Tuesday, September 30, 2008

தமிழக அரசின் மற்றுமொரு வஞ்சகம்.

தமிழக அரசின் மற்றுமொரு வஞ்சகம்.


இப்போதெல்லாம் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் மின்வெட்டே இல்லை. ஆஹா ஆற்காட்டார் ரொம்ப வேலை செய்கிறார் போல என நினைத்தால் அது மாபெரும் தவறு. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மின் வெட்டு இன்னும் தீரவில்லை. அங்கெல்லாம் மின்வெட்டு இருப்பதால்தான் சென்னையில் தடைஇன்றி மின்சாரம். அப்படியென்றால் சென்னையிலுள்ளவர்கள் மட்டும்தான் ஓட்டுப் போட்டு இந்த அரசை தேர்ந்தெடுத்தார்களா? என்ன"""". மற்ற மாவட்டத்து மக்கள் வேறு யாருக்குமா ஓட்டு போட்டார்கள். அரசை பொறுத்தவரைக்கும் சென்னை தான் தமிழ் நாடு தமிழ்நாடுதான் சென்னை. சென்னையில் மின்வெட்டு இருந்த சமயம் அலறிய பத்திரிக்கைகள் ,தொலைக்காட்சிகள் தற்போது அமைதி காக்கிறார்கள்.இவர்களுக்கும் அதே பாலிசிதான் "சென்னை தான் தமிழ் நாடு தமிழ்நாடுதான் சென்னை". ஜனநாயகநாடு என்றால் இப்படித்தான் இருக்கும் போல.