Friday 28 October 2011

காட்டு காட்டுனு காட்டிய வேலாயுதம் வயித்தெரிச்சலில் பிரபல பதிவர்

அனைத்து பதிவர்களின் எண்ணத்தில் மண் அள்ளி போட்டுவிட்டார் இளைய தளபதி......ஆம் வேலாயுதம் வரும் வழக்கம் போல் கும்மலாம் என்ற எண்ணத்தில்......... படம் நல்லாயிருக்கு அப்படினு சொல்றதுக்கு பதிலா அரைச்ச மாவையே அரைத்திருக்கிறார் அப்படினு சொல்றாங்க வேற வழியே இல்லாம.................................. ஒரு பிரபல பதிவர் தன்னுடைய
கூகுள் பஸ்ஸில் “ஏழாம் அறிவு நல்லால்லைங்கிறது கூட கஷ்டமாயில்ல. அதுனால வேலாயுதம் பரவாயில்லைன்னு ஓட வச்சிடுவாங்கன்னு நினைக்கும் போது வருத்தமாயிருக்கு” அப்படினு தன்னுடைய வயித்தெரிச்சலை கொட்டியிருக்கிறார்................ இதை என்னனு சொல்ல..........இதே படத்தில் விஜய் தவிர்த்து வேறு யாரவது நடித்திருந்தால் படம் செம மாஸ் என்றிருப்பார்..................... இதுதான் அநேக பதிவர்களின் எண்ணமும் கூட.........................................

வேலாயுதம் படத்தை பற்றி பதிவர்களின் விமர்சன தொகுப்பு

1.http://cablesankar.blogspot.com/2011/10/blog-post_27.html
2.http://shayan2613.blogspot.com/2011/10/blog-post_27.html
3.http://www.arvloshan.com/2011/10/blog-post_26.html
4.இணைய தளபதியின் விமர்சனம்
5.http://nellainanban.blogspot.com/2011/10/blog-post.html
6.http://kaviyulagam.blogspot.com/2011/10/blog-post_26.html
7.http://pavithulikal.blogspot.com/2011/10/blog-post_28.html
8.http://cricketnanparkal.blogspot.com/2011/10/blog-post_26.html
9.http://tamilraja-thotil.blogspot.com/2011/10/blog-post_28.html
10.http://www.luckylookonline.com/2011/10/blog-post_2100.html

Wednesday 5 October 2011

காட்டு காட்டுனு காட்டுமா வேலாயுதம்???



வேலாயுதத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஹிட் அடித்துள்ளது.........மாயம் செய்தாயோ மற்றும் முளைச்சி மூனு இலைய விடல.........................பட ட்ரெயிலரும் பட்டய கெளப்புவதால்..................................................... மீண்டும் இமாலய நம்பிக்கையுடன்......................................................... தளபதிக்கு மீண்டும் ஒரு கில்லியாக வாழ்த்துக்கள்..............

Monday 7 March 2011

விடுறா விடுறா கா.பா திரிசா இல்லனா திவ்யா


நண்பா உன் துயர் துடைக்க என் கைகள் சென்னையிலிருந்து மதுரைக்கு எட்டவில்லை............ இந்த பாடல்களை பார்த்து கேட்டு தெளிவடைந்து கொள் நண்பா


எப்படி இருந்த கா.பா


இப்படி ஆகிட்டாரு






                                       

எலக்கியவாதிக்கு இப்படியா சோதனை வரனும்???...........விடு கா.பா திரிசா இல்லனா திவ்யா........போய்க்கிட்டே இருக்கலாம்

Monday 17 January 2011

தளபதி தேடிக்கொள்ளும் ஆப்பு???????????????

என் ரசிகர்களின் விருப்பத்திற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார் இளைய தளபதி விஜய்......ஆனால் என்னைப்போன்ற சாதாரண ரசிகனுக்கு அவர் வெற்றிப்படங்களை கொடுத்தாலே போதும்.........அரசியல் எல்லாம் வேணாம் என்பதுதான்....................காவலன் பட வெளியீட்டில் என்ன உள்குத்தோ வெளிக்குத்தோ........... அதெல்லாம் தெரியாது...................ஆனால் நேற்று 16.01.11 மாலைமலரில் இந்த விளம்பரத்தை பார்த்ததும்............................................................................ என்னத்த சொல்ல......................  


அரசியல் வேணாம்
தளபதி..........................................................

வருத்ததுடன்
வெள்ளந்தியான விஜய் ரசிகன்.............

Tuesday 7 December 2010

தமிழ்நாட்டுல சென்னை மட்டும்தான் இருக்கோ???????


 
இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு...அதுக்கு காரணம் ஆளுங்கட்சி மற்றும் ஊடகங்கள்...சென்னைக்குள் எது நடந்தாலும் அய்யோ என அலறும் ஆளுங்கட்சியும், ஊடங்களும்...........சென்னைக்கு வெளியே பூகம்பமே வந்தாலும் மேம்போக்காக ஒரு பார்வை பார்த்து விட்டு செல்கின்றன................... எந்த விசயம் என்றாலும் இதே நிலைதான்...

கடந்த ஒரு மாதமாக சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் நீரில் மூழ்கியும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு்ம் இருக்கின்றன. கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்டோர் மழைக்கு பலியாகி உள்ளனர்.இந்த நிகழ்வுகளை தொலைக்காட்சி ஊடகங்களும், செய்தி நாளேடுகளும் ஒரு மேம்போக்கான செய்தியாக சொல்லி வருகின்றது........ஆனால் கடந்த இரு நாட்களாக சென்னையில் மழை பெய்யும் செய்தியை அரைமணிக்கு ஒரு தடவை சொல்லி கூப்பாடு போடுகின்றன........ அங்க தண்ணீர் நிக்கு இங்க தண்ணீர் நிக்கு வேளச்சேரி வெள்ளமாயிடிச்சி, வியாசர்பாடி சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளம்...மக்கள் வெளிய வரவேயில்லை இயல்பு வாழ்க்கை பாதிப்பு அப்படினு இன்னும் முழங்கிக்கொண்டிருக்கின்றன.................என்னமோ இவை அனைத்தும் இந்த வருசம்தான் நடக்கிற மாதிரி..............


டெல்டா மாவட்டங்களில் மக்கள் இரு வாரங்களுக்கும் மேலாக முடங்கி கெடக்காங்களே............இதெல்லாம் இந்த ஊடக கண்களுக்கு எப்போ தெரியும்.....................................அடுத்த வருட தேர்தலுக்கு ஆளும்கட்சிக்கு ஓட்டுக்களை கவர ஒரு அருமையான வாய்ப்பு............அவ்ளோதாம்பா............................

Friday 1 October 2010

பதிவர் கடையம் ஆனந்த் அப்பா ஆனார்

நெல்லை சிங்கம், கடையத்து இளவல் அன்பு மாப்பிள்ளை கடையம் ஆனந்த்- நேற்று (30.09.10) அழகான பெண் குழந்தைக்கு அப்பா ஆனார்..........தாயும் சேயும் நலம்...................................................

பூமிக்கு வந்த குட்டி இளவரசியை வாழ்த்துவோம்...............................

Sunday 18 July 2010

மனதை திருடிய களவாணி பயபுள்ள

எப்பவும் மதுரை,தூத்துக்குடி,நெல்லை,கோவைன்னு சுற்றி வருகிற தமிழ் சினிமாவை தஞ்சாவூர் பக்கம் திருப்பியிருக்கிறார் இயக்குனர் சற்குணம்..முதல் படமாம் நம்ப முடியவில்லை...அந்த அளவுக்கு நேர்த்தியான திரைக்கதை. சாதாரண காதல் கதைதான் அதை அருமையான லொகேஷன்,படம் முழுக்க இழைந்தோடும் நகைச்சுவையுடன் குடும்பத்தோடு பார்க்க்க்கூடிய அளவுக்கு தந்திருக்கிறார் இயக்குனர்.

விமல் பருத்தி வீரன் கார்த்தியையும் அவருடைய் முந்தைய படமான பசங்க படத்தின் நடிப்பை ஞாபகப்படுத்தினாலும் நல்லாவே நடிச்சிருக்கிறார்... அதுவும் நெல் திருடும் கதாநாயகியிடம் ஏற்ற இறக்கங்களுடன் பேசும் வசனம் குசும்புத்தனம்...கஞ்சா கருப்பு விமல் கோஷ்டியிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு........குசும்புத்தனத்தின் உச்சக்கட்டம். கதாநாயகியாக ஓவியா..... கடேசியில் ”என்னையும் உன்ன மாதிரி களவாணியா மாத்திட்டியே” என்று சொல்லுமிடம் ஓகே
அம்மாவாக வரும் சரண்யா நடிப்பில் மிளிர்கிறார்...அதுவும் ஆடி முடிஞ்சி ஆவணி வந்துட்டா எம்மவன் டாப்பாயிடுவான்னு பட்டிக்காட்டு ஜோசியர் சொன்னாருன்னு சொல்லுமிடத்தில் டாப்பு............. இளவரசன்,கதாநாகியின் அண்ணன், உட்பட அனைவரும் நல்லா நடிச்சிருக்காங்க

படத்தில் கவனிக்கப்படவேண்டிய விசயம் கண்ணுக்கு குளிர்ச்சியான லொகேஷன்கள்.....அதை உறுத்தாமல் காட்டிய ஒளிப்பதிவாளர்......பாடல்கள் ஓகே........ இரண்டு ஊருக்கும் உள்ள பகையை ஒரு பில்டப் கொடுத்து கடைசி வரைக்கும் அதே டெம்ப்போடு கொண்டு செல்லும் விதம் அருமை.....
மொத்தத்தில் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம்.

டிஸ்கி: வி.தா.வ படம் பிடிக்கலைனா நீங்க யூத்தே கிடையாதுன்னு ஒரு யூத்து குரூப் சொல்லிச்சி......அதே மாதிரி இந்த களவாணிய புடிக்கலைனா உங்களுக்கு உங்க சொந்த ஊர் பிடிக்கலைனு அர்த்தம்...ஆங் சொல்லிட்டேன்...