Sunday, April 19, 2009

கருணநிதிக்கு கட்சிப்பதவி ஒரு கேடா?... தூத்துக்குடியில் அம்மா ஆவேசம் + ஈழப்பிரச்சினையில் விசயகாந்தின் காமெடி..

அம்மா நேற்று நாகர்கோவிலில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து நெல்லை,சங்கரன் கோவிலில் பிரச்சரத்தை முடித்து தற்போது தூத்துக்குடியில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்... இந்த நான்கு இடங்களிலும் தன்னுடைய மேடை பேச்சில் ஒரே மாதிரியான விசயங்களை மட்டுமே பேசினார்... அந்தந்த தொகுதியின் உள்ளூர் பிரச்சினைகளை பற்றி அம்மா பேசவில்லை... மிகப்பெரிய ஆச்சரியம் ஈழப்பிரச்சினை பற்றி பேசியதுதான்...... தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை அவ்வளவாக எடுபடாது என்ற கலைஞர் மற்றும் காங்கிரஸின் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் நோக்கத்தில் அம்மா ஈழ பிரச்சினையை கையில் எடுத்திருப்பாரோ?....



நேற்று சென்னையில் நடந்த திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய கலைஞர் அந்த மேடையில் உதய சூரியன் சின்னம் மட்டும் இருந்ததாகவும், கைச்சின்னத்தையும் அதில் வைக்குமாறு மாவட்ட செயளாலரிடம் சொன்னதாகவும் கூறினார்.. கடைசி வரைக்கும் கைச்சின்னம் மேடையில் வைக்கப்படவில்லை.... இன்று இதுகுறித்து தூத்துக்குடியில் பேசிய அம்மா "தன்னுடைய கட்சியின் மாவட்ட செயளாலரை கட்டுப்படுத்த முடியாத கருணாநிதிக்கு கட்சிப்பதவி ஒரு கேடா."....என ஆவேசமாக கேட்டார்.....தன்னுடைய பேச்சில் எல்லா இடங்களிலும் ஆளும் கட்சி தோற்ற மக்கள் பிரச்சினையை பற்றி பேசாமல் வழக்கம் போல் மைனாரிட்டி திமுக அரசு, குடும்ப ஆட்சி போன்றவைகள்தான் அதிகம் இருந்தது...... ஏற்கனவே திருமங்கலத்தில் குடும்ப ஆட்சி பற்றி பேசி தேர்தலில் தோற்றதை மறந்து விட்டாரோ...... யாராவது சொல்லுங்கப்பா கருணாநிதியை திட்டுவதைவிட மக்கள் பிரச்சினையை பற்றி கொஞ்சம் அதிகம் பேச சொல்லுங்கப்பா...


அப்புறம் நம்ம கேப்டன் ஈழப்பிரச்சினை பற்றி நேற்று நீலகிரியில் பிரச்சாரம் பண்ணும் போது திருவாய் மலர்ந்திருக்கிறார் அது என்னவென்றால்"ஈழ மக்களை காப்பாற்ற இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவேண்டும்" கூறுகிறார்..... ஆமா நம்ம கேப்டன் இவ்ளோ நாள் எங்க இருந்தார்.........? இலங்கையில் இன்று வரைக்கும் தமிழ் இனத்தை அழிக்கும் பணியில் சிங்கள ராணுவத்தின் மூளையாக செயல்படுவது அவருக்கு தெரியாதோ?,.......... அவருக்கு எப்படித்தெரியும் அதிமுகவின் ஓட்டு வங்கியை தகர்க்கனும் அப்படின்றதுக்காகவே காங்கிரசுக்கிட்ட பொட்டி வாங்கியதும் மறந்து போச்சு போல......... யப்பா யாரவது அவருக்கு சொல்லுங்கப்பா... இந்திய ராணுவம் அங்கதான் இருக்கு ராஜபக்ஷேவின் அடிப்பொடியா வேலை செஞ்சிட்டு இருக்குன்னு .............