Thursday, November 6, 2008

புலி வாலை பிடித்த கலைஞர்!!!!

கலைஞரை பற்றி ரிப்போர்ட்டரில் எழுதியதை கீழே கொடுத்துள்ளேன்.

புலி வால் பிடித்த கதையாகப் போய்க் கொண்டிருக்கிறதே இலங்கைத் தமிழர் பிரச்னை...''
நம்மால் ஆகுமா அதெல்லாம். தி.மு.க.வின் மூத்த தலைவர்கள்தான் அப்படி நினைக்கிறார்களாம். அனைத்துக் கட்சிக் கூட்டம், எம்.பி.க்கள் ராஜிநாமா என்றெல்லாம் எச்சரித்துவிட்ட நிலையில், இந்தப் பிரச்னையை விடவும் முடியாமல், அதன் பின்னால் ஓடவும் முடியாமல் சங்கடப்படுகிறார்களாம்.''

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் `எம்.பி.க்கள் ராஜிநாமா எச்சரிக்கை' போன்ற கடினமான நிலையெடுக்க வேண்டும் என்பதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி போன்றவர்கள்தான் முனைப்பாக இருந்தார்களாம். ஆனால், மத்திய அரசோ எதற்கும் செவிசாய்ப்பதாக இல்லை. டெல்லியில் இலங்கை அதிபரின் சகோதரர் பாசில் ராஜபக்ஷேவுடன் பேசிய பிறகு சென்னை வந்து முதல்வர் கலைஞரை வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துச் சென்றதுடன், மத்திய அரசு கைகழுவிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் பற்றி ஒருவரும் பேசவில்லையே என்று, இப்போது அனைத்துத் தரப்பினருமே அங்கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.''

எப்படியாவது இந்தப் பிரச்னையில் தொடர்ந்து முனைப்பாக இருக்கிறோம் எனக் காட்ட வேண்டிய நிலையில் நிதி வசூலைத் தொடங்கினார் கலைஞர். ஆனால், நிதியெல்லாம் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடையுமா? என்ற ஐயத்தை இந்த முறை அனைவரும் எழுப்பத் தொடங்கிவிட்டனர். எம்.பி.க்களின் ராஜிநாமா எச்சரிக்கையும் பட்டிமன்றம் போல விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.''

சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கலைஞர் கூட்டப் போகிறாராம். கூட்டத்தைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டெல்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா காந்தி ஆகியோரைச் சந்திக்கவும் திட்டம் இருக்கிறதாம்.

நன்றி ரிப்போர்ட்டர்

இப்படி இலங்கைப் பிரச்சினை நீண்டு கொண்டே போவதால் அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் கலைஞர். இதன் விளைவால் உத்தப்புரத்தில் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவத்தால் தென் மாவட்டங்கள் முழுவதிலும் இயல்பான நிலை இன்னும் திரும்பவில்லை.

2 comments:

பாபு said...

அதெல்லாம் இருக்கட்டும்,உங்களை எழுத சொன்ன தொடர் பதிவு என்ன ஆச்சு?
அப்துல்லாவும் பணி நெருக்கடி என்று சொல்லிவிட்டார்,நீங்கள் எழுதினால்தான் தொடர் தொடர்ந்து செல்லும்

அத்திரி said...

எனக்கும் அதே பணி நெருக்கடி. நாளை காலையில் தொடர் பதிவு எழுதிவிடுவேன்.

நன்றி பாபு