Saturday, June 6, 2009

பிரபல பதிவர் கேபிளாரே... நாங்க என்ன மட்டமா??????

ரெண்டு மூனு நாளா 32 கேள்விகள் தொடர் பதிவை எல்லா "பிரபல" பதிவர்களும் எழுதியிருக்காங்க. இந்த தொடர் பதிவை நான் ஒரு மாதத்திற்கு முன்பே எழுதிவிட்டேன்...இந்த தொடர் பதிவை எழுதச்சொல்லி ரெண்டு "பிரபல"  பதிவர்களை அழைத்தேன்..அதில் ஒரு "பிரபல" பதிவர் என் அறிவுக்கும் ,திறமைக்கும் ஏத்த மாதிரி ஒரு கேள்வி கூட இதில் இல்லையே....இதப்போய் எழுதச்சொன்னா எப்படி? என்றார்....... இன்னொரு "பிரபல"  பதிவர் 32 கேள்வியா அதிகமா இருக்கேன்னார்... ஆனால் அவர் எழுதிய பதிவு இந்த தொடர் பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் எழுதினார்.....


நான் சொன்ன முதல் "பிரபல"  பதிவர் நம்ம கேபிள் சங்கர்.இந்த கேள்வி பதில் தொடர் பதிவு அவருடைய ரேஞ்சுக்கு இல்லைன்னு சொன்னவர் ரெண்டு நாள் முன்னாடி ஜப்பான்ல ஜாகிசான் கூப்பிட்டாக,அமெரிக்காவுல ஜாக்சன் கூப்பிட்டாக அப்படின்ற கத மாதிரி எழுதி முடித்துவிட்டார்...... நான் கேட்கும்போதெல்லாம் எனக்கும் டைமே இல்லை அப்படி இப்படினு சொன்னவர்... ஒரு மாசமா டைமே கிடைக்காதவர்க்கு இப்பதான் டைம் கெடைச்சது போல..

அண்ணே கேபிள் அண்ணே நான் ஒருமாசமா கேட்டுக்கிட்டு இருந்தேன்.இதுதான் உங்க ...!!!!!!!ஒரு சாதாரண விசயத்துல இவ்ளோ நுண்ணரசியல் பண்றீங்களே.... இது நியாயமா??


ஒரு நாளைக்கு ரெண்டு மூனு சினிமா பதிவு போட மட்டும் டைம் கெடைக்குது..... நான் கூப்பிடும்போது எழுதாம இன்னைக்கு உங்களுக்கு சமமான பிரபல பதிவர்கள் கூப்பிட்ட உடனே எழுதுறீங்களே.... ஒரு குரூப்பாத்தான் இருக்கீங்க......................அரசியல் கட்சிக்குள்ளத்தான் கோஷ்டிகள் அதிகமா இருக்கும்..வலையுலகிலுமா.........
 
அதனால பிரபலமில்லாத பதிவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் தொடர் பதிவுக்கு எல்லாம் உங்க ரேஞ்சுக்கு தகுந்த பதிவர்களை மட்டும் தொடர் பதிவு எழுத கூப்பிடுங்கப்பா...... அப்புறம் "பிரபல" பதிவர்களின் ரேஞ்சு என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்குங்க.....



இன்னும் ஒரு மேட்டர்... இன்னைக்கு ஒரு"பிரபல" பதிவர் அதே கேள்விகள் தொடரில் பிரபல பதிவர் கூப்பிட்டதனால எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்...ஆனால் இந்த பதிவரை இரண்டு மாதங்களுக்கு முன்பே கடையம் ஆனந்த் இந்த தொடரை எழுதச்சொல்லி அழைத்திருந்தார்........