Saturday, January 24, 2009

மாநகரப்பேருந்துகளும்-- மாதாந்திர பயணச்சீட்டும்-- நானும்

சென்னை நகரில் மிக முக்கியமான தவிர்க்க முடியாத ஒன்று மாநகரப்பேருந்துகள் தான். அப்படிப்பட்ட மாநகரப்போக்குவரத்துக்கழகம் இன்றைக்கு அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்களை சுலபமாக காலியாக்கும் கழகமாக மாறிவிட்டதுதான் வேதனை... இதற்கு அச்சாரம் போட்டவர் அம்மையார்... அதிலேயே ரோடு போட்டுக்கொண்டிருப்பவர் கலைஞர் அய்யா.... ஆறு வகை வழித்தடப்பேருந்துகள் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது...


1. சாதாரண பேருந்துகள்( வெள்ளை போர்டு)-- மினிமம் டிக்கெட் 2ரூபாய்
2."M" வகைப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
3. விரைவுபேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
4.சொகுசுப்பேருந்துகள் --- மினிமம் டிக்கெட் 5ரூபாய்
5.குளிர்சாதனப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 10ரூபாய்.
6.எல் எஸ் எஸ் பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 2.50ரூபாய்.


சென்னையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து கோடம்பாக்கம் செல்வதற்கு ஒரு வாரம் எம்டிசிலதான் பயணித்தேன்..அசோக் பில்லர்ல இருந்து லிபர்டிக்கு பஸ் ஏறுவது சவாலான விசயம் என்பதால் மின்சார ரயிலில் பயணிக்க ஆரம்பித்தேன்...ஈக்காட்டுத்தாங்கல் டூ கிண்டி 20 நிமிட நடை அப்புறம் 10 நிமிடத்தில் கோடம்பாக்கம் ... நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது ராமாபுரத்திற்கு ரூமை மாற்றும் வரையில்.... இதுவரைக்கும் கண்ணில் எப்போதாவதுதான் விரைவு பேருந்து கண்ணில் தென்படும்.. இந்த நேரத்துல தான் மாதாந்திரப்பயணச்சீட்டு--மாநகரப்பேருந்து-- மின்சார ரயில்...பிரச்சினை இல்லாம நல்லா இருந்திச்சி.


2002ன்னு நினைக்கிறேன்..அப்போ முதல்வரா இருந்த நம்ம அம்மையார் ."M" வகைப்பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்... இந்த வகை பேருந்துகளில் மினிமம் கட்டணம் 3ரூபாய்..மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லாது...அந்த நேரத்தில் M49 இந்த வண்டிய பாத்தாலே கடுப்பா இருக்கும்..பீக் அவர்ல இந்த வண்டிதான் அதிகமா இருக்கும்... ராமச்சந்திரா டூ திருவான்மியூர் வழித்தடம்.........இருந்தாலும் அம்மையார் ஆட்சிக்காலத்தில் இந்த வகைப்பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தன,,


2006ல் நம்ம கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அந்த ஜூன் மாதத்தில் இருந்து ."M" வகைப்பேருந்துகளில் மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இங்கேயிருந்துதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பமாச்சு.. வழைப்பழத்தில ஊசிய குத்துற மாதிரி சாதாரண வெள்ளை போர்டு பேருந்துகளின் வழித்தடம் குறைக்கப்பட்டு அதே வழித்தடத்தில்"M" வகைப்பேருந்துகள் ஓட ஆரம்பித்தன..அம்மா ஆட்சியில் எப்போதாவது கண்ணில் தென்பட்ட விரைவுப்பேருந்துகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிமாக தென்பட ஆரம்பித்தது.இதனால் மாதாந்திர பயணசீட்டு வைத்திருப்போருக்கு செலவு கொஞ்சம் அதிகமாகியது.இந்த நேரத்தில்தான் சொகுசுப்பேருந்துகள் அறிமுகமாகியது..முதலில் புறநகர்களுக்கு இயக்கப்பட்ட இவ்வகைப்பேருந்துகள் கொஞ்ச நாள் கழிச்சி நகருக்குள்ளும் இயங்க ஆரம்பித்தன...நெரிசல் மிகுந்த நேரங்களில் சாதாணப்பேருதுகளின் வழித்தடங்கள் குறைக்கப்பட்டு அதே நேரத்தில் விரைவுப்பேருந்துகளும்,சொகுசுப்பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட்டு மாதாந்திரப்பயனச்சீட்டு வைத்திருப்போரின் பாக்கெட்டுகளை இரு மடங்காக காலி செய்யும் பணியை இன்று வரை செவ்வனே செய்கின்றன...


சொகுசுப்பேருந்துகள் மற்றும் விரைவுப்பேருதுகள் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை குறைத்துதான் இயக்கப்படுகின்றன. இங்கதான் பிரச்சினை ஆரம்பமாகுது. உதாரணத்துக்கு பள்ளிக்கரணையில் இருந்து நீங்க வேளச்சேரிக்கு மாநகரப்பேருந்தில் போகனும்னா காலையில் 7:25மணிக்கு முன்னால் பஸ் ஸ்டாப்புக்கு வந்தீங்கன்னா சுலபமா பஸ் ஏறிவிடலாம்.. ஆனால் 7:30 மணிக்கு வந்தீங்கன்னா நீங்க பஸ் ஏறுவதற்கு மினிமம் அரைமணி நேரமாகும்..7:30மணியில் இருந்து 8:00மணி வரை 11 மாநகரப்பேருந்துகள் வரும்ம்ம்ம்ம்ம்.......ஆனா ஏறமுடியாது..


வருகிற 11 பேருந்துகளில் 4 சொகுசுப்பேருந்துகள்,4 விரைவுப்பேருந்துகள்,2சாதாரணப்பேருந்துகள், 1 குளிர்சாதனப்பேருந்துகள்.


குளிர்சாதன பேருந்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம்.தினசரி சொகுசுப்பேருந்துகளில் போவது இயலாத காரியம்... விரைவுப்பேருந்துகளில் எக்ஸ்ட்ரா காசு கொடுத்தும் அழமுடியாது.. அவசரம்னா ஓகே. அந்த ரெண்டு சாதாரணப்பேருந்துகளுக்கும் அந்த நேரத்துல பஸ் நிறுத்தமே மறந்து போகும்....


மேலும் நெரிசல் மிகுந்த நேரம் என்பதை இன்னும் பழைய நேரத்தையே மாநகரப்பேருந்து நிர்வாகம் பயன்படுத்துகிறது... இப்பவெல்லாம் காலை 7 மணிக்கே நெரிசல் நேரம் ஆரம்பமாவுது... ஆனா இந்த நேரங்களில் இயக்கப்படும் வழித்தடங்கள் மிகக்குறைவு. மாநகரப்பேருந்து நிர்வாகம் இதை கவனிக்குமா?..இந்த புலம்பல்கள் போக்குவரத்து அமைச்சருக்கு கேக்குமா??