில்லை.....இது பற்றி ரெயிவே அதிகாரிகளிடம் கேட்டால்..சென்னை-திருச்சி மார்க்கத்தில் இதற்கு மேல் ரயில்கள் விட முடியாது ஏன்னா தண்டவாளத்திற்கும் கொஞ்சம் ஓய்வு தேவை என்கிறார்கள்......... தாம்பரம் முதல் திருச்சி வரை இன்னொரு வழித்தடம் அமைக்கும் திட்டம் என்னவாயிற்று?????????? இது மில்லியன் டாலர் கேள்வி.....
அடுத்ததா திருநெல்வேலி- தென்காசி அகலரயில் பாதை திட்டம் ஆரம்பித்து ஒருவருடத்திற்கு மேலாகியும் வேலை எதுவும் நடைபெற்ற மாதிரி தெரியலை........ அது பற்றி ஒரு அறிவிப்பும் இல்லை....... இதுல இன்னொரு காமெடி என்னன்னா ஏற்கனவே மீட்டர் கேஜில் ஓடிய திருநெல்வெலி- திருச்செந்தூர் பயனிகள் வண்டியை புதிய வழித்தடமாக அறிவித்திருப்பதுதான்.இதையும் நம்ம செய்கதி சேனல்கள் சொல்வது கொடுமைடா சாமி.......



எனக்கு ஒரே ஆசைதான் நம்ம மத்திய ரெயில்வே மந்திரியையும், மாநில போக்குவரத்து அமைச்சரையும் ஒரு நாள் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அல்லது தென்காசிக்கோ.. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் அதுவும் ஊதா நிற, ரோஸ் நிற மஞ்சள் நிற பேருந்தில் ஏறி பயணம் செய்ய சொல்ல வேண்டும்............ அப்பதான் தெரியும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Wednesday, February 24, 2010

இரட்டை சதம் அடித்து சச்சின் சாதனை

குவாலியரில் நடைபெற்று வரும் ஒரு தினப்போட்டியில் சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்...... இந்த இரட்டை சதத்தை வெறும் 147 பந்துகளில் எடுத்து சாதனை......சச்சினின் இந்த உலக சாதனை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு வைர கிரீடம்



தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் 3 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது இந்திய அணி.....

சச்சின் உலக சாதனை

குவாலியரில் நடக்கும் ஒரு நாள் போட்டியில் சச்சின் உலக சாதனை படைத்தார்முந்தைய சயீத் அன்வரின் 194 ரன்களை முறியடித்து சாதனை படைத்திருக்கிறார்............... சச்சின பேட்டிங்கிற்கு பதில் சொல்ல இயலாமல் தென் ஆப்ப்ரிக்கா திணறல்............... சச்சின் 197 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் உள்ளார்

Sunday, February 21, 2010

கொலுசு கொஞ்சும் பாதம்









கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசுபோடும் தாளம்
அது பிடிபடாமல் ஓட
காற்றிலே காறிலே என் மனம் நீந்துதே
வெண்ணிலா வீதியில் ஊர்வலம் போகுதே
கண்களை நான் மூடினால்
தேன் மழை தினம் சிந்துதே
சோலை பனிப்பூவாய் சேலை மலராட
சிந்தும் மணிமாலை நெஞ்சில் விளையாட
மல்லிச்சரம் வாசம் பட்டு சூடானேன்
அள்ளித்தர ஆசைப்பட்டு ஆளானேன்
குளிருதே மாம்பனி கூந்தலில் மூடடி அழகே
வெள்ளை மனம் பார்த்தேன்
கொஞ்சம் இடம் கேட்டேன்
அன்பே உனைப் பார்த்தேன்
அன்பின் நிறம் பார்த்தேன்
கட்டில் சுகம் காணும் முன்னே
நான் வேர்ப்பேன்
மற்ற விழி ஜாடை சொன்னால்
கை சேர்ப்பேன்
நாளெல்லாம் பவுர்ணமி
சாய்வதே நிம்மதி உயிரே

டிஸ்கி: கண்டுபிடிங்க பார்க்கலாம்

Monday, February 15, 2010

புத்தக வெளியீடும், பச்சை சட்டை பதிவரும்(யூத்தாம்)

நம்ம பயபுள்ளங்கள பாத்து மாசக்கணக்காயிட்டதால இந்த வாட்டி புத்த்க வெளியீடு விழாவை தவறவிடவில்லை..... மாலை 5மணிக்கு நானும் டிவிஆர்கே ஐயாவும் சொன்ன இடத்துக்கு வந்தாச்சு. என்னடா யாரையும் காணோம் என்றிருதபோது....அரங்கினுள் இருந்து உண்மைத்தமிழன் அண்ணன் சில பதிவர் புடை சூழ வெளியில் வந்தார்..... அதற்குள் மணி 5:30 ஆகியிருந்தது....... விழா நாயகர்களே இன்னும் வரவில்லை......அவர்களெல்லாம் வந்து விழா ஆரம்பிப்பதற்கு மணி6:15ஆகியது..... பரிசலும் கேபிளும் குடும்ப சகிதமா வந்திருந்தார்கள்.


AKANALIKAI,PIRAMID,AJAYAN BALA, YOUTH
விழாவை அட்டகாசமான டயலாக்குடன் ஆரம்பித்து வைத்தான் கேபிள் சங்கரின் இளைய வாரிசு....அப்பா எப்பவும் காமேடி பீசு சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.கேபிளின் புத்தகத்தை பிரமிட் நடராஜனும், பரிசலின் புத்த்கத்தை அஜயன் பாலவும் வெளியிட்டனர். பிரமிட் நடராஜன் பேசும்போது கேபிளின் விட தன்னை யூத்தாக காட்டிக்கொண்டார்...... தமிழ்ப்படம் இயக்குனர் அமுதன் பதிவர்கள் எல்லோருக்கும் தன் நன்றியை தெரிந்து கொண்டார்.......அஜயன் பாலாவிடம் மைக்கை கொடுத்ததுதான் தாமதம் பேசினார் பேசினார் பேசினார் பேசிக்கொண்டேயிருந்தார்..... ஏதாவது சுவாரஸ்யமாக பேசுகிறாரா என்றால் அதுவும் இல்லை.எப்படா பேச்சை முடிப்பார் என்றிருந்தது.... கேபிளும் பரிசலும் இறுதி வரை ஒருவித நெகிழ்ச்சி கலந்த டென்சனுடன் காணப்பட்டார்கள்................ சரி நம்ம மேட்டருக்கு வருவோம்


GUGAN,AKANALIKAI,PIRAMID,AJAYAN BALA,PARISAL
பதிவ்ர்களை ஞாபகப்படுத்தி எழுதுகிறேன் யார் பெயராவது விடுப்பட்டிருந்தால் மன்னிக்கவும்........ டிவிஆர்கே,உண்மைத்தமிழன்,ஷங்கர் ரோமியோ,ஜெய மார்த்தாண்டன்,சர்புதீன் (வெள்ளி நிலா)அதி பிரதாபன்,சங்கர், கார்க்கி, நர்சிம்,ஆதி,ஜியோவ்ராம் சுந்தர்,பட்டர்பிளை சூர்யா, தண்டோரா,தராசு,லக்கி, அதிஷா,ஜெட்லி,வடகரை வேலன், சொல்லரசன், வெயிலான், சஞ்சய் காந்தி, டோண்டு,அப்துல்லா, புலவன் புலிகேசி இன்னும் பலர் வந்திருந்தனர்....விழா ஆரம்பிக்கும்போது இரண்டு பேர் போட்டிப்போடுக்கொண்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தானர்.... அதில் நம்ம யூத்து கொஞ்ச நேரத்தில் களைப்படைந்துவிட்டார்..அவர் ஆதிஆண்ணன்........... இன்னொருவர் கடைசி வரைக்கும் அதே சுறுசுறுப்புடன் படம் எடுத்துக்கொண்டிருந்தாள் அவள் பரிசலின் இளைய வாரிசு மேகா.......



SHANKAR, ME, TVRK, UNMAI TAMILAN, ROMEO
நேற்றுதான் காதலர் தினம் ஆயிற்றே யாரெல்லாம் பச்சை சட்டை போட்டிருந்தனர் எனப்பார்த்தால் இருவர் அந்த கலரில் வந்திருந்தனர். ஒருவர் கார்க்கி, இன்னொருவர் நம்ம ஆதி அண்ணன்...கார்க்கி பச்சை சட்டை போட்டதுல ஒரு அர்த்தம் இருக்கு..விட்டிடலாம்....ஆனால் ஆதி அண்ணன் ஏன் அந்த கலர்ல சட்டை போட்டார்......... ?????? கேடதற்கு அவர் யூத்தாம் அதானாம்........ அய்யய்யோ எப்ப அவர் இந்தச கேபிள், தண்டோரா, தராசோட சேர்ந்தார்........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ அண்ணே நீங்க இன்னும் சின்னப்பையந்தாம்ணே........



அப்புறம் நம்ம பெஸ்கி ஆளே மாறிட்டாப்ல. என்னனு கேட்டா அவரும் ஆயுள் கைதியா ஆகப்போறாராம்....புலவன் புலிகேசி இந்த பெயரை பார்த்ததும் கேபில் மாதிரி யூத்தான் ஆளா இருப்பர்னு பார்த்தால்.........சத்தியமா இல்ல பச்சபுள்ளயா இருக்கார்.......ஜெட்லிக்கும் எங்க ஊர்தான் எங்க ஊர்க்காரங்க ஏகப்பட்ட பேர் இருக்காங்க போல...............



நானும் புக் வாங்கியிருக்கேன். பஸ்ல வரும்போது பரிசல் புக்கில் ஒரே ஒரு கதை தான் படித்தேன்......... சிறுவயது பசங்களின் மனநிலையை அருமையா சொல்லியிருக்கார் இந்த கதையில்

மேலும் போட்டோக்களுக்கு மோகன் குமார்

Sunday, February 14, 2010

காதலர் தின வாழ்த்துக்கள்

காதலித்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும், காதலிக்க போகும் அன்பு உள்ளங்களுக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.....

ஒரு சில யூத்து பதிவர்கள் இன்று பச்சை சட்டை அணிந்து சென்னையை வலம் வர் இருப்பதாக தகவல் ............அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்


காதல் உள்ளங்களுக்காக ஸ்பெசல் பாட்டு கேட்டு பார்த்து மகிழ்ச்சியோடு இருங்கள்...


Saturday, February 13, 2010

இதுக்கு என்ன சொல்லப்போறீங்க கேபிள் & கார்க்கி????

தமிழில் எதிர்பார்த்த வெற்றியை தராத ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் யுகானிகி ஒக்கடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது..........வெளியாகி நான்கு நாட்களில் ரூ.2கோடி வசூல் செய்துள்ளது....ஆனால் படம் 2மணிநேரமாக குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கார்த்தியின் பருத்தி வீரன் படம் மொழிமாற்றம் செய்யப்பட இருக்கிறது.



தமிழ் ரசிகர்கள் தராத வெற்றியை தெலுங்கு ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.... நம்ம ஆளுங்களுக்கு புரியாத கதை அவங்களுக்கு புரிஞ்சிது போல..............

Sunday, January 31, 2010

மத்திய அமைச்சரை முற்றுகையிட்ட விவசாயிகள்

மரபணு மாற்று கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிட அமெரிக்க கம்பெனிய விட நம்ம ஊர் அரசியல்வாதிகள் ரொம்ப ஆர்வம் காட்டுறங்க என்ன காரணம்னு தெரியல. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ளது.. ஏனெனில் அந்த கத்தரிக்காயில் இருக்கும் கிரை 1ஏசி என்ற வைரஸில் விஷத்தன்மை உள்ளது என்றும் இதை பயிரிட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் வேளாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால் உடலில் எதிர் விளைவுகள் ஏற்படும் எனவும் செய்தி நிலவுகிறது... மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதை சாப்பிடக்கூடாது என்ற செய்தியும் யோசிக்க வைக்கிறது.

இவ்வளவு பின்விளைவை ஏற்படுத்தக்கூடிய இந்த கத்தரிக்காயை அனுமதிப்பது தொடர்பாக மத்திய சுற்று சூழல் அமைச்சர் 7 நகரங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறார். இதில் சென்னை கிடையாது..எனென்றால் இந்த கத்தரிக்காய் குறித்த விழிப்புணர்வு குறும் படம் எடுத்து முதல்வரிடம் காட்டி தற்போதைக்கு இந்த கத்தரிக்காய்க்கு தடை வித்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த காரணத்தாலே சென்னையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்து விட்டார்.

இந்நிலையில் இன்று மரபணு மாற்று கத்தரிக்காய் குறித்த கூட்டம் ஹைதரபாத்தில் நடைபெற்றது..கூட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சூழ்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்... இதனால் பெரும் பரபரப்பு நிலவியது அந்த அரங்கில்..பின்னர் பேட்டியளித்த அமைச்சர் பிப்ரவரி 10ஆம் தேதி இது குறித்து முடிவடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அனைத்து விவசாய அமைப்புகளுமே இந்த மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஏன் இந்த கருத்து கேட்பு கூட்டம்.???????.....எல்லா நாடுகளும் இந்த கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ள நிலையில் எதற்கு இந்த சல்ஜாப்பு.......ஒரு வேளை அந்த அமெரிக்க கம்பெனியிடம் நம்மை அடகு வைத்து பொட்டி வாங்கிட்டாங்களோ..இதுக்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினோம்.............என்னவோ போங்க..............

Friday, January 29, 2010

கோவா........அய்யோ

 சென்னை28, சரோஜா வெற்றிக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பில் வந்திருக்கும் படம் கோவா.முழுக்க முழுக்க காமெடி படம் எடுக்க ஆசைப்பட்ட இயக்குனர் அப்படியே பல இடங்களில் நெளிய வைத்திருக்கிறார்.

ஊர்க்கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமத்தில் அந்த கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வாழும் இளைஞர்களாக ஜெய்,பிரேம்ஜி,வைபவ்... ஓரு கட்டத்தில் ஊரைவிட்டு வெளியேறி மதுரையில் உள்ள நண்பனை காண வருகிறார்கள்..வந்த இடத்தில் நண்பனுக்கு திருமணம் அதுவும் வெளிநாட்டு பெண்ணுடன்...நண்பனிடன் விவரம் கேட்கும் நம் கதாநாயகர்கள் நண்பனை பின்பற்றி கோவா சென்று வெளிநாட்டு பெண்களை காதலித்து வாழ்க்கையில் செட்டிலாகனும் என்ற லட்சியத்துடன் செல்கிறார்கள்..அவர்களது லட்சியம் நிறைவேறியது எப்படி எனபதை நம்மை நெளிய வைக்கும் காட்சிகளுடன் சொல்கிறார் இயக்குனர்.


அட்டகாசமான கிராமத்து பாடலுடன் ஆரம்பமாகும் காட்சிகள் அருமை....பஞ்சாயத்து காட்சிகள் நீளம் என்றாலும்சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை...நக்கலும் அதிகம். காட்சிக்கு காட்சி பிரேம்ஜி அசத்துகிறார் ஒரே மேனரிசத்துடன்... முதல் 45நிமிடங்கள் நன்றாகப்போகிறது... கோவாவுக்கு சென்ற பிறகு வரும் காட்சிகள் பெரும்பாலும் நம்மை நெளியவைக்கின்றன. அரைகுறை இங்கிலீஷில் பீட்டர் விடும் ஜெய், எந்த பெண்ணை பார்த்தாலும் மன்மதலீலை பிண்ணனி இசையுடன் வைபவ் கதை சொல்வது...என..... காமெடி காட்சிகள் இருந்தாலும் கோவா என்றவுடன் குடி கூத்து என திரும்ப திரும்ப காண்பிப்பது எரிச்சலடையவைக்கிறது.

இடைவேளைக்கப்புறம் படம் தொய்வடையும் போதெல்லாம் பிரேம்ஜியை காண்பித்து காமெடி பண்ணியிருக்கிறர் இயக்குனர்..இவருக்கு டூயட் பாடல் வேறு..அவ்வ்...........பிரெம்ஜியின் ஜோடியாக வரும் பெண் நல்ல பிகர்.............. ஓரினச்சேர்க்கையாளராக வரும் சம்பத்தின் பாடிலேங்குவேஜ் நல்லா இருக்கு........... ஆனால் பல நெளியவைக்கும் முக்கியமாக ஜட்டியுடன் ரூமில் ஆடுவது, அரவிந்த் கனவு காண்பதாக வரும் பாடல் காட்சிகள்,தேவையில்லாமல் சேர்த்திருப்பதாக தோன்றுகிறது.......... இது போன்றகாட்சிகளை நீக்கினால் நல்லாயிருக்கும்பா...
..
அப்புறம் பாடத்தின் ஆரம்பத்தில் இருந்து நம்ம கதாநாயகர்களை பற்றி ஒருவர் கேள்வி கேட்பார்.அவர் படம் முழுவதும் பின் தொடர்வார்......... அவர் ஏன் அப்படி செய்கிறார்?? இயக்குனர்ட்டதான் கேக்கனும், கோவில் நகை திருடுவது, கப்பல் காட்சிகள் எல்லாம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....வழக்கம் போல் யுவன் கலக்கியிருக்கிறார்.... இதுவரை என்ற மெலடி பாடல் அருமை....கிளைமாக்சில் எதிர்பாக்காத திருப்பம் அருமை......சினேகா வருகிறார், போகிறார் அவ்ளோதான்

பிரேம்ஜி மட்டும் இல்லனா.............படம் அய்யோஅய்யய்யோ
கோவா இயக்குனர் கதையை நம்பாமல் சதையை நம்பியிருக்கிறார்.

கடைசி வரை DTS SOUND- ஐ ஆன் பண்ணாத தாம்பரம் வித்யா தியேட்டர் ஆப்பரேட்டர் வாழ்க.....................

Tuesday, January 19, 2010

ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வேண்டிய படம் தான்

பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் இந்த படத்தைதான் நம்ம மக்கள் அதிக விமர்சனம் செஞ்சிருக்காங்க.சேரன்,சோழன்,பாண்டியன் வரலாறுகளை சிறு வயதில் படிக்கும்போதே ஆவலாக இருக்கும்.. கேபிளின் விமர்சனம் & கார்க்கியின் விமரசனத்தை படிச்ச பிறகுதான் இந்த படத்தை பார்க்க முடிவு செய்தேன்.. குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் பார்த்தேன் டிக்கெட் விலை 100ரூபாய்.(டிக்கெட்டில் 17ரூபாய் என்று இருந்தது).... வாழ்க தியேட்டர் அதிபர்கள்...இப்ப்படியெல்லாம் டிக்கெட் விலை விற்றால் எவன் வருவான் படம் பார்க்க.காலேஜ் படிக்கும் நிஜ யூத்கள்தான் வரிசையில் அதிகம் பேர் இருந்தனர். 

ஹீரோயின், ஹீரோ அறிமுக காட்சியில் ஆரம்பமான கைத்தட்டல் இடைவேளை வரைக்கும் தொடர்ந்தது. கதையையும், காட்சிகளையும் நம்ம பதிவர்கள் நூடுல்ஸ் பண்ணிட்டதால அத பத்தி நான் சொல்ல மாட்டேன்...அதோ அந்த பறவை போல வாழவேண்டும் பாடல் ஒரிஜினல் கெடாமல் அழகாக இருந்தது.. கார்த்தி இன்னும் ப்ருத்திவீரன் பாதிப்பில் இருந்து மீளவில்லை.. இருந்தாலும் ரசிக்க வைக்கிறார்...எல்லோரிடமும் அடிவாங்குகிறார்.இடைவேளை வரைக்கும் இவர் என்ன பண்ண போறார் என்பது .......ஆங்.ஆண்ட்ரியாவிடமும், ரீமாவிடமும் கார்த்தி அடிக்கும் லூட்டி கலகல.காட்சிக்கு காட்சி ரெட்டை அர்த்த வசனங்கள் ரசிக்க வைக்கிறது...ஹீரோவை ரொம்ப பயந்தாங்கொள்ளியாவும், ஹீரொயினை எதற்கும் அஞ்சாதவளாக கண்பிப்பது அருமை.இடைவேளை வரை படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

அதிலும் முக்கியமாக நடராஜர் சிலை நிழல் போல் வரும் காட்சி மிக மிக அருமை. இடைவேளைக்கப்புறம் ஆண்ட்ரியாவுக்கு வேலையில்லை.பார்த்திபன் நடிப்பு ஓஹோ.சுத்த தமிழில் இவர் பேசும் வசனங்கள் வாவ்.என்ன நல்லா கவனிச்சாத்தான் அந்த சுத்த தமிழின் அர்த்தம் புரிகிறது.இடைவேளைக்கப்புறம் படத்தில் தொய்வு ஏற்பட்டாலும் சண்டைக்காட்சிகள் அருமை ( கிளாடியேட்டர் படத்தை போல் வரும் சண்டைக்காட்சி ஓகே)கார்த்தி சோழ அரசனின் தளபதியாக மாறுவது அனுமாஷ்யமான காட்சிகள் என்றாலும் நல்லாவே சொல்லியிருக்காங்க.... ஒளிப்பதிவு, இசை அனைத்தும் அருமை. எடிட்டர் கோலா பாஸ்கரை விட தியேட்டர் ஆப்பரேட்டர் எத்தனை சீன்களை கத்தரி போட்டாரோ....தாய் தின்ற மண்ணே பாட்டையும் கட் பண்ணிட்டாங்கப்பா............ துணை நடிகர்கள் அனைவரையும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்....


மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் செல்வா எடுத்த வாந்தியல்ல...அவர் கொடுத்த பூந்தி என்று சொல்லலாம்( லட்டுதான் கொடுக்கனும்னு நினைச்சி கொஞ்சம் மாறிப்போய் பூந்திய கொடுத்திட்டார்.......).நம்ம எப்பவுமே தமிழ் படத்தை ஒரு மனநிலையிலும், ஆங்கில படத்தை வேறொரு மாதிரி மனநிலையிலும் பார்க்கிறதை மாத்துங்கப்பா.......... ஒரு உதாரணத்துக்கு சொல்றேன் ஆங்கிலப்படத்தில் ஹீரோ எங்கிருந்து குதித்தாலும் ஆஹா ஓஹோ.........அதையே தமிழ் படத்தில் செய்தால்................... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... மாத்துங்க மாறுங்க

கண்டிப்பா படத்தை தியேட்டரில் போய் பாருங்கள்

Monday, January 11, 2010

என்டர் கவிதைகள்- 1 யூத் கேபிளுக்கு சமர்ப்பணம்


வா என்கிறேன்
வரமாட்டேன் என்கிறாய்
வரவேண்டாம் என்கிறேன்
வருவேன் என்கிறாய்
தா என்கிறேன்
தரமாட்டேன் என்கிறாய்
தர வேண்டாம் என்கிறேன்
தருவேன் என்கிறாய்
இப்படி எதிர்வாதம் செய்யாதே என்கிறேன்
செய்வேன் என்கிறாய்
செய் என்கிறேன்
செய்யமாட்டேன் என்கிறாய்.
பேசு என்கிறேன்

பேச மாட்டேன் என்கிறாய்
பேசவேண்டாம் என்கிறேன்
பேசுவேன் என்கிறாய்..
இப்படி ஒவ்வொன்றிலும் எதிராக இருந்தாலும்

ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்கிறோம்


Wednesday, January 6, 2010

சாருவிடம் கடன் கேட்ட கேபிள் சங்கர்




      அப்துல்லா அண்ணன்,வெண்பூ,டம்பீ மேவியுடன் நான்
  
போன வருடம் வரைக்கும் புத்தக கண்காட்சிக்கு போனது கிடையாது. ஆனாலும் நம்ம கா.பா விடுவதாக இல்லை... நானும் ரவுடி ஆகிட்டேன்.நீங்க அந்த புக்கை வாங்கிப்பாருங்க அப்படினார்.. இல்லப்பா நம்ம அறிவு விகடன் ,குமுதம் அப்படினே இருக்கட்டுமேன்னு சொன்னேன்.எஸ்.ரா எழுதியதெல்லாம் படிச்சதில்லையா? அப்படினார்..படிச்சிருக்கேனே ....எதுல.விகடன்லதான்...... ஆளு ரொம்ப டென்சன் ஆகிட்டார்........ புக் வாங்கி படிங்கய்யா அப்படினார்.....அந்த மாதிரி எலக்கிய புக்கெல்லாம் வாங்குன பழக்கமும் கிடையாது, படிச்ச பழக்கமும் கிடையாதுனேன்....


தன்னுடைய கவிதையை புத்தகத்தில் ஆர்வமுடன் தேடும் யூத் தண்டோரா, அருகில் நான்.

இருந்தாலும் புரொபசர் சொன்னா கேக்கனுமில்ல ...போன 2ஆம் தேதி கேபிளுடன் புத்தக கண்காட்சியில் ஆஜர் ஆனேன்... நானே எதிர்பார்க்காத கூட்டம்.... எடுத்த எடுப்பிலே தண்டோராவும் நானும் வம்சி புக் ஸ்டாலுக்குச்சென்றோம்.. 10ஆம் வகுப்பு பையன் ரிசல்ட் பாக்குற மாதிரி தண்டோரா அண்ணன் தன்னுடைய கவிதை வந்திருக்கானு ரொம்ப ஆவலா புக்கை புரட்டினார்..... அது கன்பார்ம் ஆனவுடன் அதை வாங்கினார்... நானுன் என் பங்குக்கு இரண்டு புத்தகங்கள் வாங்கினேன்.... அப்படியே உயிரைமை ஸ்டாலுக்கு சென்றோம்.... அப்துல்லா, நர்சிம்,சங்கர்,நித்யகுமாரன்,வெண்பூ, அகநாழிகை உட்பட எல்லோரும் அங்கே இருந்தார்கள்.சாருவுடனும்,எஸ்ராவுடனும் போட்டோ எடுத்துக்கொண்டனர்.. அப்பொது சாருவுக்கு டீ தந்தார் ஒருவர். அதை வாங்கிய அவர் எனக்கு இப்ப இது வேண்டாம் நீங்க யாராவது குடிங்க என்றவுடன்.... கேபிள் அண்ணன் நைசாக அந்த டீயை என்னிடம் தள்ளிவிட்டார்..புத்தக கண்காட்சியை விட்டு வெளியே வரும்போது டம்பிமேவிஐ சந்தித்தோம்..... தனக்கு 21வயதுதான் ஆகிறது என்று சத்தியம் பண்ணாத குறையாக சொன்னார். எதுக்கு அப்படி சொன்னார்னே தெரியலை..அவருடன் போட்டோ எடுத்துக்கொணடோம்.........

 பதிவர் சங்கரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.... அவரும் எங்க ஊர்தான் அம்பாசமுத்திரம். அடுத்ததாக யூத்துகளெல்லாம் வட்ட மேசை மாநாடு நடத்துனாங்க.. சின்னப்பையனான நான் ஒரு ஓரமாக ஒதுங்கி கொண்டேன்.சாரு நந்தலாலா படத்தை ரொம்பவும் சிலாகித்து பேசத்தொடங்கினார்...கேபிள் சங்கரும் கூடவே இருந்ததாலோ என்னவோ சினிமாவை பற்றியே அவர்கள் பேச்சு தொடர்ந்தது...அப்துல்லாவிடம் சாரு நீங்கள் கண்டிப்பாக ஒரு படத்திலாவது கதாநாயகனாக நடிக்க வேண்டு என்று அன்பு கட்டளை இட்டார்....... மாநாடு முடிந்து வெளியே வந்தவுடன் கேபிள் சாருவிடம் நான் படம் எடுத்தால் பங்குலாவின் கதாபாத்திரத்தை பயன்படுத்துவேன் அப்படினு கடன் கேட்டார்........ சாரு என்ன சொன்னார்னு தெரியல.......





கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்


1.கிளிஞ்சலகள் பறக்கின்றன--- 48 பதிவர்களின் கவிதை தொகுப்பு
2.பெருவெளிச்சலனங்கள் --22 பதிவர்களின் அனுபவக்கட்டுரைகள்


இரண்டு புத்தகங்களுமே வம்சி புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டு புத்தகங்களின் விலை ரூபாய் 100.( கண்காட்சியில் விலை ரூபாய் 90)


அண்ணன் தண்டோரா எனக்கு அன்பளிப்பாக கொடுத்த புத்தகங்கள்
அய்யனார் கம்மா
கருவேல நிழல்கள்.

Friday, January 1, 2010

எலக்கிவியாதியான அந்த பதிவர்,என்னை தோற்கடித்த கலைஞர்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.... இன்றைக்கு எனக்கு வேலை நாள் என்பதால் ஒரு சபதம் எடுத்தேன்.... பள்ளிக்கரணையில் இருந்து தரமணிக்கு சாதாரணப்பேருந்தில்தான் போக வேண்டும் என்பது.. முதல் ஷிப்ட் என்பதால் காலை 6மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்...05:15மணியிலிருந்து காத்திருந்தேன் சாதாரண பேருந்துக்காக...இன்னைக்கு ஒரு நாளாவது எக்ஸ்ட்ரா காசு கோடுக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.05:30மணிக்குள் 4 பேருந்துகள் வந்தன. ஒன்று கூட சாதாரண பேருந்துகள் இல்லை..05:40க்குதான் வந்தது.05:50க்கு விஜய நகரில் இறங்கினேன்.காத்திருந்தேன் இங்கேயும் அதே கதைதான்..... 10நிமிடம் காத்திருந்து வேற வழியில்லாமல் சொகுசுப்பேருந்தில் ஏறினேன்.. என் சபதத்தை முறியடித்த கலைஞர் அரசு வாழ்க....


போன வருடத்தில் கிட்டத்தட்ட 120படங்கள் வெளியாகியிருக்கின்றன..இதில் நான் பார்த்த படங்கள்... அயன்,வெண்ணிலா கபடிக்குழு,பசங்க,நாடோடிகள்,மாயாண்டி குடும்பத்தார்,பேராண்மை,உன்னைப்போல் ஒருவன் இதில் அயன் இந்த வருட பிளாக்பஸ்டர் படம்.......அதிவேகமான திரைக்கதை, பாடல்கள் என கலக்கியது.

அடுத்ததாக வெண்ணிலா கபடிக்குழு,பசங்க,நாடோடிகள்........ இந்த மூனு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை.....இயல்பான திரைக்கதை......கதைதான் இந்த படங்களில் நாயகன். கடேசியா இந்த மூனு படங்களிலும் சைட் அடிக்கிற விசயங்கள் அருமையா இருக்கும்.இப்பவெல்லாம் யாரும் பொண்ணுங்க பின்னாடி சைட் அடித்து சுற்றுவதில்லை..ஏன்னா இன்டர்நெட்,ஈமெயில் செல்போன்,மெசேஜ் அப்படினு பசங்களும் பொண்ணுங்களும் ரொம்ப ஸ்பீடா இருக்காங்க.............

உன்னைப்போல் ஒருவன் -- பதிவுலகில் இந்த வருடம் அதிகம் விமர்சிக்கப்பட்ட படம்...இந்துயிசம், அந்த இசம் ஆயாயிசம்னு துவைச்சி காயப்போட்டாலும்......ஒன்றரை மணிநேரத்துக்குள் படம் ஜெட்டாகபறக்கிறது.......பேராண்மை முதல் பாதி மண்டை காய வைத்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையும், சண்டைக்காட்சிகளாக படம் பறக்கிறது........
-------------------------------------------------------------------------------------------------------------

அந்தப்பிரபல பதிவரிடம் பேசும்போது என்ன அண்ணே இந்த வருடக்கடைசில (2009)பதிவர் சந்திப்பே வைக்கலியே அப்படினு கேட்டேன்."யோவ் நாங்க எல்லாம் இப்ப ரொம்ப பிசி தினசரி புத்தக வெளியீட்டு விழா, எலக்கிய கூட்டம் அப்படினு போய்க்கிட்டே இருக்கு..நீ என்ன சின்ன புள்ளத்தனாமா இப்படி கேக்குற" அப்படினு ஏறிட்டார்..நானும் இப்ப ரவுடிதான் அப்படின்ற ரேஞ்சில நானெல்லாம் இப்ப எலக்கியவியாதி ஆயிட்டேன் தேரியுமா என ஷாக் கொடுத்தார்..........அல்லாரும் பெரிய ஆளாயிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..


அப்படியே நம்ம மதுரை பதிவருக்கு போன் போட்டேன்.. என்னப்பா சென்னை புத்தக கண்காட்சிக்கு போகலியா..நீங்கதான் ஒரு ஊர் விடாம போவிங்களே அப்படினேன்... "நான் அங்க வாங்கின புக்கே இன்னும் தூங்கிட்டு இருக்கும் அதுக்குள்ளயா?? "அப்படினார்..நீங்க தான் இப்ப எலக்கியவியாதி ஆகிட்டீங்களே.....ஆப்படினு சொன்னதுதான் தாமதம் "தலைவரே இதுல ஏதோ சதி நடக்குது.எனக்கும் அதுக்கும் சம்பந்த்மே கிடையாது" அப்படின்ற ரேஞ்சில ஸ்டேட்மென்ட் குடுத்துட்டார்........பாவம் பொழைச்சி போகட்டும்
-------------------------------------------------------------------------------------------------------------

இந்த வருடம் பதிவுலகில் நான் எதிர்பார்ப்பது

1. எதிர் கவுஜை இல்லாமல் நைனா அண்ணாச்சி  பதிவு போட வேண்டும்
2.மீண்டும் தங்கமணி பதிவுகளை ஆதி அண்ணன் போட வேண்டும் பழைய உத்வேகத்துடன்.
3.உண்மைத்தமிழன் அண்ணன் கவிதை எழுத வேண்டும்( எப்படினாலும் ஒரு பக்க்கத்துக்குள்ள முடிஞ்சிருமில்ல)
4.சினிமா பற்றி எதுவும் இல்லாமல் கேபிள் அண்ணன் ஒரு பதிவு போடவேண்டும்
5.சினிமாக்காரனை வம்புக்கு இழுக்காமல் அரவிந்த் ஒரு பதிவு போடவேண்டும்
6.அல்லாருக்கும் புரியிற மாதிரி அனுஜன்யா அண்ணாச்சி கவித எழுதனும்
7.கார்க்கியும் , வசந்தும் டாக்டர் இளைய தளபதிய பேஜார் பண்ணி ஒரு பதிவு போடனும்.

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் அதிரடி விமர்சனம்

இதுநாள்வரைக்கும் எஸ் எம் எஸ் ஜோக்குகளில் வலம் வந்த வேட்டைக்காரன் தற்போது வெள்ளித்திரையிலும் வலம் வருகிறான்..ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இந்த படத்தை ரொம்ப எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள் எனக்கு வேட்டைக்காரன் குறுஞ்செய்தி அனுப்பிய கனவாண்கள்.... கடைசியாக நான் பார்த்த ஓப்பனிங் ஷ்கோ ஷாஜகான்தான்........அதுக்கப்புறம் ரொம்ப இடைவெளிக்குப்பின் திருப்பாச்சி பார்த்தேன்....... அதன் பிறகு விஜய் படம் ஒரு படம் கூட தியேட்டரிலும் பார்ப்பதில்லை.....



சரி சரி வேட்டைக்காரன் விமர்சனம்..... கீழே படிங்க



















டிக்கெட் கிடைக்கலைப்பா..ரெண்டு வாரம் கழிச்சிதான் பாக்கனும்..... அப்போ நான் எழுதும் போது என்னது காந்திய சுட்டுட்டாங்களா அப்படின்ற மாதிரி யாராவது பின்னூட்டம் போட்டிங்கன்னா அவ்ளோதான்........


தேர்தல் ரிசல்ட் பார்ப்பது போல் வேட்டைக்காரனின் விமரசனத்தை நம்ம வலையுலகில் எதிர்பார்த்தேன்....... நம்ம ஆளுங்க சூட்டோடு சூட்டாக விமரசனத்தை போட்டுட்டாங்க.... அதை படிங்கப்பா......

வேட்டைக்காரன் விமர்சனம் 1
வேட்டைக்காரன் விமர்சனம் 2
வேட்டைக்காரன் விமர்சனம் 3
வேட்டைக்காரன் விமர்சனம் 4

கடைசியாக வந்த ரிசல்ட் படி படம் ஓகே.....காட்சிகள் பல படத்தை நினைவுப்படித்தினாலும் திரைக்கதை வேகமா இருக்குதாம்........... இது விஜயே பிடிக்காத அந்த குறுஞ்செய்தி பார்ட்டியிடம் கேட்டபோது சொன்னது..அவரு காலையிலே ஸ்பெசல் ஷோ பாத்துட்டாராம்.........

Sunday, December 13, 2009

பதிவர் சந்திப்பில் மாட்டிக்கொண்ட வேட்டைக்காரன்

இணைய நண்பர்களை நேரில் சந்திப்பது என்பது அலாதியான விசயம்......அந்த வகையில் மதுரை மைந்தன் புரொபசர் கா.பா என்னை பார்க்க பலமுறைஅன்போடு அழைத்தாலும் நேரம் அமையவில்லை......ஊருக்கு போகனும் என்றால் மதுரையை தாண்டித்தான் போக வேண்டும்.......மதுரை நெருங்கும்போது நள்ளிரவு இல்லை அதிகாலை என்ற நேரத்தில் கடக்க வேண்டியிருக்கும்.....இருமுறை முயற்சித்தும் கா.பா வை சந்திக்க இயலவில்லை.



போன வாரம் சென்னை வந்தவர் என்னை அலைபேசியில் அழைத்து கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். விசயம் புரியாமல்!! சரி என்று மாப்பிள்ளை கடையம் ஆனந்திடமும், கேபிள் அண்ணனிடமும் பேசி வடபழனியில் சந்திப்பதாக முடிவானது.
 
கேபிளுடன் தம்பி விஸ்கியும் மன்னிக்கவும் பெஸ்கியும் வந்திருந்தார். கொஞ்ச நேரத்தில் புரொபசரும், அவரது நண்பர் சுரேஷும் வர சரவண பவனில்காபியோடு ஆரம்பித்தது சந்திப்பு.. கேபிள் அண்ணன் வந்ததாலோ என்னவோ சினிமாவை சுற்றியே வந்தது. கிம்-டு-கிக்கில் ஆரம்பித்து தமிழ் சினிமாவை யோகி மூலம் தூக்கி வைத்திருக்கும் அமீர் வரைக்கும் வந்தது.............. நம்ம புரொபசரும் சினிமால பிஎச்டி பண்ணியிருப்பார் போல....... கேபிள் அண்ணனுடம் ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டிருந்தார்.
 
என்னோட வேலை அதுவரைக்கும் வேடிக்கை பார்ப்பதாகவே இருந்தது.பெரியவங்க பேசும் போது யூத்துகளெல்லாம் சும்மா பேசாமத்தான் இருக்கனும்...... பின் சரவணபவனுக்கு வேளியில் பேசிட்டிருக்கும் போது மாப்ளை கடையம் ஆனந்த் வந்து சேர்ந்தார்.......புது மாப்பிள்ளை நல்லா களையாத்தான் இருந்தார்......எம்ஜியாரில் ஆரம்பித்த பேச்சு ரஜினிக்கு வந்து அப்படியே நான் எதிர்பார்த்த மாதிரியே வேட்டைக்கரன் வரைக்கும் வந்தது...அவங்களுக்கு ஏற்றார்போல் சூப்பர் ஸ்டார்ங்க எல்லாம் நடிக்க வேண்டிய தேவையே இல்லை திரையில் வந்தாலே போதும்னு சொன்னதுதான் தாமதம் மும்முனை தாக்குதலில் என்னை நிலைகுலைய வச்சிட்டாங்கப்பா( இப்பதான் புரிஞ்சிது புரொபசர் எதுக்கு கூப்பிட்டாருனு).அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....போர்ப்படை தளபதி இல்லாமல் அங்கு போனது ரொம்ப தப்பு போல............வடிவேலு காமெடி மாதிரி ஒருத்தன் சிக்கிட்டான் என்ற ரேஞ்சில் அகப்பட்டுக்கொண்டேன்..... பிளாக், எஸ் எம் எஸ்லதான் அப்படினா நேர்ல வந்துமா ..எவ்ளொ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது......................வேலைக்கு நேரம் ஆகிவிட்டதால் எல்லோரிடமும் அழாத குறையாக விடை பேற்றேன்.......

போன வாரம் வைரஸ் தாக்கப்பட்டிருந்த என் பிளாக்கை காப்பாற்றிய அன்பு அண்ணன் யூத்துக்களின் நாயகன்........ வருங்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கப்போகும் கேபிள் அண்ணனுக்கு ஆயிரம் நன்றிகள்

Saturday, December 5, 2009

சிவசைலம் அகஸ்தியர் அருவி புளியங்குடி புகைப்படங்கள்


பனை மரக்கூட்டம்-- சிவசைலம் புதுக்குடியிருப்பு


பாபநாசம் செல்லும் வழி



பாபநாசம் சிவன் கோவில்


அழகாய் ஓடி வரும் தாமிரபரணி தூரத்தில் தெரிவது அகஸ்தியர் அருவி


அகஸ்தியர் அருவி




தாமிரபரணி


புளியங்குடி மாநகரம்


பாபநாசம் நீர்மின் தேக்கம்




Sunday, November 8, 2009

பதிவர் சந்திப்பு தள்ளிப்போக காரணம்............??????

நேற்று சென்னையில் நடபெறவிருந்த பதிவர் சந்திப்பு மழையை காரணம் காட்டி தள்ளி வைப்பதாக கேபிள் அண்ணனும், சகாவும் சொல்லியிருந்தார்கள். இதில் சகா பதிவை படித்தீர்களானால் மழை மட்டும் காரணமல்ல என்பது உங்களுக்கு புரியும். கேபிள் அண்ணே உங்க பேச்சு வீட்டுக்கு வெளிய மட்டும்தான் போல......ஹும்

வழக்கம் போல் தங்கமணி பதிவுகள் சூடாகியிருக்கின்றன.ஆதி அண்ணன் எழுதிய இந்த பதிவில் ஆணாதிக்கமே அதிகம் இருப்பதாக கூறி வேலன் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்கார்..ஆனா இதுல பெண்ணாதிக்கம் கொஞ்சம் அதிகமா இருக்கு...கல்யாணம் செஞ்சுக்க போற யூத்துகளே ரெண்டு பதிவையும் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.என்னை கேட்டா நாணல் மாதிரி இருக்கனும். பிரச்சினை எனும் வெள்ளம் வரும்போது நாணல் எப்படி வளையுதோ அதே மாதிரி வளைஞ்சு கொடுத்திட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்..

நேற்று அலுவலகத்தில் என் ஜூனியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.அவன் அதிதீவிர விஜய் ரசிகன்..2012 எனும் ஆங்கில படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தான்...இன்னும் மூணு வருசத்துல உலகம் அழியப்போவுதாம்..நாசாவுல ஆராய்ச்சி பண்ணி சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்லிட்டிருந்தான்..... நான் அதற்கு டேய் உலகம் இன்னும் மூனு வருசத்துல அழிய போவுது..ஆனா தமிழ்நாடு அடுத்த மாசம் அழிஞ்சிடும் போல டிசெம்பர் 18ஆம் தேதி என்று சொன்னவுடன் பையன் அப்படியே டெரர் ஆகிட்டான்........(விஜய் கொடுத்த ஷாஜகான் அடி இன்னும் மறக்கலை.அவ்வ்வ்வ்வ்வ்வ்.)

Saturday, November 7, 2009

பேச்சிலர் தீபாவளி--2009

அடுத்த தீபாவளி வருவதற்குள் இந்த தொடர் பதிவ எழுதிடுங்கப்பா என்று நம்ம புரொபசர் கேட்டுக்கொண்டதால் ஐயோ பாவம் எழுதிடுறேன்.......

1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
என்னப்பா இது பரீட்சை கேள்வி மாதிரி இருக்கு???....... என்னத்த சொல்ல......பத்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நெல்லைவாசி. இப்ப சென்னைவாசி.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?
ஊர் தூங்கும் நேரத்தில் பஸ்ஸே போகாத மெயின் ரோட்டில் நடு இரவு 12மணிக்கு ஆட்டம் பாம் போட்டு எல்லோரையும் எழுப்புவது ( தீபவளிக்கு முந்தின நாள்).....இதேலாம் சென்னை வருவதற்கு முன்னாடி...............இப்ப ஒன்னும் இல்லை சொல்வதற்கு...

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

சென்னையில் தான்......

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
என்னதான் விலைவாசி ஏறினாலும் இந்த கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவில்லை..... காலையில 7மணிக்கு கூட பத்தடிக்கு முன்னாடி போறவன் முகம் கூட தெரியல அந்த அளவுக்கு புகை மூட்டம்

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
ரெடிமேடும் உண்டு..தைத்து போடுவதும் உண்டு....... ஆனா தீபாவளி பர்சேஸ் எனக்கு ஆடிக்கழிவிலே முடிந்துவிடும்...( கிரேட் சரவணா ஸ்டோர்ஸில்)

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

இந்த வருடம் பேச்சிலராக இருந்து தனியாக தீபாவளி கொண்டாடியதால் பதில் கிடையாது.(ஓசியில் கிடைத்த B.L தான் இந்த வருச ஸ்பெசல் தீபாவளியா போச்சு)


7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
முடிந்த அளவுக்கு அலைபேசியில்(பேலன்ஸை பொறுத்து).... இல்லைனா எஸ் எம் எஸ்.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

தீபாவளிக்கு விடுமுறை கிடைப்பதே பெரிய விசயம்........ போன வருடம் கிடைத்தது........இந்த வருடம் என்னை ஆடாக்கிட்டாங்க......வழக்கம் போல் ஆபிஸில் முடிந்தது


9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இதுவரைக்கும் அந்த பழக்கம் கிடையாது.வரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு...

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
எதுக்கு நான்கு பேர்..இருவர் போதும்.
1.கடையத்து இளவல் புதுமாப்பிள்ளை கடையம் ஆனந்த்--மனம்

2.புளியங்குடி அண்ணாச்சி நசரேயன்--என் கனவில் தென்பட்டது