Wednesday, February 18, 2009

முந்துவது சன்டிவியா? கலைஞர் டிவியா?--- ஒரு பார்வை

சன் தொலைக்காட்சியும்,கலைஞர் தொலைக்காட்சியும் பாடல் ஒளிபரப்புவதில் இருந்து சேனல் துவங்குவது வரை எல்லா நிலையிலும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றன்.. மேலோட்டமாகப் பார்த்தல் சபாஷ் சரியான போட்டி என்றே தோன்றும். கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும். கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு முன்பு வரை சன் கொஞ்சமாக போட்டிப்போட்டுகொண்டு தன்னுடைய ஆதிக்கத்தை பரவவிட்டது... முதலிடத்தை தக்கவைத்துகொண்டது... கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பித்ததற்கு அப்புறம் தொய்வு கொஞ்சம் அதிகமாகியது. எல்லா நிலையில் இருந்தும் கடும் போட்டி உருவானது.நம்ம பதிவர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு சன்னை முந்துகிறது கலைஞர் பயங்கரமா எழுத ஆரம்பிச்சாங்க....



ஆனால் மக்கள் பார்வையில் இருந்து எப்படியாவது சன்னை முந்தி முதலிடத்துக்கு வர கலைஞர் தொலைக்காட்சி ரொம்பவே பகீரத முயற்சி எடுத்தது..அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார்கள். குடும்ப சண்டைக்கு பிறகு சன் நடுநிலைமை எனும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு எந்த அளவுக்கு ஆட்சிக்கு எதிரான செய்திகளை வெளிக்கொணர முடியுமோ அந்த அளவுக்கு திறமையா செயல்பட்டது. சன்னின் நடுநிலைமையால் ஜெயாவே கொஞ்சம் ஆச்சரியப்பட்டது... முக்கியமா மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்சினைகளில் எந்த அளவுக்கு விளையாமுடியுமோ அந்த அளவுக்கு புகுந்து விளையாடுனாங்கோ..இதுக்கு விளக்கம் சொல்லி முடியல கலைஞர் தொலைக்காட்சிக்கு. இந்த கூத்தெல்லாம் கண்கள் பணித்தது இதயம் இனிக்கும் வரைக்கும்தான் இருந்தது...


இதுக்கு அப்புறம் மின்வெட்டு கிலோ எவ்ளோ? ஸ்பெக்ட்ரம் எந்த ஊர்ல இருக்கு அப்படின்ற ரேஞ்சில தான் சன்னின் நடுநிலைமை இருந்திச்சி... கலைஞர் தொலைக்காட்சியை தன் வழிக்கு கொண்டு வரவே சன் தொலைக்காட்சி நடுநிலைமை என்ற முகமூடியை அணிந்து கொண்டிருந்தது... இப்போதைக்கு தமிழக மக்கள் சன் தொலைக்காட்சி இல்லைனா கலைஞர் தொலைக்காட்சிதான் பாக்கனும் என்பதில் மிக முனைப்போடு போட்டிப்போடுக்கொண்டு சேனல்களை ஆரம்பித்து வருகிறார்கள். தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்களில் பெரும்பான்மையோர் திமுக அனுதாபிகள் மற்றும் திமுக பிரமுகர்களாக இருப்பது இரு நிறுவங்களுக்கும் ஆதாயமே.


இப்படி எல்லா நிலையிலும் போட்டி போடும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகள் ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருப்பதுதான் வேதனைக்குறிய விசயம். அது என்னன்னு உங்களுக்கே தெரியும். ஈழப்பிரச்சினை சன்னாவது பரவாயில்லை மேம்போக்கா ஏதோ சொல்றாங்க.. ஆனா கலைஞர் தொலைக்காட்சி இந்த விசயத்தில் மவுனமாக இருப்பது வேதனைக்குறிய வெட்கப்படவேண்டிய விசயம். இதுக்கு உதாரணம் இலங்கை சுதந்திர தினத்தன்று ராஜபக்ஷே பேசியதை தலைப்பு செய்தியிலும் முதலாவதா சொல்லி காங்கிரசு கட்சியின் மானத்தை காப்பாற்றி விட்டது கலைஞர் தொலைக்காட்சி. இன்று நக்கீரன் குழுமத்திற்கு இலங்கை தூதுவர் கொடுத்த மிரட்டல்,மக்கள்,தமிழன் தொலைக்காட்சிகள் இலங்கையில் ஒளிபரப்ப தடை போன்ற விசயத்திலும் மவுனத்தை சாதிப்பது கொடுமையிலும் கொடுமை......


இந்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?

(தென்) தமிழகத்திற்கு ஏமாற்றம் தரும் ரெயில்வே பட்ஜெட்

மத்திய அமைச்சர் லல்லு தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் வழக்கம் போல் தமிழகத்திற்கு ஒரு பட்டை நாமம் சாத்திவிட்டார். குறிப்பா தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு. தமிழகத்துக்கென இந்த ரெயில்வே பட்ஜெட்டில் 5 புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலாஸ்பூர் - நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் (திருவனந்தபுரம் வழி)
செங்கோட்டை - ஈரோடு தினசரி பாசஞ்சர்.
திருச்சி - மதுரை தினசரி எக்ஸ்பிரஸ்.
மும்பை - நெல்லை சூப்பர்பாஸ்ட். திருவனந்தபுரம் வழி. (வாரம் இருமுறை)
கோவை - தூத்துக்குடி இணைப்பு ரயில் (தினசரி)

இதில் திருநெல்வேலியிலிருந்து செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு ரெயில்களும் திருவனந்தபுரம் வழியாக செல்லும். பேசாம இந்த இரண்டு ரெயில்களையும் திருவனந்தபுரத்திலிருந்தே இயக்கிவிடலாம். ஒரு மாநிலத்துக்கு இயக்கப்படும் ரெயில்கள் அந்த மாநில மக்களுக்கே அதிகம் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கவேண்டும்.என்னகணக்கில்
இதைஅறிவிச்சாங்கன்னேதெரியலை.
மும்பையில்நெல்லை,கன்னியாகுமரி,விருதுநகர்,மதுரை மாவட்ட மக்களே அதிகம் உள்ளனர். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் மும்பை.நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வருடம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிஞ்சிதான் ஓடிக்கிட்டு இருக்கு.. இதே வழித்தடத்தில் இன்னொருவழித்தடத்தைஅறிமுகப்படுத்தினால் மக்களுக்கு பயன் தரும் வகையில்இருக்கும்...


அதேபோல்சென்னையிலிருந்து ,நெல்லைக்கோ,கன்னியாகுமரிக்கோ ரெயிலை அறிமுகப்படுத்தியிருக்கலாம்... ஆனால் அதை பற்றி ஒன்னையும் கானோம்..இத்தனைக்கும் தென் மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து செல்லும் ரெயில்களில் முன்பதிவு வேண்டும் என்றால் 3மாதத்திற்கு முன்னாலே முன்பதிவு செய்தால்தான் உண்டு... இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வரைக்கும் பண்டிகை காலங்களில் மட்டுமே முன்பதிவில் சிக்கல் இருக்கும். ஆனால் தற்போது எல்லா காலங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.தென்மாவட்டங்களுக்கு பஸ்ஸில் செல்வதற்கு மனதளவில் மிகுந்த தைரியம் வேண்டும்... ஆம் இதைப்பற்றி உண்மைத்தமிழன் நேற்றுதான் பதிவில் எழுதியிருந்தார்.. சென்னையில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப்பேருந்தில் செல்ல 13 மணி நேரம் ஆகியதாம்... கின்னஸில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார்களோ என்னவோ?.என்னோட அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன். திருச்சிக்கே 13மணி நேரம் என்றால் இன்னும் மதுரை,தென்காசி,நெல்லை,கன்னியாகுமரிக்கு செல்ல எவ்வளவு நேரமாகும் என்பதை நீங்களே கணக்கிட்டுகொள்ளுங்கள். நேரம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தென் மாவட்ட ரெயிலகள் நிரம்பி வழிகின்றன....

மொத்தத்தில் மெஜாரிட்டியான அளுங்கட்சி எம்பிக்கள், ஒரு ரெயில்வே துறை இணை அமைச்சர் இருந்தும் தமிழகத்திற்கு பட்டை நாமம் போடாத குறைதான்..லல்லுவின் சொந்த மநிலமான பீகாருக்கு 12 புதிய ரெயில்களாம்..............