Friday, November 21, 2008

கலைஞரின் அறிக்கையும் இன்ன பிற மேட்டர்களும்.

தமிழக முதல்வர் கலைஞர் நேற்று மாறன் சகோதரர்களை தாக்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் வழியே தன்னுடைய மனசாட்சியையும் கேள்வி குறியாக்கும் வகையில் அமந்துள்ளது. இந்த அறிக்கையை கலைஞ்ர் வெளியிட்டாரா? அல்லது அவர் பெயரை சொல்லி வேறு யாரும் வெயிட்டாற்களா?. இன்றைய சூழ்நிலையில் இப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது.

கலைஞரின் அறிக்கையும் என்னுடைய சந்தேகங்களும்.

//மு.க. அழகிரிக்கு இரண்டு ‌விழு‌க்கா‌ட்டின‌ர் தான் தமிழகத்திலே ஆதரவு என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதும், அதற்காக அழகிரி கோபமடையாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் பொறுமையாக இருப்பார்களா? அதனால், அழகிரிக்கே தெரியாமல், அந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்ட தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையிலே ஈடுபட்டார்கள். அந்த வன்முறைச் செயலில் அழகிரிக்கு கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாது என்றபோதிலும், அந்த வன்முறைச் சம்பவம் நடைபெறவும், அதனால் மூன்று அப்பாவி அலுவலர்கள் பலியாகவுமான நிலைமை ஏற்பட்டது//

பத்திரிக்கைகளில் கருத்துகணிப்பு என்பது பொதுவான விசயமாகும். கருத்துகணிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் செய்திகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை அற்றதாகவே இருக்கும். ஆனால் என்ன நடந்தது இதை ஒரு பெரிய விசயமாக கருதி உங்களுடைய கும்ப சண்டைக்காக 3 உயிகளை பலி வாங்கிய சம்பவத்திற்கு வக்காலத்து வாங்குவது போலுள்ளது இந்த அறிக்கை. தினகரன் சம்பவம் நட்க்கும் போதும் சரி, நடந்த பிறகும் சரி காவல்துறை வேடிக்கை பார்க்கும் துறையாகவே இருந்தது.இதற்கு சம்பவம் நடக்கு ம் போது இருந்த பத்திரிக்கையாளர்களே சாட்சி.மேலும் இதுபற்றி புகார் கொடுக்கப்பட்டபொழுது எப் ஐ ஆர் பதிவு செய்ய எவ்வளவு யோசித்தார்கள் உங்கள் காவல்துறையினர்.


//இதனைத் தொடர்ந்து நாள் தவறாமல் அழகிரிக்கு சம்மந்தமே இல்லாத பிரச்சினைகளிலே எல்லாம் கூட அவர் மீது பழியைப் போட்டும்//

தா.கிருட்டினன் கொலைவழக்கில் ஒரே ஒரு சாட்சியை தவிர மற்ற் அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சியாக மாறியதால்( மாற்றப்பட்டதால் ???) வெளியில் இருக்கிறார். அந்த சாட்சிகள் அனைத்தும் மாறாமல் இருந்திருந்தால்.................

 //அதேபோல் மத்தியிலே தயாநிதி மாறன் மந்திரியாக பொறுப்பேற்றிருந்த துறையின் அமைச்சராக தி.மு.க. சார்பில் மந்திரியாக்கப்பட்ட ஆ.ராசாவுக்கு எதிராகவும் - தமிழகத்திலே மின் துறை அமைச்சருக்கும், வேறு குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கு எதிராகவும் எந்த அளவிற்கு மோசமாக செய்தி வெளியிட முடியுமோ அந்த அளவிற்கு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.//

முன்னாள் அமைச்சர் என்.கே.பி.பி. ராசாவின் மீதான குற்றசாட்டையும், மின்வெட்டு பிரச்சினையையும் அவர்களுடை ய பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளியிட்டபோது நீங்கள் என்ன் சொன்னீர்கள் " காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்தியை திரித்து வெளியிடுகிறார்கள் " என்று சொன்னீகள். ஆனால் அதற்கு பிறகு நடந்தது என்ன வென்று உங்களூக்கே தெரியும் மின்வெட்டு பிரச்சினை இன்றளவும் முடியவில்லை. நவம்பர் மாதத்தில் மின்வெட்டு என்ற காரணத்தாலே உங்கள் பெயரும், ஆற்காட்டார் பெயரும் நிலைத்து நீடிக்கும்.ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை முதலில் வெளியிட்டது ஆங்கில பத்திரிக்கைகள்தான். அதன் பிறகுதான் அவர்களுடைய பத்திக்கைகளில் வெளி வந்தது. .அப்பவும் ஒரே
மாதிரியான அறிக்கையை வெளியிட்டீர்கள். அது பொய்யான செய்தி என்றால் செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகளின் மேல் வழக்கு போடவேண்டியதுதானே? ஏன் இன்னும் வழக்கு போடவில்லை.? ஒன்னு சொல்வாங்க குரைக்கிற நாய் கடிக்காது என்று?

அவர்களது தொழிக்கு போட்டியாகத்தான் அரசு கேபிளை கொண்டு வந்தீர்கள். இப்ப அரசு கேபிள் எந்த நிலைமையில் இருக்குது?. இதற்கும் சன்டீவிதான் காரணமென்று அறிக்கை வேறு வெளியிட்டீர்கள். எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறீர்களா? இல்லை அவர்களா?. அரசு கேபிளுக்கு சன் டீவி மட்டுமா சேனல்களை கொடுக்கவில்லை, ஸ்டார் மற்றும் சோனி நிறுவனங்களும் கொடுக்கவில்லை? அதை ஏன் நீங்கள் சொல்லவில்லை?

ஒவ்வொரு பிரச்சினையிலிருந்தும் மக்களை திசை திருப்புவதற்கு தினசரி ஒரு அறிக்கை வெளியிடுகிறீர்களே ஏன்?

ஒரு வேளை நேற்று லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக்கணிப்பை திசை திருப்புவதற்கு கூட இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பீர்களோ?

இவ்வளவு நடந்தும் அவர்களும் கட்சியை விட்டு போகமாட்டுக்காங்க, நீங்களும் அவர்களை கட்சியை விட்டு நீக்கவுமாட்டுக்கீங்க.... ஏதாவது உள்குத்து வேலையா?என்ன மர்மமோ?

உங்கள் வயதுக்கும் அனுபவத்துக்கும் இந்த மாதிரியான அறிக்கையை வெளியிட்டு தங்களின் மனசாட்சியை சந்தேகங்கொள்ள செய்யாதீர்கள்.


அய்யா தங்கள் முன் எவ்வளவோ பணிகள் காத்து கிடக்கின்றன.



இப்படிக்கு


ஒன்னுமே தெரியாத அப்பாவி தமிழன்.