Sunday, March 1, 2009

தங்கமணியும்--- தலைவலியும்

"என்னங்க நான் ஊர்ல இல்லன்னு சொல்லிட்டு வெளியில சாப்பிடாதிங்க சமைச்சே சாப்பிடுங்க. அப்புறம் வீடை சுத்தமா வச்சிருங்க... ரொம்ப செலவு பண்ணிடாதிங்க"


"நீ ஊருக்கு கிளம்பினாலே என் கையில காசு இருக்காது அப்புறம் எப்படி வெளிய சாப்பிடமுடியும்..."


"உங்க தம்பி வீடு, மச்சான் வீட்டுக்கு போறது பிரச்சினையில்ல வேற ஏதாவது கேள்விப்பட்டேனா அவ்ளோதான்..... சொல்லிட்டேன்."


"செலவுக்கே காசு கம்மியா இருக்கும்போது நான் எங்க போக முடியும்.....வீட்டை விட்டா ஆபிஸ் ....வேற வழியில்ல.."

"என்னங்க ஊருக்கு போனதுக்கப்புறம் போன்ல கூட பேச நேரமில்லையோ."


"அதான் காலையில பேசினேனே... நைட் கால் பண்ணலாம்னு இருந்தேன்."


'முன்னாடியெல்லம் அடிக்கடி போன் பண்ணுவீங்களே...'


"அதுக்காக பொழுதன்னைக்கும் உன் கூட பேசிக்கிட்டேவா இருக்க முடியும் .. ஏம்பா இப்படி இருக்க....'


"உங்க பையன் பண்ற சேட்டை தாங்க முடியல சொன்ன பேச்சை கேக்கமாட்டேங்குறான்..'


"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".


"ஏம்மா சாம்பார் பொடி, கடலை பருப்பு டப்பா எங்கப்பா வச்சிருக்க... எல்லாமே ஒரே மாதிரி தெரியுது"


"சிவப்பு டப்பா மூடி சாம்பார் பொடி கடலைபருப்பு மஞ்ச கலர் டப்பாவுல இருக்கு..சரி இனிமே போன் பண்ணாதிங்க எங்க அக்க வீட்டுக்கு போறேன்.. "


"செல்லை எடுத்திட்டு போக வேண்டியதுதான.. எதுக்கு அத வாங்கி கொடுத்திருக்கேன்.மிளகாய் பொடி டப்பா எங்க இருக்கு"


"இத கேக்குறதுக்குத்தான் போன் வாங்கி கொடுத்தீங்களா?"


"மச்சி இன்னைக்கு சனிக்கிழமைடா...!!!!!!

"என்ன மாமா வீட்ல ஆள் இல்லையா?", ஆமாடா..


"என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.."


"சமையல் பண்ண போறேம்பா" ( கையில் சரக்குடன்)


"அப்படியா தொசை சுடுறதுக்கே 10 வாட்டி போன் பண்ணுவீங்க எல்லாத்தையும் கேட்டிருங்க"!!!.....


'இல்லமா எல்லாத்தையும் பாத்து வச்சிடேன்'........


இன்னைக்கு தலைவலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்... தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா..........

டிஸ்கி : நாளைக்கு ஊருக்கு செல்ல இருக்கிறேன்......ஆங்