Sunday, March 8, 2009

தங்கமணியும் ---- தலைவலியும்-- பகுதி-2

மகளிர் தின வாழ்த்துக்கள்

தங்கமணி ஊருக்கு போன பிறகு என்னோட பேச்சிலர் ஆடடம் தானாக அதிகமாயிடிச்சி மறுபடியும் .. ஊருக்கு கூப்பிட போனும் அதுக்காக ஆபிஸ்ல ரெண்டு நாள் பர்மிசன் போட்டு வீட்டை நன்றாக சுத்தம் செய்வதே வேலையாபோச்சு. ஊருக்கு பஸ் ஏறின பிறகும் ஒரு சந்தேகம் எல்லாத்தையும் கரெக்டா பண்ணிட்டோமா அப்படின்னு.... 4 பாட்டில் இருந்திச்சி எல்லாத்தையும் வெளியில கடாசிட்டமா அப்படினு ஒரு மிகப்பெரிய சந்தேகம் ...ஆஹா மாட்டினா கஞ்சி முதற்கொண்டு எதுவுமே கிடைக்காதே...((((( சண்டை போடுறதுக்கு உடம்புல தெம்பு கிடையாது அவ்வ்வ்வ்!!!

!தங்கமணியும் சென்னைக்கு வந்தாச்சி....வீட்டைத் திறந்தவுடன்..

"ஸ்மெல் இப்படி அடிக்குது" ( ஆஹா வீட்டை கிளீன் பண்ணினதுக்கப்புறம் ரெண்டு கம்பியூட்டர் சாம்பிராணி, 4 சைக்கிள் அகர் பத்திய கொளுத்தி வச்சேனே அவ்ளோதானா!!!)

"இல்லமா வீடு மூனு நாளா பூட்டியே இருந்திச்சில்ல அதான்..."( அவ்வ்வ்வ்வ்)

"வீட்டுல போட்டது போட்ட படியே கெடக்கு என்னதான் பண்ணினீங்க....."

"எப்ப போன் பண்ணினாலும் துணி துவச்சிட்டிருக்கேன் அப்படினீங்களே இது என்ன இவ்ளோ அழுக்கு துணி......"

"என்னமா பண்றது ஒரு மாசமா நைட் டூட்டி,12 மணிநேர டூட்டின்னு வேலைக்கே நேரம் போயிடிச்சி.... ( தப்பிச்சேன்)"

"ஃபிரிட்ஜ் கிளீன் பண்ணல.. கிட்சன் அப்படியே இருக்கு... எப்பவாவது நான் ஊருக்கு போய்ட்டு வரும்போது ஒழுங்கா வீட்டை வச்சிருக்கீங்களா??????////////"

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா....... இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட வேண்டியதுதான்......... இருந்தாலும் இப்படி பயப்படுறதுக்கு............. கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையே...............இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் ரொம்ப நல்ல பையன்பா................

21 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் மகளீரே ...

Cable சங்கர் said...

வாழ்க மகளிர் தினம்..

மங்களூர் சிவா said...

:)))))))))))))

தேவன் மாயம் said...

மகளிர் தின வாழ்த்துக்கள்!!

Anonymous said...

கேள்வி மேல் கேள்வி. எப்படி சமாளிச்சீங்க அத்திரி? மகளிர் தின வாழ்த்துக்கள்.

ஆதவா said...

பகுதி இரண்டா..... ஆதவா.. ஓடு. ஓடு பதிவு ஒண்ணுக்கு....

ஆதவா said...

தங்கமணி ஊருக்கு போன பிறகு என்னோட பேச்சிலர் ஆடடம் தானாக அதிகமாயிடிச்சி


ஏதோ ஒரு படத்தில நடிகர் ஜனகராஜ் என் பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டா என்று கூவுவார்..

அந்தமாதிரில்ல இருக்கக!!!

ஆதவா said...

தங்கமணியும் சென்னைக்கு வந்தாச்சி....வீட்டைத் திறந்தவுடன்..///////////


ஒரே ஷாக்கா இருக்குமே!!!!

ஆதவா said...

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா....... இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட வேண்டியதுதான்......... இருந்தாலும் இப்படி பயப்படுறதுக்கு...///////////


பதிவர்களே இவர் பொய் சொல்றாரு...

செமத்தியா கவனிச்சிருப்பாங்க... மறைக்கிறாரு!!!!!

(நம்ம கடைக்கு வந்து டிபன் சாப்பிட்டீங்க... நன்றிங்க... அடிக்கடி வாங்க... உங்களை நான் பின் தொடருகிறேன்.)

நசரேயன் said...

ரெம்ப சோகமா இருக்கீங்க போல !!

நசரேயன் said...

ஹும். என்னத்தை சொல்ல வீட்டுக்கு வீடு வாசப்படி

குடுகுடுப்பை said...

கேள்வி கம்மி. ஒரு நாளைக்கு ஆயிரம் கேள்விகள் இங்கே

குடுகுடுப்பை said...

கேள்வி கம்மி. ஒரு நாளைக்கு ஆயிரம் கேள்விகள் இங்கே

Suresh said...

மகளிர் தின வாழ்த்துக்கள்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

எப்படி அண்ணே இத்தன கேள்விய சமாளிக்கிறீங்க.. நீங்க ரொம்ப தைரியமான ஆளுதான்.. நடத்துங்க..

ஹேமா said...

//எல்லாத்தையும் கரெக்டா பண்ணிட்டோமா அப்படின்னு.... 4 பாட்டில் இருந்திச்சி எல்லாத்தையும் வெளியில கடாசிட்டமா அப்படினு ஒரு மிகப்பெரிய சந்தேகம் //

ரொம்ப உஷாரா இருக்கிறதா நினைப்போ!எங்காச்சும் மாட்டுவீங்க தங்ஸ் அக்காகிட்ட.

அத்திரி said...

நமக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்வாங்கன்னு பாத்தா எல்லோருக்கும் நக்கல் என்ன சொல்ல

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி Cable Sankar

நன்றி மங்களூர் சிவா
நன்றி thevanmayam
நன்றி கடையம் ஆனந்த்

அத்திரி said...

ஆதவா கூறியது...
தங்கமணி ஊருக்கு போன பிறகு என்னோட பேச்சிலர் ஆடடம் தானாக அதிகமாயிடிச்சி


ஏதோ ஒரு படத்தில நடிகர் ஜனகராஜ் என் பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டா என்று கூவுவார்..

அந்தமாதிரில்ல இருக்கக!!!

உங்களுக்கு கல்யாணம் ஆனா நீங்களும் ஜனகராஜ் மாதிரி ஹிஹிஹி- நன்றி ஆதவா


//நசரேயன் கூறியது...
ரெம்ப சோகமா இருக்கீங்க போல !!//

தப்பிச்சதே பெரிய விசயம் அண்ணாச்சி நன்றி

//நசரேயன் கூறியது...
ஹும். என்னத்தை சொல்ல வீட்டுக்கு வீடு வாசப்படி//

((((((

அத்திரி said...

//குடுகுடுப்பை கூறியது...
கேள்வி கம்மி. ஒரு நாளைக்கு ஆயிரம் கேள்விகள் இங்கே//

கேக்குற கேள்வியெல்லாம் இங்கு பதிவிட முடியாதே நன்றி குடுகுடுப்பை

//கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
எப்படி அண்ணே இத்தன கேள்விய சமாளிக்கிறீங்க.. நீங்க ரொம்ப தைரியமான ஆளுதான்.. நடத்துங்க.//

பாராட்டுக்கு நன்றி நண்பா

அத்திரி said...

//ஹேமா கூறியது...
//எல்லாத்தையும் கரெக்டா பண்ணிட்டோமா அப்படின்னு.... 4 பாட்டில் இருந்திச்சி எல்லாத்தையும் வெளியில கடாசிட்டமா அப்படினு ஒரு மிகப்பெரிய சந்தேகம் //

ரொம்ப உஷாரா இருக்கிறதா நினைப்போ!எங்காச்சும் மாட்டுவீங்க தங்ஸ் அக்காகிட்ட.//

நல்ல எண்ணம் அம்மிணி நன்றி ஹேமா

மேவி... said...

pavam sir neenga......