Thursday, September 25, 2008

லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு--திமுக ஆதரவு சரிவு

சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவுக்கே பொதுமக்களிடம் அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.


தமிழக அரசியலில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில், லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதிமுகவுக்கு ஆதரவு:

இதில், "தற்போது தேர்தல் வந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, 38.3 சதவீதம் பேர் அதிமுகவுக்கே வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

திமுகவுக்கு வாக்களிப்போம் என்று 25.8 சதவீதம் பேரும், மேற்படி இரு கட்சிகளுக்கும் மாற்றாக தேமுதிகவுக்கு வாக்களிப்போம் என்று 19.5சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தற்போது மிக முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது மின்வெட்டுதான். இது மக்கள் மத்தியில் பெரும் அதிருதியை ஏற்படுத்தியுள்ளது.வரும் தேர்தலில் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று தெரிகிறது.தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்திற்கு மக்களிடம் பெரிய அளவில் ஆதரவு இல்லை. இந்த திட்டம் ஏழை மக்களுக்கு பயன்படும் என்று 22 சதவீதம் பேரும், இது தேவையில்லாதது என்று 52 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.எனினும், தமிழக அரசு அறிவித்த இலவசத் திட்டங்களுக்கு 84 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போதுள்ள எம்.பிக்கள் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த எம்பிக்கள் மீண்டும் போட்டியிட்டால் வாக்களிக்க மாட்டோம் என 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.


அரசு துறை அதிகாரிகள் மிக மோசமாக செயல்படுவதாக 87 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.



நடிகர்களின் கட்சிகளின் நிலை:

நடிகர்களின் கட்சிகளை பொருத்தவரை, விஜயகாந்தின் தேமுதிகவுக்கு ஆதரவு பெருகி வருவது தெரியவந்துள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என 43.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஓரிரு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என 32.8 சதவீதம் பேரும், எந்த தாக்கமும் ஏற்படாது என்று 23.8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஓரிரு இடங்களில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என 14.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியவர்கள் 82.7 சதவீதம் பேர்.

தேர்தலில் விஜய டி.ராஜேந்தின் லட்சிய திமுக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று 94.7 சதவீதம் பேரும், கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியால் எந்த தாக்கமும் இருக்காது என 96.2 சதவீதம் கூறியுள்ளனர்.



ரஜினிக்கு ஆதரவு இல்லை:

இந்த கருத்து கணிப்பில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வரலாமா என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், அவர் அரசியலுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்பவில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.இந்த கேள்விக்கு, ரஜினி அரசியலுக்கு வரலாம் என்று கூறியவர்கள் 4.3 சதவீதம் மட்டுமே. நடிப்பில் மட்டுமே ரஜினி கவனம் செலுத்தினால் போதும் என 45.8 சதவீதம் பேரும், அவர் இனி ஓய்வெடுக்கலாம் என்று 32.5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். ஆன்மீகத்தில் அவர் ஈடுபடலாம் என 10.7 சதவீதம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

2 comments:

பாபு said...

உடன் பிறப்பு எழுதிய ஒரு பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.
ஆரோக்யமான ஒரு பதிலை எதிர்பார்க்காதீர்கள்,மிக கேவலமான வார்த்தைகள் பதிலாக கிடைக்கும்,என்னுடைய அனுபவம் இது

அத்திரி said...

நன்றி பாபு.