Wednesday, April 22, 2009

நாளைக்கு கலைஞர் டிவியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமா??

தன்மானத்தமிழினத் தலைவர் கலைஞர் மீண்டும் தனது அரதப்பழசான முறையை ஈழப்பிரச்சினையில் கையில் எடுத்துள்ளார்... பொது வேலை நிறுத்தம்... கொஞ்ச மாசம் முன்னாடி இதேமாதிரி ஈழப்பிரச்சினையில் எதிரணியினர் பொது வேலை நிறுத்தம் என்றவுடன் தன்மானத்தமிழர் இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அப்ப்டினு சொன்னாரு... அப்ப நாளைக்கு நடக்கும் பொது வேலை நிறுத்தம்.???ஹிஹிஹி


நாளைக்கு பஸ் போக்குவரத்து இருக்குமா???.... இல்ல சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்கும்போது பஸ் போக்குவரத்து இருந்ததே அதே மாதிரிதானா....... ஒன்னுமே புரியலைப்பா........ இது எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம். இதுவரைக்கும் அவங்க பிரச்சாரம் செஞ்ச எல்லா தொகுதிலயும் ஈழபிரச்சினையையும், தமிழின தலைவரையும் போட்டு தாக்கிடிச்சி.... தமிழ்நாட்டில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் தனது பெயர்தான் வரவேண்டும் எனத்துடிக்கும் தமிழினத்தலைவர்க்கு வேற வழி தெரியல...... அதனால டெக்னால்ஜி எவ்வளவோ வளர்ந்திடிச்சி ஆனாலும் தலைவர் பழசை மறக்காமல் தந்தி போட சொல்லுறார்.....


எல்லாம் இருக்கட்டும்.... நாளை பொதுவேலை நிறுத்தத்தில் கலைஞர் டிவி ஈடுபடுமா??எல்லோருக்கும் வேண்டுகொள் விடுக்கும் நம் தமிழினத்தலைவர் அவரது நிறுவனத்தை மட்டும் விட்டுவிடுவாரா என்ன??? அதனால நாளைய வேலை நிறுத்தத்தில் கலைஞர் டிவி ஈடுபட இருப்பதால் பகல் முழுவதும் ஒளிபரப்பு இருக்காது என நம்புவோம்....


போன மாசம் தமிழினத்தலைவர் நாற்பதும் நமக்கே அப்படினார்... இப்ப என்னடான்னா 30ல் வெற்றி பெறுவோம் அப்படின்றார்... என்ன ஆச்சு நம்மவருக்கு<<<<<


அடப்போங்கப்பா நீங்களும் ஒங்க அரசியலும்

தற்போது வந்த செய்தி

யப்பா நாளைக்கு பஸ் வழக்கம்போல் ஓடுமாம்


அரசு அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் இயங்குமாம்
இந்த வேலை வேலை நிறுத்தத்துக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லையாம்

தமிழக தலைமை செயலாளர் அறிவிப்பு.......