Sunday, December 28, 2008

தி.நகர்-- நடேசன் பார்க்--- பதிவர் சந்திப்பு 27.12.08--- தங்கமணி

நேற்று எனக்கு வார விடுமுறை. சரியா 5மணிக்கு நடேசன் பார்க்குல இருக்கனும் அப்படின்னே நினைச்சுட்டே தூங்கிவிட்டேன். முழிச்சி பாத்தா மணி 4:15 க்கு மேல் ஆகிவிட்டது. ஆஹா பரபரன்னு கிளம்பி என் பையனிடம் அப்பா ஆபிஸ் போறேன்டான்னு சொல்லி எஸ்கேப்.தி.நகர் வந்தடையும்போது மணி 5:30 ஆகிவிட்டது. தாமிராவுக்கு மிஸ்டு கால் கொடுத்து பேசினேன். ஒன்னும் அவசரமில்லை மெதுவா வாங்க" என்றார். சரி நடேசன் பார்க்குக்கு தண்டபானி தெரு வழியா போனா பக்கமா இல்லை பர்கிட் ரோடு சிக்னல் வழியா போனா பக்கமானு ஒரு சந்தேகம். ஒரு பெருசு கிட்ட கேட்டு சரியான வழியில் வந்தடைந்தேன்.

சந்திப்பு ஆரம்பமாகியிருந்தது. அதிஷா தனியாக நின்று செல் பேசிக்கொண்டிருந்தார்.


வந்திருந்தவர்கள்
1. டோண்டு
2.ஜியோராம் சுந்தர்.
3.கேபிள் சங்கர்
4.காவேரி கணேஷ்
5.லக்கி லுக்
6.அதிஷா
7.தாமிரா
8.நர்சிம்
9.முரளிகண்ணன்.
10.அக்னி பார்வை
12.பாலபாரதி
14.கார்க்கி
15.இளவஞ்சி
16.பாபு ( தமிழ்கணிணி)
17.தராசு
18.ராஜராஜன்
19.ஊர்சுற்றி
20. ஜோசப் பால்ராஜ்
21.பாலு
22.புதுகை அப்துல்லா
23.குகன்
+ 3 வாசகர்கள் ( பெயர் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)


திருமணமானவர்களின் பிரச்சினை பற்றி ரொம்ப சீரியஸா பேசிக்கிட்டு இருந்தாங்க. காமெடியா பேசவேண்டிய மேட்டர் எப்படித்தான் சீரியஸ் மேட்டரா ஆச்சோ?. டோண்டு சார் நேபாளிகளின் திருமணமுறை பற்றி தெரியாத மேட்டரையெல்லாம் சொன்னார். திடீர்னு பாலபாரதி திருமண வாழ்க்கையில் ஆண்களுடைய டாமினேஷன் தான் அதிகம்னு ஒரு குண்டை தூக்கிப்போட்டுட்டார். நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.. என்னத்த சொல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்..... நீங்களே ஒருநியாயத்தை சொல்லுங்க. அப்படியே பேச்சு ஒரின சேர்க்கை பற்றி திசைதிரும்பியது. அதிஷா இதுக்கு ஆதரவு கொடுத்ததால "அவனா நீ" அப்படி சொல்லிட்டு நகர்ந்து உட்கார்ந்தார். நம்ம தங்கமணித்தாமிரா " கல்யாணம் தேவையில்லை காதல் ஓகே" ( இருங்க ஊர்ல இருந்து அண்ணி வரட்டும்)என்றார். ஒருவேளை படிக்கும் போதும், திருமணத்திற்கு முன்னாலும் ஏகமா லவ்விக்கிட்டு இருந்திருப்பாரோ ?????!!!!!!


பேச்சு அரசியல் பக்கமும், மீடியாக்களின் செயல்பாடு பற்றியும் திரும்பியது.வருகிற மக்களவைத்தேர்தலில் திமுகவுக்கு எப்படியும் 20 சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னார். அப்படியே திருமங்கலம் தேர்தலில் அதிமுக ஜெயிக்கனும் என்றும். இப்படி நடந்தால் திமுக உஷாராகும்னு சொன்னார். அஞ்சா நெஞ்சன் அவ்வளவு எளிதில் விட்டுவிடுவாரா???.. மீடியாக்களின் செய்தி வெளியிடும் முறை குறித்து பாலபாரதி குமுறிட்டார்.( மனுஷர் எதை பற்றி பேசினாலும் ஓவர் டென்சன் ஆகிறார்). இவ்வளவு கூத்தும் நடக்கும்போது கார்க்கியிடமும், தாமிராவிடமும் சில சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றேன். கொசுக்கடி அதிகமானதால் அப்படியே டீக்கடைக்கு நகர்ந்துவிட்டோம். கடைசி நேரத்தில் ஜோசப் பால்ராஜ் இணைந்துகொண்டார்.வீரத்தளபதி ஜேகே ரித்தீஷ் மன்றத்திலிருந்து என்ன பரிசு கொடுக்கபோகிறீர்கள் என்று அப்துல்லா அண்ணாச்சியிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிவிட்டு ராஜராஜனுடன் சைதாப்பேட்டை வந்து பின் பஸ் ஏறினேன். தமிழ் எழுதும் முறை குறித்து ராஜராஜன் பல யோசனைகள் சொன்னார்.


வீட்டை அடையும் போது மணி 8:45. சன் டீவியில் அதிரடி சிங்கர் ஓடிக்கொண்டிருந்தது.போட்டியாளர் " நீயா பேசியது என் அன்பே" என்றபாடலை நரம்பு புடைக்க பாடிக்கொண்டிருந்தார். பாடல் முடிந்ததும் ஈரோடு மகேஷ் உங்க தாடிக்குப் பின்னால் யாருங்க ?? என்று கலாய்த்தார். இந்தக் கேள்வி எனக்கு வந்தது. " வேற யாரு இதுக்கு பின்னாடி நீதான்" முடிப்பதற்குள் ணங்......அவ்வ்வ்வ்...........

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.