Monday, March 2, 2009

நண்பன் பதிவர் கடையம் ஆனந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று 02.03.09 நண்பன் கடையம் ஆனந்துக்கு பிறந்த நாள்... வாழ்த்துக்கள் நண்பா.... பதிவெழுத ஆரம்பித்த நாளில் இருந்து நம்ம ஊர் ஆளுங்க பதிவெழுதுறாங்களான்னு ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்தேன்... முதலில் அறிமுகமாகியவர் தங்கமணி தாமிரா...... அடுத்து கடையம் ஆனந்த்... எங்க ஊருக்கு ரொம்ப பக்கத்து ஊர்க்காரர் ஆச்சே.... எந்த விசயத்தை பற்றி எழுதினாலும் மென்மையாகவே எழுதுவார் .. தன் பதிவை படிக்கும் யார் மனதும் புண்படக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருப்பவர்... தற்போது வர் ஊரில் நடந்த திருவிழா பற்றி அழகாக எழுதி வருகிறர்...



கடையம் ஆனந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.........நண்பா இந்த இனிய பிறந்த நாளில் நீ நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்... அப்படியே இந்த வருசத்துக்குள் பேச்சிலர் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்......


அப்புறம் இன்றைக்கு ஊருக்கு செல்ல இருக்கிறேன்...பொதுவா நான் பதிவு போட்டாலே என் கட காத்து வாங்கும்.. இப்ப மூன்று நாள் விடுமுறை... அதனால சொல்லவே வேண்டாம்.....


இதனால் பதிவர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.... இந்த மூன்று நாளும் என் கடையை காத்து வாங்காம்ல் காப்பாற்றுபவருக்கு 1 கிலோ திருநெல்வேலி அல்வா இலவசமாக வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..




மீண்டும் என் நண்பன் கடையம் ஆனந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......