Friday, January 29, 2010

கோவா........அய்யோ

 சென்னை28, சரோஜா வெற்றிக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பில் வந்திருக்கும் படம் கோவா.முழுக்க முழுக்க காமெடி படம் எடுக்க ஆசைப்பட்ட இயக்குனர் அப்படியே பல இடங்களில் நெளிய வைத்திருக்கிறார்.

ஊர்க்கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமத்தில் அந்த கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வாழும் இளைஞர்களாக ஜெய்,பிரேம்ஜி,வைபவ்... ஓரு கட்டத்தில் ஊரைவிட்டு வெளியேறி மதுரையில் உள்ள நண்பனை காண வருகிறார்கள்..வந்த இடத்தில் நண்பனுக்கு திருமணம் அதுவும் வெளிநாட்டு பெண்ணுடன்...நண்பனிடன் விவரம் கேட்கும் நம் கதாநாயகர்கள் நண்பனை பின்பற்றி கோவா சென்று வெளிநாட்டு பெண்களை காதலித்து வாழ்க்கையில் செட்டிலாகனும் என்ற லட்சியத்துடன் செல்கிறார்கள்..அவர்களது லட்சியம் நிறைவேறியது எப்படி எனபதை நம்மை நெளிய வைக்கும் காட்சிகளுடன் சொல்கிறார் இயக்குனர்.


அட்டகாசமான கிராமத்து பாடலுடன் ஆரம்பமாகும் காட்சிகள் அருமை....பஞ்சாயத்து காட்சிகள் நீளம் என்றாலும்சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை...நக்கலும் அதிகம். காட்சிக்கு காட்சி பிரேம்ஜி அசத்துகிறார் ஒரே மேனரிசத்துடன்... முதல் 45நிமிடங்கள் நன்றாகப்போகிறது... கோவாவுக்கு சென்ற பிறகு வரும் காட்சிகள் பெரும்பாலும் நம்மை நெளியவைக்கின்றன. அரைகுறை இங்கிலீஷில் பீட்டர் விடும் ஜெய், எந்த பெண்ணை பார்த்தாலும் மன்மதலீலை பிண்ணனி இசையுடன் வைபவ் கதை சொல்வது...என..... காமெடி காட்சிகள் இருந்தாலும் கோவா என்றவுடன் குடி கூத்து என திரும்ப திரும்ப காண்பிப்பது எரிச்சலடையவைக்கிறது.

இடைவேளைக்கப்புறம் படம் தொய்வடையும் போதெல்லாம் பிரேம்ஜியை காண்பித்து காமெடி பண்ணியிருக்கிறர் இயக்குனர்..இவருக்கு டூயட் பாடல் வேறு..அவ்வ்...........பிரெம்ஜியின் ஜோடியாக வரும் பெண் நல்ல பிகர்.............. ஓரினச்சேர்க்கையாளராக வரும் சம்பத்தின் பாடிலேங்குவேஜ் நல்லா இருக்கு........... ஆனால் பல நெளியவைக்கும் முக்கியமாக ஜட்டியுடன் ரூமில் ஆடுவது, அரவிந்த் கனவு காண்பதாக வரும் பாடல் காட்சிகள்,தேவையில்லாமல் சேர்த்திருப்பதாக தோன்றுகிறது.......... இது போன்றகாட்சிகளை நீக்கினால் நல்லாயிருக்கும்பா...
..
அப்புறம் பாடத்தின் ஆரம்பத்தில் இருந்து நம்ம கதாநாயகர்களை பற்றி ஒருவர் கேள்வி கேட்பார்.அவர் படம் முழுவதும் பின் தொடர்வார்......... அவர் ஏன் அப்படி செய்கிறார்?? இயக்குனர்ட்டதான் கேக்கனும், கோவில் நகை திருடுவது, கப்பல் காட்சிகள் எல்லாம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....வழக்கம் போல் யுவன் கலக்கியிருக்கிறார்.... இதுவரை என்ற மெலடி பாடல் அருமை....கிளைமாக்சில் எதிர்பாக்காத திருப்பம் அருமை......சினேகா வருகிறார், போகிறார் அவ்ளோதான்

பிரேம்ஜி மட்டும் இல்லனா.............படம் அய்யோஅய்யய்யோ
கோவா இயக்குனர் கதையை நம்பாமல் சதையை நம்பியிருக்கிறார்.

கடைசி வரை DTS SOUND- ஐ ஆன் பண்ணாத தாம்பரம் வித்யா தியேட்டர் ஆப்பரேட்டர் வாழ்க.....................