Thursday, April 28, 2016


திமுகவும் அதிமுகவும் ஒன்றா???


சொத்துக்குவிப்பு வழக்கிலும், டான்சி நில ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட்டவர் ஜெயா என்ற போதும், இந்த இரண்டு வழக்குகளிலும் அவர் விடுதலையை வாங்கியது சட்டத்திற்குப் புறம்பானது என்ற போதும், அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, 2ஜி வழக்கு விசாரணை முடிவதற்கு முன்பே தி.மு.க.வையும் கருணாநிதியையும் மன்னிக்கவே முடியாத குற்றவாளியென மக்களின் மனதில் பதிய வைப்பதில் ஜெயா, துக்ளக் சோ, பா.ஜ.க., உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் வெற்றி பெற்றுவிட்டது.
2ஜி விற்பனையில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தணிக்கைத் துறையின் அனுமானம்தான். அந்த இழப்பு குறித்து இந்தத் தொகையைவிடக் குறைவான அனுமானங்களையும் முன்வைத்திருக்கிறது தணிக்கைத் துறை. அவ்விற்பனையில் விதிமுறையை மீறி நடந்துகொண்டு, சில நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதுதான் ஆ.ராசா மீதான வழக்கு; அதற்காக, கலைஞர் டி.வி.க்கு இருநூறு கோடி ரூபாய் இலஞ்சமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கொள்ளையோ தி.மு.க. மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி ஊழலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானது.
சமச்சீர் கல்வி போராட்டம்
பதவியேற்றவுடனேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்த பார்ப்பன ஜெயா அரசைக் கண்டித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை அணிதிரட்டி நடத்திய சாலை மறியல் போராட்டம் (கோப்புப் படம்)
2ஜி ஊழல் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் விவாதிக்கப்பட்ட அளவிற்கு அம்மா அடித்திருக்கும் இந்தக் கொள்ளை பேசப்படவில்லை. அப்படி விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போதெல்லாம், “தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் ஊறிய கட்சிகள், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளை வீழ்த்தினால்தான் தமிழகம் உருப்படும்” என சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் ஒரு நரித்தனமான வாதத்தைக் கிளப்பி அதற்குள் புகுந்து கொண்டு, பார்ப்பன ஜெயாவைப் பாதுகாக்கிறது. பார்ப்பனக் கும்பலின் இந்தக் கிரிமினல்தனத்தை ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., நாம் தமிழர் கட்சிகள் மட்டுமின்றி, போலி கம்யூனிஸ்டுகளும் இந்தத் தேர்தலில் வழிமொழிந்து வருகின்றனர்.
சமச்சீர் கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க.வையும், அக்கல்வித் திட்டத்தைப் பதவியேற்றவுடனேயே குழிதோண்டிப் புதைக்க முயற்சி செய்த ஜெயாவின் அ.தி.மு.க.வையும்; அனைத்துச் சாதியினரும் அரச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்த தி.மு.க.வையும், அரசியல் தரகன் பார்ப்பன சு.சாமியோடு கைகோர்த்துக்கொண்டு அச்சட்டத்தை வேரறுத்த அ.தி.மு.க.வையும்; மோடி அரசின் இந்தி, சம்ஸ்கிருத திணிப்புகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் தி.மு.க.வையும், அத்திணிப்புகளை மௌனமாக இருந்து அங்கீகரித்து வரும் அ.தி.மு.க.வையும்; ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.-மோடியின் இயற்கை கூட்டாளியான ஜெயாவையும்; பதவி, அதிகாரம் என்ற பிழைப்புவாத நோக்கில் பா.ஜ.க.வோடு தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட தி.மு.க.வையும் ஒன்று என சாதிப்பதும், ஊழலைச் சாக்காக வைத்துக் கொண்டு அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே வேறுபாடே கிடையாது என வாதிடுவதும் நரித்தனமானது.
நன்றி: ‪#‎வினவு‬

Friday, October 28, 2011

காட்டு காட்டுனு காட்டிய வேலாயுதம் வயித்தெரிச்சலில் பிரபல பதிவர்

அனைத்து பதிவர்களின் எண்ணத்தில் மண் அள்ளி போட்டுவிட்டார் இளைய தளபதி......ஆம் வேலாயுதம் வரும் வழக்கம் போல் கும்மலாம் என்ற எண்ணத்தில்......... படம் நல்லாயிருக்கு அப்படினு சொல்றதுக்கு பதிலா அரைச்ச மாவையே அரைத்திருக்கிறார் அப்படினு சொல்றாங்க வேற வழியே இல்லாம.................................. ஒரு பிரபல பதிவர் தன்னுடைய
கூகுள் பஸ்ஸில் “ஏழாம் அறிவு நல்லால்லைங்கிறது கூட கஷ்டமாயில்ல. அதுனால வேலாயுதம் பரவாயில்லைன்னு ஓட வச்சிடுவாங்கன்னு நினைக்கும் போது வருத்தமாயிருக்கு” அப்படினு தன்னுடைய வயித்தெரிச்சலை கொட்டியிருக்கிறார்................ இதை என்னனு சொல்ல..........இதே படத்தில் விஜய் தவிர்த்து வேறு யாரவது நடித்திருந்தால் படம் செம மாஸ் என்றிருப்பார்..................... இதுதான் அநேக பதிவர்களின் எண்ணமும் கூட.........................................

வேலாயுதம் படத்தை பற்றி பதிவர்களின் விமர்சன தொகுப்பு

1.http://cablesankar.blogspot.com/2011/10/blog-post_27.html
2.http://shayan2613.blogspot.com/2011/10/blog-post_27.html
3.http://www.arvloshan.com/2011/10/blog-post_26.html
4.இணைய தளபதியின் விமர்சனம்
5.http://nellainanban.blogspot.com/2011/10/blog-post.html
6.http://kaviyulagam.blogspot.com/2011/10/blog-post_26.html
7.http://pavithulikal.blogspot.com/2011/10/blog-post_28.html
8.http://cricketnanparkal.blogspot.com/2011/10/blog-post_26.html
9.http://tamilraja-thotil.blogspot.com/2011/10/blog-post_28.html
10.http://www.luckylookonline.com/2011/10/blog-post_2100.html

Wednesday, October 5, 2011

காட்டு காட்டுனு காட்டுமா வேலாயுதம்???



வேலாயுதத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஹிட் அடித்துள்ளது.........மாயம் செய்தாயோ மற்றும் முளைச்சி மூனு இலைய விடல.........................பட ட்ரெயிலரும் பட்டய கெளப்புவதால்..................................................... மீண்டும் இமாலய நம்பிக்கையுடன்......................................................... தளபதிக்கு மீண்டும் ஒரு கில்லியாக வாழ்த்துக்கள்..............

Monday, March 7, 2011

விடுறா விடுறா கா.பா திரிசா இல்லனா திவ்யா


நண்பா உன் துயர் துடைக்க என் கைகள் சென்னையிலிருந்து மதுரைக்கு எட்டவில்லை............ இந்த பாடல்களை பார்த்து கேட்டு தெளிவடைந்து கொள் நண்பா


எப்படி இருந்த கா.பா


இப்படி ஆகிட்டாரு






                                       

எலக்கியவாதிக்கு இப்படியா சோதனை வரனும்???...........விடு கா.பா திரிசா இல்லனா திவ்யா........போய்க்கிட்டே இருக்கலாம்

Monday, January 17, 2011

தளபதி தேடிக்கொள்ளும் ஆப்பு???????????????

என் ரசிகர்களின் விருப்பத்திற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார் இளைய தளபதி விஜய்......ஆனால் என்னைப்போன்ற சாதாரண ரசிகனுக்கு அவர் வெற்றிப்படங்களை கொடுத்தாலே போதும்.........அரசியல் எல்லாம் வேணாம் என்பதுதான்....................காவலன் பட வெளியீட்டில் என்ன உள்குத்தோ வெளிக்குத்தோ........... அதெல்லாம் தெரியாது...................ஆனால் நேற்று 16.01.11 மாலைமலரில் இந்த விளம்பரத்தை பார்த்ததும்............................................................................ என்னத்த சொல்ல......................  


அரசியல் வேணாம்
தளபதி..........................................................

வருத்ததுடன்
வெள்ளந்தியான விஜய் ரசிகன்.............

Tuesday, December 7, 2010

தமிழ்நாட்டுல சென்னை மட்டும்தான் இருக்கோ???????


 
இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு...அதுக்கு காரணம் ஆளுங்கட்சி மற்றும் ஊடகங்கள்...சென்னைக்குள் எது நடந்தாலும் அய்யோ என அலறும் ஆளுங்கட்சியும், ஊடங்களும்...........சென்னைக்கு வெளியே பூகம்பமே வந்தாலும் மேம்போக்காக ஒரு பார்வை பார்த்து விட்டு செல்கின்றன................... எந்த விசயம் என்றாலும் இதே நிலைதான்...

கடந்த ஒரு மாதமாக சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் நீரில் மூழ்கியும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு்ம் இருக்கின்றன. கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்டோர் மழைக்கு பலியாகி உள்ளனர்.இந்த நிகழ்வுகளை தொலைக்காட்சி ஊடகங்களும், செய்தி நாளேடுகளும் ஒரு மேம்போக்கான செய்தியாக சொல்லி வருகின்றது........ஆனால் கடந்த இரு நாட்களாக சென்னையில் மழை பெய்யும் செய்தியை அரைமணிக்கு ஒரு தடவை சொல்லி கூப்பாடு போடுகின்றன........ அங்க தண்ணீர் நிக்கு இங்க தண்ணீர் நிக்கு வேளச்சேரி வெள்ளமாயிடிச்சி, வியாசர்பாடி சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளம்...மக்கள் வெளிய வரவேயில்லை இயல்பு வாழ்க்கை பாதிப்பு அப்படினு இன்னும் முழங்கிக்கொண்டிருக்கின்றன.................என்னமோ இவை அனைத்தும் இந்த வருசம்தான் நடக்கிற மாதிரி..............


டெல்டா மாவட்டங்களில் மக்கள் இரு வாரங்களுக்கும் மேலாக முடங்கி கெடக்காங்களே............இதெல்லாம் இந்த ஊடக கண்களுக்கு எப்போ தெரியும்.....................................அடுத்த வருட தேர்தலுக்கு ஆளும்கட்சிக்கு ஓட்டுக்களை கவர ஒரு அருமையான வாய்ப்பு............அவ்ளோதாம்பா............................

Friday, October 1, 2010

பதிவர் கடையம் ஆனந்த் அப்பா ஆனார்

நெல்லை சிங்கம், கடையத்து இளவல் அன்பு மாப்பிள்ளை கடையம் ஆனந்த்- நேற்று (30.09.10) அழகான பெண் குழந்தைக்கு அப்பா ஆனார்..........தாயும் சேயும் நலம்...................................................

பூமிக்கு வந்த குட்டி இளவரசியை வாழ்த்துவோம்...............................