Wednesday, January 6, 2010

சாருவிடம் கடன் கேட்ட கேபிள் சங்கர்




      அப்துல்லா அண்ணன்,வெண்பூ,டம்பீ மேவியுடன் நான்
  
போன வருடம் வரைக்கும் புத்தக கண்காட்சிக்கு போனது கிடையாது. ஆனாலும் நம்ம கா.பா விடுவதாக இல்லை... நானும் ரவுடி ஆகிட்டேன்.நீங்க அந்த புக்கை வாங்கிப்பாருங்க அப்படினார்.. இல்லப்பா நம்ம அறிவு விகடன் ,குமுதம் அப்படினே இருக்கட்டுமேன்னு சொன்னேன்.எஸ்.ரா எழுதியதெல்லாம் படிச்சதில்லையா? அப்படினார்..படிச்சிருக்கேனே ....எதுல.விகடன்லதான்...... ஆளு ரொம்ப டென்சன் ஆகிட்டார்........ புக் வாங்கி படிங்கய்யா அப்படினார்.....அந்த மாதிரி எலக்கிய புக்கெல்லாம் வாங்குன பழக்கமும் கிடையாது, படிச்ச பழக்கமும் கிடையாதுனேன்....


தன்னுடைய கவிதையை புத்தகத்தில் ஆர்வமுடன் தேடும் யூத் தண்டோரா, அருகில் நான்.

இருந்தாலும் புரொபசர் சொன்னா கேக்கனுமில்ல ...போன 2ஆம் தேதி கேபிளுடன் புத்தக கண்காட்சியில் ஆஜர் ஆனேன்... நானே எதிர்பார்க்காத கூட்டம்.... எடுத்த எடுப்பிலே தண்டோராவும் நானும் வம்சி புக் ஸ்டாலுக்குச்சென்றோம்.. 10ஆம் வகுப்பு பையன் ரிசல்ட் பாக்குற மாதிரி தண்டோரா அண்ணன் தன்னுடைய கவிதை வந்திருக்கானு ரொம்ப ஆவலா புக்கை புரட்டினார்..... அது கன்பார்ம் ஆனவுடன் அதை வாங்கினார்... நானுன் என் பங்குக்கு இரண்டு புத்தகங்கள் வாங்கினேன்.... அப்படியே உயிரைமை ஸ்டாலுக்கு சென்றோம்.... அப்துல்லா, நர்சிம்,சங்கர்,நித்யகுமாரன்,வெண்பூ, அகநாழிகை உட்பட எல்லோரும் அங்கே இருந்தார்கள்.சாருவுடனும்,எஸ்ராவுடனும் போட்டோ எடுத்துக்கொண்டனர்.. அப்பொது சாருவுக்கு டீ தந்தார் ஒருவர். அதை வாங்கிய அவர் எனக்கு இப்ப இது வேண்டாம் நீங்க யாராவது குடிங்க என்றவுடன்.... கேபிள் அண்ணன் நைசாக அந்த டீயை என்னிடம் தள்ளிவிட்டார்..புத்தக கண்காட்சியை விட்டு வெளியே வரும்போது டம்பிமேவிஐ சந்தித்தோம்..... தனக்கு 21வயதுதான் ஆகிறது என்று சத்தியம் பண்ணாத குறையாக சொன்னார். எதுக்கு அப்படி சொன்னார்னே தெரியலை..அவருடன் போட்டோ எடுத்துக்கொணடோம்.........

 பதிவர் சங்கரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.... அவரும் எங்க ஊர்தான் அம்பாசமுத்திரம். அடுத்ததாக யூத்துகளெல்லாம் வட்ட மேசை மாநாடு நடத்துனாங்க.. சின்னப்பையனான நான் ஒரு ஓரமாக ஒதுங்கி கொண்டேன்.சாரு நந்தலாலா படத்தை ரொம்பவும் சிலாகித்து பேசத்தொடங்கினார்...கேபிள் சங்கரும் கூடவே இருந்ததாலோ என்னவோ சினிமாவை பற்றியே அவர்கள் பேச்சு தொடர்ந்தது...அப்துல்லாவிடம் சாரு நீங்கள் கண்டிப்பாக ஒரு படத்திலாவது கதாநாயகனாக நடிக்க வேண்டு என்று அன்பு கட்டளை இட்டார்....... மாநாடு முடிந்து வெளியே வந்தவுடன் கேபிள் சாருவிடம் நான் படம் எடுத்தால் பங்குலாவின் கதாபாத்திரத்தை பயன்படுத்துவேன் அப்படினு கடன் கேட்டார்........ சாரு என்ன சொன்னார்னு தெரியல.......





கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்


1.கிளிஞ்சலகள் பறக்கின்றன--- 48 பதிவர்களின் கவிதை தொகுப்பு
2.பெருவெளிச்சலனங்கள் --22 பதிவர்களின் அனுபவக்கட்டுரைகள்


இரண்டு புத்தகங்களுமே வம்சி புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டு புத்தகங்களின் விலை ரூபாய் 100.( கண்காட்சியில் விலை ரூபாய் 90)


அண்ணன் தண்டோரா எனக்கு அன்பளிப்பாக கொடுத்த புத்தகங்கள்
அய்யனார் கம்மா
கருவேல நிழல்கள்.