Sunday, November 8, 2009

பதிவர் சந்திப்பு தள்ளிப்போக காரணம்............??????

நேற்று சென்னையில் நடபெறவிருந்த பதிவர் சந்திப்பு மழையை காரணம் காட்டி தள்ளி வைப்பதாக கேபிள் அண்ணனும், சகாவும் சொல்லியிருந்தார்கள். இதில் சகா பதிவை படித்தீர்களானால் மழை மட்டும் காரணமல்ல என்பது உங்களுக்கு புரியும். கேபிள் அண்ணே உங்க பேச்சு வீட்டுக்கு வெளிய மட்டும்தான் போல......ஹும்

வழக்கம் போல் தங்கமணி பதிவுகள் சூடாகியிருக்கின்றன.ஆதி அண்ணன் எழுதிய இந்த பதிவில் ஆணாதிக்கமே அதிகம் இருப்பதாக கூறி வேலன் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்கார்..ஆனா இதுல பெண்ணாதிக்கம் கொஞ்சம் அதிகமா இருக்கு...கல்யாணம் செஞ்சுக்க போற யூத்துகளே ரெண்டு பதிவையும் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.என்னை கேட்டா நாணல் மாதிரி இருக்கனும். பிரச்சினை எனும் வெள்ளம் வரும்போது நாணல் எப்படி வளையுதோ அதே மாதிரி வளைஞ்சு கொடுத்திட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்..

நேற்று அலுவலகத்தில் என் ஜூனியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.அவன் அதிதீவிர விஜய் ரசிகன்..2012 எனும் ஆங்கில படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தான்...இன்னும் மூணு வருசத்துல உலகம் அழியப்போவுதாம்..நாசாவுல ஆராய்ச்சி பண்ணி சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்லிட்டிருந்தான்..... நான் அதற்கு டேய் உலகம் இன்னும் மூனு வருசத்துல அழிய போவுது..ஆனா தமிழ்நாடு அடுத்த மாசம் அழிஞ்சிடும் போல டிசெம்பர் 18ஆம் தேதி என்று சொன்னவுடன் பையன் அப்படியே டெரர் ஆகிட்டான்........(விஜய் கொடுத்த ஷாஜகான் அடி இன்னும் மறக்கலை.அவ்வ்வ்வ்வ்வ்வ்.)

13 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

படித்துவிட்டீர்களா..., நாசாவுக்குப் போன நம்மாளு

Thamira said...

vijay jOkku semathi. hahahaha..

துபாய் ராஜா said...

//நேற்று அலுவலகத்தில் என் ஜூனியரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் அதிதீவிர விஜய் ரசிகன்..2012 எனும் ஆங்கில படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தான்...இன்னும் மூணு வருசத்துல உலகம் அழியப்போவுதாம்..நாசாவுல ஆராய்ச்சி பண்ணி சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்லிட்டிருந்தான்..... நான் அதற்கு டேய் உலகம் இன்னும் மூனு வருசத்துல அழிய போவுது..ஆனா தமிழ்நாடு அடுத்த மாசம் அழிஞ்சிடும் போல டிசெம்பர் 18ஆம் தேதி என்று சொன்னவுடன் பையன் அப்படியே டெரர் ஆகிட்டான்.....//

திருநெல்வேலிக்காரன்ட்ட யாரும் திரும்பி பேசமாட்டான். அம்பாசமுத்திரம்,ஆழ்வார்குறிச்சிகாரர்ட்ட
ஆளாரும் பேச மாட்டான்.

கார்க்கிபவா said...

தொடர்ந்து தலைவர டேமேஜ் பண்ணிடே வறீங்க.. மைண்டுல வச்சுக்கிறேன். சந்திப்பு நடக்காமலா போயிடும்?

Cable சங்கர் said...

யோவ்.. இப்ப என்னத்தை புதுசா கண்டுபிடிச்சிட்டேன்னு பதிவுல எல்லாம் போடுற.. எனக்கும் திருநெல்வேலிக்கு வழி தெரியும்.. சாக்குரதை..

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ஹூம் சரில்ல..கவனிச்சுக்கிறேன் உங்களை

Raju said...

சன் பிக்ஸர்ஸின் பஞ்ச் டயலாக் இதுதானமே...
இப்போதைக்கு சின்னத் தளபதி..இனிமேதான் இளைய தளபதி...!

தராசு said...

அண்ணன் நாணல் அத்திரி வாழ்க.

அத்திரி said...

நன்றி சுரேஷ்
நன்றி அண்ணே
நன்றி துபாய் ராஜா

அத்திரி said...

நன்றி சகா ( வருவேன்.....ஆனா...)
நன்றி கேபிள் அண்ணே
நன்றி வசந்த் ( உங்களால முடிஞ்ச அளவுக்கு கவனிங்க)
நன்றி தராசு அண்ணே

Anonymous said...

ha..ha..

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

//விஜய் கொடுத்த ஷாஜகான் அடி இன்னும் மறக்கலை.அவ்வ்வ்வ்வ்வ்வ்//

குருவி, வில்லுன்னு பெரிய லிஸ்டே இருக்குது தல. வேட்டைக்காரனுல என்னமோ விமானம் விமானம் தாவி போராத கேள்விப்பட்டேன். டிசம்பர் 18யை நினைச்சாலே பயமா இருக்கு.

அத்திரி said...

நன்றி மாப்ளே

நன்றி ஜகதீஸ்வரன்