Sunday, July 18, 2010

மனதை திருடிய களவாணி பயபுள்ள

எப்பவும் மதுரை,தூத்துக்குடி,நெல்லை,கோவைன்னு சுற்றி வருகிற தமிழ் சினிமாவை தஞ்சாவூர் பக்கம் திருப்பியிருக்கிறார் இயக்குனர் சற்குணம்..முதல் படமாம் நம்ப முடியவில்லை...அந்த அளவுக்கு நேர்த்தியான திரைக்கதை. சாதாரண காதல் கதைதான் அதை அருமையான லொகேஷன்,படம் முழுக்க இழைந்தோடும் நகைச்சுவையுடன் குடும்பத்தோடு பார்க்க்க்கூடிய அளவுக்கு தந்திருக்கிறார் இயக்குனர்.

விமல் பருத்தி வீரன் கார்த்தியையும் அவருடைய் முந்தைய படமான பசங்க படத்தின் நடிப்பை ஞாபகப்படுத்தினாலும் நல்லாவே நடிச்சிருக்கிறார்... அதுவும் நெல் திருடும் கதாநாயகியிடம் ஏற்ற இறக்கங்களுடன் பேசும் வசனம் குசும்புத்தனம்...கஞ்சா கருப்பு விமல் கோஷ்டியிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு........குசும்புத்தனத்தின் உச்சக்கட்டம். கதாநாயகியாக ஓவியா..... கடேசியில் ”என்னையும் உன்ன மாதிரி களவாணியா மாத்திட்டியே” என்று சொல்லுமிடம் ஓகே
அம்மாவாக வரும் சரண்யா நடிப்பில் மிளிர்கிறார்...அதுவும் ஆடி முடிஞ்சி ஆவணி வந்துட்டா எம்மவன் டாப்பாயிடுவான்னு பட்டிக்காட்டு ஜோசியர் சொன்னாருன்னு சொல்லுமிடத்தில் டாப்பு............. இளவரசன்,கதாநாகியின் அண்ணன், உட்பட அனைவரும் நல்லா நடிச்சிருக்காங்க

படத்தில் கவனிக்கப்படவேண்டிய விசயம் கண்ணுக்கு குளிர்ச்சியான லொகேஷன்கள்.....அதை உறுத்தாமல் காட்டிய ஒளிப்பதிவாளர்......பாடல்கள் ஓகே........ இரண்டு ஊருக்கும் உள்ள பகையை ஒரு பில்டப் கொடுத்து கடைசி வரைக்கும் அதே டெம்ப்போடு கொண்டு செல்லும் விதம் அருமை.....
மொத்தத்தில் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம்.

டிஸ்கி: வி.தா.வ படம் பிடிக்கலைனா நீங்க யூத்தே கிடையாதுன்னு ஒரு யூத்து குரூப் சொல்லிச்சி......அதே மாதிரி இந்த களவாணிய புடிக்கலைனா உங்களுக்கு உங்க சொந்த ஊர் பிடிக்கலைனு அர்த்தம்...ஆங் சொல்லிட்டேன்...