Monday, June 28, 2010

ஆற்காட்டாரால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி

மின்வெட்டால் யாருக்கு லாபமோ இல்லையோ ரேசன் கடை ஊழியர்களுக்கு லாபம்தான்....சென்னை தவிர்த்து அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றவர்களுக்கு எப்படியோ ரேசன் கடை ஊழியர்கள் ஆற்காட்டாரை தூக்கி வைத்து கொண்டாடாத குறைதான்...


குறைந்தபட்சம் ரெண்டாயிரம் பேருக்கு பில் போட்டு களைத்த ரேசன் கடை ஊழியர்களுக்கு கலைஞர் அரசு பில் போடும் இயந்திரம் வழங்கியது............. மின்சாரம் கட் ஆகாத வரைக்கும் இது நல்லாத்தான் போகும்.........மின்சாரம் கட் ஆகினாலே அடுத்து ரெண்டு பில் கூட போட்டிருக்க மாட்டாங்க...........சார்ஜ் தீர்ந்து விடும். இனிமே கரண்ட் வந்தாத்தான் பில் போட முடியும் என்பார் ரேசன் கடை ஊழியர்........ஏங்க சார்ஜ் எல்லாம் போட்டு வைக்க மாட்டீங்களா..ன்னு கேட்டா.... ரொம்ப நேரம் சார்ஜ் போடக்கூடாதுனு அதிகாரிங்க சொல்லியிருக்காங்க.. அதனால தான் அப்படினு சொல்லிட்டு எடுத்து வச்சிருவார்......இந்த மாதிரியான சூழ்நிலை மாசத்துக்கு எப்படியும் ஒரு ஐந்து நாளாவது வந்து விடும்.  இது நடப்பது பள்ளிக்கரணையில் நான் பொருட்கள் வாங்கும் ரேசன் கடையில தான்.............இங்கேயே இப்படினா....மற்ற இடத்துல........?????????????????????/


மின்சாரம் இல்லாத நேரத்தில் பழைய முறைப்படி பில் போடலாம் அதிகாரிங்க சொல்லலாமில்ல... .......................... என்னவோ போங்கப்பா........................... எது எப்படியோ ஆற்காட்டார் இவங்களையாவது சந்தோசப்பட வச்சிருக்காரே..........................????