Saturday, February 27, 2010

எடுபடாமல் போன அஞ்சா நெஞ்சனின் கருத்து-- அவமானப்ப்படுத்திய மூவர் கூட்டணி

பாசத்தலைவன் எப்போதும் ஒன்று சொல்வார் மத்திய அமைச்சரவையில் எப்போதும் நம் குரல் தான் ஒலிக்கும்..தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று..... இதெல்லாம் 2009க்கு முந்தி என்றுதான் நினைக்கிறேன்..தற்போது அமைந்திருக்கும் காங்கிரசு அட்சியில் ஏற்கனவே தன்னுடைய துறைக்கு அதிக நிதி கேட்டு மம்தா பான்ர்ஜி பிரச்சினை எழுப்பியுள்ளார்..இன்னும் எழுப்புவார்....... தமிழக மத்திய அமைச்சர்கள் எப்பவும் ஆளும் காங்கிரஸு அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசமாட்டாங்க முக்கியமா திமுக மத்திய அமைச்சரகள்..
அஞ்சாநெஞ்சன் அழகிரி மத்திய அமைச்சராக பதவியேற்றதும் அதன் பிறகு அவரது துறையில் சரியாக கவனம் செலுத்தாமல் லோக்கல் பாலிடிக்சிலேயே குறியா அலைந்ததையும் டெல்லி பத்திரிக்கைகள் செயல்படாத ஒரே அமைச்சர் என்று எழுதின..அதன் பிறகும் அஞ்சாநெஞ்சன் அசரவில்லை..குறிப்பாக தன் துறை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பதில் சொல்ல அவர் அவைக்கு வரவில்லை.......இந்த சூழ்நிலையில் நிதிப்பற்றாக்குறை சிக்கனமாக்க மூவர் கூட்டணி உர மான்யம் சம்பந்தமாகஒரு முடிவெடுத்து அது குறித்து பேச துறை அமைச்சரான அழகிரியுடன் விவாதித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக விவசாயிகளுக்கு உரமான்யம் 30ஆயிரம் கோடி என்றிருந்தது,தற்போது 50 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது..இதுதான் இந்த மூவர் கூட்டணிக்கு (அதாவது நம்ம தாத்தா மன்மோகன் சிங், மாமா பிரணாப், நம்ம பங்காளி சிதம்பரம்)கண்ணை உறுத்தியது. எதற்கு 50ஆயிரம் கோடி மான்யம் அதை குறைத்தால் நிதி பற்றாக்குறையை தவிர்க்கலாமே என்ற ஐடியா..... ஆனா இந்த முடிவுக்கு அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து நேரடி விவாதத்தில் ஈடுப்பட்டார்.. உரமான்யத்தை குறைப்பது என்பது அரசின் நிதி பற்றாக்குறை குறையும் என்றாலும் விலை உயர்வு எனப்து விவசாயிகளின் மேல விழும் எனபதால் கடும் வாக்குவாதத்தில் மோதினார் நம்ம அஞ்சா நெஞ்சன்.. அவருக்கு ஆதவாக சில காங்கிரசு அமைச்சர்களும் கைகோர்த்துகொண்டனர்........ஏற்கன்வே விலைவாசி உயர்வினால அனைத்து தரப்பு மக்களும் அவதிப்படும் வேளையில் மான்யத்தை ரத்து செய்தால் இன்னும் கடுமையாக விலைவாசி உயரும் என்று என்று சொன்னாராம் நம்ம அஞ்சா நெஞ்சன்.......... ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை அந்த மூவர் கூட்டணி..
கடைசியாக அஞ்சாநெஞ்சன்இன்னும் ஒருவருடத்திற்காவது இந்த முடிவை தள்ளிப்போடுங்கள்..தேவைக்கேற்ற இருப்பு கவசம் வைத்துக்கொண்டு அப்புறம் யோசிக்கலாம் என்றார்....... ஆனால் இதற்கு உர நிறுவங்கள் சம்மதிக்கவில்லை என்று கூரீ மூவர் கூட்டணி உர மான்யம் ரத்து வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக உறுதியக சொல்லியதால் கடும் கோபத்துடன் பாதியிலே வெளியே வந்துவிட்டார் அமைச்சர் அழகிரி..
...
உயர்வை பற்றி மத்திய அரசு துளீயூண்டு கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை..நேற்று அறிவித்த மத்திய பட்ஜெட்டிலும் அது பற்றி ஒன்றும் இல்லை....கச்சா எண்ணெயின் வரியை உயர்த்தி மறைமுக பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வழிகாட்டியுள்ளார் மத்திய நிதி அமைச்சர்.......... அது போல் வரி குறைக்கப்பட்ட பொருட்களைப்பார்த்தால் செல்போனாம், பலூனாம்...அடப்பாவிங்களா....காலை டிபனுக்கு பலூனையும், மதியம் சாப்பாடுக்கு செல்போனையுமா சாப்பிட முடியும்.......
...
பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு............ நம்மைப்போன்ற சாமன்ய மக்களுக்கு இல்லை