Tuesday, January 19, 2010

ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வேண்டிய படம் தான்

பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் இந்த படத்தைதான் நம்ம மக்கள் அதிக விமர்சனம் செஞ்சிருக்காங்க.சேரன்,சோழன்,பாண்டியன் வரலாறுகளை சிறு வயதில் படிக்கும்போதே ஆவலாக இருக்கும்.. கேபிளின் விமர்சனம் & கார்க்கியின் விமரசனத்தை படிச்ச பிறகுதான் இந்த படத்தை பார்க்க முடிவு செய்தேன்.. குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் பார்த்தேன் டிக்கெட் விலை 100ரூபாய்.(டிக்கெட்டில் 17ரூபாய் என்று இருந்தது).... வாழ்க தியேட்டர் அதிபர்கள்...இப்ப்படியெல்லாம் டிக்கெட் விலை விற்றால் எவன் வருவான் படம் பார்க்க.காலேஜ் படிக்கும் நிஜ யூத்கள்தான் வரிசையில் அதிகம் பேர் இருந்தனர். 

ஹீரோயின், ஹீரோ அறிமுக காட்சியில் ஆரம்பமான கைத்தட்டல் இடைவேளை வரைக்கும் தொடர்ந்தது. கதையையும், காட்சிகளையும் நம்ம பதிவர்கள் நூடுல்ஸ் பண்ணிட்டதால அத பத்தி நான் சொல்ல மாட்டேன்...அதோ அந்த பறவை போல வாழவேண்டும் பாடல் ஒரிஜினல் கெடாமல் அழகாக இருந்தது.. கார்த்தி இன்னும் ப்ருத்திவீரன் பாதிப்பில் இருந்து மீளவில்லை.. இருந்தாலும் ரசிக்க வைக்கிறார்...எல்லோரிடமும் அடிவாங்குகிறார்.இடைவேளை வரைக்கும் இவர் என்ன பண்ண போறார் என்பது .......ஆங்.ஆண்ட்ரியாவிடமும், ரீமாவிடமும் கார்த்தி அடிக்கும் லூட்டி கலகல.காட்சிக்கு காட்சி ரெட்டை அர்த்த வசனங்கள் ரசிக்க வைக்கிறது...ஹீரோவை ரொம்ப பயந்தாங்கொள்ளியாவும், ஹீரொயினை எதற்கும் அஞ்சாதவளாக கண்பிப்பது அருமை.இடைவேளை வரை படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

அதிலும் முக்கியமாக நடராஜர் சிலை நிழல் போல் வரும் காட்சி மிக மிக அருமை. இடைவேளைக்கப்புறம் ஆண்ட்ரியாவுக்கு வேலையில்லை.பார்த்திபன் நடிப்பு ஓஹோ.சுத்த தமிழில் இவர் பேசும் வசனங்கள் வாவ்.என்ன நல்லா கவனிச்சாத்தான் அந்த சுத்த தமிழின் அர்த்தம் புரிகிறது.இடைவேளைக்கப்புறம் படத்தில் தொய்வு ஏற்பட்டாலும் சண்டைக்காட்சிகள் அருமை ( கிளாடியேட்டர் படத்தை போல் வரும் சண்டைக்காட்சி ஓகே)கார்த்தி சோழ அரசனின் தளபதியாக மாறுவது அனுமாஷ்யமான காட்சிகள் என்றாலும் நல்லாவே சொல்லியிருக்காங்க.... ஒளிப்பதிவு, இசை அனைத்தும் அருமை. எடிட்டர் கோலா பாஸ்கரை விட தியேட்டர் ஆப்பரேட்டர் எத்தனை சீன்களை கத்தரி போட்டாரோ....தாய் தின்ற மண்ணே பாட்டையும் கட் பண்ணிட்டாங்கப்பா............ துணை நடிகர்கள் அனைவரையும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்....


மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் செல்வா எடுத்த வாந்தியல்ல...அவர் கொடுத்த பூந்தி என்று சொல்லலாம்( லட்டுதான் கொடுக்கனும்னு நினைச்சி கொஞ்சம் மாறிப்போய் பூந்திய கொடுத்திட்டார்.......).நம்ம எப்பவுமே தமிழ் படத்தை ஒரு மனநிலையிலும், ஆங்கில படத்தை வேறொரு மாதிரி மனநிலையிலும் பார்க்கிறதை மாத்துங்கப்பா.......... ஒரு உதாரணத்துக்கு சொல்றேன் ஆங்கிலப்படத்தில் ஹீரோ எங்கிருந்து குதித்தாலும் ஆஹா ஓஹோ.........அதையே தமிழ் படத்தில் செய்தால்................... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... மாத்துங்க மாறுங்க

கண்டிப்பா படத்தை தியேட்டரில் போய் பாருங்கள்