Wednesday, May 13, 2009

யாருக்கும் மெஜாரிட்டி கிடையாது....

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு

டைம்ஸ் நொவ் சேனல் கருத்துக்கணிப்பின் படி

காங்கிரசு கூட்டணி --- 199 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 183 இடங்கள்
கம்யூனிஸ்ட் --- 38 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 123 இடங்கள்

தமிழ்நாடு + புதுச்சேரி

அதிமுக கூட்டணி --- 24 இடங்கள்
திமுக கூட்டணி --- 16 இடங்கள்


ஹெட்லைன்ஸ் டுடே கருத்துகணிப்பு

காங்கிரசு கூட்டணி --- 191 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 180இடங்கள்
கம்யூனிஸ்ட் --- 38 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 134 இடங்கள்

தமிழ்நாடு + புதுச்சேரி

அதிமுக கூட்டணி --- 29இடங்கள்
திமுக கூட்டணி --- 11 இடங்கள்
 
 
9x நியூஸ் சேனல் கருத்துக்கணிப்பு


காங்கிரசு கூட்டணி --- 202 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 193இடங்கள்
கம்யூனிஸ்ட் கூட்டணி --- 101 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 43இடங்கள்

தமிழ்நாடு + புதுச்சேரி

அதிமுக கூட்டணி --- 14இடங்கள்
திமுக கூட்டணி --- 26இடங்கள்

கடைசி கட்டத்தில் அதிரடியான ஓட்டு வியாபாரங்கள்

வடிவேலு ஒரு படத்துல சொல்லுவார்'நல்லாத்தான போய்க்கிட்டு இருந்தது'.. அது மாதிரிதான் பிரச்சாரம் முடிந்தும் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது.நேற்று மாலைஇலங்கை சிடி விவகாரத்தில் ஒன்றும் பிரச்சினையில்லை, அதை வெளியிடலாம்,பொது மக்களுக்கு போட்டுக்காட்டலாம் என்ற தீர்ப்பு வந்தவுடன் சூட்டோடு சூடாக மக்கள் டிவி செய்திகள் என்ற பெயரில் மாலை ஆறு மணியில் இருந்து ஒளிபரப்ப ஆரம்பித்தது...

கிரிகெட்டில் கடைசிக்கட்ட ஓவரில் அடித்து ஆடுவது போல் மக்கள் டிவி சரியான நேரத்தில் ஒளிபரப்பிக்கொன்டிருந்தது... சரியா நேற்று 7 மணியிலிருந்து சென்னை முக்கிய ஏரியாக்களில் மின்சாரம் தடைப்பட்டது.. 8 மணியளவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் தடைப்பட்டது.... என்ன ஏதுன்னு ஒன்னும் புரியல,.. அப்புறமா ஆரம்பிச்சது நம்ம தமிழ் தொலைக்காட்சிகளின் ப்ளாஸ் நியூஸ் திருவிளையாடல். முதலில் கலைஞர் டிவியில்" ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த மின்சாரத்தை துண்டித்து சதி வேலைகள் நடப்பதாக" ப்ளாஸ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது....


அப்ப்டியே அம்மா டிவிய பாத்தா " மின்தடையை ஏற்படுத்தி திமுகவினர் வாகாளர்களுக்கு பணம் பட்டுவாடா பண்ணுவதாக ப்ளாஸ் நியூஸ் ஓடுது.... மக்கள் டிவில பாத்தா " மக்கள் தொலைக்காட்சிக்கு மிரட்டல், போலிஸ் கமிஷன்ர், தலைமைத்தேர்தல் ஆணையருக்கு மக்கள் டிவி சார்பா பாதுகாப்பு கேட்டு மனு. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கேபிள் டிவியில் மக்கள் டிவி தெரியக்கூடாது என ஆளும் கட்சி மிரட்டுவதாக ப்ளாஸ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. அதே வேளையில் அந்த இலங்கை சிடி காட்சிகள் திரும்ப திரும்ப எனக்கு தெரிந்து நள்ளிரவு ஒரு மணிவரைக்கும் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.....

கடைசி நேரத்தில் மின் வெட்டும்,ஈழ விசயமும் ஓட்டு வியாபாரமாகி போனதுதான் வேதனை.... ஏதாவது ஒரு விசயம் பிடிபடாதா..அதை வச்சி என்னென்ன பண்ணலாம் எனக்காத்து கிடக்கும் அரசியல் கட்சிகளை என்ன சொலவது.?.... தனி ஈழம் என்ற மகத்தான ஒன்றை கூவி விக்கும் அரசியல்வாதிகளே..... உங்க வியாபாரம் எப்படினு 16ஆம் தேதி தெரியும்....

மின் தடையை ஏற்படுத்திய புண்ணியவான்களே..நீங்க செத்தா கண்டிப்பா உங்களுக்கு நரகம்தான்........உங்களையெல்லாம்.................


முக்கிய செய்தி


தமிழகத்தில் சுமார் 60 முதல் 65 சதவீத வாகுகள் பதிவாகியிருக்கிறதாம்.... பாண்டிச்சேரியில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்குதாம்.....