Sunday, November 16, 2008

அடைமழையிலும் சூடான சென்னை பதிவர் சந்திப்பு

போன பதிவர் சந்திப்பில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த சந்திப்பை தவறவிடக்கூடாது என்பதற்காக டுட்டியில் மாற்றம் செய்து, தங்க மணியிடம் அனுமதி வாங்கி சரியாக 5:50 மணியளவில் லைட் ஹவுஸ் வந்து. அங்கிருந்து காந்தி சிலைக்கு வந்து பார்த்தால் சந்திப்பு ஆரம்பம் ஆகிவிட்ட்டது. அதோடு மழையும் சேர்ந்துவிட்டது. முதல் சந்திப்பு என்பதால் ஒவ்வொருவரிடமும் அறிமுகபடுத்திக்கொண்டேன்.


கிட்டதட்ட 40க்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொண்டார்கள். பெயர்களை வரிசையிடுகிறேன். விடுபட்டால் மன்னிக்கவும்.


டோண்டு
ஜியாரோம் சுந்தர்
முரளிகண்ணன்
லக்கிலுக்( ஆள் ஒல்லியா இருந்தாலும் பேச்சில் கில்லி)
நர்சிம்(தமிழ் சினிமாஉலகம் ஒரு அழகான ஹீரோவை மிஸ் செய்கிறது.)
அதிஷா (( ஆள் ஒல்லியா இருந்தாலும் பேச்சில் கில்லி)
குப்பன் யாஹூ
பரிசல்காரன்( நேற்றைய கெஸ்ட்)
பாலபாரதி ( கமாண்டோ)
யோசிப்பவர்
அக்னிபார்வை
கார்க்கி( மூளைக்காரன்)
கென்
வளர்மதி
கும்கி
அகநாழிகை
குட்டிபிசாசு
சுரேஸ்கண்ணன்
கேபிள் சங்கர்

தாமிரா( தங்கமணி ரசிகர் மன்ற தலைவர்)
புதுகை அப்துல்லா
சுகுணா திவாகர்
வெண்பூ ( பெயருக்கு ஏற்ற மாதிரி வெண்மையாக இருந்தார்)
சிவஞானம்ஜி

போலீசார் கூட்டமாக நிற்க கூடாது எனக்கூறியதால் மரத்தடிக்கு நகர்ந்தோம். மழையும் கொஞ்சம் அதிகமாகியது. பின்னர் கடற்கரை மணலில் அனைவரும் உட்கார்ந்துகொண்டோம். போலிஸ் இன்ஸ்பெக்டர் வந்து நீங்கள் மரத்தடியிலே வைத்து நடத்திக்கொள்ளலாம் என்றும், டிசிக்கு உங்களை பற்றி தெரியாது என்றும் சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு விவாதம் ஆரம்பம் ஆகியது.

வளர்மதி சட்டக்கல்லூரி பிரச்சினை பற்றி பேச ஆரம்பித்தார். மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலுக்குக்கான காரணங்களை எடுத்துரைத்தார். நர்சிம் கேள்வியிலும்,அக்னி பார்வை கேள்வியிலும் அனல் பறந்தது.மழையும் அதிகமாகியது. இந்த சமயத்தில் ஒரு சிலர் எழுந்து தனியே சென்றனர். வளர்மதி சாதி பெயரை நேரடியாக சொன்னதால் பிடிக்கவில்லையோ என்னவோ?. இது மாதிரி விவாதங்களில் சாதிப்பெயர் சொல்லுவாதை தவிர்த்தால் நலமாக இருக்கும்.

இதே மாதிரியான சாதிகலவரங்களை நான் டிப்ளமா படிக்கும்போதும், ஐடிஐ யில் வேலை பார்க்கும் போதும் நேரடியாக பார்த்தவான். அதுவும் 98ல் சாதிதலைவர்களின் பெயர்களை போக்குவரத்து கழகங்களுக்கு வைக்கவேண்டும் என்றும் சொல்லி கடையநல்லூரில் 20 பேருந்துகளை தீக்கிரையாக்கின சம்பவம் என் கண்ணில் இன்னும் நிற்கிறது.

சரி விசயத்துக்கு வருவோம்.வளர்மதி சொன்னதில் ஒரு விசயம் நமக்கு புதுசு. சித்திரை செல்வன் எனும் தலித் மாணவன் மதியம் 1 மணிக்கே தாக்கப்பட்டு ஜிஹெச்சில் அட்மிட் ஆகியிருப்பதாக சொன்னார். ஆனால் இதைப்பற்றி மீடியாவிலும் வரவில்லை. இவர் சொன்னது போல் அந்த மாணவனை ப்ற்றி எந்த செய்தியும் வெளியில் கசியவில்லை. எல்லாம் அரசின் வேலை.

விவாதம் மழைக்கு பிடிக்கவில்லையோ என்னாவோ இன்னும் அதிகமாகியதால் இத்துடன் முடிவுக்கு வந்தது. அனைவரும் சென்னை வானொலி நிலையத்திற்கு எதிரில் உள்ள கடையில் தேநீர் அருந்தினோம்.தாமிரா,கேபிள்சங்கர்,புதுகை அப்துல்லா ஆகியோர் வந்து கலந்து கொண்டார்கள்.

கேபிள்சங்கர்,லக்கிலுக்,முரளி கண்ணன் மூவரும் ரொம்ப டீப்பா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்கோ.என்னன்னு சொல்லுங்கப்பு. நேரம் அதிகமாகியதாலும் மழை விடைபெறாததாலும் நான் அனவரிடமும் விடை பெற்றேன்.டோண்டு சார் அலையை பார்ப்பதற்கு என்னை கூப்பிட்டிருந்தால் வந்திருப்பேன். கார்க்கி தமிழ்மணத்தில் ஏற்படும் சிரமங்களை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி பேசிக்கொண்டு வந்தார். நானும்,சுகுணா திவாகரும் ஒரே பேருந்தில் ஏறினோம். அவர் வேளச்சேரி. மின் வெட்டு பற்றீபேசும் பொழுது என் சீட்டிற்கு முன்னால் இருந்தவர் எங்கள் பேச்சினூடாக வந்தார்.அவர் மின் வாரியத்தில் துணை பொறியாளராக இருப்பதாக சொன்னார். இப்போதுள்ள மின்வெட்டுக்கு மின் வாரிய அதிகாரிகளே காரணம் என்றார்.

வீடு போய் சேர்வதற்கு 9:30 ஆகியது.



என்னை சொந்தமாக பதிவு எழுத ஊக்கப்படுத்திய முரளி

கண்ணன்,லக்கி,அதிஷா,தாமிராவுக்கு ஒரு ஓ போடுங்கோ.



அப்புறம் ஒரு முக்கியமான விசயம்


சகா நர்சிம் ஒரு பேச்சிலர். அனைவரும் மனதில் கொள்க




போதுமா சகா