Sunday, July 12, 2009

இன்னைக்கு யாரை/ எதை பற்றி திட்டி பதிவு போடலாம்>>>>>>>>>>>>>>>>>

முதலில் சொல்லிவிடுகிறேன்....இது முழுக்க முழுக்க சீரியஸ் பதிவு....காமெடியே கிடையாது.சொல்லிப்புட்டேன் ஆமா சொந்த வேலை காரணமாக பத்து நாள பதிவுகள் பக்கம் வர முடியல..இப்ப ஒரு மூனு நாளா வந்து பாத்தா ரத்த பூமியா மாறிட்டு இருந்தது... என்னடா இது...சரி எப்படியும் இந்த ரணகளம் குறைஞ்சது ஒருவாரமாவது ஓடும்னு எதிர்பார்த்தேன்....அதுக்குள்ள எல்லோரும் சமாதானம் ஆயிட்டாங்களாம்.........இவங்க போதைக்கு பின்னூட்டம் போட்ட என்ன மாதிரி பதிவருங்கதான் பாவம்.......... அதனால இந்த மேட்டரை விடமாட்டேன்....


இந்த விளையாட்டு உண்மையிலே ரொம்ப நல்லாயிருக்கு...முதல்ல ஒருத்தர் காமெடியா பதிவு போடுவாராம்....அதுல பின்னூட்டத்துல எல்லாரையும் கலாய்ப்பாராம்..அதுக்கு ஒருத்தர் கண்டன பதிவு போடுவாராம்.....அந்த பதிவையும் இவரு பயங்கரமா விமர்சிப்பாராம்....ஆளாளுக்கு ஒரு குரூப்பா உக்காந்து திட்டுவாங்களாம்..கடேசில முதல்ல ஆரம்பிச்சவரு மன்னிப்பு கேப்பாராம்.....உடனே எல்லா பிரச்சினையும் முடிஞ்சிருமாம்.........நல்லாயிருக்குப்பா இந்த விளையாட்டு.......அரசியல்லதான் இந்த மாதிரி நடக்கும்......ஆனா அரசியலையும் மிஞ்சிட்டாங்க..எப்படினா அரசியவாதிங்க குறைந்த பட்சம் 4வருசம் ஒருத்தரை ஒருத்தர் திட்டிப்பாங்க 5வது வருசம் கொஞ்சம் அடக்கிவாசிப்பாங்க..ஏன்னா தேர்தல் வரும்....ஆனா இங்க அதையெல்லாம் மிஞ்சிட்டாங்க......

அதனால இந்த வாரம் பிரபல பதிவர் யாரையாவது திட்டலாம்னு இருக்கேன்.ரெண்டு மூனு நாள் பயங்கரமா திட்டி பதிவு எழுதிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டு பதிவு எழுதினா எல்லாம் சரியாயிரும்னு நினைக்கிறேன்.....ஆனா யாரை திட்டுறதுன்னே தெரியலை.......ஏன்னா பதிவரை திட்டுவதற்கு முன்னால் அவரோட குருப்ப பற்றி நல்லா தெரிஞ்சிக்கனும்..பதிலுக்கு எல்லோரும் சேர்ந்து எனக்கு டின் கட்டிடக்கூடாது...அதனால் அந்த பதிவர் கொஞ்சம் பிரபலமா இருக்கனும்..ஆனா மற்ற பதிவருங்க சப்போர்ட் இருக்கக்கூடாது... அரசியல்லதான் வாரிசு அரசியல் இருக்குதுனா இங்கயும் அத கொண்டுவந்துட்டாங்க....அதை பற்றியும் கொஞ்சம் யோசிக்கனும்...

அண்ணன் கேபிள் சங்கரை ஏற்கனவே திட்டியாச்சு...ஏதாவது மேட்டரில் மாட்டும்போது மறுபடியும் ஆரம்பிக்கலாம்.


கார்க்கிய திட்டலாம்.ஆனால் பின்னாடியே அதிஷா,முரளிக்கண்ணன்,
தாமிரா அப்படின்னு எல்லோரும் என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க..

அனுஜன்யா அண்ணாச்சிய திட்டலாம்னு பாத்தா அவரு என்னை ஒன்னும் அறியாத குழந்தைன்னு சொல்லிட்டார்...

தராசு அண்ணாச்சிய திட்டலாம்னா ஏற்கனவே அவரு வீட்டுல தினசரி வாங்கிட்டு இருக்காரு..பாவம்..

ஜ்யோவ்ராம் சுந்தர் அண்ணாச்சிய திட்டலாம்...ஆனா அவரு பின்னாடி ஏகப்பட்ட பின் நவீனத்துவ கூட்டமும் எலக்கியவாதி கூட்டமும் இருக்கு....சும்மாவே அவரு பதிவ ஒரு பத்துவாட்டி படிச்சாத்தான் என்ன சொல்ல வர்றார்னு எனக்கு புரியும்...அதனால வேணாம்...

வேற எதைப்பற்றி திட்டலாம் அப்படினு யோசிக்கையில் கலைஞரும்,அவருடைய தொலைக்காட்சியும் ஞாபகத்துக்கு வந்தது...ஆனா லக்கியும் உடன்பிறப்பும் என்ன உண்டு இல்லைனு பண்ணிடுவாங்களே............

அதனால ..


அதனால...






ஊருக்கு இளைச்சவன் ஆண்டி அப்படின்ற பழமொழி படி சன்டிவிய திட்டலாம்னு இருக்கேன் ( சன்டிவி யாருக்கும் இளைச்சது கிடையாது).....நல்லா யோசிச்சு பாத்ததுல இதுக்கு அமோக ஆதரவு இருக்கும்......எதிர்ப்பே இருக்காது ஹிஹிஹிஹிஹிஹி...........


எப்பூடி நம்ம ஐடியா......................