Sunday, August 31, 2008

மின் வெட்டு ... பாவம் தமிழ் மக்கள்

மின் வெட்டு ... பாவம் தமிழ் மக்கள். நாளை 1.09.08 முதல் தினமும் 5 மணி நேரம் மின் வெட்டு என்று மின் வாரியம் அறிவிப்பு.உண்மையில் தமிழக மக்கள் ரொம்ம்ம்ப.......????? நல்லவர்கள். எதையுமே சீக்கிரமாக மறந்துவிடுவார்கள்.மின் துறை அமைச்சரின் செயல்பாடு என்னவாயிற்று?. விஜயகாந்த் சொன்னது போல் மின் வெட்டு என்று அரிவிக்க மட்டும் எதற்கு மின் துறை அமைச்சர்?.







மின் வெட்டு பற்றிக் கேட்டால் காசிக்கு போய் பார் என்கிறார். முதலில் நீங்கள் குஜராத் போய் பாருங்கள்.அமைச்சருக்கு எதிர்க்கட்சிகளை திட்டவும்,மாறன் சகோதரர்களுக்கு எந்த வடிவில் நெருக்கடி கொடுக்கலாம் போன்ற அதி முக்கியமான வேலைக்ளுக்கே நேரம் போதவில்லை. மின் வெட்டை பற்றி அவர் எதுக்கு கவலைப்படவேண்டும். அவர் வீட்டில் 24மணிநேரம் மின்சாரம் இருந்தால் தமிழ் நாடு முழுவதும் மின்சாரம் இருக்கிற மாதிரி நினைப்பு. ஒரே ஒரு நாள் எங்கள் ஊரில் தங்கவைத்தால் தெரியும் மக்களின் நிலைமை.






உண்மையில் ஓட்டுப் போட்ட மக்கள் இளிச்சவாயர்கள் தான்.................



Saturday, August 30, 2008

பாக்ஸ் ஆஃபிஸ் : தசாவதாரத்தை முந்தியது நாயகன்!

செ‌ன்னை பா‌க்‌‌‌ஸ் ஆஃ‌பி‌‌ஸி‌ல் தசாவதாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரித்தீஷின் நாயகன் முந்தியுள்ளது.வசூலில் தொட‌ர்‌ந்து முத‌லிட‌த்‌தி‌ல் விஷாலின் 'ச‌த்ய‌ம்', இ‌ர‌‌ண்டா‌‌மிட‌த்தில் 'குலேசன்' ஆகியவை நீடித்து வருகின்றன.கமலஹாசனின் தசாவதார‌த்தை நா‌ன்காவது இட‌த்‌தி‌ற்கு ‌த‌ள்‌ளி, மூ‌ன்றா‌மிட‌த்தை ‌பிடி‌த்து‌‌ள்ளது ஜே.கே.‌ரி‌த்‌தீ‌ஷி‌ன் 'நாயக‌ன்'.செ‌ன்ற வார இறு‌தி வசூ‌லி‌ல் ரூ.24 ல‌ட்ச‌ங்க‌ள் வசூ‌லி‌த்து, தொட‌ர்‌ந்து ச‌த்ய‌ம் முத‌லி‌ட‌த்தை த‌க்க வை‌த்து‌க் கொ‌‌ண்டு‌ள்ளது. செ‌ன்னை‌யி‌ல் இத‌ன் மொ‌த்த வசூ‌ல் ரூ.1.06 கோடி!
குசேல‌னி‌ன் வார இறு‌தி வசூ‌ல் ஏ‌ற‌க்குறையை ரூ.20.5 ல‌ட்ச‌ங்க‌ள்.இதுவரையான மொ‌த்த வசூ‌ல் ரூ.3.62 கோடி.ர‌ஜி‌னி பட‌ங்க‌ளி‌ல் இது ‌மிக‌மிக குறைவான வசூ‌ல் என்பது கவனத்துக்குரியது.
நாயக‌ன் எ‌ட்டு ல‌ட்ச‌த்து இருப‌த்த‌ி ஏழா‌யிர‌ம் ரூபாயு‌ட‌‌ன் மூ‌ன்றா‌மிட‌த்தை ‌பிடி‌த்து‌ள்ளது. இது பட‌த்‌தி‌ன் மூ‌ன்று நா‌ள் வசூ‌ல் எ‌ன்பது ஆ‌ச்ச‌ரிய‌ம்.
செ‌ன்னை‌யி‌ல் மொ‌த்த வசூ‌ல் ரூ.10.68 கோடியுட‌ன் நா‌ன்கா‌மிட‌த்‌தி‌ல் உ‌ள்ளது 'தசாவதார‌ம்'.
(மூலம் - வெப்துனியா

தி.மு.க ஆட்சியின் மக்கள் விரோதப்போக்கு

மின் வெட்டு,விலைவாசி உயர்வு,பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு போன்றவைகளால் தமிழக மக்கள் அவதி. ஆனால் இதைப்பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.பெட்ரோல்,டீசல் தட்டுப்பாட்டுக்கு எண்ணை நிறுவனங்கள் காரணம் என ஒப்புக்கு ஒரு அறிக்கை.விலைவாசி உயர்வைப்பற்றி மூச்சு விடுவதில்லை. அதைப்பற்றி எதிர்க்கட்சிகள் கேட்டால் தன்னுடைய கவிதையின் மூலம் அலட்சியமான பதில்.நம்முடைய முதல்வருக்கு கவிதை எழுதவே நேரமில்லை,இதில் மக்கள் பிரச்சினைகளை பற்றிக்கவலைப்பட நேரம் ஏது?. மின் வெட்டு என்று அறிவிக்க ஒரு அமைச்சர்.மின் துறை அமைச்சருக்கு மின்சாரப்பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது என்ற கவலையைவிட கலைஞர் தொலைக்காட்சியை எப்படி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேற்றுவது,சன் நெட்வொர்க்கு எப்ப்டியெல்லாம்குடைச்சல் கொடுப்பது என்ற கவலைகள்தான் அதிகம். இல்லையென்றால் மின்சாரப்பற்றாக்குறைக்கு அ.தி.மு.க ஆட்சிதான் காரணம் என அரதப்பழசான பதில் வருகிறது.நீங்கள் இந்த 2 வருடமாக என்ன செய்தீர்கள்? எனக் கேட்டால் பதிலை காணோம்.
நம்முடைய முதல்வருக்கு கவலையெல்லாம் வாரிகளை எப்படி திருப்திப்படுத்துவது என்பதிலேயே.சன் நெட்வொர்க்கு எப்ப்டியெல்லாம் நெருக்கடி கொடுப்பது,சுமங்கலி கேபிள் விஷனை எப்ப்டி தொழில் செய்ய விடாமல் தடுப்பது,போன்ற மக்கள் நலனில்தான் அதிக அக்கறை.பாவம் தமிழக மக்கள்.
மொத்தத்தில் மக்கள் நலனில் அக்கறையில்லாத தம்மக்களின் நலனில் அக்கறையுள்ள ஆட்சியாக உள்ளது.நாளிதழ்கள் இப்பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை ( தினகரன்,தினமணி தவிர) அதிலும் தினமலர் முரசொலியின் மனசாட்சியாக மாறிவிட்டது.எதனால் என்று தெரியவில்லை. தொலைக்காட்சியிலும் மக்கள் பிரச்சினைகள் மேம்போக்காக சொல்லப்படுகின்றன.( சன்,மக்கள்,ஜெயா,விண் தொலைக்காட்சி தவிர).நாளிதழ்களையும்,மீடியாவையும் விலைக்கு வாங்கிவிட்டால் மக்களுக்கு ஆட்சியாளர்களின் விரோதப்போக்கு தெரியவராமல் இருக்கும் என்பது ஆட்சியாளர்களின் மனநிலை.

Friday, August 29, 2008

நடுத்தர மக்களை ஏமாற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம்

5 ஆண்டுகள் முன்பு வரை சென்னையில் மாநகர பேருந்துகளில் பெரும்பலானவை சாதாரணபேருந்துகளாக வலம் வந்தன. அ.தி.மு.க ஆட்சியில் M போர்டு பேருந்துகள் என்பதுஅறிமுகப்படுத்தப்பட்டு மினிமம் டிக்கெட் விலை ரூ 3 ஆக உயர்த்தப்பட்டது. இவ்வகை பேருந்துபேருந்துகளில் மாதாந்திர பயணச்சீட்டு செல்லாது என அறிவிப்பு வேறு.இவ்வகை பேருந்துகள் மிகக்குறைவாகவே அ.தி.மு.க ஆட்சியில் இயக்கப்பட்டது.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட M சர்வீஸ் பேருந்துகளை அதிகமாக்கியது.மாதாந்திர பயணச்சீட்டு செல்லும் என அறிவிப்பு செய்யப்பட்டது.இந்த அறிவிப்பு என்னை போன்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏனெனில் சாதாரண பேருந்து + M சர்வீஸ் பேருந்து என இயக்கப்ப்டுவதால் சிரமமின்றி போய் வரலாம் + நெரிசல் குறைவாகும் என்கிற எண்ணம். ஆனால் போகப்போக தான் புரிந்தது ஆட்சியாள்ர்களின் எண்ணம். சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு M சர்வீஸ்களும்,எக்ஸ்பிரெஸ் சர்வீஸ்கள்அதிகரிக்கப்பட்டு கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்தப்பட்டது.ஆனால் நெரிசல் மிகுந்த நேரங்களில் சாதாரண பேருந்துகள் & M சர்வீஸ் குறைவாக இயக்கப்பட்டு எக்ஸ்பிரெஸ் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகிறது.இக்காரணத்தால் சாதாரண பேருந்துகள் & M சர்வீஸ் பேருந்துகளில் நெரிசல் நேரங்களில் ஏற முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் நமது மாநகர போக்குவரத்து கழகம் டீலக்ஸ் பஸ்களை அறிமுகப்படுத்தியது.முதலில் எண்ணிக்கை குறைவாகவும்,திருவள்ளூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளாக இயக்கப்பட்டது.பின்பு இதன் சர்வீஸ்கள் மாநகருக்குள் அதிகரிக்கப்பட்டு நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிகமாக இயக்கப்ப்டுகிறது.இவ்வகை பேருந்துகளில் சாதாரண பேருந்தை விட இரட்டிப்பு கட்டணம் வேறு.இக்காரணங்களினால் சீசன் டிக்கெட் பெரும் அவதிக்குள்ளானார்கள். நெரிசல் நேரங்களில் சாதாரண பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் சீசன் டிக்கெட் வைத்திருப்போர் நிலைமை பரிதாபம்தான்.அந்த நேரங்களில் டீலக்ஸ் பேருந்துதான் அதிகமாக இயக்கப்படுகிறது. முதலில் இவ்விசயத்தை எதிர்க்கட்சிகள்கடுமையாக கண்டனம் தெரிவித்து பின் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன.ஆட்சியில் இருப்பவர்க்ளுக்கு இதை பற்றி என்ன கவலை.தெருவுக்கு தெரு மதுபான கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை இதில் காண்பிப்பார்களா?