Tuesday, September 16, 2008

ஆர்.சி.வி--- எஸ்.சி.வி கேபிள் யுத்தம்

தி.மு.க பின்ணனியுடன் ஆரம்பிக்கப்பட்ட எஸ்.சி.வி 9 வருடங்களாக தனது ஆதிக்கத்தில் கொடி கட்டி பறந்தது.தினகரன் நிகழ்வுக்குப்பின் அதே தி.மு.க மூலம் எஸ்.சி.விக்கு ஆரம்பமாகியது தலைவலி.எஸ்.சி.வி-யை பற்றி பொய்யான தகவல்கள் ஆளும் கட்சியின் மீடியா மூலம் பரப்பப்பட்டது.உண்மையில் எஸ்.சி.வி நிருவனம் தமிழ் நாட்டில் 6 இடங்களில் செயல்படுகிறது. என்னவோ தமிழ் நாடு முழுவதும் உள்ள கேபிள் நிறுவனங்கள் எஸ்.சி.வி -யின் கட்டுப்பாட்டில் உள்ளது போன்ற பொய்யான தகவல் ஆளும் கட்சி மூலம் பரப்பப்பட்டது. சன் நெட்வொர்க்கிற்கு நெருக்கடி கொடுப்பத்ற்காகவே அரசு கேபிளும், ஆர்.சி .வியும் தொடங்கப்பட்டன. வேறு எந்த மக்கள் நலனும் இதில் கிடையாது. முழுக்க முழுக்க இவ்விசயத்தில் அரசியல் ஆதிக்கம் தாண்டவமாடுகிறது. இதில் முழுவதும் பாதிக்கப்படுவது கேபிள் ஆப்பரேட்டர்கள். ஆளும் கட்சியின் தொலைக்காட்சி ரேட்டிங்கில் இல்லாததும் ஒரு காரணம்.




தினகரன் நிகழ்வுக்குப்பின் சன் நெட்வொர்க் தனது நிலையை நடுநிலைமையாக காட்டிக் கொண்டது ஆளும் கட்சியின் கோபத்தை அதிகரித்தது. இதன் காரணமாகவே ஆர்.சி .வி மதுரையில் தொடங்கப்பட்டது.இதே போல் சென்னையில் தி.மு.க ஆதரவுடன் ஹாத்வே எஸ்.சி.விக்கு நெருக்கடி கொடுக்கிறது.



மொத்ததில் சன் நெட்வொர்க்கிற்கு நெருக்கடி என்ற பெயரில் அனைத்து மீடியாக்களையும் சன்னிற்கு எதிராக வைப்பதே ஆளும் கட்சியின் தற்போதைய முக்கியமான வேலை.

இவர்களின் மோதலில் அதிக லாபம் அடைந்தது சன் டைரக்ட் எனும் DTH.

0 comments: