Sunday, August 31, 2008

மின் வெட்டு ... பாவம் தமிழ் மக்கள்

மின் வெட்டு ... பாவம் தமிழ் மக்கள். நாளை 1.09.08 முதல் தினமும் 5 மணி நேரம் மின் வெட்டு என்று மின் வாரியம் அறிவிப்பு.உண்மையில் தமிழக மக்கள் ரொம்ம்ம்ப.......????? நல்லவர்கள். எதையுமே சீக்கிரமாக மறந்துவிடுவார்கள்.மின் துறை அமைச்சரின் செயல்பாடு என்னவாயிற்று?. விஜயகாந்த் சொன்னது போல் மின் வெட்டு என்று அரிவிக்க மட்டும் எதற்கு மின் துறை அமைச்சர்?.







மின் வெட்டு பற்றிக் கேட்டால் காசிக்கு போய் பார் என்கிறார். முதலில் நீங்கள் குஜராத் போய் பாருங்கள்.அமைச்சருக்கு எதிர்க்கட்சிகளை திட்டவும்,மாறன் சகோதரர்களுக்கு எந்த வடிவில் நெருக்கடி கொடுக்கலாம் போன்ற அதி முக்கியமான வேலைக்ளுக்கே நேரம் போதவில்லை. மின் வெட்டை பற்றி அவர் எதுக்கு கவலைப்படவேண்டும். அவர் வீட்டில் 24மணிநேரம் மின்சாரம் இருந்தால் தமிழ் நாடு முழுவதும் மின்சாரம் இருக்கிற மாதிரி நினைப்பு. ஒரே ஒரு நாள் எங்கள் ஊரில் தங்கவைத்தால் தெரியும் மக்களின் நிலைமை.






உண்மையில் ஓட்டுப் போட்ட மக்கள் இளிச்சவாயர்கள் தான்.................