Monday, May 11, 2009

பாண்டிச்சேரியில் சீறிப்பாய்ந்த சுனாமி

கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் முடிந்துவிட்டது.. கலைஞர் டிவியும் ஜெயாடிவியும் போட்டிப்போட்டு முட்டிக்கொண்டன..... இன்று பிற்பக பாண்டிச்சேரியில் சீறிப்பாய்ந்த சுனாமியாய் இருந்தது இயக்குனர் சீமானின் பேச்சு.அலுவலகத்தில் இருந்ததால் குறிப்பு எடுக்கமுடியவில்லை அவரின் பேச்சை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் தன்னுடைய கனல் தெரித்த பேச்சால் காங்கிரசை பின்னி பெடல் எடுத்துவிட்டார்.... அவர் பேச்சின் சில பகுதிகளை தருகிறேன்....

 விடுதலைப்புலிகளிடம் இருந்து கிளிநொச்சி வீழ்ந்து இவ்வளவு நாளாகியும் ஏன் மக்களை அங்கு வாழ விடவில்லை?


தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்தி ஈழதமிழ் மக்கள் தன்னுடைய உள்ளத்தில் இருப்பதாக சொல்லியுள்ளார்..உங்கள் இதயத்தில் இருந்து தூக்கி எறியுங்கள்....அந்த பாவப்பட்ட இடம் வேண்டாம்...


எம் தமிழ் இனம் இலங்கையில் தினம் படும் துயரம் கண்டு இழவு வீட்டில் இருப்பது போல் இருக்கிறோம் எப்படி ஐயா உங்களால் இப்படி சிரித்துக்கொண்டே ஓட்டு கேட்க வருகிறீர்கள்?


இப்போது எதற்கெடுத்தாலும் இறையாண்மை என்று பேசுகிறீர்களே..ராஜீவ் காந்தி அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பும் போது அவரிடம் சொல்லியிருக்கலாமே அது அடுத்த நாடு.. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தமிழ் தேசிய ராணுவத்துக்கு கட்டமைப்புக்கு உதவி செய்தாரே?.. அப்போது யாராவது இந்திரா காந்தியிடம் அடுத்த நாட்டின் போராளி குழுக்களுக்கு எப்படி அனுமதியளிக்கலாம் என்று சொல்லியிருக்கலாமே? இல்லையே..ஏன்...


இந்திய ராணுவத்தில் தமிழன்,மலையாளி,கன்னடன் பஞ்சாபி என அனைத்து இன மக்களும் இருக்கிறார்கள்.. ஆனால் இலங்கை ராணுவத்தில் எம் இன மக்கள் இருந்திருந்தால் இந்த கஷ்டங்கள் எம் மக்களுக்கு ஏற்பட்டிருக்குமா?..... மத பயங்கரவாத நாடு இலங்கை அரசு...


இலங்கை பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழ் மக்கள் தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் மகன்,மகள் ஒரு பக்கம் என சிங்களத்தினர் பிரித்துவைக்கின்றனரே?? ஏன்...


எதற்கெடுத்தாலும் இந்தியா சனநாயகநாடு சனநாயகநாடுன்னு சொல்றாங்க.... எது சனநாயகம்... ஈழத்தமிழனுக்காக மாணவர் போராட்டம் என்ற உடனே கல்லூரிகள், கல்லூரி விடுதிகள் கால வரையின்றி மூடப்படுகிறது ... இதுவா சனநாயகம்..வக்கீல்கள் போராட்டம் என்ற உடனே.... போலிஸ் மூலம் கலவரம் மூட்டப்படுகிறது...இதுவா சனநாயகம்


இப்போது நடக்க இருக்கும் தேர்தல் பணத்துக்கும் தமிழ் இனத்துக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்... இதில் தமிழ் இனம்தான் வெற்றி பெறவேண்டும்....

காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு ஒகேனெக்கல் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி எப்படி இலங்கையில் அதிகாரப்பகிர்வையும், போர் நிறுத்தத்தையும் ஏற்படுத்துவார்கள்?


இதுவரைக்கும் காவிரி பிரச்சினை, பெரியாறு பிரச்சினை, தன் சாதி, தன் மதம் என் பார்த்து ஓட்டுப் போட்ட தமிழன் இந்த ஒருமுறை மட்டும் தன் இனத்திற்காக, தன் மானத்திற்காக, தன் சொந்தங்களுக்காக ஓட்டுப்போடுங்கள்.. காங்கிரசை விரட்டி அடியுங்கள்....

பசங்க----விமர்சனம்--கலக்கிட்டீங்கடே

பெரிய ஹீரோ, ஹீரோயின்
ஹீரோவின் பஞ்ச் டயலாக்
குத்துப்பாட்டு, குத்து டான்ஸ்


மேற்சொன்ன எதுவுமே இப்படத்தில் கிடையாது.. ஆனாலும் புதுமுக இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய நேர்த்தியான, இயல்பான திரைக்கதை மூலம் இரண்டரை மணிநேரம் நம்மை கட்டிப்போட்டுவிடுகிறார். தமிழில் குழந்தைகளுக்கான படம் என்றால் விரல் விட்டு எண்னிவிடலாம்...அஞ்சலி, மழலைப்பட்டாளம்..... இந்தப்படத்தில் எல்லாம் குழந்தைகளின் செயல் இயல்புக்கு மீறியதாக இருக்கும்.... இந்தப்படத்தில் அந்த மாதிரியான காட்சிகள் எதுவும் கிடையாது.
 
  சிறிய டவுனில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு ஆண்டுக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை..அந்த பள்ளியில் 6வது படிகும் ஜீவாவுக்கும், அதே வகுப்புக்கு புது மாணவனாக வரும் அன்புக்கும் இடையே நடக்கும் மோதல்.... இல்லை குறும்புத்தனமான சேட்டைகள் தான் கடைசிவரைக்கும்.. இருவரும் நண்பர்கள்  ஆனார்களா என்பதுதான் கதை...இந்த கதைக்கிடையே அன்புவின் சித்தப்பாவுக்கும், ஜீவாவின் அக்காவுக்கும் இடையே மலரும் காதல்.


''ஜீவாவுக்கு இப்ப கோபம் வரும், இப்ப பாரேன் கைய முறுக்குவான், நெஞ்சு வெடைக்கும் பாருனு'' பக்கடாவும் குள்ள மணியும் ஏத்திவிடும் காட்சிகள் அருமை...படம் முழுக்க காட்சிக்கு காட்சி மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது... சின்ன வயது குறும்புத்தனமான காட்சிகள்  அதிகம்... குறிப்பா சாக்பீஸை ஒளித்துவைப்பது, பென்சிலை கூர்மயாக சீவி குத்துவது, கருநாக்கு வாயன் சொன்னால் நடக்கும் என்று நம்புவது,அதிகாலையில் எழுந்து போட்டி போட்டு படிப்பது.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. அதிலும் புஜ்ஜியாக வரும் சிறுவனின் லூட்டிகள் சிரித்தே வயிறு புண்ணாகிவிட்டது.ஜீவாவின் அத்தை மகளிடம் அன்பு பேசும் போது ஜீவா கோப்படும் இடம் அருமை.


இந்த சின்னப்புள்ளைங்க கதைக்கிடையே வரும் மீனாட்சி ஸோப்பிக்கண்ணுவின் காதல் காட்சிகள் கலகல... அதுவும் செல்போனை வைத்து விளையாடும் காட்சிகள் புதுசு. சோப்பிக்கண்ணுவிடம் பாலிசி போட்டுக்கோ ..''உங்கிட்ட பழகுனதுல அது ஒன்னு மிச்சம் நினைச்சிக்கிறேன்னு'' மீனாட்சி சொல்லுமிடம்... தியேட்டரே சிரித்தது. இவர்களின் காதல் காட்சிகளில் பிண்ணனியில் ஒலிக்கும் பாடல் கலக்கல்.பெற்றோர்களுக்கிடையே நடக்கும் சண்டையால் பிள்ளைகள் பாதிக்கப்படுவது போன்ற காட்சிகள் நல்ல படிப்பினை... பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை... ஆனால் பாடல்களில் வரும் காட்சிகள் அருமை.....குடும்ப வாழ்க்கையில் ஆண்கள்தான் விட்டுக்கொடுக்கனுமாம் அப்படினு படத்துல சொல்றாங்க.... எவ்ளோதான் விட்டுக் கொடுக்க முடியும்,... ஆதி அண்ணே நீங்களே சொல்லுங்க அவ்வ்வ்வ்வ்வ்


படம் ஆரம்பித்து பத்து நிமிசத்துக்கு அப்புறம் நான் தியேட்டரில் இல்லை சிவசைலம் அத்திரி கலா நிலைய பள்ளிக்கூடத்திற்கே சென்றுவிட்டேன்.....


பசங்க-- பள்ளிக்காலநினைவுகள்


மொத்தத்தில் பசங்க கலக்கிட்டாங்க