Thursday, October 2, 2008

காந்தி ஜெயந்தி,கலைஞர்--,அரசு கேபிள்-- சூடான இடுகை,

காந்தி ஜெயந்தி


நேற்று முதல் 2.10.08 சிகரெட் விற்பனை குறைந்து விட்டதாக செய்திகள் வருகின்றன. எந்த அளவுக்கு உண்மையின்னு தெரியலை.டூட்டி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது பஸ் ஸ்டாப்பில் குறைந்தப் பட்சம் இருவராவது தம் அடித்துக்கொண்டிருப்பர். ஆனால் நேற்று முதல் மேற்சொன்ன காட்சியை காணமுடியவில்லை. அன்பு மணிக்கு வாழ்த்துக்கள். அப்படியே ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஏதாவது இதே மதிரியான சட்டங்களை கொண்டு வந்தா நல்லா இருக்கும். புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களில் சாலைகள்,பூங்காக்கள் இல்லையென்று தினமலர் செய்தியில் கூறப்ப்ட்டுள்ளது. அப்படின்னா மெற்சொன்ன இரு இடங்களிலும் தம் அடிக்கலாமா?



கலைஞர்-- அரசு கேபிள்

அரசு கேபிள் இயக்குநர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். காரணம் சன் நெட்வொர்க்கை பெற்று தருவதில் சரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லையாம்.உண்மையில் மதுரை,வேலூர், நெல்லையில் உள்ள அரசுகேபிள் கண்ட்ரோல் ரூம் தூங்கிக்கொண்டிருக்கிறது. காரணம் சன் சேனல்கள்,ஸ்டார் சேனல்கள், டிஸ்கவரி சேனல்கள் . உண்மையில் கலைஞர் மாறன் சகோதரர்களுக்கு மறைமுகமாக உதவுகிறார். மதுரை மற்றும் அரசு கேபிள் உள்ள இடங்களில் சன் டைரக்ட் அமோகமாக விற்பனையாகிறது. இதற்காகவாவது மாறன் சகோதரர்கள் கலைஞருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கலைஞர் ஆட்சியில் தான் ஒரு சில திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் இருந்ததாக ஜுனியர் விகடன் கூறியுள்ளது.


தற்போது காதலில் விழுந்தேன்

இதற்கு முன்னால் முதல்வன் ( மதுரையில் உள்ள கேபிள் டிவியில் தினசரி 4காட்சிகள் என்ற கணக்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாம் காரணம் முதல்வன் படத்தைப்பார்த்தாலே தெரியும்.)


இதற்கும் முன்னால் உலகம் சுற்றும் வாலிபன் அரசியல் காரணங்களுக்காக இதே திமுக ஆட்சியில் பிரச்சினை ஆகியது. இதையெல்லாம் மீறி மேற்சொன்னதிரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியது.


எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கலைஞரின் வசனத்தில் வெளி வந்த நீதிக்குத்தண்டனை படத்தை வெளியிட கூடாது என சட்டமன்றத்திலே பிரச்சினை எழுந்ததாம். ஆனால் எம்ஜிஆர் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.






கலைஞர் உண்மையில் ரொம்ப நல்லவர் தான். எந்த விசயத்துலன்னு தெரியலை....


சூடான இடுகை
கீழ்க்கண்ட எனது பதிவு அதிசயமாக சூடான இடுகையில் இன்றைக்கு வந்தது. http://rajkanss.blogspot.com/2008/10/blog-post_01.html
எப்படினே தெரியலை. ஒன்னு மட்டும் புரிஞ்சிது. எனது பதிவை பார்க்கும் அன்பு கொண்ட உள்ளங்களே கொஞ்சம் பின்னூட்டமிடுங்கள். உங்கள் கருத்தை வைத்துத்தான் எனது பதிவை மென் மேலும் நன்றாக எழுதமுடியும்.

இன்று முதல் எங்கு புகை பிடிக்கலாம்? + குமுதம் கார்ட்டூன்

ஒரு நாளைக்கு ஒன்னோ,ரெண்டோ சிகரெட்தான். அதுக்கும் ஆப்பு வச்சுட்டாங்க. பேசாம திரிசூலம் மலைக்கோ இல்லை செங்கல்பட்டு மலைக்கோ போய்த்தான் தம் அடிக்கனும். அங்கேயும் வந்துருவாங்களோ?. யாராவது IDEA சொல்லுங்க.