Thursday, September 3, 2009

ப்ளாஸ் நியூஸ் :ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் பலி

இன்று காலை ருத்ர கோடுமலை உச்சியில் ஆந்திர முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது .. சம்பவ இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேர் பலியாகினர்..

ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு....

நேற்று காலை கர்னூலை அடுத்து மாயமான ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் நல்லமால்லா காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்னும் 20 நிமிடங்களில் விமானப்படையினர் அந்த இடத்தை அடைந்துவிடுவார்கள். கர்னூலில் இருந்து 40 மைல் நாட்டிகல் கிழக்கே மலை உச்சியில் ஹெலிகாப்டர் இருப்பதாக தகவல்.
அது விபத்து என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்கிறது விமானப்படை..அந்த இடத்தை விமானப்படை ஹெலிகாப்டர்கள் வட்டமடித்துக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது