Friday, September 25, 2009

காத்திருந்தவன் பொண்டாட்டிய.......

தலைப்புல உள்ள் பழமொழி உங்களுக்கு நல்லாத்தெரியும்........அந்த மாதிரி ஆகிப்போச்சு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிலைமை......இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் இந்தி தொலைக்காட்சி ஜீ நிறுவனம்...........DTH இந்தியாவில் முதன் முறையாக ஜீ நெட்வொர்க்கால் ஆரம்பிக்கப்பட்டது..... இப்படி பல முதல்களுக்கு சொந்தமான ஜீ நெட்வொர்க் போன வருசத்துல இருந்துதான் தமிழ்ல தொலைக்காட்சி ஆரம்பிச்சாங்க........



ஆரம்பிக்கும் போதே போன வருசத்தின் சூப்பர்ஹிட் படமான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் ரைட்ஸை வாங்கி முண்ணனி நிறுவனத்திற்கு போட்டியாக காட்டிக்கொண்டது.... புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பின் மூலம்தான் சன்னுக்கு அடித்தபடியாக கலைஞர் டிவியால் வரமுடிந்தது....இது எல்லோருக்கும் தெரியும்.


ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆரம்பித்த நாளில் இருந்து அவ்வப்போது சுப்ரமணியபுரம் படம் பற்றி விளம்பரம் கொடுத்து வந்தார்கள்...கடைசியாக இந்த மாத ஆரம்பத்தில் இருந்து நாளை செப்டம்பர் 26ஆம் தேதி ஒளிபரப்பபோவதாக விளம்பரம் கொடுத்தார்கள்..........


ரெண்டு நாளா அந்த விளம்பரத்தை காணோம்..........நேற்று இரவில் இருந்து சுப்ரமணியபுரம் திரைப்படம் சன்னில் ஒளிபரப்பபடப்போவதாக விளம்பரம் வருகிறது........


இடையில் என்ன ஆச்சுன்னு தெரியல.எல்லாம் எம்பெருமான் திருச்செந்தூர் முருகனுக்கே வெளிச்சம்...........

பின் குறிப்பு:



ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் அதே செப்டெம்பர் 28ஆம் தேதி சுப்ரமணியபுரம் ஒளிபரப்பப்போறாங்களாம்